Saturday 28 December 2013

பரண், படிக்கட்டு.

பழைய சாமான்களை போட்டு வைத்திருக்கும் பரண் மற்றும் படிக்கட்டு இவற்றின் நேர் கீழ் அமர்ந்திருப்பது, தூங்குவது போன்றவை எதிர்மறை சக்தி தரும். துன்பம் தரும்.

காகம்.(crow)

காகத்திற்கு சாதம் வைப்பது போன்ற விசயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

காகத்திற்கு சோறு வைப்பது நம் முன்னோர்களை சென்றடையும் என்று சொல்கிறார்கள். இதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

காரணம், உடல் என்ற ஒரு வடிவம் இருப்பதால் தான் பசி இருக்கிறது. அந்த உடலை விட்டு பிரிந்த உயிருக்கு அதாவது ஆன்மாவிற்கு பசி என்பது இருக்காது.

காகம் என்பது எதிர்மறை சக்தியை தருவது. அது என் வீட்டு வாசல் முன் வந்தாலே அதை கொலைவெறியுடன் விரட்டுபவன் நான்.

காகத்திற்கு சோறு வைப்பதற்கு பதிலாக வேறு ஏதாவது உயிரினங்களுக்கோ, அல்லது ஏழைகளுக்கோ உணவளித்தால் புண்ணியம் கிடைக்கும்.

fengshui.

fengshui என்று அழைக்கப்படும் சீன வாஸ்து பொருட்கள் என்னை பொருத்தவரை கெடுதலை மட்டுமே செய்யும். நன்மையை தராது.

அஷ்டமி, நவமி.

அஷ்டமி, நவமி தொட்டது துலங்காது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ஆனால் இதை நான் நம்பவில்லை. காரணம் இந்த இரண்டு திதிகளும் தீய சக்திகளை அழிக்கும் சக்தி பெற்றவை.

அதனால் தான் ராமர் நவமியில் பிறந்தார்.

கிருஷ்ணர் அஷ்டமியில் பிறந்தார்.

துர்க்கை அஷ்டமியில் பிறந்தார்.

பைரவருக்கு அஷ்டமி உகந்த திதி.

செருப்பு.

வேறு ஒருவரின் செருப்பு, ஷூ அணிய கூடாது. அணிந்தால், அவரின் கஷ்டங்கள் அணிபவருக்கு வரும்.

மழலை.

தெய்வங்கள் பேசும் மொழிக்கு மழலை என்று பெயர்.

கம்பங்கூழ், கேப்பைகூழ்.

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ் சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

குளிர் காலத்தில் உடலுக்கு வெப்பம் தரும் கேப்பைகூழ் சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

விக்கல்.

விக்கல் நிற்காமல் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தால் சின் முத்திரை பிடிக்கலாம்.

Tuesday 24 December 2013

மிளகு vs பச்சை மிளகாய் and மிளகாய் வத்தல்.

பண்டைய தமிழர்கள் மிளகை தான் உரைப்பு சுவைக்கு உணவில் பயன்படுத்தியதாக சொல்கிறார்கள்.

ரசத்தை மிளகு தண்ணி என்று சொல்லி இருக்கிறார்கள். அதுவே milagtanni என்று சொல்லப்படுவதாக சொல்கிறார்கள்.

ஆனால் மிளகு விற்கும் விலைக்கு எல்லாராலும் அதிகம் பயன்படுத்த முடியாது. 

தகவல் ரீதியாக இதை பகிர்கிறேன்.

loud speaker may become a curse.

தற்போது திருமணம் உள்ளிட்ட எல்லா விசேஷங்களிலும் loud speaker வைத்து பாடல்கள் சத்தமாக ஒலிபரப்பப்படுகின்றன.

சற்று பொறுமையாக எனது இந்த கருத்தை யோசித்து பாருங்கள்.

உங்கள் வீட்டில் யாராவது உடல் நலம் சரி இல்லாத நேரத்தில் யாராவது உங்கள் வீட்டின் அருகே loud speaker வைத்து விசேஷம் கொண்டாடினால் நீங்கள் சந்தோஷ படுவீர்களா? அவர்களை திட்டுவீர்களா?

கண்டிப்பாக திட்டுவீர்கள்.

அப்போது நீங்கள் திட்டுவது கூட அந்த, சம்பந்தப்பட்ட மணமக்களுக்கு சாபமாக மாறலாம்.

உங்கள் வீட்டு விசேஷத்தின் போது நீங்கள் loud speaker வைப்பது யாருக்காவது தொந்தரவாக இருக்கலாம். அப்போது அவர்கள்  திட்டுவது உங்கள் வீட்டு மணமக்களுக்கு சாபமாக மாறலாம்.

மஞ்சள் நீர்.

தீய சக்திகள், அல்லது எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையும், இரவும் ஒரு டம்பளர் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் பிரச்சனைகள் தீரும்.

சாமி உண்டியல்.

சாமிக்கு வேண்டிக்கொண்டு உண்டியலில் காசு போடுவது கூட என்னைப்பொருத்தவரை ராசியாக இல்லாத காரணத்தினால் வீட்டில் வைத்திருந்த உண்டியலை கோவிலில் போய் வைத்துவிட்டேன்.

சரித்திரம்.

போர்க்களத்தில் கொல்லப்பட்ட அரசர்களை விட, படுக்கை அறையில் அரசிகளால் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட அரசர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சரித்திரம் சொல்கிறது.

வானம்.

வானம் என்பது எட்டாத தூரத்தில் இருப்பதல்ல.

உங்களுக்கும், உங்கள் அருகில் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியும் வானம் தான்.

பூமியை சுற்றி இருக்கும் எல்லாமே வானம் தான்.

உண்மையான விரதம் இருக்கும் முறை.

உண்மையான விரதம் இருக்கும் முறை என்பது, அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் சாப்பிட்டு, பிறகு சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தான் சாப்பிட வேண்டும்.

இதை முழுமையாக கடைபிடிப்பவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே.

ஆனால் தற்போது இந்துக்கள் அசைவம் சாப்பிடாமல் இருக்கிறேன் என்று கூறி, மூன்று வேலையும் நன்கு சைவ உணவு சாப்பிட்டுவிட்டு விரதம் இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.

அதற்காக அசைவம் சாப்பிடலாம் என்று நான் சொல்லவில்லை.

அசைவம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமே விரதம் ஆகாது என்பது என் கருத்து.

கசப்பு தீய சக்திகளுக்கு பகை.

கசப்பு சுவை தீய சக்திகளுக்கு நிரந்தர எமன்.

அவ்வப்போது அல்லது தினமும் கசப்பு சுவையை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால், தீய சக்திகளை உடலில் இருந்து வெளியேற்றிவிடலாம். (பாகற்காய், வேப்பிலை)

ஆனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் (low blood sugar) கசப்பு சுவையை சேர்த்துக்கொள்ள கூடாது.

பூச்சி அல்லது வண்டு கடித்து உடலில் புண், அரிப்பு, ஊறல், நமைச்சல் இருப்பவர்கள் கசப்பு சுவையை தினமும் சிறிதளவு சேர்த்துக்கொண்டால் இதில் இருந்து தப்பிக்கலாம்.

Friday 20 December 2013

எண்ணெய் கொப்பறை.


இறந்தவர்களை நரகத்தில் அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப எண்ணெய் கொப்பறையில் வறுத்து எடுப்பார்கள் என்று பல ஆயிரம் ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மை இல்லை.

மனிதன் இறந்த உடன் அவன் உடல் இந்த பூமியில் எரிக்கப்படுகிறது, அல்லது புதைக்கப்படுகிறது. 

அப்படி இருக்கும் போது நரகத்தில் எந்த உடலை வறுப்பார்கள்?

அப்படியானால் மனிதன் செய்த பாவங்களுக்கு தண்டனையே கிடைக்காதா? என்று உங்களுக்கு தோன்றும்.

ஒரு மனிதன் அவன் செய்த பாவங்களை அனுபவிக்கும் வரை அந்த பாவங்கள் அனைத்தும் அவனை துரத்திக்கொண்டே இருக்கும். 

கோவில் யானை.

கோவில் யானைக்கு பட்டை போட்டாலும், நாமம் போட்டாலும் அதன் நெற்றி ஒன்று தான்.

ஜெயில் தண்டனை.

சிலருக்கு தவறு ஏதும் செய்யாமலேயே சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷ நிலை அவர்களின் ஜாதகத்தில் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இந்த தோஷம் நீங்க அவருக்கு தெரிந்த யாராவது ஏதாவது பிரச்சனையின் காரணமாக காவல் நிலையம் செல்லும் நிலையில் அவர்களோடு சேர்ந்து காவல் நிலையம் சென்று அங்கே சிறிது நேரம் அமர்ந்து இருந்துவிட்டு வந்தால் அந்த தோஷம் நீங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது.

செருப்பு.

செருப்பு  வாங்க செல்லும் போது, சாயங்காலம் அல்லது இரவில் தான் செல்ல வேண்டும். அப்போது தான் பாதங்கள் சற்று விரிவடைந்து இருக்கும். காலையில் சென்று வாங்கினால், பாதங்கள் சற்று சுருங்கி இருக்கும், இதனால் செருப்பு மிகவும் இறுக்கமாக இருக்கும். 

தாடிக்கும், விற்பனைக்கும் என்ன சம்பந்தம்?

சந்தைபடுத்துதல் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்கள் முகசவரம் செய்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

சீக்கியர்கள் தாடியுடன் தான் சந்தைக்கு வருகிறார்கள். தங்கள் பொருட்களை விற்கிறார்கள். அவர்கள் தாடியுடன் வருகிறார்கள் என்பதற்காக யாரும் அவர்களிடம் பொருட்களை வாங்காமல் இருப்பது இல்லை.

ஜேசுதாஸ் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக அவர் பாடல்களை கேட்காமல் இருக்கிறோமா?

பெரியார் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக அவர் கருத்துக்களை கேட்காமல் இருக்கிறோமா?

திருவள்ளுவர் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக திருக்குறள் படிக்காமல், அதை பற்றி பேசாமல் இருக்கிறோமா?

ஏசுநாதர் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக அவரை வணங்காமல் இருக்கிறோமா?

தாடிக்கும், விற்பனைக்கும் என்னங்கடா சம்பந்தம்?

கோவில்.(temple)

பிரபலமான கோவில் என்பதற்காக அங்கே சென்று வழிபட கூடாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தெய்வம் இருக்கிறது. அந்த தெய்வம் எங்கே இருக்கிறதோ அங்கே சென்று தான் வழிபட வேண்டும்.


அபிஷேக பொருட்கள்.

கடவுளுக்கு அபிஷேக பொருட்களும் அவற்றிற்கான பலன்களும் என்று பல பொருட்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அந்த பொருட்களை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தாலும் கடவுளுக்கு அபிஷேகம் செய்த அதே பலன் கிடைக்கும்.

அதோடு புண்ணியமும் கிடைக்கும்.

Tuesday 17 December 2013

செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம்.(black magic)

செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், அமாவாசை அன்றும், பௌர்ணமி அன்றும், எலுமிச்சை சாரில், மஞ்சள் தூள் கலந்து, உச்சி முதல், உடல் முழுவதும் தடவி 30 நிமிடங்கள் காய வைத்து பிறகு, தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்கலாம்.

இது போல் செய்தால் தீய சக்திகள் ஏவியவரிடமே சென்றுவிடும்.

அமாவாசை, பௌர்ணமி நேரத்தில் செய்வது மிகவும் நல்லது. அது காலை, பகல், இரவு எதுவாக இருந்தாலும் சரி.

மற்ற நாட்களிலும் செய்யலாம்.

புறா.(dove)

வீட்டில் புறா வளர்க்க கூடாது.

புறா வளர்ப்பது எதிர்மறை சக்தியையே தரும்.

சுதா சந்திரன்.

நடிகை சுதா சந்திரன் அவர்களின் தன்னம்பிக்கை வாழ்க்கையை பாடமாக வட இந்தியாவில் ஒரு மாநிலத்தில் வைத்து இருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பு படித்து இருக்கிறேன்.

நம் மாநிலத்திலும் இது போல், தன்னம்பிக்கையால் முன்னேறியவர்களின் வாழ்க்கையை பாடமாக வைத்தால், இன்றைய மாணவர்கள் தற்கொலை போன்ற முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பார்கள்.

படிப்பை முடித்து அவர்கள் போராட்டமான வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது, தன்னம்பிக்கையோடு செயல்படுவார்கள்.

ஆனால் இந்த வாழ்க்கை வரலாறு மதிப்பெண் ரீதியாக இல்லாமல், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன் மட்டுமே இருக்க வேண்டும்.

அடி.

சினிமாவிலும், tv சீரியல்களிலும், ஆண் பெண்ணை அடிப்பது போல் காட்டினால், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் என்று ஊரை கூட்டி ஒப்பாரி வைக்கிறார்கள்.

ஆனால், பெண் ஆணை அடிப்பது போல் காட்டினால் செம காமெடி என்று சிரித்துவிட்டு செல்கிறார்கள்.

என்ன கொடுமை சார் இது?

ஆந்திரா திருமணங்கள்.

ஆந்திரா மாநிலத்தில் திருமணங்கள் எல்லாமே இரவில் தான் நடத்துகிறார்கள். இதில் என்ன நன்மை இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இதில் ஏதாவது சாஸ்திர, சம்பிரதாய நன்மைகள் இருக்கிறதா?

உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

எனக்கு தெரிந்த ஒரே நன்மை, திருமணம் முடிந்த சில நிமிடங்களில், முதலிரவுக்கு சென்று விடலாம் என்பது தான்.

அன்பிலா பெண்டிர்.

அன்பிலா பெண்டிர் கையால் உணவு உண்ணாதே என்று ஔவையார் சொல்லி இருக்கிறார். ஔவையார் வாழ்ந்த காலத்திலேயே அன்பிலா பெண்டிர் இருந்திருக்கிறார்கள் என்றால் இப்போது எவ்வளவு அன்பிலா பெண்டிர் இருப்பார்கள் என்று நினைத்து பாருங்கள்.

ஆண்களில் ஏராளமானவர்கள் கெட்டவர்கள் என்று நான் ஒத்துக்கொள்வேன். ஆனால் எல்லா பெண்களும் நல்லவர்கள் என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பெண்களில் கெட்டவர்களும்  இருக்கிறார்கள். இது தான் உண்மை. இது என் சொந்த அனுபவம். என்னை பொருத்தவரை தீய சக்திகளை ஏவுவதில் ஆண்களை விட பெண்களே முன்னணியில் இருக்கிறார்கள் என்பது என் கருத்து.




