Wednesday 30 April 2014

பருவ வயது.

அனுபவிக்க வேண்டிய வயதில் அட்டு பிகர் கூட கிடைக்காமல், 60 வயதிற்கு பிறகு உலக அழகியே கிடைத்தாலும் மசுருக்கு கூட பிரயோஜனம் இல்லை.

அயோக்கியத்தனம் செய்பவனெல்லாம் ஏரியாவிற்கு ஒரு பிகரை செட் பண்ணி வச்சிருக்கானுக.

மரம்.

பலர் தாங்கள் வணங்கும் மரத்திற்கு சுற்றி கயிறு கட்டுவது, சேலை கட்டுவது போன்ற செயல்களை செய்கிறார்கள்.

இது தவறு என்பது என் கருத்து.

தீட்டு.

குழந்தை பிறந்த வீட்டில் இருப்பவர்களும், பெண் வயதுக்கு வந்த வீட்டில் இருப்பவர்களும், இறந்த ஒருவரின் வீட்டில் இருப்பவர்களும் கோவிலுக்கு சில நாட்கள் செல்ல கூடாது. அது தீட்டு என்று சொல்கிறார்கள்.

இது எதனால் வந்தது என்று எனக்கு தெரியாது.

ஆனால் இந்த குடும்பத்தில் இருப்பவர்கள் அந்த குறிப்பிட்ட காலம் வரை கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது.

ஆனால் இவர்களுக்கு ஏதாவது மன சஞ்சலம் அல்லது கஷ்டம் ஏற்படுமாயின், கோவிலுக்கு செல்ல முடியவில்லையே என்று தோன்றலாம்.

இவர்கள் அந்த கால கட்டத்தில் வீட்டின் அருகே இருக்கும் வேப்ப மரத்தின் கீழ் நின்று கடவுளை வணங்கலாம் என்பது என் கருத்து.

கயிறு.

சில ஆண்டுகளுக்கு முன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே தரிசனத்திற்கு செல்லும் வழியெங்கும், வைக்கப்படிருந்த கம்பிகளில் பலர் தாங்கள் கையில், கழுத்தில் கட்டியிருந்த பழைய கயிறை கட்டியிருந்தார்கள்.

இது மிக மிக தவறான ஒரு செயல். வீட்டில் இருக்கும் குப்பையை கோவிலில் சென்று கொட்டுவதற்கு சமம் இந்த செயல்.


ஒரு முக ருத்ராட்சம்.

ஒரு முக ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்காது என்று சொல்கிறார்கள்.

ராசி கற்கள்.

ராசி கற்கள் ஆபரணமாக அணிபவர்களுக்கு மன அழுத்தம், மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.


பனங்கல்கண்டு, மிளகு

பனங்கல்கண்டு, மிளகு சேர்த்து சாப்பிடுவது  ஜலதோஷத்திற்கு உடனடி நிவாரணம் தரும்.

Wednesday 23 April 2014

பூஜை பொருட்கள்.

விளக்கு உள்ளிட்ட எந்த ஒரு பூஜை பொருட்களிலும்  செம்பு, stainless steel தவிர எந்த ஒரு உலோகத்தையும் பயன்படுத்துவது சரி அல்ல என்பது என் கருத்து. செம்பு, stainless steel இவை இரண்டு மட்டுமே  நேர்மறை சக்தியை தருகிறது.
மண், மரம், கண்ணாடி, பீங்கான் இவற்றால் ஆன பொருட்களையும்  பயன்படுத்தலாம்   என்பது என் கருத்து.

யந்திரங்கள் செம்பு மற்றும் பித்தளையால் உருவாக்கப்படுகின்றன. பித்தளையை பயன்படுத்த கூடாது என்பது என் கருத்து. காரணம் பித்தளையானது செம்பும், துத்தநாகமும் கலந்து உருவாக்கப்படுவது. செம்பு நேர்மறை சக்தியை தருகிறது. ஆனாலும் அதைவிட நன்மையான பொருள் தேவை.

Friday 11 April 2014

magnet train.

வெளி நாடுகளில் magnet train ஓடுகிறது.

ஆனால் நம் நாட்டில் இப்போது தான் அகல பாதை அமைப்பதற்கு திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறோம்.

நம் நாட்டிற்கு எப்போது வரும் magnet train?

வெட்டி வேர் விசிறி.

