Friday 28 March 2014

செம்பு.

ஐம்பொன் உலோகங்களிலேயே செம்பு மட்டுமே நேர்மறை சக்தி தருகிறது. 

Tuesday 25 March 2014

பெண்ஈயவாதிகள்.

பெண்ஈயம் பேசும் 90%  ஆண்கள் தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களை அடிமைகளாக தான் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

பெண்களும், பெண்ஈயவாதிகளும் இதை படிக்க வேண்டாம்.

முந்தா நாள் ஞாயிற்று கிழமை நீயா நானாவில் இன்றைய பெண்களின் அந்தரங்க விஷயங்கள் அம்பலமானது. அதாவது இன்றைய பெண்கள் பலர் தங்கள் உடைகளை ஆபாசமாக தைக்க சொல்கிறார்கள் என்பது.

இவள்கள் ஆபாசமாக உடை தைத்து அணிவாள்களாம். ஆண்கள் பார்த்துவிட்டால், ஆண்கள் காமுகர்கள், பொறுக்கிகள், ச்சீ நீயெல்லாம் அக்கா தங்கச்சியோடு பிறக்கலையா, உங்க அம்மாவும் பெண்தானே, ரிக்க்ஷா மாமா படத்தில் கவுண்டமணி சொல்வது போல், "பார்த்துட்டான், பார்த்துட்டான், இவன் என்னை பார்த்துட்டான்" என்றெல்லாம் அலறுவாள்களாம்.

bikini உடை இந்தியாவின் தேசிய உடை ஆகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

பெண்கள் குறைவாகவும், ஆபாசமாகவும் உடை அணிய போராடிவரும் பெண்களுக்கும், பெண்ஈயவாதிகளுக்கும் ஆணாதிக்கவாதிகளின் சார்பாக நன்றிய தெரிவிச்சிக்கிறோம் ஸ்சாமியோவ்!

குறிப்பு:- என்னுடைய இந்த பதிவின் தலைப்பையும் மீறி இதை படிக்கும் நீங்கள் பெண்ணாகவோ, பெண்ஈயவாதியாகவோ இருந்தால் உங்களுக்கு என் மீது கோபம் வரலாம். ஆனால் அது நியாயமற்றது. உங்கள் கோபம் ஆபாசமாக உடை அணியும் பெண்கள் மீது தான் வர வேண்டும். அல்லது இந்த தகவலை வெளியிட்ட vijay tv மீது வரவேண்டும்.

கோலம்.

பச்சரிசி மாவில் கோலம் போடுவதே 100% நன்மை தரும்.

மாக்கல் பொடியில் கோலம் போடுவது, sticker கோலம் ஒட்டுவது அழகை தரலாம். ஆனால் 1% கூட நன்மை தராது.

தாடி.

தாடிக்கு முக தோற்றத்தை மாற்றி அமைக்கும் சக்தி உண்டு.

வழுக்கை தலை இருப்பவர்கள் தாடி வளர்த்துக்கொண்டால் அவர்களுக்கு வழுக்கை தலை தோற்றம் தெரியாது. ஆனால் வழுக்கை தலை உள்ளவர்கள் தாடி வளர்க்காமல் முகத்தை நன்கு சவரம் செய்து கொண்டால் அவர்களுக்கு வழுக்கை தலை தோற்றம் நன்கு தெரியும்.

உலக அளவில் பிரபலமான பலர் வழுக்கை தலையோடு இருந்தாலும், அவர்கள் தாடியோடு இருந்த காரணத்தினால் அவர்களின் வழுக்கை தோற்றம் அனைவருக்கும் தெரியாது. அவர்களின் பெயரை சொன்னால் அது வேறு விதமான பிரச்சனைகளை எழுப்பும். நீங்களே google image search இல் பிரபலமான மனிதர்களின் புகைப்படங்களை தேடி பாருங்கள். அவர்கள் வழுக்கை தலையோடு இருந்தாலும், தாடி வைத்த காரணத்தினால் அவர்களின் வழுக்கை தலையை நீங்கள் கவனிக்காமலேயே இருந்திருப்பீர்கள்.

hamam soap.

hamam soap பயன்படுத்தாத நம் முன்னோர்களுக்கு பல கோடி ஆண்டுகளாக அலர்ஜி, rashas போன்ற 10 விதமான skin problem இருந்ததா??????

