Saturday 28 December 2013

பரண், படிக்கட்டு.

பழைய சாமான்களை போட்டு வைத்திருக்கும் பரண் மற்றும் படிக்கட்டு இவற்றின் நேர் கீழ் அமர்ந்திருப்பது, தூங்குவது போன்றவை எதிர்மறை சக்தி தரும். துன்பம் தரும்.

காகம்.(crow)

காகத்திற்கு சாதம் வைப்பது போன்ற விசயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

காகத்திற்கு சோறு வைப்பது நம் முன்னோர்களை சென்றடையும் என்று சொல்கிறார்கள். இதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

காரணம், உடல் என்ற ஒரு வடிவம் இருப்பதால் தான் பசி இருக்கிறது. அந்த உடலை விட்டு பிரிந்த உயிருக்கு அதாவது ஆன்மாவிற்கு பசி என்பது இருக்காது.

காகம் என்பது எதிர்மறை சக்தியை தருவது. அது என் வீட்டு வாசல் முன் வந்தாலே அதை கொலைவெறியுடன் விரட்டுபவன் நான்.

காகத்திற்கு சோறு வைப்பதற்கு பதிலாக வேறு ஏதாவது உயிரினங்களுக்கோ, அல்லது ஏழைகளுக்கோ உணவளித்தால் புண்ணியம் கிடைக்கும்.

fengshui.

fengshui என்று அழைக்கப்படும் சீன வாஸ்து பொருட்கள் என்னை பொருத்தவரை கெடுதலை மட்டுமே செய்யும். நன்மையை தராது.

அஷ்டமி, நவமி.

அஷ்டமி, நவமி தொட்டது துலங்காது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ஆனால் இதை நான் நம்பவில்லை. காரணம் இந்த இரண்டு திதிகளும் தீய சக்திகளை அழிக்கும் சக்தி பெற்றவை.

அதனால் தான் ராமர் நவமியில் பிறந்தார்.

கிருஷ்ணர் அஷ்டமியில் பிறந்தார்.

துர்க்கை அஷ்டமியில் பிறந்தார்.

பைரவருக்கு அஷ்டமி உகந்த திதி.

செருப்பு.

வேறு ஒருவரின் செருப்பு, ஷூ அணிய கூடாது. அணிந்தால், அவரின் கஷ்டங்கள் அணிபவருக்கு வரும்.

மழலை.

தெய்வங்கள் பேசும் மொழிக்கு மழலை என்று பெயர்.

கம்பங்கூழ், கேப்பைகூழ்.

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ் சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

குளிர் காலத்தில் உடலுக்கு வெப்பம் தரும் கேப்பைகூழ் சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

விக்கல்.

விக்கல் நிற்காமல் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தால் சின் முத்திரை பிடிக்கலாம்.

Tuesday 24 December 2013

மிளகு vs பச்சை மிளகாய் and மிளகாய் வத்தல்.

பண்டைய தமிழர்கள் மிளகை தான் உரைப்பு சுவைக்கு உணவில் பயன்படுத்தியதாக சொல்கிறார்கள்.

ரசத்தை மிளகு தண்ணி என்று சொல்லி இருக்கிறார்கள். அதுவே milagtanni என்று சொல்லப்படுவதாக சொல்கிறார்கள்.

ஆனால் மிளகு விற்கும் விலைக்கு எல்லாராலும் அதிகம் பயன்படுத்த முடியாது. 

தகவல் ரீதியாக இதை பகிர்கிறேன்.

loud speaker may become a curse.

தற்போது திருமணம் உள்ளிட்ட எல்லா விசேஷங்களிலும் loud speaker வைத்து பாடல்கள் சத்தமாக ஒலிபரப்பப்படுகின்றன.

சற்று பொறுமையாக எனது இந்த கருத்தை யோசித்து பாருங்கள்.

உங்கள் வீட்டில் யாராவது உடல் நலம் சரி இல்லாத நேரத்தில் யாராவது உங்கள் வீட்டின் அருகே loud speaker வைத்து விசேஷம் கொண்டாடினால் நீங்கள் சந்தோஷ படுவீர்களா? அவர்களை திட்டுவீர்களா?

கண்டிப்பாக திட்டுவீர்கள்.