செருப்பால் அடிக்கலாமா?

தனிப்பட்ட அல்லது  பொது விரோதம் காரணமாக ஒருவரை செருப்பால் அடிப்பது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால் இது தவறு என்று சிலர் சொல்கிறார்கள்.

காரணம், செருப்பால் ஒருவரை அடித்தால், அடி வாங்கிய நபர் தற்போது இருக்கும் நிலையில் இருந்து உயர்வான நிலையை அடைவார் என்றும், செருப்பால் அடித்த நபர் தற்போது இருக்கும் நிலையில் இருந்து தாழ்வான நிலைக்கு செல்வார் என்றும் சொல்கிறார்கள்.

பரதன் தன்னுடைய முற்பிறவியில் ஒருவரை செருப்பு அணிந்த காலோடு மிதித்ததாகவும், அதனால் தான் மறு பிறவியில் ராமரின் பாதுகைகளை வைத்து வணங்கி அரசாட்சி நடத்தியதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

perfume ads.

பிட்டு படத்திற்கு போஸ்டரை காட்டி ஏமாற்றுவதை போல், perfume பொருட்களுக்கு விளம்பரங்களை காட்டி ஏமாத்துறானுங்க.

இந்த perfume உபயோகித்தால் எல்லா பொண்ணுகளும் உங்கள் பின்னால் ஓடி வருவாளுங்க என்று காட்டுறானுங்க.

இது வரை எவளும் என் பின்னாடி ஓடி வந்தது இல்லை.

இந்த விளம்பரம் எடுக்குறவனுங்களை எல்லாம் பொண்ணுகள் இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு தான் கடத்தணும்.

god bless america.

இந்த வார்த்தையை அமெரிக்காவில் இருக்கும் பலரும் சொல்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அமெரிக்காவிற்கு குடியேறிய தமிழர்களும் சொல்வது தான்.

கடவுள் என்ன அமெரிக்காவை மட்டுமே இந்த உலகத்தில் படைத்தாரா?
மற்ற நாடுகளை எல்லாம் சாத்தான் படைத்ததா?

Sunday 15 December 2013

ஆண்.

தாய்க்கு மகனாக, மனைவிக்கு கணவனாக, தங்கைக்கு அண்ணனாக, அக்காவுக்கு தம்பியாக, நண்பிக்கு நண்பனாக, கருவை கொடுப்பவனாக இருக்கும் ஆணை பற்றியும் கொஞ்சம் யோசிங்க பெண் இனமே.

அமெரிக்கனும், தமிழ் நாட்டில் வாழும் தமிழனும்.

அமெரிக்கனும், தமிழ் நாட்டில் வாழும் தமிழனும் சந்தித்துக்கொண்டார்கள். அமெரிக்கன் சொன்னான், "நாங்கள் வருடத்தில் ஒருநாள் ஒரு நிமிடம் மின்விநியோகத்தை நிறுத்திவிட்டு தாமஸ் ஆல்வா எடிசனை நினைத்துக்கொள்வோம்" என்றான்.
தமிழன் சொன்னான், "நீங்கள் நன்றி கெட்டவர்கள், நாங்கள் நன்றி உள்ளவர்கள், தினமும் மின்விநியோகத்தை நிறுத்திவிட்டு, தாமஸ் ஆல்வா எடிசனை நினைக்கின்றோம்" என்றான்.

Thursday 12 December 2013

இறகு.

காகம், புறா இவற்றின் இறகு வீட்டு மொட்டை மாடி, மற்றும் வீட்டின் சுற்று புறத்தில் விழக்கூடாது. அது எதிர்மறை சக்தியை அதிகம் இழுக்கும்.

அந்த இறகை உடனே அப்புறப்படுத்தி விடவேண்டும்.

tooth paste.

colgate tooth paste விளம்பரத்தில் பல்லை விளக்கி காட்டுங்கடான்னா! சிப்பியை விளக்கி காட்டுறானுங்க.

சின் முத்திரை.

சின் முத்திரையின் போது இரண்டு கைகளிலும் ஒரே  அளவு அழுத்தம் கொடுத்து முத்திரை பிடிக்க வேண்டும்.

ஒரு கையில் குறைவாகவும், ஒரு கையில் அதிகமாகவும் அழுத்தம் கொடுக்க கூடாது. 

அபியும் நானும்.

அபியும் நானும் படம் பார்த்த பிறகு நான் எனக்கு வரும் சர்தார்ஜி ஜோக்குகளை யாருக்கும் forward செய்வது இல்லை. அவற்றை delete செய்து விடுகிறேன்.

plastic.

பிளாஸ்டிக்கை எரிக்க கூடாது என்ற பொது அறிவு மக்களை 100% சென்றடையவே இல்லை.

நகர சுத்தி தொழிலாளர்களும் குப்பையை அள்ள சிரமபட்டு பல சமயங்களில் பிளாஸ்டிக்கை எரிக்கிறார்கள்.

சிறுநீர்.

பண்டைய இயற்கை மருத்துவர்கள் ஒரு மனிதனுக்கு சிறுநீர் வெளியேறும் விதத்தை வைத்தே அவன் உடலில் எந்தெந்த உள் உறுப்புகள் எந்த அளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்று கணித்து இருக்கிறார்கள்.

சிறுநீர் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக வெளியேறும்.

சிலருக்கு ஒரே சீராக வெளியேறும்.
சிலருக்கு பிளவுபட்டு வெளியேறும்.
சிலருக்கு சிறுநீர் வெளியேறும் போது தனியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கும்.

இளைய தளபதி நடிக்கும் விளம்பரம்.

இளைய தளபதி நடிக்கும் jos alukkas விளம்பரம் பார்த்த பின்பு சில உலக உண்மைகள் தெரிந்தது.
1) இளைய தளபதி தான் வைத்து இருக்கும் பொருட்களை விற்று தான் யாருக்கும் பரிசு வாங்கி கொடுப்பார்.
2)கிடார் என்பது விலை மிக மிக அதிகமானது. அதை விற்றால் தங்கம் வாங்கலாம்.
3)தங்கம் என்பது விலை மிக மிக குறைவானது. கிடாரை விற்றால் அதை வாங்கி விடலாம்.

இளைய தளபதி இனிமேலாவது இது போன்ற கேவலமான விளம்பரங்களில் நடிக்காமல் தவிர்க்கலாம்.

ஒரு கப் bru குடிச்சா?

ஒரு கப் bru குடிச்சா நாம நேசிக்கிறவங்க பத்தி தெரிஞ்சுக்க முடியுமா?

அப்படினா நான் நேசிக்கிற, சமந்தா, அசின், நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, நஸ்ரியா, காஜல் அகர்வால், பிந்து மாதவி, அமலா பால், லக்ஷ்மி மேனன், பூர்ணா, ஸ்ரேயா, சமீரா ரெட்டி, நமீதா பத்தி தெரிஞ்சுக்க முடியுமா?

"அண்ணே! bru 10 கிலோ பாக்கெட் ஒண்ணு குடுங்கண்ணே!" 

the parent trap

சில தினங்களுக்கு முன் hbo channel இல் the parent trap என்ற படம் பார்த்தேன்.

பல ஆண்டுகளுக்கு முன், ஜெய் சங்கர், ஜமுனா, குட்டி பத்மினி நடித்த  குழந்தையும் தெய்வமும் படத்தை அப்படியே ஆங்கில முறைப்படி எடுத்து இருக்கிறார்கள்.

தமிழ் சினிமா பூஜை.

தமிழ் திரை உலகில் எல்லா படங்களும் பூஜை போட்டு தான் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே பிற மொழிகளில் டப்பிங் செய்யப்படுகின்றன.

ஆனால், hollywood திரைப்படங்கள் எந்தவித பூஜையும் போடாமல் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவை உலகின் எல்லா நாட்டு மக்களையும் சென்றடைகின்றன. எல்லா மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுகின்றன.

தவறு யார் மீது? கடவுள் மீதா? ரசிகர்கள் மீதா? திரைப்பட துறை மீதா?

ஷூ.(shoe)

ஷூ அணிவது இன்றைய நவநாகரீக சின்னம் ஆகி விட்டது.

நான் ஏற்கெனவே கோவணம் என்ற தலைப்பில் சில தகவல்கள் சொல்லி இருந்தேன்.

அதே போல் ஷூ அணிபவர்கள், நாள் முழுவதும் அதை அணிந்திருந்து இரவில் கழற்றும்போது பாதத்தில் செயற்கையான ஒரு வெப்பம் உருவாக்கப்பட்டு இருக்கும். பாதத்தில் தான் எல்லா மனிதர்களுக்கும் எல்லா உடல் உறுப்புகளின் நரம்புகளும் தொடர்பில் இருக்கின்றன. மூளை, இதயம், கல்லீரல், கிட்னி உள்பட அனைத்தும்.

இந்த வெப்பம் உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் ஷூ பொறுத்தமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது தமிழ்நாட்டுக்கு பொருந்தாது.

ரேகை.

மனிதர்களின் உள்ளங்கை ரேகை அவரவர்களின் எண்ணங்கள், செயல்கள், வாஸ்து, கிரக நிலைகள் மற்றும் பல காரணிகளுக்கு ஏற்ப ஆயுள் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும். நிரந்தரமாக இருக்காது.

நெற்றிக்கண்.(third eye)

நெற்றிக்கண் என்பது சிவனுக்கு மட்டுமே இருக்கக்கூடியது அல்ல. எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது.

நெற்றிக்கண் திறக்கும் பயிற்சியை செய்து கொண்டால், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விசயங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் உங்களை சுற்றி இருக்கும் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

தியானம் செய்பவர்களுக்கு இதை பற்றிய விவரங்கள் தெரியும்.

ஆனால் இந்த பயிற்சியை பொறுமையாக செய்யவேண்டும். இல்லை என்றால் ஆபத்து ஏற்படலாம்.

இதை பற்றிய விவரங்களை மேலும் அறிய third eye chakra என்ற பெயரில் you tube இல் தேடலாம்.

படம் மற்றும் பொம்மை.(picture and doll)

புறா, ஆந்தை, பாம்பு, எலும்பு கூடு, காட்டு விலங்குகள் போன்றவற்றின் படங்கள், பொம்மைகள் வீட்டில் வைத்து இருக்க கூடாது. இவை அளவுக்கு அதிகமான எதிர்மறை சக்தியை ஈர்க்கும்.

பலர் தற்போது புறாவின் படம் அல்லது பொம்மையை வாஸ்து என்ற பெயரில் வைத்து இருக்கிறார்கள். இது கண்டிப்பாக துன்பத்தையே தரும்.

அதே போல், கோபமாக இருக்கும் உருவங்கள் வீட்டில் வைத்து இருக்க கூடாது. நடிகர்களின் சண்டை காட்சி படங்கள், யுத்த படங்கள் குறிப்பாக குருட்ஷேத்ரம் படம் வீட்டில் இருக்க கூடாது. இவை மனதில் சண்டை உணர்வையும், யுத்த உணர்வையும் கொடுக்கும்.

இஞ்சி.

பசி எடுக்காமல் இருப்பவர்கள் இஞ்சியை சாறு எடுத்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்கலாம்.

10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இது சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

மரண போராட்டத்தில் இருக்கும் பலருக்கு பசி இருக்காது. உணவை உடல் ஏற்றுக்கொள்ளாது. மரணத்திற்கு முந்தைய ஒரு எச்சரிக்கையாக இதை எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கும் மேற்சொன்னவாறு கொடுக்கலாம். மரணத்தை சற்று தள்ளிப்போட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இஞ்சியை சாறு எடுக்கும்போது சிறிது நேரம் கழித்து அதில் இருக்கும் சுண்ணாம்பு சத்து அடியில் பிரிந்து நிற்கும். அதையும் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். காரணம் அந்த சுண்ணாம்பு சத்து தான் இயற்கையானது, இஞ்சிக்கு அதுவே மருத்துவ குணம் அளிக்கிறது.

மந்திரம்.

மந்திரம் உச்சரிப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு எழுத்து தவறாக உச்சரித்தாலும் மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் நிகழும். அதே போல் எந்த இடத்தில் அழுத்தி உச்சரிக்க வேண்டும், எந்த இடத்தில் அழுத்தம் குறைவாக உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.

முறைப்படி மந்திரம் தெரிந்த ஒருவரிடம் மந்திரம் உச்சரிக்க கற்றுக்கொண்டு தான் மந்திரம் உச்சரிக்க வேண்டும்.

ஆயுள் அதிகரிக்க.

மண் பானை தண்ணீர்  குடிப்பதும், மண் பானையில் சமைத்து உண்பதும் ஆயுளை அதிகரிக்கும்.

Sunday 8 December 2013

கொலை கருவி புனித சின்னமா?

இயேசு வாழ்ந்த காலத்தில் சிலுவை என்பது அரச தண்டனை பெறுபவர்களை கொலை செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவே இருந்தது. சிலுவையில் அறைந்து தான் எல்லோரையும் கொல்வார்கள். ஆனால் இயேசுவை கொன்ற பிறகு சிலுவையை புனித சின்னம் என்று புரளியை பரப்பி விட்டார்கள்.

இறை தூதரான இயேசுவை கொல்ல பயன்படுத்தப்பட்ட சிலுவை புனித சின்னமா?

அப்படியானால், சாக்ரடீஸை கொல்ல கொடுக்கப்பட்ட விஷம் புனித சின்னமா?

ஹிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு புனித சின்னமா?

இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் புனித சின்னமா?

சின் முத்திரை.

சின் முத்திரையின் போது, கட்டைவிரலின் ரேகை பகுதியையும், ஆள்காட்டி விரலின் ரேகை பகுதியையும் மட்டுமே தொட்டு முத்திரை பிடிக்கவேண்டும். அதுவே நேர்மறை சக்தி தரும்.

விரலின் நக நுனியை பிடிப்பது கூட எதிர்மறை சக்தி தரும். காரணம், நகம் விரலின் புற பகுதியில் இருக்கிறது.

விரலின் புற பகுதியை பிடிப்பது என்னை பொருத்தவரை எதிர்மறை சக்தி தருவதாகவே நான் கருதுகிறேன்.

வாஸ்து.

