Friday 18 October 2013

செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம்.

தீய சக்திகள் எவியவரிடமே வந்து முடிவடையும். இது தெரியாமல் தான் தீய சக்திகளை ஏவும் 99.99% பேர் இருக்கிறார்கள்.

தீய சக்திகள் ஒருவர் மீது ஏவப்பட்டால், அவரை காக்க தெய்வ சக்தி உண்டு. ஆனால் அந்த தெய்வ சக்தியை முறையாக செயல்படுத்த தெரிந்தால் அந்த தீய சக்தியில் இருந்து தப்பிவிடலாம். இது பற்றி முறையாக தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பொய் சொல்லி ஏமாற்றுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

ஒருவர் மீது ஏவப்பட்ட தீய சக்தியை அவரிடம் இருந்து வெளியேற்றிவிட்டால், அந்த தீய சக்தி அதை எவியவரிடமே செல்லும். அப்போது அந்த தீய சக்தியை எவியவரை அவரது குல தெய்வம் கூட காப்பாற்றாது. அப்போது அந்த தீய சக்தியை எவியவரோ, அல்லது அவரது குடும்பத்தினரோ, அல்லது அவர் வம்சமோ மிகவும் கஷ்டப்படும். அல்லது அழியும் நிலை கூட வரலாம். இது தெரியாமல் தான் பலர் தீய சக்திகளை ஏவுகிறார்கள்.

எனவே தீய சக்திகளை கண்டு பயப்படாதீர்கள். தெய்வ சக்தியை நம்புங்கள். தெய்வ சக்தியை முறையாக செயல்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபடுங்கள். பொய் சொல்லி ஏமாற்றுபவர்களை நம்பாதீர்கள்.

எதிர் மறை சக்தி.

எதிர் மறை சக்தியை வீட்டில் வைத்து இருக்கும் சில பொருட்கள் அதிகம் ஈர்க்கின்றன. அவை உடைந்த கண்ணாடி, கிழிந்த துணிகள்.

உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு பல அரிய பொருட்களை விட்டு சென்றிருக்கலாம். அவை பாதுகாக்கப்பட வேண்டியவை. காரணம் அந்தக்கால பொருட்கள் விலை மதிப்பற்றவை. அவற்றை விற்றுவிட்டாலோ, அல்லது தூக்கி எறிந்துவிட்டாலோ, மீண்டும் கிடைக்காது.

ஆனால் உடைந்த கண்ணாடிகளையும், கிழிந்த துணிகளையும் யாருடைய ஞாபகார்த்தமாகவும் வீட்டில் வைத்து இருக்காதீர்கள்.

american diamond.

american diamond என்று அழைக்கப்படும் இந்த a.d.கற்கள், (அமெரிக்காவிற்கும் இந்த கற்களுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை.) பட்டை தீட்டப்பட்டு பயன்படுத்தப்படுவதால், இவையும் ஈர்ப்பு சக்தியுடன் செயல்படுகின்றன. எனவே இவையும் தவிர்க்கப்பட வேண்டியவை தான்.

Wednesday 16 October 2013

தீய சக்திகள்.

தீய சக்திகள் பாதிப்பு இல்லாமல் தடுக்க தினமும் உணவில் தயிர், இஞ்சி, நெல்லிக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.

கம்பு.

வழக்கமாக தோசைக்கு மாவு ஆட்டுவதைப்போல், கம்பை ஆட்டி தோசை சுடலாம். கம்பு, அரிசியை விட சற்று கடினமானது என்பதால் சற்று அதிக எண்ணெய் உறிஞ்சும். ஆனால் உடலுக்கு ஆரோக்கியமானது.

கிரைண்டரில் மாவு ஆட்டாமல், உரலில் கம்பு மாவை ஆட்டினால் தோசை இயற்கையான மணம் வீசும்.

கோதுமை சப்பாத்தி செய்யும் போது, கோதுமையில் சிறிதளவு கம்பு சேர்த்துக்கொண்டால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
கோதுமையில் நான்கில் ஒரு பங்கு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கோதுமை சப்பாத்தி போல் மெதுவாக இருக்காது. சற்று கடினமாக இருக்கும்.

வெல்ல பாகு, கருப்பட்டி பாகு.

வெல்லம் தேவையான அளவு எடுத்து, அதில் தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க வைத்தால், வெல்ல பாகு கிடைத்து விடும்.

கருப்பட்டி தேவையான அளவு எடுத்து, அதில் தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க வைத்தால், கருப்பட்டி பாகு கிடைத்து விடும்.

இதை, இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். நன்றாக இருக்கும்.

சில பெண்கள்.

சில பெண்கள் கோவிலுக்கு வரும்போது அணிந்து வரும் ஆடை, சாமி கும்பிடும் எண்ணத்தை தடுத்து விடுகிறது.