அப்போது நீங்கள் திட்டுவது கூட அந்த, சம்பந்தப்பட்ட மணமக்களுக்கு சாபமாக மாறலாம்.

உங்கள் வீட்டு விசேஷத்தின் போது நீங்கள் loud speaker வைப்பது யாருக்காவது தொந்தரவாக இருக்கலாம். அப்போது அவர்கள்  திட்டுவது உங்கள் வீட்டு மணமக்களுக்கு சாபமாக மாறலாம்.

மஞ்சள் நீர்.

தீய சக்திகள், அல்லது எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையும், இரவும் ஒரு டம்பளர் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் பிரச்சனைகள் தீரும்.

சாமி உண்டியல்.

சாமிக்கு வேண்டிக்கொண்டு உண்டியலில் காசு போடுவது கூட என்னைப்பொருத்தவரை ராசியாக இல்லாத காரணத்தினால் வீட்டில் வைத்திருந்த உண்டியலை கோவிலில் போய் வைத்துவிட்டேன்.

சரித்திரம்.

போர்க்களத்தில் கொல்லப்பட்ட அரசர்களை விட, படுக்கை அறையில் அரசிகளால் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட அரசர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சரித்திரம் சொல்கிறது.

வானம்.

வானம் என்பது எட்டாத தூரத்தில் இருப்பதல்ல.

உங்களுக்கும், உங்கள் அருகில் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியும் வானம் தான்.

பூமியை சுற்றி இருக்கும் எல்லாமே வானம் தான்.

உண்மையான விரதம் இருக்கும் முறை.

உண்மையான விரதம் இருக்கும் முறை என்பது, அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் சாப்பிட்டு, பிறகு சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தான் சாப்பிட வேண்டும்.

இதை முழுமையாக கடைபிடிப்பவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே.

ஆனால் தற்போது இந்துக்கள் அசைவம் சாப்பிடாமல் இருக்கிறேன் என்று கூறி, மூன்று வேலையும் நன்கு சைவ உணவு சாப்பிட்டுவிட்டு விரதம் இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.

அதற்காக அசைவம் சாப்பிடலாம் என்று நான் சொல்லவில்லை.

அசைவம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமே விரதம் ஆகாது என்பது என் கருத்து.

கசப்பு தீய சக்திகளுக்கு பகை.

கசப்பு சுவை தீய சக்திகளுக்கு நிரந்தர எமன்.

அவ்வப்போது அல்லது தினமும் கசப்பு சுவையை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால், தீய சக்திகளை உடலில் இருந்து வெளியேற்றிவிடலாம். (பாகற்காய், வேப்பிலை)

ஆனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் (low blood sugar) கசப்பு சுவையை சேர்த்துக்கொள்ள கூடாது.

பூச்சி அல்லது வண்டு கடித்து உடலில் புண், அரிப்பு, ஊறல், நமைச்சல் இருப்பவர்கள் கசப்பு சுவையை தினமும் சிறிதளவு சேர்த்துக்கொண்டால் இதில் இருந்து தப்பிக்கலாம்.

Friday 20 December 2013

எண்ணெய் கொப்பறை.


இறந்தவர்களை நரகத்தில் அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப எண்ணெய் கொப்பறையில் வறுத்து எடுப்பார்கள் என்று பல ஆயிரம் ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மை இல்லை.

மனிதன் இறந்த உடன் அவன் உடல் இந்த பூமியில் எரிக்கப்படுகிறது, அல்லது புதைக்கப்படுகிறது. 

அப்படி இருக்கும் போது நரகத்தில் எந்த உடலை வறுப்பார்கள்?

அப்படியானால் மனிதன் செய்த பாவங்களுக்கு தண்டனையே கிடைக்காதா? என்று உங்களுக்கு தோன்றும்.

ஒரு மனிதன் அவன் செய்த பாவங்களை அனுபவிக்கும் வரை அந்த பாவங்கள் அனைத்தும் அவனை துரத்திக்கொண்டே இருக்கும். 

கோவில் யானை.

கோவில் யானைக்கு பட்டை போட்டாலும், நாமம் போட்டாலும் அதன் நெற்றி ஒன்று தான்.

ஜெயில் தண்டனை.

