Thursday 20 February 2014

யாகம்.


இன்றைய தினத்தந்தி செய்தி.

மதுரையில் உள்ள ஒரு சிவன் கோவிலில் பொது தேர்வில் வெற்றி பெற வேண்டி யாகம் நடத்தப்பட்டது.

ஏண்டா மக்களை ஏமாத்தி இப்படி முட்டாளாக்குறீங்க.
யாகம் நடத்தினா வெற்றி பெற முடியுமாடா?

கைலி.

வெள்ளைக்காரன் காலத்தில் போட்ட சட்டங்களையே இன்னமும் நம் நாட்டில் பின்பற்றுகிறானுங்க.

கைலியை முட்டி தெரிவது போல் ஏற்றி கட்டினால் ரௌடி என்று சொல்றானுங்க. கைலியை முட்டி தெரிவது போல் அணிந்தால் காவல்துறையினர் மிரட்டிவிட்டு செல்கிறார்கள்.

அப்படி என்றால் முட்டி தெரிவது போல் உடை அணியும் இவள்களை போன்றவள்கள் எல்லாம் ரௌடியா? இன்னாங்கடா உங்க சட்டம்?


இந்தியா + பாகிஸ்தான்.


இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருந்தால் நம்மையே அடிமைபடுத்திவிடுவார்கள் என்றுதான் வெள்ளைக்காரன் நம் நாட்டில் இந்து, முஸ்லீம் பிரிவினைவாதத்தை தூண்டிவிட்டு இந்தியா, பாகிஸ்தான் என்று
இரண்டு நாடுகளாக நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டான்.

ஏண்டா எதுக்கெடுத்தாலும் சண்டை போடுறீங்க முட்டா பசங்களா. நம்முடைய சண்டையில் மத்தவன் குளிர்காய்கிறானடா. புரிஞ்ச்சிக்கோங்கடா. 

ஒற்றுமையாய் இருப்போமடா.

Wednesday 19 February 2014

கண்ணகி தெய்வமா?


கண்ணகி பட்ட கஷ்டங்களுக்கு காரணம் அவள் தங்கத்தை சிலம்பாக காலில் அணிந்தது தான் என்று என் முந்தைய பதிவுகளிலேயே சொல்லி இருக்கிறேன்.

கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணமான போது, கோவலனுக்கு 16 வயது என்றும் கண்ணகிக்கு 12-14 வயது என்றும் கோனார் (கோனார் தானா அல்லது வேறா என்று ஞாபகம் இல்லை.) தமிழ் உரையில் படித்து இருக்கிறேன். அந்த வயதில் எப்படி பக்குவம் இருக்கும்?

உண்மையான தவறு செய்த பொற்கொல்லன் என்ன ஆனான் என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்படவே இல்லை. உங்களில் யாருக்காவது அவன் என்ன ஆனான் என்று தெரியுமா?

கண்ணகி மதுரையை எரிக்கிறாள். இதை பலரும் நியாயப்படுத்துகிறார்கள். அரசன் செய்த தவறுக்கு மக்களும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லத்தான் அவள் அப்படி செய்கிறாள் என்று சொல்கிறார்கள்.

இந்த லாஜிக்கை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

காரணம், தற்போது எல்லா நாட்டு அரசியல்வாதிகளும் தவறு செய்கிறார்கள். அதற்காக எல்லா நாட்டு மக்களையும் கொன்றுவிடலாமா?

என்னால் கண்ணகியை தெய்வமாக நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

என் ஊரை எரித்தவளை எப்படி நான் தெய்வமாக நினைக்க முடியும்?

தேச தலைவர்கள், ஜாதி தலைவர்களா?????


காமராஜர் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார். ஆனால் அவரை நாடார் ஜாதியை சேர்ந்தவர்கள் கொண்டாடுகிறார்கள். காமராஜர் நாடார் ஜாதிக்காகவா வாழ்ந்தார்?

முத்துராமலிங்க தேவர் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார். அவரை தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள் கொண்டாடுகிறார்கள். அவர் தேவர் ஜாதிக்காகவா வாழ்ந்தார்?