வீட்டின் கதவு, அறையின் கதவு,  ஜன்னல் கதவு இவை வீட்டின் வெளிப்புறமாக திறப்பது போல் அமைப்பது, வெளி உலக தொடர்பை அதிகரிக்கும், புது புது நட்பை கொடுக்கும், முன்னேற்றத்தை கொடுக்கும்.

வீட்டின் கதவு, அறையின் கதவு, ஜன்னல் கதவு இவை வீட்டின் உள்புறமாக திறப்பது போல் அமைப்பது, வெளி உலக தொடர்பை குறைக்கும், துண்டிக்கும், நட்புறவை குறைக்கும், துண்டிக்கும்,  முன்னேற்றம் தராது.

விலை மதிப்பற்ற ஓவியங்கள்.

உலகிலேயே விலை மதிப்பற்ற ஓவியங்கள், மோனாலிசா ஓவியங்களோ, ரவிவர்மனின் ஓவியங்களோ அல்ல.

குழந்தைகள் வீட்டு சுவரில் வரையும் ஓவியங்கள் தான். இவற்றை விலைக்கு வாங்கும் கோடீஸ்வரன் இது வரை இந்த உலகத்தில் பிறக்கவில்லை.

சித்ரகுப்தன்.

he is the worlds first and worlds no.1 fast master super computer.
he is having the databases of all human beings.

உலக நாடுகளை எல்லாம் வேவு பார்க்கும் அமெரிக்கா சித்ரகுப்தனை தொடர்பு கொள்ளலாம்.

பாவம்.

மக்கள் சொத்தையும், பொது சொத்தையும் கொள்ளை அடித்து தின்று கொழுத்தவர்களிடம் கோடி கோடியாக கொள்ளை அடித்தாலும் பாவம் ஆகாது.

பொது மக்களிடம் 1 ரூபாய் திருடினாலும் அது மகா பாவம்.

குளியல்.

குளிக்காமல் சாப்பிடுவது தோஷத்தை கொடுக்கும்.

அன்னதானம்.

அன்னதானம் என்பது கோடீஸ்வரர்கள் மட்டுமே செய்ய முடியும் என்று பலர் நினைக்கிறார்கள்.

ஏழைகளும் அன்னதானம் செய்ய முடியும்.

வீட்டின் அருகே மரங்களில் வாழும் எறும்புகளுக்கு ஒரு கைப்பிடி பச்சரிசி மாவு  இட்டாலே அதுவும் அன்னதானம் தான்.

காமம்.

காமம் தவறானது என்று கூறும் இந்தியாவில் தான்,
1)மக்கள் தொகை அதிகம்.
2)விபச்சாரம் அதிகம்.
3)எய்ட்ஸ் அதிகம்.
4)கள்ள உறவுகள் அதிகம்.

ஒருவேளை இந்தியர்கள் யாரும் தவறு செய்யாமலேயே, வேற்று கிரகவாசிகள் வந்து தவறு செய்துவிட்டு செல்கிறார்களோ?

கை.

பெண்ணை அணைக்கும் அதே கையால் தான் மனிதன் கடவுளையும் வணங்குகிறான்.

விளக்கு.

என்னை பொறுத்தவரை வீட்டில் விளக்கு ஏற்றுவது ராசியாக இல்லை. எனவே வீட்டில் விளக்கு ஏற்றுவதில்லை.

தமிழர்களிடம் விளக்கேற்றும் பழக்கம் இல்லை என்றும் சமணர்கள் தான் தமிழர்களுக்கு விளக்கேற்றும் பழக்கத்தை சொல்லிக்கொடுத்தார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது.

தாம்பத்யம்.

அமாவாசை, பௌர்ணமி காலங்களில் கணவன், மனைவி தாம்பத்யம் வைத்துக்கொண்டால் ஆயுள் குறையும் என்று சொல்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. தகவல் ரீதியாக பகிர்கிறேன்.

நாளை.

நாளை என்று ஒரு நாள் இருக்கிறது. அதில் எந்த அற்புதங்கள் வேண்டுமானாலும் நிகழலாம். எந்த பேரழிவுகள் வேண்டுமானாலும் நிகழலாம்.

பிரச்சனை.

உண்ணா விரதம், சிறை நிரப்பும் போராட்டம், உருவ பொம்மை எரிப்பு போன்றவை மக்களின் 100% பிரச்சனைகளை தீர்க்காது.

Saturday 30 November 2013

ராசி பலன்.

ஒரு மனிதனின் வாழ்க்கையை இந்த பிரபஞ்சத்தில் உள்ள பல கோடிக்கணக்கான விசயங்கள் தீர்மானிக்கின்றன.

ஆனால் பலர் பத்திரிகை, tv, இணையதளம் இவற்றில் இருக்கும் ராசி பலனை நம்பி ஏமாறுகிறார்கள்.

உதாரணமாக, ஒரு பத்திரிகையில் ஒரு ராசிக்கு பலன் எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி என்று வைத்துக்கொள்வோம். ராசிகள் மொத்தம் 12. சராசரியாக இந்தியாவில் 10 கோடி பேர் ஒரே ராசிக்காரர்களாக இருப்பார்கள்.

அப்படியானால் அந்த ராசிபலனில் உள்ளபடி 10 கோடி பேருக்கும் பலன் இருக்குமா? என்னை பொறுத்தவரை இல்லை என்பேன்.

உதாரணமாக, ஒரு பத்திரிகையில் நட்சத்திர பலன் எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உலகத்தின் மக்கள் தொகை 270 கோடி என்று வைத்துக்கொள்வோம். நட்சத்திரங்கள் மொத்தம் 27. சராசரியாக உலகத்தில் 10 கோடி பேர் ஒரே நட்சத்திரக்காரர்களாக இருப்பார்கள்.

அப்படியானால், அந்த நட்சத்திர பலன் படி 10 கோடி பேருக்கும் பலன் இருக்குமா? என்னை பொருத்தவரை இல்லை என்பேன்.

வியாதி, மரணம்.

வியாதி, மரணம் இந்த இரண்டுமே, ஜாதி, மதம், நிறம், இனம், மொழி, வயது, ஏழை, பணக்காரன், ஆண், பெண், திருநங்கை என்ற எந்த பேதமும் பார்ப்பது இல்லை. 

சோத்து கத்தாழை.

சோத்து கத்தாழையை வீட்டிற்கு உள்ளே அல்லது கடைக்கு உள்ளே கட்டி தொங்கவிட்டால் ஆணுக்கு விபத்து ஏற்படும்.

ஆரோக்கியம்.

வீட்டில் எந்த அளவுக்கு காற்றோட்டம் அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆரோக்கியம் இருக்கும்.

நேர்மறை சக்தி.

மரங்கள் எதிர்மறை சக்தியினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மனிதர்களை காக்கின்றன. நேர்மறை சக்தியை அளவுக்கு அதிகமாக மனிதர்களுக்கு தருகின்றன.

வீட்டை சுற்றி எந்த அளவுக்கு அதிகமாக மரங்கள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நேர்மறை சக்தியும் அதிகம் இருக்கும்.

அபசகுனமா?

பலர் மின்சாரம் நிறுத்தப்படுவது கூட அபசகுனம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நல்ல விஷயம் பேசிக்கொண்டு இருக்கும் போது மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டால் அதை அபசகுனம் என்று நினைக்கிறார்கள். இது தவறானது. மின்சாரத்துக்கும் சகுனத்துக்கும் சம்பந்தமே இல்லை.

மின்சாரம் நிறுத்தப்படுவது மின்சார துறை சார்ந்தது. அதற்கும் சகுனத்திற்க்கும் என்ன சம்பந்தம்?

இன்றைய உணவுகள்.

இன்றைய packing செய்யப்பட்ட உணவுகள் எல்லாவற்றிலும் அது biscuit முதல் pizza வரை natural identical synthetic flavour, preservative, synthetic food colour என்று நிறம், மணம், சுவை, கெட்டு போகாமல் இருக்க என்று பல ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்துமே மனிதனின் ஆயுளை குறைக்கும்.

கருவளையம்.

கண்ணில் கருவளையம் இருப்பவர்கள் நாம கட்டியை குலைத்து தடவினால் கருவளையம் நீங்கும்.

உருளைக்கிழங்கை சிறு துண்டாக நறுக்கி, கருவளையத்தில் வைத்தால் கருவளையம் நீங்கும்.

கோவணம்.

இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லோருக்கும் கேவலமான தலைப்பாக தோன்றும். காரணம் சினிமா என்ற ஊடகம் இதை ஒரு கேவலமான ஆடையாக மக்களிடம் பரப்பிவிட்டது.

ஒரு ஆண் ஜட்டி அணிந்துகொண்டு நாள் முழுவதும் பல இடங்களுக்கும் அலைந்து, அல்லது பல ஊர்கள் சுற்றி திரிந்துவிட்டு இரவு வீடு வந்த பின்புதான் அதை கழட்டுகின்றான். அப்போது அவன் இரு தொடைகளும் சேரும் இடத்தில் தொட்டு பார்த்தால் சற்று அதிகமான வெப்பம் இருக்கும். இந்த வெப்பம் விந்தணுக்களின் வீரியத்தை குறைக்கும் என்பது என் கருத்து. 

என்னை பொருத்தவரை, ஜட்டி அணியும் ஆணின் விந்தணுக்களின் வீரியத்தை விட, கோவணம் அணியும் கிராமத்து கிழவனின் விந்தணுக்களின் வீரியம் அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து.

மின்சாரம்.

மின்சாரம் நிறுத்தப்படுவதால், ஆளுங்கட்சிகளின் tv சேனல்களும், அவற்றுக்கு ஆதரவான tv சேனல்களும் பார்க்க முடிவதில்லை.

இதில் அவர்களுக்கு தான் நட்டம் என்று அவர்களுக்கு புரிவதே இல்லை.

(idea இல்லாத பசங்க.)

காமம்.

காமத்தை ஒதுக்கினால் தான் கடவுளை அடைய முடியும் என்று பலரும் புரளியை பரப்பி விடுகிறார்கள்.

நான் இதை நம்பவில்லை.

காரணம், மனித இனம் தோன்றிய காலம் முதல், இறந்து போன என் தாத்தா வரை யாருமே காமத்தை ஒதுக்காத காரணத்தினால் தான் நான் பிறந்து இருக்கிறேன். இங்கே பதிவிட்டுக்கொண்டு இருக்கிறேன்.

அப்படியானால், மனித இனம் தோன்றியது முதல், என் தாத்தா வரை பல கோடி தலைமுறைகளாக யாருமே கடவுளை அடையவில்லை என்றுதான் அர்த்தம். எனவே இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடவுள் படங்கள்.

கடவுள் படங்கள் வீட்டில் வைத்தால் தான் கடவுளின் அருள் நமக்கு கிடைக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

நான் இதை நம்பவில்லை. கடவுள் படங்களை வீட்டில் வைப்பது துன்பத்தையே தருவதாக நான் கருதுகிறேன்.

அச்சு துறை (printing technology) வந்த பிறகு தான் எல்லோரும் கடவுள் படங்களை வீட்டில் வைக்க ஆரம்பித்தார்கள்.

அச்சு துறை வருவதற்கு முன்னால் ஓவியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் எல்லோர் வீட்டிலும் ஓவியங்கள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது என் கருத்து.

பெரியார்.

சாமி இல்லை என்று சொன்ன பெரியாரின் பெயரிலேயே சாமி இருக்கிறது. 

"ஈ.வே.ராமசாமி"

தேயிலை தோட்டம்.

இந்தியாவின் பல பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உள்ளது எல்லோருக்குமே தெரியும். இவை வெள்ளைக்காரன் காலத்தில் அவர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டவை.

ஆனால் இவற்றை உருவாக்க அங்கிருந்த காடுகள் அழிக்கப்பட்டன என்று இன்றைய இந்தியர்கள் யாருக்கும் தெரியாது.

சரி விடுப்பா! தேயிலை மூலமாக வருமானம் வருதுல்ல! என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் பொருளாதார ரீதியாக மட்டும் பார்க்காமல் இயற்கை ரீதியாக சற்று யோசித்து பாருங்கள். 

ஒரு மரம் இருக்க வேண்டிய இடத்தில் சில செடிகள் இருப்பது இயற்கைக்கு லாபமா? நட்டமா?

ஒரு காடு இருக்க வேண்டிய இடத்தில், தோட்டம் இருப்பது இயற்கைக்கு லாபமா? நட்டமா?

tooth paste.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரபலமான நிறுவனங்கள் பலவற்றின் tooth pasteகளில்  நிகோடின் சேர்க்கப்படுவதாக சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்தேன்.

இதை பற்றி கேட்டால், அரசாங்கம் அனுமதிக்கும் அளவு மட்டுமே தாங்கள் சேர்ப்பதாக அவர்கள் சொல்கிறார்களாம்.

Tuesday 26 November 2013

ஆணாதிக்கமா?

ஆண்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் உடை விசயத்தில் கட்டுப்பாடு விதிப்பது ஆணாதிக்கம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அது ஆணாதிக்கம் அல்ல.

தன் வீட்டு பெண்ணுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற உண்மையான அன்பின் வெளிப்பாடு.

எந்த ஒரு ஆணும், (தந்தை, சகோதரன், நண்பன், காதலன், கணவன்) தன் வீட்டு பெண்ணிடம், உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணிந்து செல் என்று சொல்ல மாட்டான். உடலை மறைத்து ஆடை அணிந்து செல் என்று தான் சொல்வான். அப்படி சொல்லவில்லை என்றால் அவனுக்கு உங்கள் மீது உண்மையான அன்பு இல்லை என்று அர்த்தம்.

ஒரு ஆண் (தந்தை, சகோதரன், நண்பன், காதலன், கணவன்) தன்  வீட்டு பெண்ணிடம், உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணிந்து செல் என்று சொன்னால், அவனுக்கு உறவுமுறை பெயரே இல்லை. அவனுக்கு ஒரே பெயர் தான். 

"பொம்பளை புரோக்கர்".

ஆபாசத்தின் உச்ச கட்டம்.

ஒரு பெண் உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணிந்து வந்தால் 19 வயது ஆண் முதல் 91 வயது கிழவன் வரை பார்க்கத்தான் செய்வான்.