வெட்டி வேரை நன்றாக பரப்பி விரித்து அதன் விளிம்பு பகுதியை சிறிய துணியால் தைத்து கொண்டால் வெட்டி வேர் விசிறி கிடைக்கும்.

இதை நீரில் நனைத்து, விசிறினால் குளிர்ச்சியாகவும், மணமாகவும் இருக்கும்.

என் அம்மாவின் தாத்தா காலத்து விசிறி எங்கள் வீட்டில் இருந்தது. அதன் அருமை தெரியாமல் பல ஆண்டுகளுக்கு முன் தூக்கி எறிந்துவிட்டேன்.

தற்போது வெயில் காலம் ஆதலால் என் அம்மா, அதை நினைத்து பேசினார். அதனால் இந்த பதிவிடுகிறேன்.

கழிவுகள்.

நம் முன்னோர்கள் பல கோடி தலைமுறைகளை கடந்த பின்னும் நமக்காக எந்த கழிவுகளையும் விட்டு செல்லவில்லை.

ஆனால் நாம் கடந்த 20 ஆண்டுகளில் மட்டுமல்லாது, இன்னமும் பல அழிக்க முடியாத கழிவுகளை இந்த பூமியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறோம்.

காரணம், நாம் அவர்கள் காட்டிய இயற்கையான பாதையில் செல்லாமல், அதற்க்கு நேர் எதிரான தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்.

துப்பட்டா.

துப்பட்டா (சரியாக) அணியாத பெண்ணின் உடையிலும் எமன் வாசம் செய்கிறான்.

remix songs.

பழைய நல்ல பாடல்களை, கதற கதற கற்பழித்து, விஷம் கொடுத்து, தூக்கில் தொங்கவிட்டு, கழுத்தை அறுத்து, துண்டு துண்டாக வெட்டினால் remix பாடல்கள் கிடைத்துவிடும்.

கொலையா கொல்றானுங்க இந்த remix பாட்டை உருவாக்குறவனுங்க.

உலகம் பாலைவனமானால் எனக்கென்ன?(pyramid)

பிரமிடுகள் வைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கும், பாலைவனத்தை உருவாக்கும் என்ற என்னுடைய தகவலை bbc, cnn, discovery channel, national geographic, உலகின் top 10 செய்தி தாள்கள், இந்தியாவின் எல்லா மொழி செய்தி தாள்கள், online செய்தி தாள்கள், இந்தியாவின் எல்லா மொழி tv சேனல்கள் உள்பட அனைவருக்கும் email அனுப்பினேன்.

ஆனால் எவனுமே கண்டுகொள்ளவில்லை.

webdunia.in என்ற இணைய தளத்தில் இருந்து மட்டும் என்னை அழைத்து விவரம் கேட்டார்கள். சொன்னேன். பிறகு அவர்களும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதே தகவலை ஒரு அமெரிக்காகாரன் சொன்னால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் உலகின் எல்லா tv சேனல்களிலும் வெளியிட்டிருப்பார்கள்.

இன்னொரு கொடுமை என்னவென்றால் "pyramid is dangerous" என்ற தலைப்பில் நான் வெளியிட்ட youtube வீடியோவை, 1 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை 11 பேர் மட்டுமே பார்த்திருக்கிறார்கள். 1 like மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த 1 like போட்ட புண்ணியவான் அல்லது புண்ணியவாள் (பெண்பால்) யாரென்று தெரியவில்லை.

facebook இல் எவளாவது பொட்டச்சி "ஆ" என்று ஒரு எழுத்து போட்டால் கூட அடுத்த 1 மணி நேரத்திற்குள் 3,48,765 பேர் comment எழுதுறானுங்க. 1,98,427 பேர் like போடுறானுங்க.

"எல்லோரும் உன்னை கோபால கிருஷ்ணன்னு தான கூப்புடுறாங்க"

"எவன் கூப்புடுறான். நான் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன். எல்லாரும் சப்பாணின்னு தான் கூப்புடுறானுங்க."
that 16 வயதினிலே moment.

wikihow

என்னுடைய வலைப்பதிவின் முக்கிய கருத்துக்கள் சிலவற்றை wikihow.com என்ற இணைய தளத்தில் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதினேன். ஆனால் அவர்கள் என்னுடைய பெயரை நீக்கி விடுகிறார்கள் என்ற காரணத்தினால் மேலும் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

நீங்கள் சுயவிளம்பரம் செய்துகொள்ளாத நபராக இருந்து, உங்களிடம் பல கருத்துக்கள் இருந்தால் wikihow.com இணையத்தில் எழுதலாம்.

