Friday 30 August 2013

தமிழ் எண் கணிதம்.

அ, கீ, கோ, சி, சொ, ஞ், டெ, ண, ணே, தா, ஙு-1.

இ, ஒ, க், சு, சௌ, ஞூ, டை, ணி, ணொ, தீ, தோ-2.

உ, ஔ, கூ, செ, ஞ, ஞே, டா, ணு, ணௌ, தூ, த், நெ-3.

எ, க, கே, ங், ஞி, ஞொ,  டீ, டோ, த, தே, நா, நை-4.

ஐ, கி, கொ, சா, சை, ஞௌ, டூ, ட், ணெ, தொ, நீ-5.

ஆ, கு, கௌ, சீ, சோ, ஞு, டே, ணா, ணை, தி,  நூ-6.

ஈ, ஓ, ங, சூ, ச், ஞெ,ணீ, ணோ, து, தௌ-7.

ஊ, கெ, சே, ஞா, ஞை, ட, டி, டொ, ண், தெ, ந, நே-8.

ஏ, கா, கை, ச, ஞீ, ஞோ, டு, டௌ, ணூ, தை, நி, நொ, நோ-9.

என் பள்ளி படிப்பின் போது  ஒரு பழைய புத்தக கடையில் இந்த தகவலை சேகரித்தேன். அது மிகவும் கிழிந்து இருந்ததால் இந்த தகவல் மட்டுமே எனக்கு கிடைத்தது.

பிளாஸ்டிக்.

நாம் அனைவரும் பயன்படுத்தும், பிரஸ், பேஸ்ட், கை கடிகாரம், செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், எல்லா வாகனங்கள், நாற்காலி, காற்றாடி, இன்னும் பல விதமான பொருட்களிலும் பிளாஸ்டிக்கை பல விதங்களில் பயன்படுத்துகிறோம். 

ஆனாலும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். 

இது எப்படி சாத்தியம்?

ஆரோக்கியம்.

காட்டுவாசியாக வாழ்ந்த மனிதர்களை விட நாகரீகம் அறிந்தவர்களாக நாம் இன்று இருக்கிறோம்.

ஆனால் காட்டுவாசி மனிதர்களுக்கு இருந்த ஆரோக்கியத்தில், உடல் வலிமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்றைய மனிதர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை.

உங்கள் கொள்ளு பாட்டனாருக்கு இருந்த ஆரோக்கியம், உடல் வலிமை உங்களுக்கு இல்லை என்பது உண்மை. அதே போல உங்களுக்கு இருக்கும் ஆரோக்கியம், உடல் வலிமை உங்கள் கொள்ளு பேர பிள்ளைகளுக்கு இருக்கப்போவதில்லை என்பதும் உண்மை.

எனவே சிந்தித்து செயல்படுங்கள்.

முன்னோர்கள்.

நம் முன்னோர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம், செம்பு போன்ற உலோகங்களை நாணயமாக பயன்படுத்தினார்கள். ஆனால் நாம் இன்று?

நம் முன்னோர்கள் எந்த வித உபகரணங்களும் இன்றி, வெறும் கண்ணாலேயே கிரகங்களை பார்த்து அதன் தன்மைகளை அறிந்து இருந்தார்கள்.

நம் முன்னோர்கள் குதிரை படை, யானை படை வைத்து இருந்தார்கள். ஆனால் இன்று குதிரைகளும் இல்லை, யானைகளும் இல்லை. குதிரைகளையும், யானைகளையும் பராமரிக்கும் மற்றும் அவைகளுக்கான உணவு என்று எவ்வளவு செலவாகி இருக்கும். அப்படி இருந்தும் அவர்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்தார்கள்.




தெய்வ சிலைகள்.

தெய்வ சிலைகளை சுற்றி வருவது பைத்தியக்காரதனமானது என்று நாத்திகர்கள் சொல்கிறார்கள்.

நீங்கள் சிறு வயதில் சாலை போட, சாலை ஓரங்களில் கொட்டியிருக்கும் அல்லது வீடு கட்ட கொட்டியிருக்கும் கருங்கல்லைக்கொண்டு விளையாடி இருக்கிறீர்களா?

இரண்டு கரடு முரடான கருங்கற்களை ஒருவர் தன் இரண்டு கைகளாலும் ஒட்டியவாறு பிடித்துக்கொள்ள வேண்டும். ஒருவர் மூன்றாவது கருங்கல்லை, அந்த இரண்டு ஒட்டிய கருங்கல்லை, சூரியனை பூமி சுற்றி வருவதைப்போல் சுற்ற வேண்டும். சிறிது நேரத்தில் அந்த இரண்டு கருங்கற்களுக்கும் இடையில் ஒரு காந்த சக்தி ஏற்படுவதை உணரலாம். அந்த இரண்டு கருங்கற்களையும் சில வினாடிகளுக்கு பிரிக்க முடியாது.