வ.உ.சிதம்பரம் பிள்ளை நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார். அவரை பிள்ளைமார் ஜாதியை சேர்ந்தவர்கள் கொண்டாடுகிறார்கள். அவர் பிள்ளைமார் ஜாதிக்காகவா வாழ்ந்தார்?

ஏன்டா தேச தலைவர்களை ஜாதி பெயரை சொல்லி பிரிக்கிறீங்க? ஜாதி வெறி பிடிச்ச முட்டா பசங்களா!

இதை விட பெரிய கொடுமை என்ன என்றால் ஒரு அரசியல்வாதியின், ஒரு மகளின் அம்மா நாடார் ஜாதியை சேர்ந்தவராம். அதனால் அந்த அரசியல்வாதிக்கு நாடார் ஜாதியை சேர்ந்த பலர் ஒட்டு போடுவார்கள் என்று ஜாதி வெறி பிடிச்ச நாடாப்பசங்க பலர் பேசியதை கேட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாலோ, அல்லது வச்சிக்கிட்டாலோ அந்த ஜாதியை சேர்ந்தவனுங்க ஒட்டு போடுவீங்களாடா? ஜாதி வெறி பிடிச்ச முட்டா பசங்களா!

நான் ஒவ்வொரு ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணையும் கல்யாணம் பண்ண தயாரா இருக்கேன்டா. ஜாதி வெறி பிடிச்ச எல்லா ஜாதி முட்டா பசங்களும் எனக்கு ஒட்டு போட்டு முதல்வர் ஆக்குவீங்களாடா??????

நடிகர் கார்த்தி.


ஒரு கப் bru குடிச்சா நாம நேசிக்கிறவங்களை பத்தி தெரிஞ்சுக்கலாம் என்று சொல்லும் கார்த்தி, oreo biscuit விளம்பரத்தில் தங்கைக்கு biscuit கொடுக்காமல் ஏமாற்றுவது வருத்தமாக இருக்கிறது.

அழகு சாதன பொருட்கள்.


அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தினால் சிகப்பாகி விடலாம் என்று விளம்பரம் செய்கிறார்கள் பலரும். (சிகப்பு மட்டுமே அழகா?)

அப்படி என்றால் ஆப்பிரிக்க கருப்பு இனத்தவர்களை எல்லாம் இந்த அழகு சாதன பொருட்களை கொடுத்து சிகப்பு இனத்தவர்களாக்கி விடலாமே.

என்னை பொருத்தவரை சிகப்பான பெண்கள் மட்டுமே அழகு என்று நினைப்பவன் அல்ல நான். கருப்பான பெண்களும் அழகு என்று நம்புபவன் நான். கருப்பான பெண்களின் அழகையும் ரசிப்பவன் நான்.

கருப்பான பெண்களும் அழகானவர்கள் தான், சிகப்பான பெண்களை விட என்பது என் கருத்து.

ஆனால், தான் அழகாக தான் இருக்கிறோம் என்ற தன்னம்பிக்கை  பல இந்திய பெண்களிடம் இல்லை. இதனால் இவர்களின் தன்னம்பிக்கை குறைவை பயன்படுத்தி பல அழகு சாதன நிறுவனங்கள் கோடி கோடியாக சம்பாதிக்கின்றன.

அப்படியே தான் அழகாகத்தான் இருக்கிறோம் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் அதை அழிக்கும் நோக்கத்தில் பல வித சூழ்ச்சிகளை இந்த நிறுவனங்கள் கையாள்கின்றன. dull skin, rough skin, oily skin, dark skin மற்றும் பல வார்த்தை ஜாலங்களை பயன்படுத்துகின்றன.

உலக அழகி பட்டங்கள் கொடுக்கப்படுவதும், அந்தந்த நாடுகளில் தங்கள் அழகு சாதன பொருட்களை சந்தைபடுத்தி, விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்க தான் என்பது என் கருத்து.

ஐஸ்வர்யா ராய் மட்டுமே அழகா????????

இல்லை.

என்னை சுற்றி இருக்கும் எல்லா பெண்களுமே அழகுதான்.

மாற்று வழி.