சாமி தரிசனமா? இல்லை இது போன்ற சில பெண்களின் தரிசனமா? என்று மனம் போராட்டம் நடத்துகிறது.

சாமியை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம், என்று மனம் முடிவெடுக்கிறது. கண்களும் அதை ஆமோதிக்கிறது.


பெயர்கள்.

முன்பெல்லாம் ஆண்களின் பெயர்களுக்கு பின்னால் ஜாதி பெயர் சேர்த்து இருப்பார்கள். தற்போது சில பெண்கள் தங்களின் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்து இருக்கிறார்கள். ஜாதி வெறி ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு shift ஆகி விட்டதா என்று தெரியவில்லை.

சரி விசயத்திற்கு வருவோம்.

என்னை பொறுத்த வரை கடவுளின் பெயரை மனிதர்களுக்கு (ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி) வைப்பது சரியல்ல என்று கருதுகிறேன்.

காரணம் அந்த கடவுளின் சக்தி அந்த மனிதர்களின் உடலில் செயல்பட ஆரம்பிக்கும். ஆனால் கடவுளின் சக்தியை தாங்கும் சக்தி மனிதர்களுக்கு இல்லை. மனிதர்களுக்கு என்று குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சக்தி தான் இருக்கிறது.

என்னை பொறுத்த வரை, கடவுளின் பெயர் வைத்துக்கொண்ட 95% பேர் போராட்டமான வாழ்க்கையை தான் அனுபவிக்கிறார்கள்.

இதை வேறு விதமாக சொன்னால், சாமி அருள் வந்து சாமி ஆடுபவர்களை பார்த்து இருப்பீர்கள்.(பொய்யாக சாமி வந்து ஆடுபவர்களை பற்றி நான் இங்கே குறிப்பிடவில்லை.) அவர்கள் எல்லாம் போராட்டமான வாழ்க்கையை தான் வாழ்வார்கள். அவர்களால், மற்றவர்களுக்கு நல்லது நடக்குமே தவிர, யாராலும் அவர்களுக்கு நல்லது நடக்காது.

(ஒரு முறை நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற போது, அம்மன் சன்னதியில், கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு பெண்மணி சாமி வந்து ஆடினார். அங்கே இருந்த பெண்கள் எல்லாம் சாமி வந்துவிட்டது என்று அந்த பெண்ணுக்கு உள்ளே செல்ல வழி விட்டார்கள். அந்த பெண்ணும் உள்ளே நுழைந்த உடன், சாதாரண நிலைக்கு வந்து முதலாவதாக சாமி கும்பிட்டு விட்டு சென்று விட்டார். சாமி கும்பிட எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று பாருங்கள். அங்கே இருந்த ஒரு பெண் காவலாளி சொன்னார்,"ஏய்! சாமி ஆடுறது எல்லாம், மடப்புரம் கோவிலுக்கு போய் ஆடணும். இங்கே வந்து ஏமாற்றக்கூடாது.")

கடவுள் சிலைகள்.

கடவுள் சிலை வடிவங்களை வீட்டில் வைத்து வழிபட்டால் தமக்கு அதிக நன்மை வரும் என்று பலரும் நம்புகிறார்கள்.

ஆனால் அது தவறு.

கடவுள் சிலை வடிவத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் அதிக துன்பங்களே வரும். அந்த சிலை வடிவம், ஸ்படிகம், செம்பு, பித்தளை, வெண்கலம், வெள்ளி மற்றும் எந்த ஒரு பொருளால் உருவாக்கப்பட்டு இருந்தாலும் சரி.

மேலும் சிவலிங்கத்தின் படம், அனுமார் படம், ஐயப்பன் படம் போன்றவற்றையும் வீட்டில் வைத்து இருக்க கூடாது.

Monday 14 October 2013

கோழி கறி.

கோழி கறி சாப்பிடுபவர்களின் உடலில் தீய சக்திகளை ஏவி, அதை செயல்படுத்துவது எளிது என்று சொல்கிறார்கள்.

தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களும், தீய சக்திகளால் இனிமேல் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்களும், கோழி சம்பந்தப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்த்து விடுவது நல்லது.

குறிப்பாக, வசிய மருந்து கொடுப்பவர்கள், கோழி குழம்பில் கலந்து தான் கொடுக்கிறார்கள்.

அதற்க்கு பதிலாக, ஆட்டு கறி, மீன் சாப்பிடலாம்.

Friday 11 October 2013

எறும்பு.

உடல் நலம் சரியில்லாத ஒருவரின் உடலில் புண் இருந்து அந்த புண்ணில் கடி எறும்பு என்று சொல்லப்படும் சிவப்பு எறும்பு அல்லது சாமி எறும்பு எனப்படும் கருப்பு எறும்பு வந்தால், அவருக்கு விரைவில் மரணம் ஏற்படலாம்.