இதே போன்ற ஒரு நிலை தான் தெய்வ சிலைகளிலும் ஏற்படுகிறது. பல மனிதர்கள் தெய்வ சிலைகளை சுற்றி வரும்போது அந்த சிலையில் ஒரு காந்த சக்தி ஏற்பட்டு மனிதர்களின் உடலில் பரவுகிறது.

பூஜை அறை வாஸ்து.

பூஜை அறையில் சிலர் தாங்கள் எந்த கோவிலுக்கு சென்று வந்தாலும் அந்த கோவிலில் இருக்கும் தெய்வங்களின் படங்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து விடுகிறார்கள். இது மிகவும் தவறு. இதனால் அதிக துன்பங்களே வரும்.

மனிதர்கள் தங்கள் குலதெய்வத்தின் படத்தை வைத்து கொள்ளலாம். தாங்கள் எந்த கோவிலுக்கு சென்று வந்தால் தங்களுக்கு நன்மை நடக்கிறதோ அந்த தெய்வத்தின் படத்தை வைத்து கொள்ளலாம்.

மனிதர்கள் தங்கள் குலதெய்வம் கோவில் தவிர சில கோவில்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். அதாவது எந்த கோவிலுக்கு சென்று வந்தால் தங்களுக்கு நன்மை நடக்கிறதோ அந்த கோவிலுக்கு மட்டுமே செல்லலாம். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தினமும் ஒரு கோவிலுக்கு சென்று வந்தால் துன்பமே வரும்.

ஏனென்றால் உங்களுக்கு துன்பம் வரும் போது நீங்கள் எல்லா தெய்வங்களையும் அழைத்தால், அந்த தெய்வம் செல்லும் என்று இந்த தெய்வம் சும்மா இருக்கும். இந்த தெய்வம் செல்லும் என்று அந்த தெய்வம் சும்மா இருக்கும்.

தெய்வங்கள் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு கோவிலுக்கும் உள்ள சக்தி வேறு, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் எந்திரத்தின் சக்தி வேறு, இப்படி பல விஷயங்கள் வேறாக இருக்கும். 

வேண்டுதல்கள்.

தெய்வங்களையும், கோவில்களையும் 
சுற்றிவர மனிதர்களுக்கு 
உண்டு பல வேண்டுதல்கள்.
உங்களுக்கென்ன 
வேண்டுதல்கள் 
புறாக்களே?
கோபுரங்களை 
சுற்றி வர

கல் நெஞ்சம்.

கள்ளி செடிக்கென்ன
கல் நெஞ்சமா?
முட்களை சுமந்திருக்க.
ஆனால் 
நீயோ கல்நெஞ்சக்காரி தான் 
என்னை கொல்ல 
வேலை
உன் விழிகளில் 
சுமந்திருக்கிராயே...

Wednesday 28 August 2013

எதிர்கால நாணய முறை.

இன்னும் 50 ஆண்டுகளுக்குள்ளாக எதிர்கால நாணய பரிமாற்று முறை மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும்.

இன்னும் 50 ஆண்டுகளுக்குள்ளாக உலகம் முழுவதிற்குமான பொதுவான ஒரு நாணய பரிமாற்று முறை உண்டாகும். அதாவது உலகின் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒரு நாணயம் உண்டாகும்.

எதிர்கால உலகம்.(future world)

எதிர்கால உலகத்தில் ஒட்டு போடுவது மிகவும் எளிதாக இருக்கும். வாக்கு சாவடிக்கு செல்லாமல் இணையத்தின் மூலமாக, வீட்டிலிருந்தபடியும், அலுவலகத்தில் இருந்தபடியும், செல்போன் மூலமாகவும், உலகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒட்டு போடலாம்.

வாக்கு பதிவு நடந்த அன்றே ரிசல்ட் தெரிந்து கொள்ளலாம்.

வாக்கு பதிவு நடத்துவதற்காக அரசாங்கம் செலவழிக்கும் பல கோடி ரூபாய் மிச்சமாகும்.

Sunday 25 August 2013

பெண்.

நேரில் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்ல முடிவதில்லை.

ஆனால் பேஸ் புக்கிலும், g+ இலும் வெளியிடப்படும் ஒரு பெண்ணின் புகைப்படத்திற்கு "so beautiful, so nice, sexy, beauty, hot, hai darling, is it you" இது போல இன்னும் பல ஆயிரக்கணக்கான comment களை பலராலும் போட முடிகிறது.