சிலருக்கு தவறு ஏதும் செய்யாமலேயே சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷ நிலை அவர்களின் ஜாதகத்தில் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இந்த தோஷம் நீங்க அவருக்கு தெரிந்த யாராவது ஏதாவது பிரச்சனையின் காரணமாக காவல் நிலையம் செல்லும் நிலையில் அவர்களோடு சேர்ந்து காவல் நிலையம் சென்று அங்கே சிறிது நேரம் அமர்ந்து இருந்துவிட்டு வந்தால் அந்த தோஷம் நீங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது.

செருப்பு.

செருப்பு  வாங்க செல்லும் போது, சாயங்காலம் அல்லது இரவில் தான் செல்ல வேண்டும். அப்போது தான் பாதங்கள் சற்று விரிவடைந்து இருக்கும். காலையில் சென்று வாங்கினால், பாதங்கள் சற்று சுருங்கி இருக்கும், இதனால் செருப்பு மிகவும் இறுக்கமாக இருக்கும். 

தாடிக்கும், விற்பனைக்கும் என்ன சம்பந்தம்?

சந்தைபடுத்துதல் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்கள் முகசவரம் செய்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

சீக்கியர்கள் தாடியுடன் தான் சந்தைக்கு வருகிறார்கள். தங்கள் பொருட்களை விற்கிறார்கள். அவர்கள் தாடியுடன் வருகிறார்கள் என்பதற்காக யாரும் அவர்களிடம் பொருட்களை வாங்காமல் இருப்பது இல்லை.

ஜேசுதாஸ் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக அவர் பாடல்களை கேட்காமல் இருக்கிறோமா?

பெரியார் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக அவர் கருத்துக்களை கேட்காமல் இருக்கிறோமா?

திருவள்ளுவர் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக திருக்குறள் படிக்காமல், அதை பற்றி பேசாமல் இருக்கிறோமா?

ஏசுநாதர் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக அவரை வணங்காமல் இருக்கிறோமா?

தாடிக்கும், விற்பனைக்கும் என்னங்கடா சம்பந்தம்?

கோவில்.(temple)

பிரபலமான கோவில் என்பதற்காக அங்கே சென்று வழிபட கூடாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தெய்வம் இருக்கிறது. அந்த தெய்வம் எங்கே இருக்கிறதோ அங்கே சென்று தான் வழிபட வேண்டும்.


அபிஷேக பொருட்கள்.

கடவுளுக்கு அபிஷேக பொருட்களும் அவற்றிற்கான பலன்களும் என்று பல பொருட்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அந்த பொருட்களை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தாலும் கடவுளுக்கு அபிஷேகம் செய்த அதே பலன் கிடைக்கும்.

அதோடு புண்ணியமும் கிடைக்கும்.

Tuesday 17 December 2013

செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம்.(black magic)

செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், அமாவாசை அன்றும், பௌர்ணமி அன்றும், எலுமிச்சை சாரில், மஞ்சள் தூள் கலந்து, உச்சி முதல், உடல் முழுவதும் தடவி 30 நிமிடங்கள் காய வைத்து பிறகு, தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்கலாம்.

இது போல் செய்தால் தீய சக்திகள் ஏவியவரிடமே சென்றுவிடும்.

அமாவாசை, பௌர்ணமி நேரத்தில் செய்வது மிகவும் நல்லது. அது காலை, பகல், இரவு எதுவாக இருந்தாலும் சரி.

மற்ற நாட்களிலும் செய்யலாம்.

புறா.(dove)

வீட்டில் புறா வளர்க்க கூடாது.

புறா வளர்ப்பது எதிர்மறை சக்தியையே தரும்.

சுதா சந்திரன்.

நடிகை சுதா சந்திரன் அவர்களின் தன்னம்பிக்கை வாழ்க்கையை பாடமாக வட இந்தியாவில் ஒரு மாநிலத்தில் வைத்து இருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பு படித்து இருக்கிறேன்.

நம் மாநிலத்திலும் இது போல், தன்னம்பிக்கையால் முன்னேறியவர்களின் வாழ்க்கையை பாடமாக வைத்தால், இன்றைய மாணவர்கள் தற்கொலை போன்ற முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பார்கள்.

படிப்பை முடித்து அவர்கள் போராட்டமான வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது, தன்னம்பிக்கையோடு செயல்படுவார்கள்.

