Sunday 16 February 2014

செவ்வாய் ஆதிக்கம்.

செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பொருட்களை பயன்படுத்துவது நன்மையை தரும். காரணம், செவ்வாயே வெற்றியை தரக்கூடியது. மண், மரம் இவை இரண்டுமே செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவை.




மண்ணால் ஆன கிண்ணத்தில் (கிளியாஞ்சட்டி) திருநீறு, குங்குமம் வைத்திருப்பது நல்லது. கண்ணாடி, பீங்கான் கிண்ணத்திலும் வைக்கலாம். இவை இரண்டுமே மண்ணில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.

மண், கண்ணாடி, பீங்கான் இவற்றால் தயாரிக்கப்பட்ட பூஜை பொருட்களை வைத்து இருப்பது நல்லது.

நம் முன்னோர்கள் மரத்தால் உருவாக்கப்பட்ட காலணிகளை அணிந்தார்கள். அதற்க்கு காரணமும் செவ்வாயின் ஆதிக்கமே. மரத்தால் ஆன காலணியை நாம் அணிய முடியாவிட்டாலும், ரப்பர் செருப்பு அணியலாம். ரப்பர் மரத்தில் இருந்து எடுக்கப்படுவதால் அதுவும் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றது.

மின்சார  பாதிப்பில் இருந்து காக்கும் சக்தியும் ரப்பர் செருப்புக்கு மட்டுமே உள்ளது.

ரப்பர் செருப்பை கக்கூஸ் செருப்பு என்று பலர் சொல்கிறார்கள். அதன் அருமை தெரியாமல்.

உடல் நலம் சரியில்லாத பலருக்கு ரப்பர் செருப்பை அணியவே மருத்துவர்கள் சொல்கிறார்கள். மின்சார வேலை பார்ப்பவர்கள் ரப்பர் செருப்பு தான் அணிய வேண்டும்.

ரப்பர் செருப்புக்கு இருக்கும் இந்த பாதுகாப்பு தன்மை plastic செருப்புக்கோ அல்லது தோல் செருப்புக்கோ கிடையாது.

No comments:

Post a Comment