"ஒரு விளம்பரம்"

"என்னடா விளம்பரம்! அந்த சினிமாகாரனுங்க தான் விளம்பரம் பண்றானுங்கன்னா நீயுமாடா!" that கரகாட்டகாரன் moment.

Sunday 6 April 2014

வசிய மருந்து.

வசிய மருந்தை ஒருவரது உடலில் செலுத்துவது கஷ்டமான செயல் அல்ல. ஆனால் வசியமருந்தை அவர் உடலில் இருந்து வெளியேற்றிவிட்டால், வசிய மருந்தை செலுத்தியவருக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் நிச்சயம் கிடைக்கும்.

தீய சக்திகளால் உருவேற்றப்பட்ட திருநீரை ஒருவர் மீது போட்டாலே அது அவர் உடலில் வசிய மருந்தாக மாறிக்கொள்ளும் என்றும் சொல்கிறார்கள்.


வசிய மருந்து என்றுமே ஆபத்தானது. அதை யார் பயன்படுத்தினாலும் சரி.

கடவுள் சிலைகள்.

கடவுள் சிலைகளை பல்லக்கு, தேர், வாகனங்கள் போன்றவற்றில் வீதி உலா கொண்டு சென்றால் அது ஆட்சி பீடத்தையே பாதிக்கும். நிரந்தரமற்ற ஆட்சி உண்டாகும். மக்களுக்கு துன்பமே வரும். நிரந்தரமான நன்மை மக்களுக்கு கிடைக்காது. ஆட்சி முறைகள் மாறிக்கொண்டே இருக்கும். எதிரிகளிடம் தோற்கும் நிலை, எதிரிகளுக்கு அடிபணியும் நிலை போன்றவை ஆட்சி பீடத்திற்கு உண்டாகும்.

Friday 4 April 2014

இந்து முஸ்லீம் சண்டை.

facebook இல் பலர் இந்து முஸ்லீம் சண்டை போடுகிறார்கள். இது அரசியல் தூண்டுதலா அல்லது தனி நபர் தூண்டுதலா என்று தெரியவில்லை.

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருந்தால் நம்மை அழித்து விடுவார்கள் என்று தான், வெள்ளைக்காரன் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டான்.

அதை இன்னும் பலர் பின்பற்றுகிறார்கள். இந்து முஸ்லீம் சண்டையில் குளிர்காய்கிறார்கள்.

இது தெரியாமல் சண்டை போடுகிறார்கள் பல முட்டாள்கள்.

Thursday 3 April 2014

மன்னராட்சி vs மக்களாட்சி.

மன்னராட்சி காலத்தில் மன்னர்கள் மக்களின் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள மாறுவேடத்தில் உலா வந்ததாக படித்து இருக்கிறேன். மேலும் மக்கள் தங்களுக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் மன்னனை நேரில் சந்திக்க முடிந்தது என்று படித்து இருக்கிறேன்.

ஆனால் மக்களாட்சியில் மந்திரிகள் மக்களிடம் ஓட்டு கேட்க மட்டுமே வந்து சந்திக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் மந்திரிகளை நேரில் சென்று பார்க்க முடியாது.

Wednesday 2 April 2014

போலிகள்.

சந்தைகளில் தற்போது விற்கப்படும் சந்தனம் 100% உண்மையானது அல்ல. வெண்மை நிற மர தூளில் மஞ்சள் வர்ணம் கலந்து, ரசாயன வாசனை பொருட்கள் கலந்து விற்கிறார்கள். உண்மையான சந்தனம் பழுப்பு நிறத்தில் இருக்கும். மென்மையான நறுமணம் இருக்கும். அதுவும் பல ஆண்டுகள் ஆன மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட மரக்கட்டையை உரசினால் தான் நறுமணம் இருக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது வயதான மரம்.

semi precious stones செயற்கை வர்ணம் ஏற்றப்பட்டு விற்கப்படுகின்றன. 

சாலிகிராம கற்கள் சீனாவில் போலியாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

(a+b)2

(a +b)2 formula  படிக்காத மனிதர்களே இல்லை. ஆனால் இந்த formula வாழ்க்கைக்கு உதவுகிறதா என்று எனக்கு தெரியவில்லை.

வெள்ளி.

வெள்ளியில் அருணா கயிறு அணிவது தவறு என்பது என் கருத்து.