இன்னா மாரி சொசிட்டில வாழ்ந்துனு கீறோம்.

கேரளா.

gods own country என்று மார்தட்டிக் கொள்கிறார்கள் கேரளா மாநிலத்தினர்.

காரணம் இயற்கை அழகு. இயற்கையை பாதுகாக்கிறார்கள். தங்கள் வீட்டை சுற்றி மரம் அதிகம் வைத்து இருக்கிறார்கள்.

ஆனால் நாம் வீட்டில் தொட்டியில் செடி வளர்த்துக்கொண்டு இயற்கையை பாதுகாப்பதாக பேசிக்கொண்டு இருக்கிறோம்.

அங்கே இருக்கும் அரசியல்வாதிகள் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள்.

கேரளாவில் படித்தவர்கள் அதிகம்.

மூலிகை வைத்தியங்கள் ஏராளம் கேரளாவில் இருக்கிறது.

கேரளத்து பெண்கள் தமிழ்நாட்டு பெண்களை விட அழகாக இருக்கிறார்கள். (ஹி...ஹி...ஹி...) நானும் தமிழன் தானே. கொஞ்சம் சபலம் இருக்கத்தானே செய்யும்.

ஆனால் கேரளாவில் எனக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள்.

ஒன்று,அவர்கள் மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையில் கொண்டு வந்து கொட்டுவது.

இரண்டாவது, நம் தமிழ்நாட்டில் முன்பின் தெரியாதவரை கூப்பிட வேண்டுமானால் அண்ணே, தம்பி, அக்கா, சார், ஹலோ, இப்படி பல வார்த்தைகளை உபயோகிப்போம். ஆனால் கேரளாவில் எல்லோரும் ஒரே ஒரு சப்தத்தை எழுப்புகிறார்கள். அது சூ...சூ... என்பது. இது ஏதோ நாயை கூப்பிடுவது போல் இருக்கிறது.

நீர் நிலைகள்.


2
1






Harun Sha

Shared privately  -  11:22
ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47.

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) - நீரோடும் வழி.
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.
Show less

magnet train.

என் மதுரைக்கு எப்போது வரும் magnet train?

வாகனம்.

கடவுளின் வாகனங்களுக்கும், தெய்வ சிலைகளுக்கும் குறுக்கே செல்லக்கூடாது. இவை இரண்டிற்கும் இடையில் நின்று வணங்கவும் கூடாது.

அதாவது சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் குறுக்கே செல்ல கூடாது.

அம்மனுக்கும், சிங்கத்திற்கும் குறுக்கே செல்ல கூடாது.

கோவில்.

கோவிலில் இருக்கும் கொடிமரம், பலிபீடம், கடவுள் சிலைகள், தேர், இவற்றை தொட்டு வணங்கினால் கடவுளின் அருள் தமக்கு அதிகம் கிடைக்கும் என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். இது மிகவும் தவறு.

கோவில்களில் எதையும் தொட்டு வணங்க கூடாது.

மீறி தொட்டு வணங்கினால் கெடுபலன்களே உண்டாகும்.

கடவுள் சிலைகள்.

கோவில்களில் இருக்கும் தெய்வ சிலைகளுக்கு கண்மலர், முகம், கவசம் எந்த உலோகத்திலும் (செம்பு,பித்தளை,வெண்கலம்,வெள்ளி,தங்கம்) அணிவிக்க கூடாது.

எல்லா கற்களுக்கும் ஆகர்ஷண சக்தியும், பிரதிபலிக்கும் சக்தியும் உண்டு. இது தெய்வ சிலைகளுக்கும் பொருந்தும். கண்மலர், முகம், கவசம் அணிவிக்கும் போது அந்த தெய்வ சிலைகளின் ஆகர்ஷண சக்தியும், பிரதிபலிக்கும் சக்தியும் தடுக்கப்படும். இவ்வாறு அணிவித்து வழிபட்டால் தெய்வத்தை வணங்கிய பலன் முழுவதும் கிடைக்காது, மேலும் கெடு பலன்கள் ஏற்படலாம்.

அதாவது பக்தர்களின் எண்ண அலைகள் மற்றும் அவர்களின் உடலில் உள்ள தீய சக்திகள் கடவுள் சிலைகளால் உட்கிரகிக்கப்பட்டு, தெய்வ சிலைகளின் நேர் எதிர் பகுதி வழியாக வெளியேற்றப்படும்.