நம் முன்னோர்கள் பல கோடி ஆண்டுகளாக எந்த ஒரு விசயத்திலும் மாற்று வழி  என்ற ஒன்றைப்பற்றி சிந்திக்கவே இல்லை. காரணம் அவர்கள் சரியான வழியிலேயே சென்றார்கள்.

ஆனால் நாம் சுதந்திரம் வாங்கி 100 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் பல விசயங்களிலும் மாற்று வழி  என்ன என்று யோசித்துக்கொண்டு இருக்கிறாம். இதற்க்கு காரணம் நாம் தவறான வழியில் சென்று கொண்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை.


குறிப்பாக, எரிபொருள், உணவு உற்பத்தி, நீர் மாசுபாடு, நிலம் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் பல.

நம் முன்னோர்கள் விறகை எரித்து உணவு சமைத்தார்கள். ஆனாலும் அவர்கள் மாற்று வழி  பற்றி யோசிக்கவே இல்லை. காரணம் இயற்கையை அவர்கள் பாதுகாத்தார்கள். 

ஆனால் நாம் விறகை பயன்படுத்தாவிட்டாலும் இயற்கையை அழித்துவிட்ட காரணத்தினால் மாற்று வழி பற்றி யோசித்துக்கொண்டு இருக்கிறோம்.

பூமி பாலைவனமாகும் அபாயம்.(pyramid)




பிரமிட், கோபுரம் இவை இரண்டுமே மிக வேகமாக பூமியில் இருக்கும் நேர்மறை சக்தியை உறிஞ்சி வானத்திற்கு கடத்துகின்றன. இதனால் பூமியில் நிலத்தடி நீர் குறையும். பூமி பாலைவனமாகும்.

கோபுரங்கள் மிக மெதுவாக கடத்துகின்றன.

பிரமிட்கள் மிக வேகமாக கடத்துகின்றன.

இதை வேறு விதமாக சொல்லவேண்டுமானால், இப்போது எகிப்தில் இருக்கும் பிரமிடை அப்படியே கொண்டுபோய் அமெரிக்காவில் வைத்தால் அமெரிக்காவின் ஏகாதிபத்திய சாம்ராஜ்யம் அழியும். பிரமிட் வைக்கப்பட்ட இடத்தை சுற்றி பல கிலோமீட்டர் நிலப்பரப்பு பாலைவனமாகும்.


தற்போது பலர் பிரமிட் வடிவத்தை பல பொருட்களால்(ஸ்படிகம், செம்பு, பித்தளை, ராசி கற்கள்(semi precious stones) உருவாக்கி தங்கள் வீடு, கடை, அலுவலகம், தொழிற்ச்சாலையில் வைக்கிறார்கள். இதுவும் ஆபத்தை தரும்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் சில கோவில்கள் மட்டுமே கோபுரங்களோடு இருந்தன. ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இன்று வரை பல கோவில்கள் கோபுரம் வைத்து கட்டப்பட்டுவிட்டன. இன்னும் கோபுரங்களை கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதுவும் நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கும். பூமியை பாலைவனமாக்கும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஒரு கோவிலும் கோபுரங்கள் இல்லாமலேயே இருந்திருக்கும் என்பது எனது கணக்கீடு.

Sunday 16 February 2014

ஹி....ஹி....ஹி....

சஹாரா பாலைவனத்தில் மட்டுமே கிடைக்கும் 18 வித அரிய வகை மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட hair oil எங்களிடம் கிடைக்கும்.

விலை:-75ml - Rs.988. மட்டுமே. உள்ளூர் வரிகள் தனி. கொரியர் சார்ஜ் தனி.

தேங்காய் எண்ணெய்.


தற்போது விற்கப்படும் தேங்காய் எண்ணெய் 100% சுத்தமானது இல்லை என்றும், அதில் கெட்டி தன்மைக்காக பசை போன்ற ஒரு பொருளை கலக்கிறார்கள என்றும் கேள்விபட்டிருக்கிறேன்.

இதனால் தான் முடி அதிகம் கொட்டுகிறது. polution க்கும் முடி கொட்டுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது என் கருத்து.

பல நிறுவனங்கள் மூலிகை கலந்த hair oil களை விற்கின்றன. இதை உபயோகிப்பதே சிறந்தது என் கருத்து.

heater and hair fall.