ஆனால் இந்த வாழ்க்கை வரலாறு மதிப்பெண் ரீதியாக இல்லாமல், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன் மட்டுமே இருக்க வேண்டும்.

அடி.

சினிமாவிலும், tv சீரியல்களிலும், ஆண் பெண்ணை அடிப்பது போல் காட்டினால், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் என்று ஊரை கூட்டி ஒப்பாரி வைக்கிறார்கள்.

ஆனால், பெண் ஆணை அடிப்பது போல் காட்டினால் செம காமெடி என்று சிரித்துவிட்டு செல்கிறார்கள்.

என்ன கொடுமை சார் இது?

ஆந்திரா திருமணங்கள்.

ஆந்திரா மாநிலத்தில் திருமணங்கள் எல்லாமே இரவில் தான் நடத்துகிறார்கள். இதில் என்ன நன்மை இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இதில் ஏதாவது சாஸ்திர, சம்பிரதாய நன்மைகள் இருக்கிறதா?

உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

எனக்கு தெரிந்த ஒரே நன்மை, திருமணம் முடிந்த சில நிமிடங்களில், முதலிரவுக்கு சென்று விடலாம் என்பது தான்.

அன்பிலா பெண்டிர்.

அன்பிலா பெண்டிர் கையால் உணவு உண்ணாதே என்று ஔவையார் சொல்லி இருக்கிறார். ஔவையார் வாழ்ந்த காலத்திலேயே அன்பிலா பெண்டிர் இருந்திருக்கிறார்கள் என்றால் இப்போது எவ்வளவு அன்பிலா பெண்டிர் இருப்பார்கள் என்று நினைத்து பாருங்கள்.

ஆண்களில் ஏராளமானவர்கள் கெட்டவர்கள் என்று நான் ஒத்துக்கொள்வேன். ஆனால் எல்லா பெண்களும் நல்லவர்கள் என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பெண்களில் கெட்டவர்களும்  இருக்கிறார்கள். இது தான் உண்மை. இது என் சொந்த அனுபவம். என்னை பொருத்தவரை தீய சக்திகளை ஏவுவதில் ஆண்களை விட பெண்களே முன்னணியில் இருக்கிறார்கள் என்பது என் கருத்து.




செருப்பால் அடிக்கலாமா?

தனிப்பட்ட அல்லது  பொது விரோதம் காரணமாக ஒருவரை செருப்பால் அடிப்பது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால் இது தவறு என்று சிலர் சொல்கிறார்கள்.

காரணம், செருப்பால் ஒருவரை அடித்தால், அடி வாங்கிய நபர் தற்போது இருக்கும் நிலையில் இருந்து உயர்வான நிலையை அடைவார் என்றும், செருப்பால் அடித்த நபர் தற்போது இருக்கும் நிலையில் இருந்து தாழ்வான நிலைக்கு செல்வார் என்றும் சொல்கிறார்கள்.

பரதன் தன்னுடைய முற்பிறவியில் ஒருவரை செருப்பு அணிந்த காலோடு மிதித்ததாகவும், அதனால் தான் மறு பிறவியில் ராமரின் பாதுகைகளை வைத்து வணங்கி அரசாட்சி நடத்தியதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

perfume ads.

பிட்டு படத்திற்கு போஸ்டரை காட்டி ஏமாற்றுவதை போல், perfume பொருட்களுக்கு விளம்பரங்களை காட்டி ஏமாத்துறானுங்க.

இந்த perfume உபயோகித்தால் எல்லா பொண்ணுகளும் உங்கள் பின்னால் ஓடி வருவாளுங்க என்று காட்டுறானுங்க.

இது வரை எவளும் என் பின்னாடி ஓடி வந்தது இல்லை.

இந்த விளம்பரம் எடுக்குறவனுங்களை எல்லாம் பொண்ணுகள் இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு தான் கடத்தணும்.

god bless america.

இந்த வார்த்தையை அமெரிக்காவில் இருக்கும் பலரும் சொல்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அமெரிக்காவிற்கு குடியேறிய தமிழர்களும் சொல்வது தான்.