இதனால் தான் கடவுள் சிலைகளுக்கு நேர் எதிரில் நின்று வழிபடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. கடவுள் சிலைகளுக்கு பக்கவாட்டில் இருந்து தான் வழிபட வேண்டும்.

மேலும் கோவில்களில் இருக்கும் கருவறை, சந்நிதி, தூண்கள் முதலியவற்றிற்கும் மேற்சொன்ன உலோகங்களால் கவசம் அணிவிக்க கூடாது. 

மேலும் கோவில்களில் எந்த ஒரு இடத்திலும் tiles, marble, granite பதிக்க கூடாது. அது அந்த கோவிலின் ஆயுளை குறைக்கும். அதாவது முன்னோர்கள் கல்லினால் கட்டிய கோவில்களின் ஆகர்ஷண மற்றும் பிரதிபலிக்கும் சக்தியை தடுக்கும். இதனால் கோவில்களின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்படும்.கோவில்களின் பல பகுதிகள் இடிந்து விழும் நிலை ஏற்படும்.

Friday 23 August 2013

நல்லெண்ணெய்.

வீட்டில் சமையலுக்கு நல்லெண்ணெய் தான் வாங்குவேன்.

பெரிய நிறுவங்களின் நல்லெண்ணையை தான் வாங்கி கொண்டு இருந்தேன். ஆனால் அவர்கள் double filtered என்ற பெயரில் நல்லெண்ணையின் சத்துக்களை எல்லாம் எடுத்து விடுகிறார்கள். தண்ணீருக்கும் அவர்கள் விற்கும் நல்லெண்ணெய்க்கும் அதிக வித்தியாசம் இல்லை.

தற்போது கடைகளில் விற்கப்படும் packing செய்யப்படாத நல்லெண்ணையை வாங்குகிறேன். அது கலப்படமானது என்று சொல்கிறார்கள். ஆனாலும் அதில் நல்லெண்ணையின் சத்துக்கள் அப்படியே இருக்கின்றன.

"அடே பச்சிலை புடுங்கி நீ 7ஆங் கிளாஸ்டா. நான் sslc டா."

"நீங்க sslc பெயில்ண்ணே. நான் 7ஆங் கிளாஸ் பாஸ்ண்ணே. நீங்களே சொல்லுங்க பாஸ் பெருசா? பெயில்  பெருசா?"

செவ்வாய் கிரகம்.(mars)

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ வேண்டும் என்று பல நாடுகளும், பல கோடி செலவு செய்கின்றன. இது நல்ல விஷயம் தான்.

ஆனால் மனிதர்களே, நீங்கள் பூமியில் பிறந்து பல கோடி ஆண்டுகாலமாகியும், பூமியில் வாழ முழுமையாக வாழ கற்றுக்கொள்ளவில்லையே. செவ்வாய் கிரகத்திற்கு சென்று என்ன புடுங்கப்போகிறீர்கள்?

செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு செலவு செய்யும் ஆராய்ச்சி பணத்தை பூமியில் அடிப்படை தேவைகளுக்கு கஷ்டப்படும் மனிதர்களுக்கு கொடுத்தால் அவர்களின் வயிற்று பசி தீருமே?

காமம்.

 கணவன், மனைவி இடையேயான தாம்பத்யம் என்பது புனிதமானது. இதை பற்றி யாரிடமும் பேசக்கூடாது. ஏனென்றால் கணவனையும், மனைவியையும் பிரிக்கும் கொடூர மனம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். கணவனும், மனைவியும் சேரக்கூடாது என்று சொல்பவர்களின் உறவை வெட்டி விடுவது அந்தந்த கணவனுக்கும்,மனைவிக்கும் நல்லது.

 காமத்தை ஒதுக்கினால் தான் இறைவனை அடைய முடியும் என்று பலர் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இந்த தகவல் மிகவும் தவறானது. தன்னால் காமசுகத்தை அனுபவிக்க முடியவில்லையே என்ற பொறாமையில் சில போலி சாமியார்கள் பரப்பி விட்ட புரளி தான் இது.

காமத்தை ஒதுக்க வேண்டும் என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. அப்படி சொன்னால் அவர் கடவுளே இல்லை.

காமம் என்பது குற்றம் என்றால், எதற்க்காக காம உணர்வோடு மனிதனை படைக்க வேண்டும், அந்த கடவுள்? காமம் என்பது குற்றம் என்றால், மனிதனை காம உணர்வோடு படைத்த அந்த கடவுள் தான் குற்றவாளி.

கணவனும், மனைவியும் விரதம் இருக்கும் காலம் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் தாம்பத்தியத்தை ஒதுக்க கூடாது. அவ்வாறு ஒதுக்கினால் அது பேராபத்தில் தான் முடியும்.