பிரமிடின் உள்ளே.(inside the pyramid)

பிரமிடின் உள்ளே வைக்கப்பட்ட பொருட்கள் அப்படியே இருக்கிறதே என்று தான் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

பிரமிடின் உள்ளே வைக்கப்பட்ட பொருட்களின் வளர் சிதை மாற்றங்கள் முதலில் நிறுத்தப்படுகின்றன. பிறகு எல்லா செயல்களும் முடக்கப்படுகின்றன. அதனால் தான் பிரமிடின் உள்ளே வைக்கப்பட்ட பொருட்கள் அப்படியே இருப்பதாக எல்லோரும் நம்புகிறார்கள்.

பிரமிடின் உள்ளே ஒரு உயிருள்ள மனிதன் இருந்தால் முதலில் அவன் உடலில் இருக்கும் வளர் சிதை மாற்றங்கள் அனைத்தும் முடக்கப்படும். பிறகு அவன் உடலில் இருக்கும் ஒவ்வொரு செயல்களும் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகு அவன் மூளையின்  செயல் திறன் குறையும். உடலை அசைக்கும் திறன் அவனை விட்டு விலகும். அவனால் உடலை அசைக்க முடியாத சூன்ய நிலைக்கு அவன் மூளை கொண்டுசெல்லப்படும். அவனால் சுற்றி இருக்கும் விசயங்களை அவனால்  உணர முடியும். ஆனால் அவனால் அதற்க்கு ஈடு கொடுத்தோ அல்லது அதற்க்கு எதிராகவோ செயல்படமுடியாத நிலைக்கு செல்வான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடலின் எல்லா செயல்களும் முடக்கப்படும்.

இதுவே பிரமிடின் உள்ளே நடக்கிறது. 

Monday 24 March 2014

பித்தளை பூஜை பொருட்கள்.

எல்லா வீடுகளிலும் விளக்கு உட்பட பித்தளை பூஜை பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. பித்தளை என்பது செம்போடு துத்தநாகத்தை கலந்து உருவாக்கப்படுவது.

என்னை பொறுத்த வரை பித்தளை, வெள்ளி பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது.

மண், மரம், கண்ணாடி, பீங்கான், stainless steel, செம்பு  பொருட்களையே பூஜை பொருட்களாக பயன்படுத்துவது சரி என்பது என் கருத்து.

Saturday 22 March 2014

பிரமிட் மட்டுமல்ல.

பிரமிட் மட்டுமல்ல இங்கே படத்தில் உள்ள பிரமிட் ஸ்ரீ சக்கரம் வைத்தாலும் துன்பமே வரும். நிலத்தடி நீர்மட்டம் குறையும். கண்டிப்பாக நன்மை கிடைக்காது.


தீய சக்தி.

தீய சக்திகளால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், உங்கள் மீது ஒருவர் தீய சக்தியை ஏவியதாக நீங்கள் சந்தேகப்பட்டால், அவர் கொடுத்த எந்த ஒரு பொருளையும் உங்கள் வீட்டில் வைத்திருக்க கூடாது. உடனே வீட்டின் வெளியே குப்பையில் எறிந்து விடுங்கள். அவர் கொடுக்கும் எந்த ஒரு பொருளையும் வாங்காதீர்கள்.

மன அமைதி.

ஆண்கள் வெண்மை நிற ஆடை அணிவது மன அமைதியை தரும்.

அனுமன், ஐயப்பன்.

அனுமன், ஐயப்பன் இவர்கள் இருவரையும் குடும்ப வாழ்வில் ஈடுபடுபவர்கள் வழிபடவே கூடாது என்பது என் கருத்து. பிரமச்சரியத்தை 100% முழுமையாக கடைபிடிப்பவர்களும், பெண்ணை மனதாலும் 100% நினைக்காதவர்களும், அசைவம் 100% சாப்பிடாதவர்களுமே வணங்க வேண்டும்.

இல்லையென்றால் துன்பமே வரும் என்பது என் கருத்து.

இல்லத்தரசி.

தமிழில் இல்லத்தரசி என்று பொருத்தமான பெயர் இருக்கும் போது பல பெண்கள் house wife என்ற கேவலமான வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை.

சந்திர தரிசனம்.

அமாவாசையில் இருந்து மூன்றாவது நாளான மூன்றாம் பிறையை தொடர்ந்து பார்ப்பது அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்கள். ஆனால் அது கிழக்கு திசையில் சிறிது நேரம் மட்டுமே தெரியும்.

நான் இது வரை என் வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே தொடர்ந்து சந்திர தரிசனம் பார்த்து இருக்கிறேன்.