கடவுள் என்ன அமெரிக்காவை மட்டுமே இந்த உலகத்தில் படைத்தாரா?
மற்ற நாடுகளை எல்லாம் சாத்தான் படைத்ததா?

Sunday 15 December 2013

ஆண்.

தாய்க்கு மகனாக, மனைவிக்கு கணவனாக, தங்கைக்கு அண்ணனாக, அக்காவுக்கு தம்பியாக, நண்பிக்கு நண்பனாக, கருவை கொடுப்பவனாக இருக்கும் ஆணை பற்றியும் கொஞ்சம் யோசிங்க பெண் இனமே.

அமெரிக்கனும், தமிழ் நாட்டில் வாழும் தமிழனும்.

அமெரிக்கனும், தமிழ் நாட்டில் வாழும் தமிழனும் சந்தித்துக்கொண்டார்கள். அமெரிக்கன் சொன்னான், "நாங்கள் வருடத்தில் ஒருநாள் ஒரு நிமிடம் மின்விநியோகத்தை நிறுத்திவிட்டு தாமஸ் ஆல்வா எடிசனை நினைத்துக்கொள்வோம்" என்றான்.
தமிழன் சொன்னான், "நீங்கள் நன்றி கெட்டவர்கள், நாங்கள் நன்றி உள்ளவர்கள், தினமும் மின்விநியோகத்தை நிறுத்திவிட்டு, தாமஸ் ஆல்வா எடிசனை நினைக்கின்றோம்" என்றான்.

Thursday 12 December 2013

இறகு.

காகம், புறா இவற்றின் இறகு வீட்டு மொட்டை மாடி, மற்றும் வீட்டின் சுற்று புறத்தில் விழக்கூடாது. அது எதிர்மறை சக்தியை அதிகம் இழுக்கும்.

அந்த இறகை உடனே அப்புறப்படுத்தி விடவேண்டும்.

tooth paste.

colgate tooth paste விளம்பரத்தில் பல்லை விளக்கி காட்டுங்கடான்னா! சிப்பியை விளக்கி காட்டுறானுங்க.

சின் முத்திரை.

சின் முத்திரையின் போது இரண்டு கைகளிலும் ஒரே  அளவு அழுத்தம் கொடுத்து முத்திரை பிடிக்க வேண்டும்.

ஒரு கையில் குறைவாகவும், ஒரு கையில் அதிகமாகவும் அழுத்தம் கொடுக்க கூடாது. 

அபியும் நானும்.

அபியும் நானும் படம் பார்த்த பிறகு நான் எனக்கு வரும் சர்தார்ஜி ஜோக்குகளை யாருக்கும் forward செய்வது இல்லை. அவற்றை delete செய்து விடுகிறேன்.

plastic.

பிளாஸ்டிக்கை எரிக்க கூடாது என்ற பொது அறிவு மக்களை 100% சென்றடையவே இல்லை.

நகர சுத்தி தொழிலாளர்களும் குப்பையை அள்ள சிரமபட்டு பல சமயங்களில் பிளாஸ்டிக்கை எரிக்கிறார்கள்.

சிறுநீர்.

பண்டைய இயற்கை மருத்துவர்கள் ஒரு மனிதனுக்கு சிறுநீர் வெளியேறும் விதத்தை வைத்தே அவன் உடலில் எந்தெந்த உள் உறுப்புகள் எந்த அளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்று கணித்து இருக்கிறார்கள்.

சிறுநீர் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக வெளியேறும்.

சிலருக்கு ஒரே சீராக வெளியேறும்.
சிலருக்கு பிளவுபட்டு வெளியேறும்.
சிலருக்கு சிறுநீர் வெளியேறும் போது தனியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கும்.

இளைய தளபதி நடிக்கும் விளம்பரம்.

இளைய தளபதி நடிக்கும் jos alukkas விளம்பரம் பார்த்த பின்பு சில உலக உண்மைகள் தெரிந்தது.
1) இளைய தளபதி தான் வைத்து இருக்கும் பொருட்களை விற்று தான் யாருக்கும் பரிசு வாங்கி கொடுப்பார்.
2)கிடார் என்பது விலை மிக மிக அதிகமானது. அதை விற்றால் தங்கம் வாங்கலாம்.
3)தங்கம் என்பது விலை மிக மிக குறைவானது. கிடாரை விற்றால் அதை வாங்கி விடலாம்.