அவ்வாறு பார்ப்பவனை, ரிக்சா மாமா படத்தில் வரும் கவுண்டமணி கத்துவது போல், "பார்த்துட்டான்!!!!!, பார்த்துட்டான்!!!!, இவன் என்னை பார்த்துட்டான்!!!, இங்கே பாருங்க இவன் என்னை பார்த்துட்டான்!!!!, அய்யய்யோ இவன் என்னை பார்த்துட்டான்!!!" என்று கத்துவது ஆபாசத்தின் உச்ச கட்டம்.  

மரண பயம் நீங்க.

மரண பயம் நீங்க, கறந்த பசும்பாலை சிறிதளவு எடுத்து,(அது காய்ச்சாத பாலாக இருக்க வேண்டும்.) உச்சந்தலையில் வைத்து சிறிது நேரம் ஊற வைத்து 20 நிமிடங்களுக்கு பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்கலாம்.

Thursday 21 November 2013

பீர்.

பீர் குடித்தால் உடல் எடை கூடும் என்று பலரும் நம்பி குடிக்க ஆரம்பிக்கிறார்கள். மது குடிக்கும் பழக்கத்திற்கு முதல் படி இதுவாக பலர்க்கு அமைகிறது. இது மதுபானம் விற்பவர்கள் பரப்பிவிட்ட ஒரு புரளி என்பது என் கருத்து. என் நண்பர்கள் பலர் இப்படித்தான் குடிக்க ஆரம்பித்தார்கள். அனால் எவன் உடலும் எடை கூடவில்லை.

ஆரோக்கியமாக சாப்பிட்டாலே உடல் எடை கூடும்.

எனக்கு தெரிந்த சில எடை கூட்டும் யோசனைகள்:-
1)உணவு சாப்பிட்ட பின் பேரிச்சம்பழம் சாப்பிடலாம். உணவு சாப்பிடும் முன் பேரீச்சம்பழம் சாப்பிட கூடாது.

2)மண்பானை குளிர்ந்த நீரில் தேன் கலந்து சாப்பிடலாம்.

3)நிலக்கடலை பருப்பு சாப்பிடலாம்.

4)கொழுப்பு சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.

ஐம்பொன்.

தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம்,   இந்த உலோகங்களால் ஆன ஆபரணங்களை அணிவதும், வீட்டிலும், கோவில்களிலும் பூஜை பொருட்களாக பயன்படுத்துவதும் எதிர்மறை சக்தியையே தரும் என்பது என் கருத்து.


 மண், மரம், கண்ணாடி, பீங்கான், செம்பு, stainless steel   இவற்றால் ஆன  பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்துவதே நேர்மறை சக்தி தரும் என்பது என் கருத்து.

இதற்கு மிக சிறந்த உதாரணம் கண்ணகி.

கண்ணகி வாழ்ந்த காலத்திலேயே தங்கத்தை அணியலாமா? அணியகூடாதா? என்று தெரியாமலேயே தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். தங்கத்தை அணிந்திருக்கிறார்கள்.

கண்ணகி அணிந்த சிலம்பு தங்கத்தால் ஆனது. தங்கத்தை காலில் அணிந்தால் அவர்கள் அழிவு நிலைக்கு செல்வார்கள். இதில் இன்னொரு துன்பம் தரும் விஷயம் அதில் மாணிக்க கற்கள் இருந்தது. தங்கத்தோடு மாணிக்க கற்களும் இருந்தது மாபெரும் அழிவு நிலைக்கே கொண்டு செல்லும். 

இதில் இன்னொரு தகவல் என்ன என்றால், மன்னனின் மனைவியின் காலில் முத்துக்களால் ஆன சிலம்பு. இதுவும் அழிவு நிலைக்கே செல்லும். 

முத்தை விட மாணிக்கம் விலை உயர்ந்தது. மன்னர்களை விட வணிகர்கள் மாபெரும் செல்வந்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

வெள்ளிக்கிழமையும், விளக்கு வைக்கும் நேரமும்.

வெள்ளிக்கிழமையும், விளக்கு வைக்கும் நேரமும் யாருக்காவது பணம் கொடுத்தால் லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்று பலரும் நம்புகிறார்கள்.

என்னைப்பொருத்தவரை அது மிகவும் தவறு.

நம்பிக்கை துரோகம் செய்பவர்களையும், கூட இருந்தே குழி பறிப்பவர்களையும் உடன் வைத்து இருந்தாலும், நம்பக்கூடாதவர்களை நம்புவதாலும் தான் பணத்தை இழக்க நேருமே தவிர, வெள்ளிக்கிழமை பணம் கொடுப்பதால் லட்சுமி யாரையும் விட்டு செல்ல மாட்டாள்.

பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழந்தவன் நான். இதற்க்கு காரணம் நம்பக்கூடாத உறவுகளை நம்பியதே காரணமே ஒழிய, வெள்ளிக்கிழமை காரணம் அல்ல.

சற்று யோசித்து பாருங்கள், ஒருவன் வெள்ளிக்கிழமை 7 மணிக்கு மேல் மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை, இப்போது விளக்கு வைக்கும் நேரம், அதனால் பணம் தரமாட்டேன் என்று சொன்னால், அவனுக்கு தர்ம அடி தான் விழும்.

மஞ்சள்.

மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களுக்கு 99.99% தோல் சம்பந்தமான வியாதிகள் வராது.

குங்குமம்.

விதவை பெண்கள் குங்குமம் வைக்ககூடாது, மஞ்சள் தேய்த்து குளிக்க கூடாது, பூ வைத்துக்கொள்ள கூடாது என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. அது மனிதர்களால் பெண்களை அடிமைப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு செயல்.

என்னைப்பொருத்தவரை விதவை பெண்கள், குங்குமம் வைத்துக்கொள்ளலாம். பூ வைத்துக்கொள்ளலாம். மஞ்சள் தேய்த்து குளிக்கலாம்.

tiles, marbles, granite Vs தட்டோடு.

tiles, marbles, granite, பதிப்பது உடலின் சக்தியை உறிஞ்சும். ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும்.

தட்டோடு பதிப்பது நல்லது. வீட்டின் மொட்டை மாடியில் தட்டோடு பதிப்பது அறையில் வெப்பத்தை குறைக்கும். வீட்டின் அறைகளிலும், சுவர்களிலும் பதிக்கலாம்.

தட்டோடு எல்லா ஓடு விற்கும் கடைகளிலும் கிடைக்கும்.

Tuesday 19 November 2013

பெண் சுதந்திரம்.

பெண்களுக்கான இயற்கை விவசாய முறையில் அதிக விளைச்சல் செய்வோருக்கான போட்டி என்று வைத்தால் அது பெண் சுதந்திரம் என்று சொல்லலாம்.

பெண்களுக்கான laptop செய்யும் போட்டி என்று வைத்தால், அதை பெண் சுதந்திரம் என்று சொல்லலாம்.

பெண்களுக்கான cell phone செய்யும் போட்டி என்று வைத்தால், அதை பெண் சுதந்திரம் என்று சொல்லலாம்.

எவன்டா இதையெல்லாம் செய்றீங்க?
எவடி இதையெல்லாம் செய்றீங்க?

அதை விட்டு விட்டு bra மற்றும் ஜட்டி அணிந்துகொண்டு அழகி போட்டி என்று நடத்தினால் அதை பெண் சுதந்திரம் என்று சொல்ல முடியுமா?
அழகி போட்டியில் கலந்துகொள்ளும் எல்லா இந்திய பொட்டச்சிகளும் அன்னை தெரேசா மாதிரி சேவை செய்வேன்னுதான் சொல்றாளுக. என்ன சேவை செய்யிராளுகன்னு எனக்கு தெரியவில்லை.

வருடத்திற்கு ஒருமுறை அழகு சாதன நிறுவனங்கள் கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, அந்தந்த ஊரில் இருக்கும் பெண்களை வரவைத்து (அவர்களுக்கு தாலி கட்டிய கணவனையும் , அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளையும் விட்டு விட்டு வரவேண்டும் என்று விளம்பரம் செய்து) அங்கே அவர்களை குத்தாட்டம் ஆட வைத்து அதை படமெடுத்து ஒளிபரப்புவது பெண் சுதந்திரமா?


Wednesday 13 November 2013

கிணறு.

கன்னி மூலை கிணறு அல்லது போர்வெல் ஆண்களின் ஆயுளை குறைக்கும்.

வாயு மூலை கிணறு அல்லது போர்வெல் பெண்களின் ஆயுளை குறைக்கும்.

Monday 11 November 2013

பூஜை பொருட்கள்.

கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி பூஜை பொருட்களில் ஐம்பொன் என்று அழைக்கப்படும் தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம் இவற்றால் தயாரிக்கப்பட்ட எல்லா பொருட்களையும் தவிர்ப்பதே நல்லது என்பது எனது கருத்து.

மண், மரம், கண்ணாடி, பீங்கான், இரும்பு, எஃகு, செம்பு  இவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதே சரி என்பது எனது கருத்து.

Sunday 10 November 2013

ஏழைகள்.

Tanya Desigan என்பவர் g+ இல் கேட்ட கேள்விக்கு இங்கே பதில் அளிக்கிறேன்.

ஏழைகள் அதிகம் கஷ்டப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றை இங்கே தருகிறேன்.

1)ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரித்தான தெய்வங்கள் உள்ளன. அவை தவிர வேறு தெய்வங்களை வணங்கினால் துன்பங்களே வரும். ஏழை மக்கள் இது தெரியாமல், பக்கத்து வீட்டு அக்கா சொன்னார், எதிர் வீட்டு அக்கா சொன்னார் என்று பல கோவில்களுக்கு சென்று பல தெய்வங்களை வணங்குகிறார்கள்.

2)கோவில்களில் எதையுமே தொட்டு வணங்க கூடாது. மீறி தொட்டு வணங்கினால் கஷ்டம் தான் வரும். இது தெரியாத ஏழை மக்கள் கோவில்களில் கருவறையில் இருக்கும் தெய்வம் தவிர, எல்லா சிலைகள், கொடி மரம், பலி பீடம், தேர், நந்தி, கடவுளுக்கே உரித்தான வாகனங்கள்(எலி, சிங்கம், மயில்), இவற்றை தொட்டு வணங்குகிறார்கள்.


தெற்கு நோக்கி விளக்கேற்ற கூடாது. தெற்கு நோக்கி விளக்கேற்றுகிறார்கள்.

விளக்கேற்றும் போது எண்ணெய் கையில் பட்டுவிட்டால், கை கழுவிவிட்டு பிறகு தான் விளக்கு ஏற்றவேண்டும். ஆனால் அந்த எண்ணையை தலையில் தடவிக்கொள்கிறார்கள். இவ்வாறு செய்தால் கஷ்டம் வரும்.

3)கட்டை விரலால் தலை சொரிவது தரித்திரம் என்று சொல்லப்படுகிறது. ஏராளமான பெண்கள் கட்டை விரலால் தான் தலையை சொரிகிறார்கள்.

4)சாப்பிடும் சமயத்தில் புறங்கையை நக்குவது தரித்திரம் என்று சொல்லப்படுகிறது. பலர் புறங்கையை நக்கி சாப்பிடுகிறார்கள்.

5)தீய சக்திகளை ஏவுவது ஏழைகளில் அதிகம் பேர் இருக்கிறார்கள். இதற்க்கு ஒரு சிறு உதாரணம், மதுரை அருகே இருக்கும் மடப்புரம் கோவிலில் காசு வெட்டி போடுவது. மற்றும் மந்திர வேலைகள் பார்ப்பது.

6)பகை என்று வந்துவிட்டால், சாபம் கொடுப்பதும், மண்ணை அள்ளி தூற்றுவதும் ஏழைகளில் அதிகம்.

7)பெண்கள் வெறும் தரையில் படுக்கை விரிப்புகள் இன்றி படுப்பது தவறாகும். பெண்களின் ஸ்தனங்கள் தரையில் படும்படி படுத்தால் அவர்களுக்கு அதிக துன்பங்களை தான் தருவேன் என்று பூமா தேவி சொல்வதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.( இந்த தகவல் சேங்காலிபுரம் ப்ரம்ஹஸ்ரீ அனந்த ராம தீட்சிதர் எழுதிய "ஸ்ரீ ஜெய மங்கள ஸ்தோத்திரம்" என்ற புத்தகத்தில் இருக்கிறது. இந்த புத்தகம் ஆன்மீக புத்தகங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். இந்த புத்தகம் சென்னையில் மயிலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் அருகே இருக்கும் ஆன்மீக பொருட்கள் விற்கும் கடையில் இருக்கிறது.)
பல பெண்கள் வீட்டின் வெளியே தரையில் படுக்கை விரிப்புகள் இன்றி படுக்கிறார்கள்.

8)ஏழைகளின் வருமானத்தின் பெரும் பகுதி அவர்கள் கட்டும் வட்டிக்கே சென்று விடுகிறது.

9)ஏழைகளின் வருமானத்தின் பெரும்பகுதி மதுபானங்கள் குடிப்பதற்கு செலவிடப்படுகிறது. நடுத்தர வர்க்கமும், பணக்கார வர்க்கமும் தங்கள் வருமானத்தின் சிறு பகுதியை தான் மதுபானம் குடிக்க செலவழிக்கிறார்கள்.

10)ஏழைகளை மேலும் ஏழைகளாக்க, அவர்களை குறி வைத்து செய்யப்படும் சதி செயல்கள் ஏராளம். இது உலக அளவில் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

தவறு என்பது ஒரு குடும்பத்தில் ஆண் செய்தாலும் சரி, பெண் செய்தாலும் சரி அது அந்த குடும்பம் மொத்தத்தையும் பாதிக்கும்.

ஏழைகள் வசிக்கும் பகுதியில் நீங்கள் வசித்தால் மேற்சொன்ன எல்லா விசயங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

மேற்சொன்ன எல்லா விசயங்களையும் சரி செய்துவிட்டால் இந்தியாவில் 99.99% ஏழைகள் இருக்க மாட்டார்கள். இது உலக அளவிலும் சாத்தியமே.


கனவு பலன்.

கனவு பலன் பற்றி அறிய விரும்புவோர் dreammoods.com இணையத்தை பார்க்கலாம்.

கண்ணாடி பாட்டில்கள்.

கண்ணாடி பாட்டில்களில் சமையலுக்கான பொருட்களை வைத்து இருப்பது அந்த பொருட்களின் தரம், சுவை, குணம், மணம் இவற்றை பாதுகாக்கும். இதனால் இவற்றின் ஆயுட்காலம்(shelf life) தக்கவைக்கப்படும்.

பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் வைப்பது உணவு பொருட்களின் தரம், சுவை, மணம் குன்றச்செய்யும்.

சமையலறை.

சமையலறையின் கிழக்கு, வடக்கு பகுதியில் சமையலுக்கான பொருட்களை வைப்பதும், அதை பயன்படுத்துவதும் நேர்மறை சக்தி தரும். அதாவது கிழக்கு, வடக்கு பகுதியில் சமையலுக்கான பொருட்கள் வைக்கும் அலமாரி இருப்பது என்று அர்த்தம்.

புத்திசாலிகள், முட்டாள்கள்.

முட்டாள்களை புத்திசாலிகளாக்குவது எப்படி என்று புத்திசாலிகளுக்கே தெரியாத விஷயம்.

முட்டாள்கள் புத்திசாலிகளின் வழியில் செல்வதே இல்லை. ஆனால் புத்திசாலிகளை முட்டாள்களாக்குவது எப்படி என்று முட்டாள்களுக்கு தெரியும். அதுவே முட்டாள்களின் புத்திசாலித்தனம்.

தமிழன் வேப்பங்குச்சியில் பல் துலக்கி தன் பற்களை ஆரோக்கியமாக வைத்து இருந்தான். ஆனால் தற்போது தமிழனால் tooth paste, brush இல்லாமல் பல் துலக்க தெரியாது.

தமிழன் குளிப்பதற்கு பாசி பயறு மாவும், கடலை மாவும், மற்ற பல பொருட்களையும் பயன்படுத்தினான். இன்றைய தமிழனால் soap, shampoo இல்லாமல் குளிக்க தெரியாது. இங்கே சுத்தம் என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வரலாம். soap, shampoo உபயோகித்தால் தான் சுத்தம் வரும் என்றால் soap, shampoo கண்டுபிடிப்பதற்கு முன்பு வாழ்ந்த தமிழன் வரையில் யாருமே சுத்தமாக இல்லை என்று அர்த்தமாகிவிடும். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழன் துணிகளை சுத்தப்படுத்த என்ன பயன்படுத்தினான் என்று எனக்கு தெரியவில்லை. இன்றைய தமிழனால் detergent powder, detergent cake இல்லாமல் துணிகளை சுத்தம் செய்ய தெரியாது.

தமிழன் பாத்திரங்களை சுத்தப்படுத்த சாம்பல், புளி போன்ற பொருட்களை பயன்படுத்தினான். இன்றைய தமிழனால் dish wash bar இல்லாமல் பாத்திரங்களை சுத்தம் செய்ய தெரியாது.

soap, shampoo, detergent powder, dish wash bar இந்த எல்லா பொருட்களும் ரசாயன பொருட்களால் தான் தயாரிக்கப்படுகின்றன.

எந்த ஒரு சோப்பிலும், விளம்பரங்களில் வருவது போல் பழசாறுகள் சேர்க்கப்படுவது இல்லை. பாத்திரம் தேய்க்கும் சோப்பில் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுவது இல்லை. எல்லாமே ரசாயனம். அதாவது natural identical synthetic flavours. இயற்கையான பொருட்கள் போன்று நறுமணம் தரக்கூடிய செயற்கையான ரசாயன பொருட்கள்.

இவை அனைத்துமே நீரை மாசுபடுத்துகின்றன.

ஒரு நாளைக்கு ஒரு மனிதன் குளிக்க சோப்பு பயன்படுத்துவதால் ஒரு லிட்டர் தண்ணீரை மாசுபடுத்துகின்றான் என்று வைத்துக்கொள்வோம். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு சோப்பு பயன்படுத்துவதால் எவ்வளவு லிட்டர் நீர் மாசுபடுகிறது என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் துணி துவைக்கவும், பாத்திரம் கழுவவும், சோப்பு பயன்படுத்துவதால் 2 லிட்டர் நீர் மாசுபடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் நீர் மாசுபடுகிறது என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

அசைவம்.

அசைவம் சாப்பிடமாட்டேன் என்று சொல்லும் பெண்கள் கூட பட்டு புழுக்களை கொன்று தயாரிக்கப்படும் பட்டு புடவைகளை வாங்கி சந்தோசமாக அணிகிறார்கள்.

அசைவம் சாப்பிடமாட்டேன் என்று சொல்லும் ஆண்கள் கூட மிருகங்களை கொன்று, மிருகங்களின் தோலினால் தயாரிக்கப்பட்ட செருப்பு, ஷூ, பெல்ட், பர்ஸ் உபயோகிக்கிறார்கள்.

மரணம்.

கண்திருஷ்டிக்காக கட்டப்பட்ட பொருட்கள் தானாக கயிறு அறுந்து விழுந்துவிட்டாலோ, அல்லது அதை கழற்றும்போது கயிறு அறுந்து விழுந்துவிட்டாலோ, அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் நேரலாம்.

விக்கல்.

ஒருவர் நம்மை நினைப்பதால் தான் விக்கல் வருகிறது என்று பலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். என்னை பொருத்தவரை இது தவறு.

தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்காதவர்கள் திருநீரை நெற்றியில் நெற்றிக்கண் (third eye chakra) பகுதியில் பூசினால் விக்கல் நிற்கும். (third eye chakra பற்றிய மேலும் விவரங்கள் அறிய you tube இல் பார்க்கலாம்.)

மரணத்தின் தருவாயில் இருப்பவர்களுக்கும் விக்கல் தொடர்ந்து இருக்கும். இது மரணத்திற்கு முந்தைய அறிகுறியாகவும் எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கும் திருநீறு பூசினால் விக்கல் நிற்கலாம்.

ஐம்பொன்.

ஐம்பொன் என்று அழைக்கப்படும்  தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம் போன்ற பொருட்கள் ஆபரணமாகவும், விளக்கு தயாரிக்கவும் செய்யும் போது  அது மனிதர்களின் செயல்திறனை குறைக்கிறது.

இதற்கு மிக சிறந்த உதாரணம், முந்தைய தலைமுறை பெண்களை விட, இன்றைய தலைமுறை பெண்கள் மேற்சொன்ன உலோகங்களால் ஆபரணம் அணியாமல் இருப்பதும், குறைவாக அணிவதும் ஒரு காரணம்.

நம் முன்னோர்கள் கயிறில் தான் தாலி கட்டினார்களே தவிர தங்கத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை.

பித்தளையினால் தயாரிக்கப்பட்ட விளக்கு ஏற்றுவது, என்னை பொறுத்தவரை தவறான முடிவெடுக்கும் திறனை தருகிறது. வெள்ளியினால் விளக்கு ஏற்றுவது அதைவிட அதிகமான துன்பம் தருகிறது.

Thursday 7 November 2013

பாவத்தை அதிகரிக்கும் லஞ்சம்.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் குடும்பத்தில், நல்லநிலையில் வாழமுடியாத பிள்ளை அல்லது தீராத வியாதி உடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் கண்டிப்பாக இருப்பார்.

தங்கம், வெள்ளி.(gold, silver)

தங்கம், வெள்ளி இவற்றால் உருவாக்கப்பட்ட தட்டுகளில் உணவு வைத்து சாப்பிடுவது அதிக துண்பத்தை தரும் என்பது எனது கருத்து.

முன்னால் நடிகர், தியாகராஜ பாகவதர் தங்க தட்டில் தான் உணவு வைத்து சாபிடுவாராம். அவர் கொலை குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்தார்.

நான் என்னுடைய 20 வயது வரை வெள்ளி தட்டில் உணவு வைத்து சாப்பிட்டவன், வெள்ளி டம்ப்ளரில் தான் தண்ணீர் குடிப்பேன். ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் எவ்வளவோ துன்பங்களை அனுபவித்து வருகிறேன்.

நட்சத்திர உணவகங்களில் வெள்ளி பொருட்களில் தான் உணவை பரிமாறுகிறார்கள்.

பலர் தங்கள் குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணத்தில் உணவு வைத்து, அந்த குழந்தைகளுக்கு ஊட்டுகிறார்கள். அது அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கலாம்.

கண்ணாடி, பீங்கான், இலைகள், மண் பாத்திரங்களே சிறந்தவையாக நான் கருதுகிறேன்.

திருநீறு, குங்குமம்.

திருநீறு, குங்குமம் இவை இரண்டையும் திறந்த நிலையில் இருக்கும் கண்ணாடி அல்லது பீங்கான் அல்லது மண் கிண்ணத்தில் (bowl) வைப்பதே சரியானதாக நான் கருதுகிறேன்.

குங்குமத்தை எல்லோரும் பித்தளை அல்லது வெள்ளியில் உருவாக்கப்பட்ட குங்கும சிமிழில் தான்  வைக்கின்றோம். அது என்னை பொறுத்தவரை ராசி இல்லை என்றே கருதுகிறேன்.

சிலந்தி, எட்டு கால் பூச்சி.

சிலந்தி, எட்டு கால் பூச்சி இவை இரண்டும் வீட்டில் வராமல் பார்த்து அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். இவை இரண்டும் எதிர்மறை சக்திகளை அதிகம் ஈர்க்கும் தன்மை பெற்றவை.

Friday 1 November 2013

ஸ்படிகம், ராசி கற்கள்,(வைரம் உள்பட)precious and semi precious stones (including diamond)

ஸ்படிகம், ராசி கற்கள்,(வைரம் உள்பட) இந்த கற்கள் உபயோகிக்கும் போது  ஏற்படும் ஆபத்து நிலையை இங்கே தருகிறேன்.

1) முதல் கட்ட ஆபத்து நிலை, இந்த கற்களை பட்டை தீட்டி அணியும் போது, இவை பிரபஞ்ச சக்தியை மனித உடலில் ஏற்றுகின்றன. இதனால் மனிதனின் ஆயுள் குறைகிறது. closed type உபயோகபடுத்தினாலும் இதே நிலை தான். பட்டை தீட்டப்பட்ட கற்கள் ராசி கற்களாக இருந்தாலும் சரி, A.D.கற்களாக இருந்தாலும் சரி, அவை ஆயுளை குறைக்கும். ஆபரணமாக அணியாவிட்டாலும் வீட்டில் வைத்திருந்தாலும் அவை சக்தியை ஈர்த்துக்கொண்டே இருக்கும். அதனால் ஆயுள் குறையும்.

2) பந்து வடிவத்தில் ராசிக்கல் வாங்கினாலும் அதை அணிகலனாக அணிவது ஆயுளை குறைக்கும் என்பது என் கருத்து.



ஐந்து முக விளக்கு.

என்னை பொருத்தவரை ஐந்து முக விளக்கு என்பது ஒரு தவறான வடிவமைப்பாக நான் பார்க்கிறேன்.

காரணம், என்னுடைய கணக்குப்படி, கிழக்கு, வடக்கு இணைந்த "ட" வடிவம் நேர்மறை சக்தி கொண்டது.

மேற்கு, தெற்கு இணைந்த "ட" வடிவம் எதிர்மறை சக்தி கொண்டது.

ஐந்து முக விளக்கில் விளக்கேற்றும் போது, கண்டிப்பாக குறைந்தது இரண்டு முகங்கள் எதிர்மறை திசை நோக்கி இருக்கும். 

Friday 18 October 2013

செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம்.

தீய சக்திகள் எவியவரிடமே வந்து முடிவடையும். இது தெரியாமல் தான் தீய சக்திகளை ஏவும் 99.99% பேர் இருக்கிறார்கள்.

தீய சக்திகள் ஒருவர் மீது ஏவப்பட்டால், அவரை காக்க தெய்வ சக்தி உண்டு. ஆனால் அந்த தெய்வ சக்தியை முறையாக செயல்படுத்த தெரிந்தால் அந்த தீய சக்தியில் இருந்து தப்பிவிடலாம். இது பற்றி முறையாக தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பொய் சொல்லி ஏமாற்றுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

ஒருவர் மீது ஏவப்பட்ட தீய சக்தியை அவரிடம் இருந்து வெளியேற்றிவிட்டால், அந்த தீய சக்தி அதை எவியவரிடமே செல்லும். அப்போது அந்த தீய சக்தியை எவியவரை அவரது குல தெய்வம் கூட காப்பாற்றாது. அப்போது அந்த தீய சக்தியை எவியவரோ, அல்லது அவரது குடும்பத்தினரோ, அல்லது அவர் வம்சமோ மிகவும் கஷ்டப்படும். அல்லது அழியும் நிலை கூட வரலாம். இது தெரியாமல் தான் பலர் தீய சக்திகளை ஏவுகிறார்கள்.

எனவே தீய சக்திகளை கண்டு பயப்படாதீர்கள். தெய்வ சக்தியை நம்புங்கள். தெய்வ சக்தியை முறையாக செயல்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபடுங்கள். பொய் சொல்லி ஏமாற்றுபவர்களை நம்பாதீர்கள்.

எதிர் மறை சக்தி.

எதிர் மறை சக்தியை வீட்டில் வைத்து இருக்கும் சில பொருட்கள் அதிகம் ஈர்க்கின்றன. அவை உடைந்த கண்ணாடி, கிழிந்த துணிகள்.

உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு பல அரிய பொருட்களை விட்டு சென்றிருக்கலாம். அவை பாதுகாக்கப்பட வேண்டியவை. காரணம் அந்தக்கால பொருட்கள் விலை மதிப்பற்றவை. அவற்றை விற்றுவிட்டாலோ, அல்லது தூக்கி எறிந்துவிட்டாலோ, மீண்டும் கிடைக்காது.

ஆனால் உடைந்த கண்ணாடிகளையும், கிழிந்த துணிகளையும் யாருடைய ஞாபகார்த்தமாகவும் வீட்டில் வைத்து இருக்காதீர்கள்.

american diamond.

american diamond என்று அழைக்கப்படும் இந்த a.d.கற்கள், (அமெரிக்காவிற்கும் இந்த கற்களுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை.) பட்டை தீட்டப்பட்டு பயன்படுத்தப்படுவதால், இவையும் ஈர்ப்பு சக்தியுடன் செயல்படுகின்றன. எனவே இவையும் தவிர்க்கப்பட வேண்டியவை தான்.

Wednesday 16 October 2013

தீய சக்திகள்.

தீய சக்திகள் பாதிப்பு இல்லாமல் தடுக்க தினமும் உணவில் தயிர், இஞ்சி, நெல்லிக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.

கம்பு.