அவருக்கு உரிய தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால், காப்பாற்றி விடலாம்.

மரணம் அடைய போகும் ஒருவரின் உடலில் கடி எறும்புகள் அல்லது சாமி எறும்புகள் அதிகம் ஏறுமானால், அவருக்கு மரணம் நிச்சயம்.

அவருக்கு உரிய தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால், காப்பாற்றி விடலாம்.

நேர்மறை சக்தி.

நேர்மறை சக்தி அதிகம் இருக்கும் வீட்டில்  குருவி, குழவி, தேனீ போன்றவை கூடு கட்டும். அவ்வாறு இவை கூடு கட்டினால் அந்த வீட்டில் இருப்பவர்கள் மிகவும் சந்தோசமாக இருப்பார்கள்.

இவை கட்டிய கூட்டை கலைப்பது பாவம்.

Fan

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முந்தைய fan களின் நடு மண்டை மொக்கையாக (இது மதுரை பாஷை. மொக்கையாக என்றால் குண்டாக என்று அர்த்தம்.) இருக்கும். இந்த fan களை உபயோகிக்கும் போது  அறையின் எந்த மூலையில் படுத்தாலும் காற்று நன்றாக வரும்.

ஆனால் இப்போது இருக்கும் fan களின் கீழே படுத்தாலும் சரியாக காற்று வருவதே இல்லை. 

திருக்குறள்.

உலக தமிழர்கள் அனைவரும்  பின்பற்றும் ஒரே திருக்குறள்,

"பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கு மெனின்." 

வள்ளுவரே சொல்லிட்டருள்ள, பொய் சொல்லலாம்னு.

Wednesday 9 October 2013

பால்.

நேற்று கறந்த பாலை இன்றைக்கு தேதியிட்டு விற்பனை செய்பவர்களிடம் வாங்கி, சில சமயம் அதை fridge இல் வைத்து பிறகு,  அதை காய்ச்சி குடிப்பது hygenic என்று சொல்கிறது மேல் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கம்.

கறந்த பாலை, 5 நிமிடம் முதல் 2 மணி நேரத்திற்குள் வாங்கி, காய்ச்சி குடிக்கும் கீழ் தட்டு மக்களை பார்த்து, இது hygenic இல்லை என்று சொல்கிறது.

இன்னாங்கடா! உங்க ஹைஜீனுக்கு?

விருந்தோம்பல்.

இன்றைய தமிழர்களின் விருந்தோம்பலில் முக்கிய இடம் பிடிப்பவை,

1) டீ அல்லது காபி.

2) ரசாயனம் கலந்த குளிர் பானங்கள்.(குடிப்பவனுக்கு என்ன ஆனால் என்ன என்ற நல்ல எண்ணம் தான்.)

3) மது பானங்கள். (குடிப்பவனும் அவன் குடும்பமும் நாசமாய் போனால் என்ன என்ற நல்ல எண்ணம் தான்.)

பண்டைய தமிழர்களின் விருந்தோம்பலில் மிக்கிய இடம் பிடித்தது,

1) வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மோர்.(குடிப்பவர்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற கெட்ட எண்ணம் தான்.)

எதிர் மறை சக்தி.

எதிர் மறை சக்தி அதிகமாக இருக்கும் இடத்தில் அல்லது அதற்க்கு மிக அருகில், புறாக்கள் வந்து அமரும் அல்லது குடி இருக்கும்.

அதற்கும் அதிகமான எதிர்மறை சக்தி அதிகம் இருக்கும் இடத்தில் வௌவால்கள் வரும் அல்லது குடி இருக்கும்.

Tuesday 8 October 2013

பெண்கள்.

கந்த சஷ்டி கவசம் சொல்லாத தமிழ் பெண்ணை கூட பார்க்கலாம்.

ஆனால் "அண்ணா" என்ற பாதுகாப்பு கவசம் சொல்லாத தமிழ் பெண்ணை பார்க்கவே முடியாது.

பெண்கள் மந்திரம் சொல்லக்கூடாது.

என்னை பொறுத்தவரை பெண்கள் மந்திரம் சொல்லக்கூடாது. வெறுமனே தான் கடவுளை வணங்க வேண்டும்.

காரணம் ஆண்கள் எல்லாம் சிவனின் அம்சம்.

பெண்கள் எல்லாம் சக்தியின் அம்சம்.

ஆண்களுக்கு தான் சக்தி தேவையே தவிர பெண்களுக்கு இல்லை.

மேலும் எல்லா மந்திரங்களும், சுலோகங்களும் ஓம் என்று சொல்லி தான் சொல்ல வேண்டும். ஓம் என்று சொல்லாமல் மந்திரம், ஸ்லோகம் சொன்னால் கெடுபலன் உண்டாகும்.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க வயிறு பெருக்கும்.