இளைய தளபதி இனிமேலாவது இது போன்ற கேவலமான விளம்பரங்களில் நடிக்காமல் தவிர்க்கலாம்.

ஒரு கப் bru குடிச்சா?

ஒரு கப் bru குடிச்சா நாம நேசிக்கிறவங்க பத்தி தெரிஞ்சுக்க முடியுமா?

அப்படினா நான் நேசிக்கிற, சமந்தா, அசின், நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, நஸ்ரியா, காஜல் அகர்வால், பிந்து மாதவி, அமலா பால், லக்ஷ்மி மேனன், பூர்ணா, ஸ்ரேயா, சமீரா ரெட்டி, நமீதா பத்தி தெரிஞ்சுக்க முடியுமா?

"அண்ணே! bru 10 கிலோ பாக்கெட் ஒண்ணு குடுங்கண்ணே!" 

the parent trap

சில தினங்களுக்கு முன் hbo channel இல் the parent trap என்ற படம் பார்த்தேன்.

பல ஆண்டுகளுக்கு முன், ஜெய் சங்கர், ஜமுனா, குட்டி பத்மினி நடித்த  குழந்தையும் தெய்வமும் படத்தை அப்படியே ஆங்கில முறைப்படி எடுத்து இருக்கிறார்கள்.

தமிழ் சினிமா பூஜை.

தமிழ் திரை உலகில் எல்லா படங்களும் பூஜை போட்டு தான் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே பிற மொழிகளில் டப்பிங் செய்யப்படுகின்றன.

ஆனால், hollywood திரைப்படங்கள் எந்தவித பூஜையும் போடாமல் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவை உலகின் எல்லா நாட்டு மக்களையும் சென்றடைகின்றன. எல்லா மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுகின்றன.

தவறு யார் மீது? கடவுள் மீதா? ரசிகர்கள் மீதா? திரைப்பட துறை மீதா?

ஷூ.(shoe)

ஷூ அணிவது இன்றைய நவநாகரீக சின்னம் ஆகி விட்டது.

நான் ஏற்கெனவே கோவணம் என்ற தலைப்பில் சில தகவல்கள் சொல்லி இருந்தேன்.

அதே போல் ஷூ அணிபவர்கள், நாள் முழுவதும் அதை அணிந்திருந்து இரவில் கழற்றும்போது பாதத்தில் செயற்கையான ஒரு வெப்பம் உருவாக்கப்பட்டு இருக்கும். பாதத்தில் தான் எல்லா மனிதர்களுக்கும் எல்லா உடல் உறுப்புகளின் நரம்புகளும் தொடர்பில் இருக்கின்றன. மூளை, இதயம், கல்லீரல், கிட்னி உள்பட அனைத்தும்.

இந்த வெப்பம் உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் ஷூ பொறுத்தமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது தமிழ்நாட்டுக்கு பொருந்தாது.

ரேகை.

மனிதர்களின் உள்ளங்கை ரேகை அவரவர்களின் எண்ணங்கள், செயல்கள், வாஸ்து, கிரக நிலைகள் மற்றும் பல காரணிகளுக்கு ஏற்ப ஆயுள் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும். நிரந்தரமாக இருக்காது.

நெற்றிக்கண்.(third eye)

நெற்றிக்கண் என்பது சிவனுக்கு மட்டுமே இருக்கக்கூடியது அல்ல. எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது.

நெற்றிக்கண் திறக்கும் பயிற்சியை செய்து கொண்டால், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விசயங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் உங்களை சுற்றி இருக்கும் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

தியானம் செய்பவர்களுக்கு இதை பற்றிய விவரங்கள் தெரியும்.

ஆனால் இந்த பயிற்சியை பொறுமையாக செய்யவேண்டும். இல்லை என்றால் ஆபத்து ஏற்படலாம்.

இதை பற்றிய விவரங்களை மேலும் அறிய third eye chakra என்ற பெயரில் you tube இல் தேடலாம்.

படம் மற்றும் பொம்மை.(picture and doll)

புறா, ஆந்தை, பாம்பு, எலும்பு கூடு, காட்டு விலங்குகள் போன்றவற்றின் படங்கள், பொம்மைகள் வீட்டில் வைத்து இருக்க கூடாது. இவை அளவுக்கு அதிகமான எதிர்மறை சக்தியை ஈர்க்கும்.