வழக்கமாக தோசைக்கு மாவு ஆட்டுவதைப்போல், கம்பை ஆட்டி தோசை சுடலாம். கம்பு, அரிசியை விட சற்று கடினமானது என்பதால் சற்று அதிக எண்ணெய் உறிஞ்சும். ஆனால் உடலுக்கு ஆரோக்கியமானது.

கிரைண்டரில் மாவு ஆட்டாமல், உரலில் கம்பு மாவை ஆட்டினால் தோசை இயற்கையான மணம் வீசும்.

கோதுமை சப்பாத்தி செய்யும் போது, கோதுமையில் சிறிதளவு கம்பு சேர்த்துக்கொண்டால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
கோதுமையில் நான்கில் ஒரு பங்கு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கோதுமை சப்பாத்தி போல் மெதுவாக இருக்காது. சற்று கடினமாக இருக்கும்.

வெல்ல பாகு, கருப்பட்டி பாகு.

வெல்லம் தேவையான அளவு எடுத்து, அதில் தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க வைத்தால், வெல்ல பாகு கிடைத்து விடும்.

கருப்பட்டி தேவையான அளவு எடுத்து, அதில் தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க வைத்தால், கருப்பட்டி பாகு கிடைத்து விடும்.

இதை, இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். நன்றாக இருக்கும்.

சில பெண்கள்.

சில பெண்கள் கோவிலுக்கு வரும்போது அணிந்து வரும் ஆடை, சாமி கும்பிடும் எண்ணத்தை தடுத்து விடுகிறது.

சாமி தரிசனமா? இல்லை இது போன்ற சில பெண்களின் தரிசனமா? என்று மனம் போராட்டம் நடத்துகிறது.

சாமியை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம், என்று மனம் முடிவெடுக்கிறது. கண்களும் அதை ஆமோதிக்கிறது.


பெயர்கள்.

முன்பெல்லாம் ஆண்களின் பெயர்களுக்கு பின்னால் ஜாதி பெயர் சேர்த்து இருப்பார்கள். தற்போது சில பெண்கள் தங்களின் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்து இருக்கிறார்கள். ஜாதி வெறி ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு shift ஆகி விட்டதா என்று தெரியவில்லை.

சரி விசயத்திற்கு வருவோம்.

என்னை பொறுத்த வரை கடவுளின் பெயரை மனிதர்களுக்கு (ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி) வைப்பது சரியல்ல என்று கருதுகிறேன்.

காரணம் அந்த கடவுளின் சக்தி அந்த மனிதர்களின் உடலில் செயல்பட ஆரம்பிக்கும். ஆனால் கடவுளின் சக்தியை தாங்கும் சக்தி மனிதர்களுக்கு இல்லை. மனிதர்களுக்கு என்று குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சக்தி தான் இருக்கிறது.

என்னை பொறுத்த வரை, கடவுளின் பெயர் வைத்துக்கொண்ட 95% பேர் போராட்டமான வாழ்க்கையை தான் அனுபவிக்கிறார்கள்.

இதை வேறு விதமாக சொன்னால், சாமி அருள் வந்து சாமி ஆடுபவர்களை பார்த்து இருப்பீர்கள்.(பொய்யாக சாமி வந்து ஆடுபவர்களை பற்றி நான் இங்கே குறிப்பிடவில்லை.) அவர்கள் எல்லாம் போராட்டமான வாழ்க்கையை தான் வாழ்வார்கள். அவர்களால், மற்றவர்களுக்கு நல்லது நடக்குமே தவிர, யாராலும் அவர்களுக்கு நல்லது நடக்காது.

(ஒரு முறை நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற போது, அம்மன் சன்னதியில், கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு பெண்மணி சாமி வந்து ஆடினார். அங்கே இருந்த பெண்கள் எல்லாம் சாமி வந்துவிட்டது என்று அந்த பெண்ணுக்கு உள்ளே செல்ல வழி விட்டார்கள். அந்த பெண்ணும் உள்ளே நுழைந்த உடன், சாதாரண நிலைக்கு வந்து முதலாவதாக சாமி கும்பிட்டு விட்டு சென்று விட்டார். சாமி கும்பிட எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று பாருங்கள். அங்கே இருந்த ஒரு பெண் காவலாளி சொன்னார்,"ஏய்! சாமி ஆடுறது எல்லாம், மடப்புரம் கோவிலுக்கு போய் ஆடணும். இங்கே வந்து ஏமாற்றக்கூடாது.")

கடவுள் சிலைகள்.

கடவுள் சிலை வடிவங்களை வீட்டில் வைத்து வழிபட்டால் தமக்கு அதிக நன்மை வரும் என்று பலரும் நம்புகிறார்கள்.

ஆனால் அது தவறு.

கடவுள் சிலை வடிவத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் அதிக துன்பங்களே வரும். அந்த சிலை வடிவம், ஸ்படிகம், செம்பு, பித்தளை, வெண்கலம், வெள்ளி மற்றும் எந்த ஒரு பொருளால் உருவாக்கப்பட்டு இருந்தாலும் சரி.

மேலும் சிவலிங்கத்தின் படம், அனுமார் படம், ஐயப்பன் படம் போன்றவற்றையும் வீட்டில் வைத்து இருக்க கூடாது.

Monday 14 October 2013

கோழி கறி.

கோழி கறி சாப்பிடுபவர்களின் உடலில் தீய சக்திகளை ஏவி, அதை செயல்படுத்துவது எளிது என்று சொல்கிறார்கள்.

தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களும், தீய சக்திகளால் இனிமேல் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்களும், கோழி சம்பந்தப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்த்து விடுவது நல்லது.

குறிப்பாக, வசிய மருந்து கொடுப்பவர்கள், கோழி குழம்பில் கலந்து தான் கொடுக்கிறார்கள்.

அதற்க்கு பதிலாக, ஆட்டு கறி, மீன் சாப்பிடலாம்.

Friday 11 October 2013

எறும்பு.

உடல் நலம் சரியில்லாத ஒருவரின் உடலில் புண் இருந்து அந்த புண்ணில் கடி எறும்பு என்று சொல்லப்படும் சிவப்பு எறும்பு அல்லது சாமி எறும்பு எனப்படும் கருப்பு எறும்பு வந்தால், அவருக்கு விரைவில் மரணம் ஏற்படலாம்.

அவருக்கு உரிய தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால், காப்பாற்றி விடலாம்.

மரணம் அடைய போகும் ஒருவரின் உடலில் கடி எறும்புகள் அல்லது சாமி எறும்புகள் அதிகம் ஏறுமானால், அவருக்கு மரணம் நிச்சயம்.

அவருக்கு உரிய தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால், காப்பாற்றி விடலாம்.

நேர்மறை சக்தி.

நேர்மறை சக்தி அதிகம் இருக்கும் வீட்டில்  குருவி, குழவி, தேனீ போன்றவை கூடு கட்டும். அவ்வாறு இவை கூடு கட்டினால் அந்த வீட்டில் இருப்பவர்கள் மிகவும் சந்தோசமாக இருப்பார்கள்.

இவை கட்டிய கூட்டை கலைப்பது பாவம்.

Fan

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முந்தைய fan களின் நடு மண்டை மொக்கையாக (இது மதுரை பாஷை. மொக்கையாக என்றால் குண்டாக என்று அர்த்தம்.) இருக்கும். இந்த fan களை உபயோகிக்கும் போது  அறையின் எந்த மூலையில் படுத்தாலும் காற்று நன்றாக வரும்.

ஆனால் இப்போது இருக்கும் fan களின் கீழே படுத்தாலும் சரியாக காற்று வருவதே இல்லை. 

திருக்குறள்.

உலக தமிழர்கள் அனைவரும்  பின்பற்றும் ஒரே திருக்குறள்,

"பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கு மெனின்." 

வள்ளுவரே சொல்லிட்டருள்ள, பொய் சொல்லலாம்னு.

Wednesday 9 October 2013

பால்.

நேற்று கறந்த பாலை இன்றைக்கு தேதியிட்டு விற்பனை செய்பவர்களிடம் வாங்கி, சில சமயம் அதை fridge இல் வைத்து பிறகு,  அதை காய்ச்சி குடிப்பது hygenic என்று சொல்கிறது மேல் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கம்.

கறந்த பாலை, 5 நிமிடம் முதல் 2 மணி நேரத்திற்குள் வாங்கி, காய்ச்சி குடிக்கும் கீழ் தட்டு மக்களை பார்த்து, இது hygenic இல்லை என்று சொல்கிறது.

இன்னாங்கடா! உங்க ஹைஜீனுக்கு?

விருந்தோம்பல்.

இன்றைய தமிழர்களின் விருந்தோம்பலில் முக்கிய இடம் பிடிப்பவை,

1) டீ அல்லது காபி.

2) ரசாயனம் கலந்த குளிர் பானங்கள்.(குடிப்பவனுக்கு என்ன ஆனால் என்ன என்ற நல்ல எண்ணம் தான்.)

3) மது பானங்கள். (குடிப்பவனும் அவன் குடும்பமும் நாசமாய் போனால் என்ன என்ற நல்ல எண்ணம் தான்.)

பண்டைய தமிழர்களின் விருந்தோம்பலில் மிக்கிய இடம் பிடித்தது,

1) வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மோர்.(குடிப்பவர்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற கெட்ட எண்ணம் தான்.)

எதிர் மறை சக்தி.

எதிர் மறை சக்தி அதிகமாக இருக்கும் இடத்தில் அல்லது அதற்க்கு மிக அருகில், புறாக்கள் வந்து அமரும் அல்லது குடி இருக்கும்.

அதற்கும் அதிகமான எதிர்மறை சக்தி அதிகம் இருக்கும் இடத்தில் வௌவால்கள் வரும் அல்லது குடி இருக்கும்.

Tuesday 8 October 2013

பெண்கள்.

கந்த சஷ்டி கவசம் சொல்லாத தமிழ் பெண்ணை கூட பார்க்கலாம்.

ஆனால் "அண்ணா" என்ற பாதுகாப்பு கவசம் சொல்லாத தமிழ் பெண்ணை பார்க்கவே முடியாது.

பெண்கள் மந்திரம் சொல்லக்கூடாது.

என்னை பொறுத்தவரை பெண்கள் மந்திரம் சொல்லக்கூடாது. வெறுமனே தான் கடவுளை வணங்க வேண்டும்.

காரணம் ஆண்கள் எல்லாம் சிவனின் அம்சம்.

பெண்கள் எல்லாம் சக்தியின் அம்சம்.

ஆண்களுக்கு தான் சக்தி தேவையே தவிர பெண்களுக்கு இல்லை.

மேலும் எல்லா மந்திரங்களும், சுலோகங்களும் ஓம் என்று சொல்லி தான் சொல்ல வேண்டும். ஓம் என்று சொல்லாமல் மந்திரம், ஸ்லோகம் சொன்னால் கெடுபலன் உண்டாகும்.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க வயிறு பெருக்கும்.

இதனால் தான் மந்திரம் சொல்பவர்களின் வயிறு பெருத்து இருக்கிறது.

எல்லா கடவுள்களும் six pack உடலோடு காட்சி தரும்போது, ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் வடிவமாக இருக்கும் பிள்ளையார் மட்டும் தொப்பையோடு காட்சி தருவது இதனால் தான்.

இந்த பதிவின் தொடர்ச்சி கீழ்க்கண்ட பதிவில்
http://thilai.blogspot.com/2014/02/blog-post_4985.html

கருங்கல்.

இரண்டு கருங்கற்க்களை ஒட்டி இருப்பது போல வைத்து, மூன்றாவதாக ஒரு கருங்கல்லைக்கொண்டு அந்த இரண்டு கருங்கற்க்களையும் பல முறை சுற்றினால், அந்த இருண்டு கற்களுக்கும் இடையில் ஒருவித காந்த சக்தி ஏற்படும் என்று என்னுடைய முந்தைய பதிவு ஒன்றில் சொல்லி இருந்தேன்.

இதை இன்றைய இளைஞர்கள் ஆராய்ச்சி செய்து, இதில் இருந்து ஆக்க பூர்வமான சக்தியை உருவாக்க முடியுமா என்று  ஆராய்ச்சி செய்யலாம். குறிப்பாக மின்சாரம் தயாரிக்க முடியுமா என்று ஆராயலாம்.

வருங்கால சந்ததிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

நெல்லிக்காய் மரம்.

நெல்லிக்காய் மரம் வீட்டில் வளர்ப்பது நிலத்தடி நீரை நன்னீராக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். நம்பிக்கை இருப்பவர்கள் தங்கள் வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்க்கலாம்.

திருநீறு.


என்னை பொருத்தவரை, திருநீரை மூன்று கோடுகள் கொண்ட பட்டையாக பூசுவது தவறு என்று நினைக்கிறேன்.

என் அனுபவத்தில் பட்டை பூசிக்கொண்ட எல்லோரும் பொருளாதார ரீதியாக அல்லது கணவன் மனைவி ஒற்றுமை இல்லாமல் பிரச்சனை, இவற்றில் ஏதாவது ஒன்றை அனுபவிக்கிறார்கள்.

குறிப்பு:- நான் இங்கே பிராமணர் அல்லாதவர்கள் பற்றி மட்டுமே சொல்கிறேன்.

Monday 7 October 2013

உன் அழகு.

உன் அழகு 
அது பிரம்மனின் படைப்பு.
அது எனக்கு மட்டுமே 
சொந்தமானது.
அதை மறைக்க 
உனக்கு என்ன உரிமை இருக்கிறது.

பட்டாம் பூச்சி.

பட்டாம் பூச்சியின்
படபடப்பிற்க்கும் 
உன் இமை 
படபடப்பிற்க்கும் 
அதிக 
வித்தியாசம் இல்லை.

Tuesday 1 October 2013

கோபுரம், பிரமிட், ராசி கற்கள்.

கோபுரம், பிரமிட், பட்டை தீட்டப்பட்ட ராசி கற்கள் இவை மூன்றுமே ஒரே மாதிரி செயல்படுகின்றன. இவை மூன்றுமே சூன்ய நிலைக்கு மனிதர்களை அழைத்து செல்கின்றன. இவை மூன்றுமே ஒருபுறம் நேர்மறை சக்தியையும், ஒருபுறம் எதிர்மறை சக்தியையும் கொண்ட சூன்ய நிலையில் செயல்படுகின்றன. இவை மனிதர்களை சூன்ய நிலைக்கு அழைத்து செல்கின்றன.

பிரமிட்.pyramid The sculpture of evil.