தற்போது பல இடங்களில் முடியை அழகுபடுத்த heater உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த heater உபயோகிப்பது முடி கொட்டும் பிரச்னையை உருவாக்கும்.

தொடர்ந்து heater உபயோகித்தால் வழுக்கை தலை நிச்சயம்.

கடவுளிடமே பிரமச்சரியம் கிடையாது.

கடவுளிடமே பிரமச்சரியம் கிடையாது. மனிதன் ஏன் அதை பின்பற்ற வேண்டும்?

சிவனுக்கு 2 மனைவிகள்.

பெருமாளுக்கு 2 மனைவிகள்.

முருகனுக்கு 2 மனைவிகள்.

தென்னிந்தியாவில் விநாயகரை பிரம்மச்சாரியாக வழிபட்டாலும், வடஇந்தியாவில் சித்தி, புத்தி என்று 2 மனைவிகள் இருப்பதாகவே வழிபடுகிறார்கள்.

தமிழர்கள் பலரும் குலதெய்வமாக வழிபாடும் அய்யனாருக்கு 2 மனைவிகள்.(பூரணம், பொற்கலை)

ஒரு முறை சிவனை ஆபத்தில் இருந்து காப்பாற்ற, பெருமாள் பெண்ணுருவில் வந்து காப்பாற்றுகிறார். அப்போது பெண்ணுருவில் வந்த பெருமாள் மீது சிவன் மோகம் கொண்டு அவர் கையை பிடிக்க ஐயப்பன் பிறப்பதாக புராணம் சொல்கிறது. (கடவுளான சிவனுக்கு, பெண்ணுருவில் வந்திருப்பது பெருமாள் என்று எப்படி தெரியாமல் போனது?)

கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் பெண்களோடு கொஞ்சி விளையாடுகிறான். பெண்கள் குளிக்கும் போது அவர்கள் ஆடைகளை எடுத்து வைத்து கொள்கிறான். கிருஷ்ண பக்தர்கள் இதை வேறு விதமாக பூசி மெழுகுகிறார்கள். ஆடை என்பது, உலக பற்றாகவும், தான் என்ற அகங்காரமாகவும், அதை விட்டால் தான் தன்னை அடைய முடியும் என்று கிருஷ்ணன் மறைமுகமாக சொல்வதாக சொல்கிறார்கள்.

அப்படி என்றால் ஆண்கள் குளிக்கும் போது அவர்கள் உடையை எடுத்து ஒழித்து வைத்துக்கொள்ளலாமே. எதற்காக பெண்கள் குளிக்கும் போது, பெண்களின் ஆடையை எடுக்கவேண்டும்??????????(please note this point your honour)

கடவுளே குரு.

பலரும் மனித வாழ்வில் குருவை மனிதர்களிடமே தேடுகிறார்கள். இந்த கலியுகத்தில் இது அதிக சாத்தியம் இல்லாத விஷயம்.

மனிதர்களிடம் வழிகாட்டியை தேடுங்கள்.


கடவுளையே குருவாக எண்ணி வழிபடுங்கள். அவன் குருவாக இருந்து உங்களுக்கு உபதேசிப்பான். ஆனால் அவன் உபதேசிப்பதை புரிந்து கொள்ளும் ஆன்மீக சக்தி உங்களுக்கு உடனே கிடைத்து விடாது. அதற்க்கு பொறுமை மிக அவசியம். அவன் உபதேசிப்பதை புரிந்து கொள்ளும் சக்தி உங்களிடம் வந்துவிட்டால் உங்களால் பல அரிய விசயங்களையும் புரிந்துகொள்ள முடியும். இது எல்லோருக்கும் சாத்தியம். 



பெண்கள் ஏன் மந்திரம் சொல்லக்கூடாது?


பெண்கள் மந்திரம் சொல்லகூடாது என்று என்னுடைய முந்தைய பதிவில் சொல்லி இருந்தேன். அது ஏன் என்று இப்போது சொல்கிறேன்.

உலகத்தில் பிறக்கும் ஆண்கள் அனைவரும் சிவனின் அம்சம்.
உலகத்தில் பிறக்கும் பெண்கள் அனைவரும் சக்தியின் அம்சம்.