பலர் தற்போது புறாவின் படம் அல்லது பொம்மையை வாஸ்து என்ற பெயரில் வைத்து இருக்கிறார்கள். இது கண்டிப்பாக துன்பத்தையே தரும்.

அதே போல், கோபமாக இருக்கும் உருவங்கள் வீட்டில் வைத்து இருக்க கூடாது. நடிகர்களின் சண்டை காட்சி படங்கள், யுத்த படங்கள் குறிப்பாக குருட்ஷேத்ரம் படம் வீட்டில் இருக்க கூடாது. இவை மனதில் சண்டை உணர்வையும், யுத்த உணர்வையும் கொடுக்கும்.

இஞ்சி.

பசி எடுக்காமல் இருப்பவர்கள் இஞ்சியை சாறு எடுத்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்கலாம்.

10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இது சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

மரண போராட்டத்தில் இருக்கும் பலருக்கு பசி இருக்காது. உணவை உடல் ஏற்றுக்கொள்ளாது. மரணத்திற்கு முந்தைய ஒரு எச்சரிக்கையாக இதை எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கும் மேற்சொன்னவாறு கொடுக்கலாம். மரணத்தை சற்று தள்ளிப்போட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இஞ்சியை சாறு எடுக்கும்போது சிறிது நேரம் கழித்து அதில் இருக்கும் சுண்ணாம்பு சத்து அடியில் பிரிந்து நிற்கும். அதையும் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். காரணம் அந்த சுண்ணாம்பு சத்து தான் இயற்கையானது, இஞ்சிக்கு அதுவே மருத்துவ குணம் அளிக்கிறது.

மந்திரம்.

மந்திரம் உச்சரிப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு எழுத்து தவறாக உச்சரித்தாலும் மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் நிகழும். அதே போல் எந்த இடத்தில் அழுத்தி உச்சரிக்க வேண்டும், எந்த இடத்தில் அழுத்தம் குறைவாக உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.

முறைப்படி மந்திரம் தெரிந்த ஒருவரிடம் மந்திரம் உச்சரிக்க கற்றுக்கொண்டு தான் மந்திரம் உச்சரிக்க வேண்டும்.

ஆயுள் அதிகரிக்க.

மண் பானை தண்ணீர்  குடிப்பதும், மண் பானையில் சமைத்து உண்பதும் ஆயுளை அதிகரிக்கும்.

Sunday 8 December 2013

கொலை கருவி புனித சின்னமா?

இயேசு வாழ்ந்த காலத்தில் சிலுவை என்பது அரச தண்டனை பெறுபவர்களை கொலை செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவே இருந்தது. சிலுவையில் அறைந்து தான் எல்லோரையும் கொல்வார்கள். ஆனால் இயேசுவை கொன்ற பிறகு சிலுவையை புனித சின்னம் என்று புரளியை பரப்பி விட்டார்கள்.

இறை தூதரான இயேசுவை கொல்ல பயன்படுத்தப்பட்ட சிலுவை புனித சின்னமா?

அப்படியானால், சாக்ரடீஸை கொல்ல கொடுக்கப்பட்ட விஷம் புனித சின்னமா?

ஹிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு புனித சின்னமா?

இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் புனித சின்னமா?

சின் முத்திரை.

சின் முத்திரையின் போது, கட்டைவிரலின் ரேகை பகுதியையும், ஆள்காட்டி விரலின் ரேகை பகுதியையும் மட்டுமே தொட்டு முத்திரை பிடிக்கவேண்டும். அதுவே நேர்மறை சக்தி தரும்.

விரலின் நக நுனியை பிடிப்பது கூட எதிர்மறை சக்தி தரும். காரணம், நகம் விரலின் புற பகுதியில் இருக்கிறது.

விரலின் புற பகுதியை பிடிப்பது என்னை பொருத்தவரை எதிர்மறை சக்தி தருவதாகவே நான் கருதுகிறேன்.

வாஸ்து.