என்னுடைய முந்தைய பதிவில் பிரமிடை எவ்வாறு வைப்பது என்று சொல்லி இருந்தேன்.

பிரமிடை எப்படி வைத்தாலும் அதில் எதிர்மறை சக்தி செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. பிரமிடை இருதலை பாம்பாக நான் பார்க்கிறேன். ஒரு தலையில் நேர்மறை சக்தியையும், மறுதலையில் எதிர்மறை சக்தியையும், இந்த இரண்டும் இணைந்த சூன்ய தன்மை கொண்ட உடலையும் அது கொண்டிருக்கிறது. என்னை பொருத்தவரை பிரமிட் என்பது உலகத்தில் இருக்கும் வரை மனிதர்கள் நல்ல நிலையில் வாழவே முடியாது. ஒரு சூன்ய நிலைக்கு அது மனிதர்களை அழைத்து செல்கிறது. 

பிரமிட் என்பது சாத்தானின் சிலை வடிவம். 

PYRAMID IS A SCULPTURE OF EVIL.

Sunday 22 September 2013

கறி.

கறியை வறுத்து சாப்பிட நினைப்பவர்கள், அதை புளித்த தயிரில், குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு வறுத்தால் அதன் சுவை நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். சில அசைவ உணவகங்களில் இவ்வாறு செய்வதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

முன்பு என்னோடு வேலை பார்த்த ஒரு கேரளத்து பெண் சொன்ன தகவலையும் உங்களுக்கு சொல்கிறேன். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது.

கேரளாவில் பல இடங்களில் கறியை, சுத்தமான கள்ளில் ஊற வைத்து வறுப்பார்களாம். அதன் சுவை நன்றாக இருக்குமாம்.

குழந்தையும் தெய்வமும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நம்பும் நம் நாட்டில், நம் குழந்தைகளின் வாயால் "rain rain go away, come again another day" என்ற பாடலை பாட சொல்கிறோம். நாம் என்ன அண்டார்டிகா கண்டத்திலா வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்?

இந்த பாடலை குழந்தைகளின் பாட திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

இந்த பாடலை எவன் குழந்தைகளின் பாடத்தில் சேர்த்தான் என்று தெரியவில்லை.

பிரமிட்.(pyramid)

பிரமிட் நேர்மறை சக்தியை தரும் என்று நம்பி பலரும் வீட்டில் வைக்கிறார்கள். ஆனால் பிரமிட் உண்மையிலேயே நேர்மறை சக்தியை தருவதில்லை. எதிர்மறை சக்தியை தான் 100% தரும். காரணம் பிரமிடின் தட்டையான பகுதியை பூமியை நோக்கியும், கூர்மையான பகுதியை வானத்தை நோக்கியும் வைக்கிறார்கள்.

தட்டையான பகுதி பூமியில் இருக்கும் நேர்மறை சக்தியை உள்ளிழுத்து கூர்மையான பகுதி வழியாக வானத்திற்கு கடத்துகிறது. இதனால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக துன்பங்கள் ஏற்படும். விரைவான மரணம் நிகழும்.

மேலும் இவ்வாறு வைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கும். உச்சகட்ட பிரச்சனையாக பாலைவனம் உருவாகும்.

எகிப்தில் இருக்கும் பிரமிட் நிறுவப்பட்ட பின்புதான் அங்கு பாலைவனம் உருவானது என்பது எனது கருத்து. எகிப்தின் பிரமிடு அங்கே நிறுவப்படுவதற்கு முன் அங்கே கண்டிப்பாக செழிப்பான நிலம் இருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

பிரமிடின் கீழ் அமர்ந்து தியானம் செய்கிறேன், பிரமிடின் மேல் அமர்ந்து தியானம் செய்கிறேன், பிரமிடிற்கு உள்ளே அமர்ந்து தியானம் செய்கிறேன் என்று ஏதாவது செய்தால், அது உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் மரணத்தை நீங்கள் வெகு விரைவில் சந்திக்க நேரிடும்.

இந்த பதிவின் தொடர்ச்சி கீழ்க்கண்ட பதிவில் தொடர்கிறது.
http://thilai.blogspot.in/2013/10/the-sculpture-of-evil.html

Saturday 21 September 2013

தெய்வ சக்தி.

என்னை பொறுத்த வரை, மரங்களின் கீழ், மேற்கூரை இன்றி, கோபுரங்கள் இன்றி இருக்கும் தெய்வ சிலைகள் மட்டுமே 100% நேர்மறை சக்தியை கொண்டிருக்கும்.

. நேர் மறை சக்தி கிழக்கில் இருந்தும், வடக்கில் இருந்தும் மட்டுமே வருகிறது. மேற்கிலும், தெற்கிலும் எதிர்மறை சக்தி தான் இருக்கிறது. 
மேற்கூரை இன்றி, கோபுரங்கள் இன்றி, சுற்று சுவர் இன்றி இருக்கும் தெய்வ சிலைகள் பிரபஞ்ச சக்திகளுடன் 24 மணி நேரமும் நேரடி தொடர்பில் இருக்கும்.

1)நிலம். (தெய்வ சிலைகள் தரையில் வைக்க கூடாது. எனவே பீடத்தின் மீது வைக்கப்பட்டு இருக்கும்.இருந்தாலும் அவை நிலத்தோடு தொடர்பில் இருக்கும்.)
2)நீர். (மழை)
3)காற்று.
4)நெருப்பு. (சூரியன்). வெளிச்சம் (சந்திரன்).
5)ஆகாயம்.

என்னை பொருத்தவரை தெய்வ சிலைகளின் மீது கட்டப்படும் கோபுரங்கள் நேர்மறை சக்தியை பூமியில் இருந்து உறிஞ்சி வானத்திற்கு கடத்துகிறது.

அனால் மரங்கள் வானத்தில் இருக்கும் நேர்மறை சக்தியை பூமிக்கு இழுக்கிறது.

இரவில் கருவறை கதவை பூட்டி கடவுள் தூங்க போகிறார் என்கிறார்கள்.
அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி என்று பாட்டு பாடி, தூங்கும் கடவுள் எழும் சமயத்தில் பாட்டு பாடுகிறோம் என்கிறார்கள்.

கடவுள் தூங்குவாரா?

கடவுளுக்கு இமைகள் இல்லையே அவர் எப்படி தூங்குவார்?

தமயந்தி சுயம்வரம் படித்து இருக்கிறீர்களா? தமயந்திக்கு சுயம் வரம் நடக்கும்போது தேவர்கள் அனைவரும் நளனின் உருவத்தில் கலந்து கொள்கிறார்கள். குழப்பமடைந்த தமயந்தி அவர்கள் அனைவரின் கண்களையும் பார்க்கிறாள். அவர்கள் அனைவரும் விழித்த நிலையிலேயே இருக்கிறார்கள். காரணம் தேவர்களுக்கு இமை கிடையாது.

சிவராத்திரி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

ஒருவன் இரவில் வில்வமரத்தின் மீது இரவு பொழுதை கழிக்கும் நிலை ஏற்படுகிறது.. இரவில் தூக்கம் வராமல், இரவு பொழுதை கழிக்க வில்வ மரத்தின் ஒவ்வொரு இலையாக பிய்த்து கீழே போடுகிறான். அதிகாலையில் தான் அவனுக்கு தெரிகிறது மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது அவன் இலைகளை எல்லாம் போட்டு இருக்கிறான் என்பது.

இன்றும் நாம் எல்லா சிவன் கோவில்களிலும் சிவராத்திரி கொண்டாடுகிறோம். ஆனால் வில்வ மரங்கள் தான் இல்லை. வெறுமனே வில்வ இலைகளை தூவி வணங்குகிறோம்.

என்னை பொறுத்த வரை கோவில்களில் நிலத்தில் மட்டுமே நேர்மறை சக்தி இருக்கிறது. எல்லா கோவில்களிலும் கோபுரங்கள் பூமியில் இருக்கும் நேர்மறை சக்தியை உறிஞ்சி வானுக்கு கடத்திக்கொண்டே இருக்கின்றன. 


Tuesday 17 September 2013

shoalin temple.

shoalin temple என்று bruce lee படங்களிலும் சீன படங்களிலும் சொல்லுவார்கள்.

7ஆம் அறிவு படம் பார்த்த பிறகுதான் தெரிகிறது. அவர்கள் போதி தர்மன் சோழ அரசனை குறிக்கும்  "சோழன்" என்ற வார்த்தையை "shoalin" என்று சொல்கிறார்கள் என்று.

பஞ்ச பூதங்கள்.

தெய்வ சக்திகள் மனிதனை வந்து அடைய பஞ்ச பூதங்களே கடத்தல் பொருளாக பயன்படுகின்றன.

எனவே தினமும் கடவுளை வணங்குவதோடு மட்டும் இல்லாமல் பஞ்ச பூதங்களையும் சேர்த்து வணங்க வேண்டும்.

என்னை பொறுத்த வரை, பஞ்ச பூதங்களை பார்த்தும், நினைத்தும் வணங்க வேண்டும். தொட்டு வணங்க கூடாது.

அக்னியை எல்லோருமே தீபத்தில் தொட்டு வணங்குகிறோம். என்னை பொருத்தவரை அதை தவறாகவே நினைக்கிறேன்.

நிலத்தையும் சில சமயங்களில் தொட்டு வணங்குகிறோம். அதையும் தவறாகவே நான் கருதுகிறேன்.

முதலுதவி.(first aid)

குறைந்த ரத்த அழுத்தம் (low blood pressure), உயர் ரத்த அழுத்தம் (high blood pressure), மாரடைப்பு (heart attack), படபடப்பு, இவற்றிக்கு மிகச்சிறந்த முதலுதவி சின் முத்திரை தான்.

இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை வரும்போது அவர்களுக்குள் ஒரு உணர்வு வரும். அப்போது அவர்களை சின் முத்திரை பிடிக்க சொல்ல வேண்டும். இரண்டு கைகளிலுமே சின் முத்திரை பிடிக்க வேண்டும். ஒரு கையில் மட்டும் சின் முத்திரை பிடிப்பது ஆபத்தானது. அது தவறும் கூட.

சின் முத்திரை பிடிக்கும் போது மேற்சொன்ன எல்லா பிரச்சனைகளும் 90% கட்டுக்குள் வந்து விடும்.

அவருக்கு குடிக்க தண்ணீர் அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக இருந்தால் இனிப்பு கொடுக்க வேண்டும்.


தொடர்ந்து அவர் சின் முத்திரை பிடித்தவாறே இருக்க வேண்டும்.

அடுத்த கட்ட மருத்துவ நடவடிக்கை எடுக்கும் வரை, அல்லது மருத்துவமனை கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை ஆரம்பிக்கும் வரை அவர் தொடர்ந்து சின் முத்திரை பிடித்தவாறே இருக்க வேண்டும்.

septic tank.

septic tank அதாவது கழிவு நீரை தேக்கி வைக்கும் பகுதி வீட்டில் இல்லாமல் இருப்பதே மிகவும் நல்லது. கழிவு நீர் வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டுமே தவிர அதை தேக்கி வைக்க கூடாது.

கழிவு நீரை வீட்டில் தேக்கி வைத்தால் துன்பம் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.

Friday 13 September 2013

நாடுகள்.

புத்தரை வணங்கும் நாடுகள் போர் செய்ய விரும்புகின்றன - சீனா, இலங்கை.

அல்லாவை வணங்கும் நாடு தீவிரவாதத்திற்கு துணை போகிறது - பாகிஸ்தான்.

இயேசுவை வணங்கும் நாடு உலக நாடுகள் அனைத்தையும் தானே ஆள வேண்டும், உலக நாடுகள் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது - அமெரிக்கா.

Monday 9 September 2013

வணங்குதல்கள்.

கோவில்களுக்கு சென்று வணங்குவதை  விட, மரத்தின் அடியில், மலை பகுதியில், கழிவுநீர் கலக்காத சுத்தமான நீரோட்டம் உள்ள ஆற்றின் அருகே இருந்து இறைவனை வணங்குவது சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.

வேப்பமரத்தின்  கீழ் நின்று கடவுளை வணங்குவது மிகவும் சக்தி வாய்ந்தது.

வாஸ்து.

கழிவறையும், குளியலறையும் வீட்டின் வெளி பகுதியில் தான் இருக்க வேண்டும். வீட்டின் உள்ளே கழிவறை, குளியலறை இருந்தால் குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இருக்காது. சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து இருக்கும்.

தலையணை.

சிலருக்கு கழிவறையில் அமர்ந்து எழும் போதும், குனிந்து நிமிரும் போதும் தலை சுற்றல், கிறுகிறுப்பு ஏற்படலாம். இந்த பிரச்சனை இருப்பவர்கள் தலையணை இல்லாமல் சமமான தளத்தில் தரையில் அல்லது கட்டிலில் படுப்பதே சிறந்தது.

குடும்ப ஒற்றுமை பெருக.

குடும்ப ஒற்றுமை பெருக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்து, ஒரே திசை நோக்கி சாப்பிட வேண்டும். மேல் நாட்டு பாணியில் வட்டமாக, வேறு வேறு திசை நோக்கி சாப்பிட கூடாது. வேறு வேறு திசை நோக்கி சாப்பிட்டால், குடும்ப உறுப்பினர்களிடம், ஒற்றுமை இருக்காது. ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சண்டை சச்சரவுகள் இருக்கும்.

Saturday 7 September 2013

தொப்புள் தரிசன தேவதைகள்.

சினிமா நடிகைகள் பணத்திற்காகவும், புகழுக்காகவும் குறைவான ஆடையில் உலா வருகிறார்கள்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் தொப்புள் தெரியும்படி உடை அணியும் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவர்கள் எதற்க்காக தங்கள் தொப்புள் தெரியும்படி உடை அணிகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆண்களை ஈர்ப்பதற்கா?

அப்படி என்றால் ஆண்கள்  பெண்களை ஒரு போக பொருளாக பார்க்கிறார்கள் என்று இவர்கள் ஏன் சொல்கிறார்கள்?

நான் ஒன்றும் ராமன் அல்ல. கண்களை மூடிக்கொண்டு செல்ல. ஒரு பெண் தன் உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணித்து சென்றால் நான் பார்க்கத்தான் செய்வேன். ரசிக்க தான் செய்வேன்.

உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணியும் அவள் யோக்கியமானவள். அவளை பார்த்து ரசிக்கும் என்னை போன்றவர்கள் மட்டும் குற்றவாளியா?