ஆணுக்கு தான் சக்தி தேவையே தவிர, பெண்களுக்கு இயற்கையிலேயே சக்தி இருக்கிறது. பெண்கள் மந்திரம் சொல்ல சொல்ல அவர்கள் வயிறு பெருக்கும்.

ஆண்களுக்கு சக்தி கிடையாது. இதனால் சாதாரண நிலையில் ஆணும், பெண்ணும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் பெண்கள் மந்திரம் சொல்வார்களேயானால் அவர்களின் உடலில் இன்னும் அதிக சக்தி ஏறும். இந்த நிலையில் ஆணும், பெண்ணும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது பெண்ணின் உடலில் இருக்கும் அதிகமான சக்தி ஆணின் உடலில் மிக வேகமாக சில நொடிகளில் கலக்கும். இதை தாங்கும் சக்தி இந்த உலகத்தில் உள்ள எந்த ஆணுக்கும் கிடையாது. இதனால் ஆணின் ஆயுள் மிக வேகமாக குறையும்.

அப்படியானால் ஆண்கள் மட்டும் மந்திரம் சொல்லலாமா? என்ற கேள்வி வரும்.

ஆண் மந்திரம் சொல்லும்போது அவன் உடலில் ஏறும் சக்தியானது பெண்ணோடு தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது ஏறும் சக்தியை விட பல நூறு மடங்கு குறைவு. அது அவனுக்கு பாதிப்பை தராது.

அப்படியானால் மந்திரம் சொல்லும் ஆணோடு தாம்பத்திய உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு பாதிப்பு வருமா? என்ற கேள்வி வரும். பெண்ணுக்கு  எந்த பாதிப்பும் வராது. ஆணின் உடலில் இருந்து பெண்ணின் உடலில் கலக்கும் சக்தி என்பது பெண்ணிடம் இருக்கும் சக்தியில் சிறு பகுதி.

என்னுடைய முந்தைய பதிவில் பெண்களுக்கு வைக்க கூடாத பெயர்கள் என்று சில சொல்லி இருந்தேன். அதிலும் இதே போன்ற நிலை தான் ஏற்படும். அந்த பெயர் கொண்ட பெண்களின் உடலில் தினமும் சக்தி ஏறிக்கொண்டே இருக்கும். இதனால் அந்த பெண்ணின்  கணவனுக்கு ஆயுள் வேகமாக குறையும்.

பெண்கள் வெறுமனே மந்திரம் சொல்லாமல் கடவுளை வணங்க வேண்டும்.

செவ்வாய் ஆதிக்கம்.

செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பொருட்களை பயன்படுத்துவது நன்மையை தரும். காரணம், செவ்வாயே வெற்றியை தரக்கூடியது. மண், மரம் இவை இரண்டுமே செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவை.




மண்ணால் ஆன கிண்ணத்தில் (கிளியாஞ்சட்டி) திருநீறு, குங்குமம் வைத்திருப்பது நல்லது. கண்ணாடி, பீங்கான் கிண்ணத்திலும் வைக்கலாம். இவை இரண்டுமே மண்ணில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.

மண், கண்ணாடி, பீங்கான் இவற்றால் தயாரிக்கப்பட்ட பூஜை பொருட்களை வைத்து இருப்பது நல்லது.

நம் முன்னோர்கள் மரத்தால் உருவாக்கப்பட்ட காலணிகளை அணிந்தார்கள். அதற்க்கு காரணமும் செவ்வாயின் ஆதிக்கமே. மரத்தால் ஆன காலணியை நாம் அணிய முடியாவிட்டாலும், ரப்பர் செருப்பு அணியலாம். ரப்பர் மரத்தில் இருந்து எடுக்கப்படுவதால் அதுவும் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றது.

மின்சார  பாதிப்பில் இருந்து காக்கும் சக்தியும் ரப்பர் செருப்புக்கு மட்டுமே உள்ளது.

ரப்பர் செருப்பை கக்கூஸ் செருப்பு என்று பலர் சொல்கிறார்கள். அதன் அருமை தெரியாமல்.