இறைவனை அடைவது என்பது உங்களிடம் இல்லை, அது இறைவனிடம் தான் இருக்கிறது.

பிரம்மச்சரியம் என்பது சிலருக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. அது தானாக அமைய வேண்டும்.

குடும்ப பிரச்சனை காரணமாகவும், பண பிரச்சனை காரணமாகவும், மனைவியோடு பிரச்சனை காரணமாகவும் இல்லறத்தை விட்டு ஓடுவதற்கு பிரம்மச்சரியம் என்று பெயராகாது.

திருவள்ளுவர் எழுதிய காமத்துப்பாலை எத்தனை  பேர் படித்திருக்கிறீர்கள்?

காமத்திற்கு கோவில் கட்டிய நாடு நம் நாடு.


Wednesday 21 August 2013

தமிழ் tv சேனல்கள்.

ஆங்கில டிவி சேனல்களில் குண்டூசி தயாரிக்கும் தொழில்நுட்பம் முதல், உலகின் மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டும் நவீன தொழில்நுட்பங்கள் வரை காட்டுகிறார்கள்.

தமிழர்களுக்கும், தமிழ் டிவி சேனல்களுக்கும்  இது போன்ற எந்த ஒரு திறமையும் இல்லையா? யாராவது ஏதாவது புதிதாக கண்டுபிடித்தால், அதை ஒரு செய்தியாக மட்டுமே காட்டுகிறார்கள்.

தமிழ் டிவி சேனல்களில் தமிழ் சினிமா பாட்டு பாடும் போட்டி நடத்துகிறார்கள். தமிழ் சினிமா பாட்டுக்கு நடனம் ஆடும் போட்டி வைக்கிறார்கள். இதெல்லாம் ஒரு சாதனையா? 

கொலைவெறி பிடித்த மெகா சீரியல்கள் ஒளிபரப்புகிறார்கள்.

நிலத்தை விற்பதற்கு டிவி சீரியல் நடிகர்களும், நடிகைகளும் வந்து பேசுகிறார்கள்.

குண்டானவர்கள் மூலிகை டீ  குடித்து ஒல்லியான கதையை சொல்கிறார்கள்.
"சஹாரா பாலைவனத்திலும், சீனாவிலும் கிடைக்கும் 18 வகை அரிய மூலிகை கொண்டு இந்த டீ தயாரிக்கிறோம்"என்கிறார்கள். (சஹாரா பாலைவனத்தில் எப்படிடா மூலிகை கிடைக்கும்? சீனாவில் மட்டும் தான் மூலிகை இருக்கிறதா? இந்தியாவில் மூலிகை இல்லையா?)
"ஆமா! நான் முன்பு குண்டாக இருந்தபோது என் ஆபிசில் எல்லோரும் என்னை கேலி செய்தார்கள். இந்த மூலிகை டீ குடித்து இப்போது நான் ஒல்லியான பிறகு எங்கள் கம்பெனி MD பொண்ணையே  நான் pick up பண்ணி விட்டேன்." என்கிறான் ஒருவன்.

ஆங்கில படத்தை இந்தியாவில் ஒளிபரப்பினால், இந்தியாவின் கலாச்சாரம் கெட்டுவிடும் என்று முத்த காட்சிகளை வெட்டி விடுகிறார்கள், உடலுறவு காட்சிகளை வெட்டி விடுகிறார்கள், அரை குறை ஆடையில் வந்தால் வெட்டி விடுகிறார்கள், அல்லது மறைத்து விடுகிறார்கள்.

ஆனால் பிரா விளம்பரத்தை அரை மணி நேரம் ஒளிபரப்புகிறார்கள். 
இந்த பிரா விளம்பரங்கள் மாதர் சங்கங்களின் கண்களுக்கு தெரியவே இல்லையா?

"இந்த பிராவை பாருங்கள், எவ்வளவு அழகாக இவரின் மார்பழகை தூக்கி காட்டுகிறது என்று."
"வாவ்! இந்த பிரா போட்டிருக்கிற feeling கே எனக்கு இல்லை. இது நான் ஏற்கெனவே போட்டிருந்த பிராவை விட ரொம்ப நல்ல இருக்கு."(feeling இல்லேனா அவுத்து போட்டுட்டு போடி.)

புரிஞ்சிக்கோங்கடா! டிவி மச்சான்களா! ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு feeling.

ஒரு பிராவை அரைமணி நேரத்துக்கு உத்து பார்த்துக்கிட்டே இருக்க முடியலைடா.