குறிப்பு:- நான் இங்கே எல்லா பெண்களை பற்றியும் குறிப்பிடவில்லை. தொப்புள் தரிசனம் இலவசமாக தரும் தேவதைகளைப் பற்றி மட்டுமே இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். நான் சொல்லிய இந்த விசயத்தில் குற்றம் இருப்பதாக நீங்கள் நினைத்தாலும் கண்டிப்பாக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

Friday 6 September 2013

பெண் சுதந்திரம்.

பெண் சுதந்திரம் என்று பாரதி சொன்னது, ஆண்களுக்கு சமமாக படிக்க வேண்டும். ஆண்களுக்கு சமமாக வாழ வேண்டும் என்று தானே தவிர, ஆண்களுக்கு சமமாக புகை பிடிக்க வேண்டும், ஆண்களுக்கு சமமாக மது குடிக்க வேண்டும், அரை குறை ஆடை அணிய வேண்டும், உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்து விட்டு, ஆபாசம் என்பது அணியும் உடைகளில் இல்லை, பார்ப்பவர் கண்களில்தான் உள்ளது என்று சொல்வதற்கு அல்ல.

பாரதி இப்போது உயிரோடு இருந்தால், "நான் சொன்ன பெண் சுதந்திரத்தை தவறாக புரிந்து இருக்கிறார்களே" என்று வருத்தப்படுவான்.




face bookல் சுட்டது.

ஆபாசம் என்பது அணியும் உடைகளில் இல்லை, பார்ப்பவர் கண்களில்தான் உள்ளது என்பவர்
கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு
எரிச்சல் என்பது மிளகாய்ப் பொடியில் இல்லை, உங்கள் கண்களில்தான் உள்ளது
என்று கூறலாமா???

நல்லவர்கள், கெட்டவர்கள்.

மகான்களும், மாமேதைகளும் மக்களை புத்திசாலிகளாக மாற்றும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பல முட்டாள்கள் இதை விரும்புவதில்லை. மகான்களையும், மாமேதைகளையும் அழிக்கும் வேலையை அவர்கள் செய்கிறார்கள். ஏனோ தெரியவில்லை, முட்டாள்கள் கையில் பல சமயங்களில் அதிகாரம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. முட்டாள்கள் தான் பெரும்பாலும் ஜெயிக்கிறார்கள்.

இதற்க்கு மிக சிறந்த உதாரணம், இயேசு, சாக்ரடீஸ்.

Monday 2 September 2013

பூக்கள்.

ஆயிரம் மலர்கள்
மலர்ந்தாலும், உதிர்ந்தாலும்
நீ இன்று
சூடிய பூக்கள் தான்
எனக்கு அழகாக தோன்றுகிறது.
ஏனெனில் அதை
சூட்டியவன்
நானல்லவோ!

பேரழிவுகள்.

இயற்கை சீற்றங்களுக்கு அடுத்தபடியாக இந்த உலகத்தில் ஏற்பட்ட பேரழிவுகளுக்கெல்லாம்  மனிதன் என்ற மிருக இனம் மட்டுமே காரணம்.

Sunday 1 September 2013

மலச்சிக்கல் நீங்க.

மலச்சிக்கல் நீங்க, சீரகத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
சீரக தண்ணீர் குடிக்கலாம்.
வெந்நீர் குடிக்கலாம்.
பிரிட்ஜ் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க கூடாது.

Friday 30 August 2013

தமிழ் எண் கணிதம்.

அ, கீ, கோ, சி, சொ, ஞ், டெ, ண, ணே, தா, ஙு-1.

இ, ஒ, க், சு, சௌ, ஞூ, டை, ணி, ணொ, தீ, தோ-2.

உ, ஔ, கூ, செ, ஞ, ஞே, டா, ணு, ணௌ, தூ, த், நெ-3.

எ, க, கே, ங், ஞி, ஞொ,  டீ, டோ, த, தே, நா, நை-4.

ஐ, கி, கொ, சா, சை, ஞௌ, டூ, ட், ணெ, தொ, நீ-5.

ஆ, கு, கௌ, சீ, சோ, ஞு, டே, ணா, ணை, தி,  நூ-6.

ஈ, ஓ, ங, சூ, ச், ஞெ,ணீ, ணோ, து, தௌ-7.

ஊ, கெ, சே, ஞா, ஞை, ட, டி, டொ, ண், தெ, ந, நே-8.

ஏ, கா, கை, ச, ஞீ, ஞோ, டு, டௌ, ணூ, தை, நி, நொ, நோ-9.

என் பள்ளி படிப்பின் போது  ஒரு பழைய புத்தக கடையில் இந்த தகவலை சேகரித்தேன். அது மிகவும் கிழிந்து இருந்ததால் இந்த தகவல் மட்டுமே எனக்கு கிடைத்தது.

பிளாஸ்டிக்.

நாம் அனைவரும் பயன்படுத்தும், பிரஸ், பேஸ்ட், கை கடிகாரம், செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், எல்லா வாகனங்கள், நாற்காலி, காற்றாடி, இன்னும் பல விதமான பொருட்களிலும் பிளாஸ்டிக்கை பல விதங்களில் பயன்படுத்துகிறோம். 

ஆனாலும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். 

இது எப்படி சாத்தியம்?

ஆரோக்கியம்.

காட்டுவாசியாக வாழ்ந்த மனிதர்களை விட நாகரீகம் அறிந்தவர்களாக நாம் இன்று இருக்கிறோம்.

ஆனால் காட்டுவாசி மனிதர்களுக்கு இருந்த ஆரோக்கியத்தில், உடல் வலிமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்றைய மனிதர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை.

உங்கள் கொள்ளு பாட்டனாருக்கு இருந்த ஆரோக்கியம், உடல் வலிமை உங்களுக்கு இல்லை என்பது உண்மை. அதே போல உங்களுக்கு இருக்கும் ஆரோக்கியம், உடல் வலிமை உங்கள் கொள்ளு பேர பிள்ளைகளுக்கு இருக்கப்போவதில்லை என்பதும் உண்மை.

எனவே சிந்தித்து செயல்படுங்கள்.

முன்னோர்கள்.

நம் முன்னோர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம், செம்பு போன்ற உலோகங்களை நாணயமாக பயன்படுத்தினார்கள். ஆனால் நாம் இன்று?

நம் முன்னோர்கள் எந்த வித உபகரணங்களும் இன்றி, வெறும் கண்ணாலேயே கிரகங்களை பார்த்து அதன் தன்மைகளை அறிந்து இருந்தார்கள்.

நம் முன்னோர்கள் குதிரை படை, யானை படை வைத்து இருந்தார்கள். ஆனால் இன்று குதிரைகளும் இல்லை, யானைகளும் இல்லை. குதிரைகளையும், யானைகளையும் பராமரிக்கும் மற்றும் அவைகளுக்கான உணவு என்று எவ்வளவு செலவாகி இருக்கும். அப்படி இருந்தும் அவர்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்தார்கள்.




தெய்வ சிலைகள்.

தெய்வ சிலைகளை சுற்றி வருவது பைத்தியக்காரதனமானது என்று நாத்திகர்கள் சொல்கிறார்கள்.

நீங்கள் சிறு வயதில் சாலை போட, சாலை ஓரங்களில் கொட்டியிருக்கும் அல்லது வீடு கட்ட கொட்டியிருக்கும் கருங்கல்லைக்கொண்டு விளையாடி இருக்கிறீர்களா?

இரண்டு கரடு முரடான கருங்கற்களை ஒருவர் தன் இரண்டு கைகளாலும் ஒட்டியவாறு பிடித்துக்கொள்ள வேண்டும். ஒருவர் மூன்றாவது கருங்கல்லை, அந்த இரண்டு ஒட்டிய கருங்கல்லை, சூரியனை பூமி சுற்றி வருவதைப்போல் சுற்ற வேண்டும். சிறிது நேரத்தில் அந்த இரண்டு கருங்கற்களுக்கும் இடையில் ஒரு காந்த சக்தி ஏற்படுவதை உணரலாம். அந்த இரண்டு கருங்கற்களையும் சில வினாடிகளுக்கு பிரிக்க முடியாது.

இதே போன்ற ஒரு நிலை தான் தெய்வ சிலைகளிலும் ஏற்படுகிறது. பல மனிதர்கள் தெய்வ சிலைகளை சுற்றி வரும்போது அந்த சிலையில் ஒரு காந்த சக்தி ஏற்பட்டு மனிதர்களின் உடலில் பரவுகிறது.

பூஜை அறை வாஸ்து.

பூஜை அறையில் சிலர் தாங்கள் எந்த கோவிலுக்கு சென்று வந்தாலும் அந்த கோவிலில் இருக்கும் தெய்வங்களின் படங்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து விடுகிறார்கள். இது மிகவும் தவறு. இதனால் அதிக துன்பங்களே வரும்.

மனிதர்கள் தங்கள் குலதெய்வத்தின் படத்தை வைத்து கொள்ளலாம். தாங்கள் எந்த கோவிலுக்கு சென்று வந்தால் தங்களுக்கு நன்மை நடக்கிறதோ அந்த தெய்வத்தின் படத்தை வைத்து கொள்ளலாம்.

மனிதர்கள் தங்கள் குலதெய்வம் கோவில் தவிர சில கோவில்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். அதாவது எந்த கோவிலுக்கு சென்று வந்தால் தங்களுக்கு நன்மை நடக்கிறதோ அந்த கோவிலுக்கு மட்டுமே செல்லலாம். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தினமும் ஒரு கோவிலுக்கு சென்று வந்தால் துன்பமே வரும்.

ஏனென்றால் உங்களுக்கு துன்பம் வரும் போது நீங்கள் எல்லா தெய்வங்களையும் அழைத்தால், அந்த தெய்வம் செல்லும் என்று இந்த தெய்வம் சும்மா இருக்கும். இந்த தெய்வம் செல்லும் என்று அந்த தெய்வம் சும்மா இருக்கும்.

தெய்வங்கள் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு கோவிலுக்கும் உள்ள சக்தி வேறு, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் எந்திரத்தின் சக்தி வேறு, இப்படி பல விஷயங்கள் வேறாக இருக்கும். 

வேண்டுதல்கள்.

தெய்வங்களையும், கோவில்களையும் 
சுற்றிவர மனிதர்களுக்கு 
உண்டு பல வேண்டுதல்கள்.
உங்களுக்கென்ன 
வேண்டுதல்கள் 
புறாக்களே?
கோபுரங்களை 
சுற்றி வர

கல் நெஞ்சம்.

கள்ளி செடிக்கென்ன
கல் நெஞ்சமா?
முட்களை சுமந்திருக்க.
ஆனால் 
நீயோ கல்நெஞ்சக்காரி தான் 
என்னை கொல்ல 
வேலை
உன் விழிகளில் 
சுமந்திருக்கிராயே...

Wednesday 28 August 2013

எதிர்கால நாணய முறை.

இன்னும் 50 ஆண்டுகளுக்குள்ளாக எதிர்கால நாணய பரிமாற்று முறை மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும்.

இன்னும் 50 ஆண்டுகளுக்குள்ளாக உலகம் முழுவதிற்குமான பொதுவான ஒரு நாணய பரிமாற்று முறை உண்டாகும். அதாவது உலகின் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒரு நாணயம் உண்டாகும்.

எதிர்கால உலகம்.(future world)

எதிர்கால உலகத்தில் ஒட்டு போடுவது மிகவும் எளிதாக இருக்கும். வாக்கு சாவடிக்கு செல்லாமல் இணையத்தின் மூலமாக, வீட்டிலிருந்தபடியும், அலுவலகத்தில் இருந்தபடியும், செல்போன் மூலமாகவும், உலகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒட்டு போடலாம்.

வாக்கு பதிவு நடந்த அன்றே ரிசல்ட் தெரிந்து கொள்ளலாம்.

வாக்கு பதிவு நடத்துவதற்காக அரசாங்கம் செலவழிக்கும் பல கோடி ரூபாய் மிச்சமாகும்.

Sunday 25 August 2013

பெண்.

நேரில் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்ல முடிவதில்லை.

ஆனால் பேஸ் புக்கிலும், g+ இலும் வெளியிடப்படும் ஒரு பெண்ணின் புகைப்படத்திற்கு "so beautiful, so nice, sexy, beauty, hot, hai darling, is it you" இது போல இன்னும் பல ஆயிரக்கணக்கான comment களை பலராலும் போட முடிகிறது.

இன்னா மாரி சொசிட்டில வாழ்ந்துனு கீறோம்.

கேரளா.

gods own country என்று மார்தட்டிக் கொள்கிறார்கள் கேரளா மாநிலத்தினர்.

காரணம் இயற்கை அழகு. இயற்கையை பாதுகாக்கிறார்கள். தங்கள் வீட்டை சுற்றி மரம் அதிகம் வைத்து இருக்கிறார்கள்.

ஆனால் நாம் வீட்டில் தொட்டியில் செடி வளர்த்துக்கொண்டு இயற்கையை பாதுகாப்பதாக பேசிக்கொண்டு இருக்கிறோம்.

அங்கே இருக்கும் அரசியல்வாதிகள் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள்.

கேரளாவில் படித்தவர்கள் அதிகம்.

மூலிகை வைத்தியங்கள் ஏராளம் கேரளாவில் இருக்கிறது.

கேரளத்து பெண்கள் தமிழ்நாட்டு பெண்களை விட அழகாக இருக்கிறார்கள். (ஹி...ஹி...ஹி...) நானும் தமிழன் தானே. கொஞ்சம் சபலம் இருக்கத்தானே செய்யும்.

ஆனால் கேரளாவில் எனக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள்.

ஒன்று,அவர்கள் மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையில் கொண்டு வந்து கொட்டுவது.

இரண்டாவது, நம் தமிழ்நாட்டில் முன்பின் தெரியாதவரை கூப்பிட வேண்டுமானால் அண்ணே, தம்பி, அக்கா, சார், ஹலோ, இப்படி பல வார்த்தைகளை உபயோகிப்போம். ஆனால் கேரளாவில் எல்லோரும் ஒரே ஒரு சப்தத்தை எழுப்புகிறார்கள். அது சூ...சூ... என்பது. இது ஏதோ நாயை கூப்பிடுவது போல் இருக்கிறது.

நீர் நிலைகள்.


2
1






Harun Sha

Shared privately  -  11:22
ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47.

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) - நீரோடும் வழி.
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.
Show less