உடல் நலம் சரியில்லாத பலருக்கு ரப்பர் செருப்பை அணியவே மருத்துவர்கள் சொல்கிறார்கள். மின்சார வேலை பார்ப்பவர்கள் ரப்பர் செருப்பு தான் அணிய வேண்டும்.

ரப்பர் செருப்புக்கு இருக்கும் இந்த பாதுகாப்பு தன்மை plastic செருப்புக்கோ அல்லது தோல் செருப்புக்கோ கிடையாது.

எதிர் மறை சக்தி.

எதிர் மறை சக்தியை அறியும் சக்தி இந்த உயிரினங்களுக்கு உண்டு. எதிர்மறை சக்தி இருக்கும் இடத்தை தேடி இவை உடனே வந்துவிடும். எதிர்மறை சக்தியின் அளவை பொறுத்து இவை வரும்.

1) கடி எறும்பு என்று அழைக்கப்படும் சிகப்பு எறும்பு.

2)காகம்.

3)புறா.

4)வௌவால்.

Friday 7 February 2014

குதிரை வாகனம்.


உங்களில் எத்தனை பேர் குதிரை வாகனம் வைத்து இருக்கிறீர்கள்?

இந்த கேள்வியை கேட்டால் உங்களுக்கு முட்டாள்தனமாக இருக்கும்.

நம்முடைய முன்னோர்களின் வாகனங்களில் மிக முக்கிய இடம் பிடித்தவை குதிரைகள். ஆனால் இன்றைய ஒரு தமிழனிடம் கூட குதிரை வாகனம் கிடையாது.

இயந்திர வாகனங்கள் இயற்கையை அழித்துவிட்டன. இன்னமும் இயற்கையை அழித்துக்கொண்டே இருக்கும்.

குதிரை வாகனம் கம்பீரத்தை கொடுப்பது. ராஜ தோற்றத்தை கொடுப்பது.


பானம்.

நம்முடைய முன்னோர்கள் horlicks, boost, complan, bournvita குடித்தா ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்?

இதை குடிக்க கூடாது என்று நான் சொல்லவில்லை.

இவற்றை குடித்தால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், மூளை வளர்ச்சியுடனும் இருப்பார்கள் என்று நம்புவது முட்டாள்தனமானது.

ராமர் கோவில்.

ராமருக்கு கோவில் கட்ட போகிறேன், மசூதியை இடிக்க போகிறேன் என்று பலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் ராமரை அதிகம் வழிபடவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. இதற்க்கு மிக சிறந்த உதாரணம், தமிழகம் எங்கும் ராமருக்கு என்று தனிப்பட்ட கோவில்கள் இல்லை. காளி, கருப்பண்ண சாமி, முனீஸ்வரன், கருமாரி அம்மன், நாக தெய்வங்கள், மற்றும் பல தெய்வங்களே தமிழர்களால் அதிகம் வழிபடப்பட்டு வந்திருக்கின்றன. அது இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பெருமாள் கோவிலில் ராமர் தனியாக தான் இருக்கிறாரே தவிர அவருக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
பெருமாளுக்கு தான் அங்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

நம் முன்னோர்கள் ராமரை வணங்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவருக்கு தமிழகம் எங்கும் பல கோவில்களை கட்டி இருப்பார்கள். ஆனால் அவர்கள் எந்த கோவிலும் கட்டவில்லையே. அப்படியே ராமருக்கு கோவில் கட்டி இருந்தாலும் அதன் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கும்.

ராமருக்கு கோவில் கட்டுவேன் என்று சொல்பவர்கள் எல்லாம் அரசியல் சூழ்ச்சியோடு தான் செயல்படுகிறார்களே தவிர உண்மையான பக்தி என்பது அவர்களிடம் இல்லை.

உண்மையிலேயே ஒருவன் ராமரின் மீது கொண்ட பக்தியின் காரணமாக கோவில் கட்டுவானேயானால் அவன் கோவில் கட்டுவதை மட்டுமே சிந்திப்பானே தவிர மத வெறியை மக்களிடம் தூண்டமாட்டான். மசூதியை இடித்து தான் ராமருக்கு கோவில் கட்டுவேன் என்று சொல்லமாட்டான்.