வேற ஏதாவது பிட்டு இருந்தா ஒட்டுங்கடா! உக்காந்து பார்க்கிறோம்.

மலச்சிக்கல் நீங்க.

மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி சாப்பிடலாம்.

ஓமம் சாப்பிடலாம். ஓம நீர் குடிக்கலாம்.

மிளகு, ஓமம் பொடி செய்து, பெருங்காயம், கல் உப்பு கலந்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.


சங்கிலை.

வசிய மருந்தை வெளியேற்ற சங்கிலையை சாறு எடுத்து கொடுக்கலாம். சங்கிலை பொடி சாப்பிடலாம். சங்கிலை மற்றும் சங்கிலை பொடி மதுரை திலகர் திடல் சந்தையில் கிடைக்கிறது.

எலுமிச்சம்பழம்.

தெய்வங்களுக்கு எலுமிச்சையை துளையிட்டு மாலையாக அணிவிப்பதும், திரிசூலம் மற்றும் அருவாளில் சொருகுவதும் தவறு.

எலுமிச்சம்பழத்தை அப்படியே கடவுள் சிலைகளுக்கு முன் வைத்து தான் வழிபட வேண்டும்.

எதிரிகள் தொல்லை நீங்க தெய்வங்களுக்கு எலுமிச்சையை வைத்து வணங்குவது நல்லது.

கோவில்களில் கொடுக்கும் எலுமிச்சையை (அது துளையிடாததாகவும், திரிசூலம் அல்லது அரிவாளில் சொருகப்படாததாகவும் இருக்க வேண்டும்.) வீட்டிற்கு வந்து தலைக்கு தேய்த்து குளிப்பது நல்லது. பல தீய சக்திகளில் இருந்து உங்களை காக்கும்.

கோவில்களில் கொடுக்கும் எலுமிச்சை கீழே விழுந்து விட்டால், அதை மீண்டும் எடுக்க கூடாது. அப்படியே விட்டு விட வேண்டும். மீண்டும் எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தால் எதிர்பாராத விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Monday 19 August 2013

உண்மையான மகான் யார்?

உண்மையான மகானுக்கு பல ஏக்கர் நிலப்பரப்பில் ஆசிரமம் இருக்காது. பல நாடுகளிலும் கிளை அமைத்து ஆசிரமம் அமைத்துக்கொள்ள மாட்டார். அவரது படுக்கை அறையில் ரகசியமாக தங்க கட்டிகள் ஒழித்து வைத்து இருக்க மாட்டார். மனிதர்களை விட்டு மனதாலும், உடலாலும் விலகியே இருப்பார். ஆனால் மனிதர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார். என்னை பொருத்தவரை ஷிரிடி சாய் பாபா ஒரு மகான்.

பகுத்தறிவு.

கடவுள் இல்லை என்று சொல்வதை பலரும் பகுத்தறிவு என்று சொல்கிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்வது நாத்திகம். அது தவறல்ல. அது அவர்களுடைய கருத்து. அவர்களிடம் சென்று கடவுள் இருக்கிறார், அதை நம்புங்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.

பகுத்தறிவு என்பது தான் செய்யும் செயல்களில் எது தவறு, எது சரி என்று பகுத்து அறியும் அறிவு தான் பகுத்தறிவு.

பகுத்தறிவு என்பது வேறு, நாத்திகம் என்பது வேறு.

குழந்தை பேறு கிடைக்க.

குழந்தை பேறு இன்றி கஷ்டப்படுபவர்கள், குழந்தை பேறு கிடைக்க தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்துக்கொள்வது நல்லது. நெய் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆனால் நெய்யை இரவு உணவில் சேர்த்து கொள்ளகூடாது.

வீட்டில் வாழை மரம் வளர்க்கலாம்.

வீட்டில் தென்னை மரம் வளர்க்கலாம்.

பெண்களுக்கு வைக்க கூடாத பெயர்கள்.

பெண்களுக்கு வைக்க கூடாத பெயர்கள் என்று சில இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அவை, கிரகங்கள், நட்சத்திரங்கள், பூக்கள்.
இந்த பெயர் உள்ள பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு, பொருளாதார குறைவு அல்லது அந்தஸ்து குறைவு அல்லது ஆயுள் குறைவு, அல்லது இந்த பெண்கள் தான் குடும்பத்திற்காக உழைத்து பொருள் ஈட்டி குடும்பத்தை காப்பாற்றும் நிலை ஏற்படும் என்று கூறுகின்றன.

கிரக பெயர் உதாரணமாக, மதி, சந்திரா, இந்துமதி, வான்மதி, வெண்ணிலா, நிலா.