வீட்டின் கதவு, அறையின் கதவு,  ஜன்னல் கதவு இவை வீட்டின் வெளிப்புறமாக திறப்பது போல் அமைப்பது, வெளி உலக தொடர்பை அதிகரிக்கும், புது புது நட்பை கொடுக்கும், முன்னேற்றத்தை கொடுக்கும்.

வீட்டின் கதவு, அறையின் கதவு, ஜன்னல் கதவு இவை வீட்டின் உள்புறமாக திறப்பது போல் அமைப்பது, வெளி உலக தொடர்பை குறைக்கும், துண்டிக்கும், நட்புறவை குறைக்கும், துண்டிக்கும்,  முன்னேற்றம் தராது.

விலை மதிப்பற்ற ஓவியங்கள்.

உலகிலேயே விலை மதிப்பற்ற ஓவியங்கள், மோனாலிசா ஓவியங்களோ, ரவிவர்மனின் ஓவியங்களோ அல்ல.

குழந்தைகள் வீட்டு சுவரில் வரையும் ஓவியங்கள் தான். இவற்றை விலைக்கு வாங்கும் கோடீஸ்வரன் இது வரை இந்த உலகத்தில் பிறக்கவில்லை.

சித்ரகுப்தன்.

he is the worlds first and worlds no.1 fast master super computer.
he is having the databases of all human beings.

உலக நாடுகளை எல்லாம் வேவு பார்க்கும் அமெரிக்கா சித்ரகுப்தனை தொடர்பு கொள்ளலாம்.

பாவம்.

மக்கள் சொத்தையும், பொது சொத்தையும் கொள்ளை அடித்து தின்று கொழுத்தவர்களிடம் கோடி கோடியாக கொள்ளை அடித்தாலும் பாவம் ஆகாது.

பொது மக்களிடம் 1 ரூபாய் திருடினாலும் அது மகா பாவம்.

குளியல்.

குளிக்காமல் சாப்பிடுவது தோஷத்தை கொடுக்கும்.

அன்னதானம்.

அன்னதானம் என்பது கோடீஸ்வரர்கள் மட்டுமே செய்ய முடியும் என்று பலர் நினைக்கிறார்கள்.

ஏழைகளும் அன்னதானம் செய்ய முடியும்.

வீட்டின் அருகே மரங்களில் வாழும் எறும்புகளுக்கு ஒரு கைப்பிடி பச்சரிசி மாவு  இட்டாலே அதுவும் அன்னதானம் தான்.

காமம்.

காமம் தவறானது என்று கூறும் இந்தியாவில் தான்,
1)மக்கள் தொகை அதிகம்.
2)விபச்சாரம் அதிகம்.
3)எய்ட்ஸ் அதிகம்.
4)கள்ள உறவுகள் அதிகம்.

ஒருவேளை இந்தியர்கள் யாரும் தவறு செய்யாமலேயே, வேற்று கிரகவாசிகள் வந்து தவறு செய்துவிட்டு செல்கிறார்களோ?

கை.

பெண்ணை அணைக்கும் அதே கையால் தான் மனிதன் கடவுளையும் வணங்குகிறான்.

விளக்கு.

என்னை பொறுத்தவரை வீட்டில் விளக்கு ஏற்றுவது ராசியாக இல்லை. எனவே வீட்டில் விளக்கு ஏற்றுவதில்லை.

தமிழர்களிடம் விளக்கேற்றும் பழக்கம் இல்லை என்றும் சமணர்கள் தான் தமிழர்களுக்கு விளக்கேற்றும் பழக்கத்தை சொல்லிக்கொடுத்தார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது.

தாம்பத்யம்.

அமாவாசை, பௌர்ணமி காலங்களில் கணவன், மனைவி தாம்பத்யம் வைத்துக்கொண்டால் ஆயுள் குறையும் என்று சொல்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. தகவல் ரீதியாக பகிர்கிறேன்.

நாளை.

நாளை என்று ஒரு நாள் இருக்கிறது. அதில் எந்த அற்புதங்கள் வேண்டுமானாலும் நிகழலாம். எந்த பேரழிவுகள் வேண்டுமானாலும் நிகழலாம்.

பிரச்சனை.

உண்ணா விரதம், சிறை நிரப்பும் போராட்டம், உருவ பொம்மை எரிப்பு போன்றவை மக்களின் 100% பிரச்சனைகளை தீர்க்காது.