இதனால் தான் மந்திரம் சொல்பவர்களின் வயிறு பெருத்து இருக்கிறது.

எல்லா கடவுள்களும் six pack உடலோடு காட்சி தரும்போது, ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் வடிவமாக இருக்கும் பிள்ளையார் மட்டும் தொப்பையோடு காட்சி தருவது இதனால் தான்.

இந்த பதிவின் தொடர்ச்சி கீழ்க்கண்ட பதிவில்
http://thilai.blogspot.com/2014/02/blog-post_4985.html

கருங்கல்.

இரண்டு கருங்கற்க்களை ஒட்டி இருப்பது போல வைத்து, மூன்றாவதாக ஒரு கருங்கல்லைக்கொண்டு அந்த இரண்டு கருங்கற்க்களையும் பல முறை சுற்றினால், அந்த இருண்டு கற்களுக்கும் இடையில் ஒருவித காந்த சக்தி ஏற்படும் என்று என்னுடைய முந்தைய பதிவு ஒன்றில் சொல்லி இருந்தேன்.

இதை இன்றைய இளைஞர்கள் ஆராய்ச்சி செய்து, இதில் இருந்து ஆக்க பூர்வமான சக்தியை உருவாக்க முடியுமா என்று  ஆராய்ச்சி செய்யலாம். குறிப்பாக மின்சாரம் தயாரிக்க முடியுமா என்று ஆராயலாம்.

வருங்கால சந்ததிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

நெல்லிக்காய் மரம்.

நெல்லிக்காய் மரம் வீட்டில் வளர்ப்பது நிலத்தடி நீரை நன்னீராக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். நம்பிக்கை இருப்பவர்கள் தங்கள் வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்க்கலாம்.

திருநீறு.


என்னை பொருத்தவரை, திருநீரை மூன்று கோடுகள் கொண்ட பட்டையாக பூசுவது தவறு என்று நினைக்கிறேன்.

என் அனுபவத்தில் பட்டை பூசிக்கொண்ட எல்லோரும் பொருளாதார ரீதியாக அல்லது கணவன் மனைவி ஒற்றுமை இல்லாமல் பிரச்சனை, இவற்றில் ஏதாவது ஒன்றை அனுபவிக்கிறார்கள்.

குறிப்பு:- நான் இங்கே பிராமணர் அல்லாதவர்கள் பற்றி மட்டுமே சொல்கிறேன்.

Monday 7 October 2013

உன் அழகு.

உன் அழகு 
அது பிரம்மனின் படைப்பு.
அது எனக்கு மட்டுமே 
சொந்தமானது.
அதை மறைக்க 
உனக்கு என்ன உரிமை இருக்கிறது.

பட்டாம் பூச்சி.

பட்டாம் பூச்சியின்
படபடப்பிற்க்கும் 
உன் இமை 
படபடப்பிற்க்கும் 
அதிக 
வித்தியாசம் இல்லை.

Tuesday 1 October 2013

கோபுரம், பிரமிட், ராசி கற்கள்.

கோபுரம், பிரமிட், பட்டை தீட்டப்பட்ட ராசி கற்கள் இவை மூன்றுமே ஒரே மாதிரி செயல்படுகின்றன. இவை மூன்றுமே சூன்ய நிலைக்கு மனிதர்களை அழைத்து செல்கின்றன. இவை மூன்றுமே ஒருபுறம் நேர்மறை சக்தியையும், ஒருபுறம் எதிர்மறை சக்தியையும் கொண்ட சூன்ய நிலையில் செயல்படுகின்றன. இவை மனிதர்களை சூன்ய நிலைக்கு அழைத்து செல்கின்றன.

பிரமிட்.pyramid The sculpture of evil.

என்னுடைய முந்தைய பதிவில் பிரமிடை எவ்வாறு வைப்பது என்று சொல்லி இருந்தேன்.

பிரமிடை எப்படி வைத்தாலும் அதில் எதிர்மறை சக்தி செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. பிரமிடை இருதலை பாம்பாக நான் பார்க்கிறேன். ஒரு தலையில் நேர்மறை சக்தியையும், மறுதலையில் எதிர்மறை சக்தியையும், இந்த இரண்டும் இணைந்த சூன்ய தன்மை கொண்ட உடலையும் அது கொண்டிருக்கிறது. என்னை பொருத்தவரை பிரமிட் என்பது உலகத்தில் இருக்கும் வரை மனிதர்கள் நல்ல நிலையில் வாழவே முடியாது. ஒரு சூன்ய நிலைக்கு அது மனிதர்களை அழைத்து செல்கிறது. 

பிரமிட் என்பது சாத்தானின் சிலை வடிவம். 

PYRAMID IS A SCULPTURE OF EVIL.