நட்சத்திர பெயர் உதாரணமாக, ரேவதி, ரோகிணி, சுவாதி, கார்த்திகா.

பூ பெயர் உதாரணமாக, மல்லிகா, ரோஜா.

இது என்னுடைய சொந்த கருத்து அல்ல. மதுரை சிம்மக்கல்லில் உள்ள பொது நூலகத்தில் ஒரு புத்தகத்தில் இருந்த தகவல். அந்த புத்தகத்தின் பெயர் தெரியவில்லை. படித்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.

உணவு சாப்பிடும் முறை.

சிலர் உணவு சாப்பிடும் போது ஆள் காட்டி விரலை மட்டும் தனியாக மடக்கி, மற்ற விரல்களால் உணவை எடுத்து சாப்பிடுகிறார்கள். இது மிகவும் தவறு. இவ்வாறு செய்பவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பிள்ளைகளை பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம்.

வாழை பழங்கள்.

தற்போது எல்லா வகை வாழை பழங்களும் ரசாயன புகை போட்டு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன. இது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். இதை எந்த அரசாலும் தடுக்க முடியாது.

ஆனால் உங்களால் இதை தடுக்க முடியும்.

பழமாக  வாங்காமல் காயாக வாங்கி வீட்டிலேயே இயற்கையாக பழுக்க வைத்து சாப்பிடலாம். காயாக வாங்கும் போது விலையும் சற்று குறைவாக இருக்கும்.

பசு.

பசுக்களுக்கு பேசும் சக்தி இருந்ததாகவும், அவைகளுக்கு எமன் வருவதை  முன்னமே அறியும் சக்தி இருந்ததாகவும், அதனால் ஒருவருக்கு மரணம் ஏற்படப்போகிறது என்றால் அவரை முன்னமே எச்சரித்து மரணத்தில் இருந்து காப்பாற்றியதாகவும், அந்த சம்பந்தப்பட்ட மனிதர்கள் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள தேவையான பரிகாரங்கள் செய்து தப்பித்து விட்டதாகவும், இதனால் கோபமடைந்த எமன், சிவனிடம் முறையிட்டதாகவும், இதனால் சிவன் பசுக்களின் பேசும் சக்தியை எடுத்து விட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன் நான் வசித்த பகுதியில் ஒரு பசு அதிகாலை வித்தியாசமான குரலில் கத்திக்கொண்டே இருந்தது. அது ஒரு அலறல் போல இருந்தது. அப்போது மணி கிட்டத்தட்ட அதிகாலை 5-30 இருக்கும். அடுத்த ஒரு வாரத்தில் அந்த தெருவில் இருந்த என்னோடு படித்த ஒருவன் குற்றாலம் சென்று குளிக்கும் போது பாறைக்குள் சிக்கி இறந்து விட்டான்.

2009ஆம் ஆண்டு மீண்டும் அதே போன்ற சப்தத்தில் ஒரு பசு கத்திக்கொண்டே இருந்தது. அப்போதும் மணி கிட்டத்தட்ட காலை 5-30 இருக்கும். சில தினங்களில் என் தந்தை மரணம் அடைந்தார். அப்போது எனக்கு தெரியாது, அந்த பசு எழுப்பிய சப்தம் என் தந்தையின் மரணத்திற்கான எச்சரிக்கை மணி என்பது.

அதற்குப்பிறகு பல முறை அதே போன்ற சப்தத்தை நான் பல முறை கேட்டிருக்கிறேன். அது எந்த பகுதியில் கத்துகிறதோ அந்த பகுதியில் இருக்கும் ஒருவர் இறந்து போயிருக்கிறார்கள். அனால் அதெல்லாம் பகல் பொழுதில் எழுப்பிய சப்தங்கள்.

தற்போது வீட்டில் பலரும் மேல் நாட்டு நாகரீகத்தின் படி நாய், பூனை வளர்க்கிறார்கள். அது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் பசு வளர்ப்பதை விட்டு விட்டார்கள்.

தற்போது பசு என்பது பால் கொடுக்கும் ஒரு இயந்திரமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

தங்கம்.

தங்கத்தை இடுப்புக்கு கீழ் எந்த ஒரு ஆபரணமாகவும் அணிய கூடாது. உதாரணமாக கொலுசு, மெட்டி, அருணா கயிறு.

மீறி அணிந்தால், அணிந்தவர் பல கஷ்டங்களை அனுபவிப்பார்.

தற்போது பல பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கத்தில் அருணா கயிறு அணிவித்து அழகு பார்க்கிறார்கள். இது மிகவும் தவறு. அது அந்த குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

bonsai tree.

Bonsai tree மூங்கில்கள் தற்போது பலரும் உபயோகிக்கிறார்கள். ஆனால் இந்த மூங்கில் என்பது, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள், இசை, நடனம், பல வித கலைகள் கற்று தரும் பள்ளிகள், காவல் நிலையங்கள் இவற்றில் மட்டுமே வைக்க ஏற்றவை.

மற்றவர்கள் இந்த மூங்கில் வைத்தால் அது அவர்களுக்கு நன்மை செய்யாது. உங்கள் உழைப்பு பிறருக்கு பயன் தருமே தவிர உங்களுக்கு பலன் தராது.

Bonsai tree அரசமரம் அல்லது ஆலமரம் எல்லா கடைகள், அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள், தொழிற்ச்சாலைகள் இப்படி எல்லா இடங்களிலும் வைக்கலாம். அப்படி வைத்தால் அந்த வியாபாரம் செழித்து வளரும். அதிக லாபம் கிடைக்கும். பல கிளைகள் உள்ள வணிக பெரும் நிறுவனமாக அது வளரும்.

ஆனால் இந்த Bonsai tree அரசமரம் அல்லது ஆலமரத்தை கண்டிப்பாக வீட்டில் வைக்க கூடாது. மீறி வைத்தால் பேரழிவு ஏற்படும். வீட்டோடு இணைந்த கடைகள், அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்களிலும் இதை வைக்க கூடாது.

Sunday 18 August 2013

கடம்ப வனம்.

மதுரை கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்தது என்று படித்திருக்கிறேன். ஆனால் இப்போது மதுரையை சுற்றிலும் காடு இருந்ததற்கான அறிகுறியே இல்லை.

Saturday 17 August 2013

கண்திருஷ்டி, செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், நீங்க.

எந்த ஒரு பொருளையும் கட்டி தொங்க விட்டாலும் அது ஆயுளை குறைக்கும் என்பது என் கருத்து.

சாமி கும்பிடும் இடத்தில் வைத்தாலும் அதன் ஈர்ப்பு சக்தி ஆயுளை குறைக்கிறது.

தலையை சுற்றி போட்டு தோஷம் கழித்தாலும், அது முழுமையான பலனை தருவதில்லை.

கண்திருஷ்டி என்ற எதிர்மறை சக்தியும், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீய சக்திகளும் உடலுக்குள் நுழைந்து, உடலுக்குள் உள்ளிருந்தபடியே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதற்க்கு 100% சரியான தீர்வு ஆரோக்கியமான உணவு முறை தான். ஆரோக்கியமான உணவு முறையால் மட்டுமே இதை உடலை விட்டு முழுமையாக, நிரந்தரமாக வெளியேற்ற முடியும். 

இஞ்சி, தயிர், நெல்லிக்காய் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

சீரகத்தை தினமும் மூன்று வேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சமைக்காமல் சாப்பிடலாம். சீரக தண்ணீர் குடிக்கலாம்.

பதிமுகம் (pathimugam) கலந்த நீர் குடிக்கலாம்.கேரளா மாநிலத்தில் எல்லோருமே பதிமுகம் கலந்த நீரை குடிக்கிறார்கள். பதிமுகம் கேரளா முழுவதும் கிடைக்கிறது. தமிழ்நாடு, கேரளா எல்லை பகுதியில் இருக்கும் ஊர்களில் கிடைக்கிறது. பதிமுகம் என்பது ஒரு வகை மரம். இந்த மரத்தின் சிறு சிறு துண்டுகளை நீரில் போட்டு வைத்தால் நீர் சற்றே சிவந்த நிறத்தில் மாறி விடும். இது உடலுக்கு மிக ஆரோக்கியமானது. குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் பதிமுகத்தை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். வெப்பமான நிலப்பரப்பில் இருப்பவர்கள் குடி தண்ணீர் இருக்கும் பானையில் போட்டு வைத்து பின்னர் குடிக்கலாம். சில மணி நேரங்களிலேயே தண்ணீர் சற்றே சிவந்த நிறத்திற்கு மாறி விடும். ஒரு பானை தண்ணீருக்கு ஒரு சிட்டிகை பதிமுகம் போதுமானது. 

பதிமுகம் பல ஆயுர்வேத மருந்துகளில் முக்கியமான ஒன்றாக கலக்கப்படுகிறது.

இனி எண்ட state கேரளா 
எண்ட transport kerala state road transport corporation 
எண்ட பிகர் மலபார் பிகர் 
எண்ட நடனம் கதகளீஈஈஈ 


தகிட தக திமி மலையாள பகவதி