காலாண்டரில் சந்திர தரிசனம் என்று போட்டிருப்பார்கள். அதை வைத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் நான்காம் பிறையை பார்த்தால் நாய் படாத பாடு படுவார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் என் வாழ்க்கையில் நான்காம் பிறையை தான் அதிகம் பார்த்து இருக்கிறேன்.

கொசு மருந்து.

எல்லா ஊர்களிலும், கொசு மருந்து அடிக்கிறார்கள். ஆனால் கொசு போய்விடுகிறதா? அடிப்படையான பிரச்னையை தீர்க்காமல், கொசு மருந்து அடித்து என்ன பயன்?

அந்தந்த மாநகராட்சிகளில், கொசு மருந்து அடித்த வகையில் செலவு Rs.xxxxx. என்று செலவு கணக்கு எழுதலாம். அவ்வளவு தான்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யோசிப்பார்களா?

மண்பானை.

மண்பானை தண்ணீர் குடிப்பதும், மண்பானையில் சமைத்து உண்பதும் அதிகமான நேர்மறை சக்தியை தரும்.

மண்பானை தண்ணீர் உடனே சாத்தியமான விஷயம். 

Thursday 20 March 2014

பால் மற்றும் பால் பொருட்கள்.

எல்லா நிறுவனங்களும் தாங்கள் விற்கும் பால் மற்றும் பால் பொருட்களில் அதன் கெட்டி தன்மைக்காகவும், அவை கெட்டு போகாமல் இருக்கவும்  ரசாயனங்களை சேர்க்கின்றன. 

tv channel vs cinema.

டிவி சேனல்களில் சினிமாக்களை தரவரிசைப்படுத்தி மற்றும் சினிமா காட்சிகளை கேலி செய்வது போல், சினிமாவில் டிவி சேனல்களை தரவரிசைபடுத்தி, டிவி சேனல்களை கிண்டல் செய்யலாமே.

சீதனம்.

பெண்ணுக்கு சீதனம் கொடுக்கும் போது அடுப்பு கொடுக்க கூடாது. அடுப்பு என்பது தனி சமையலை குறிக்கும். இது தனி குடித்தனத்திற்கு வழி வகுக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

பெண்ணுக்கு அடுப்பு சீதனம் கொடுப்பது கூட்டு குடும்ப வாழ்க்கையை பிரிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

pyramid is dangerous

Monday 17 March 2014

இயற்கை பூச்சி கொல்லி மருந்து.

பல நாடுகளில் இயற்கை பூச்சி கொல்லி மருந்தாக வேப்பெண்ணையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் அதை கேவலமாக நினைக்கின்றோம்.




பெருங்காயத்தையும் இயற்கை பூச்சி கொல்லி மருந்தாக பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். சமையலுக்கு பயன்படுத்தும் பெருங்காயம் அல்ல. அதில் பல பொருட்கள் கலந்திருக்கும். அதன் மூல பொருளான பெருங்காயம்.

கடவுளுக்கு.

கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் சில பணக்காரர்கள் தங்கம், வைரத்தில் காணிக்கை செலுத்துகிறார்கள். இது சரியா?

சில வாரங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் முருகனுக்கு ஒருவர் தங்க பூணூல் சாத்தினாராம்.

அதே கோவிலின் வெளியே பலர் சாப்பாட்டுக்கு வழியின்றி இருப்பதை அவர் பார்க்கவில்லையா?

மனிதனுக்கே உணவில்லாத போது கடவுளுக்கு தங்கம், வெள்ளி, வைரத்தில், ஆபரணங்கள் தேவையா?

60ஆம் கல்யாணம்.(சஷ்டியப்த பூர்த்தி.)

60ஆம் கல்யாணம் விசேசத்தை பலரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் 60ஆம் கல்யாணம் கொண்டாட கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். காரணம் 60ஆம் கல்யாணம் விசேஷமாக கொண்டாடினால், கொண்டாடிய சில தினங்களில் அல்லது சில மாதங்களில் கணவன் அல்லது மனைவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு விரைவான மரணம் ஏற்படலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.

இது எல்லோருக்கும் பொருந்துமா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு தெரிந்த 2 குடும்பங்களில் இதுபோல் நடந்து இருக்கிறது.

இது 70ஆம் கல்யாணம், 80ஆம் கல்யாணம் இவற்றிற்கும் பொருந்தும். அதாவது 60ஆம் கல்யாணத்தில் தப்பித்தவர்கள் 70 அல்லது 80 ஆம் கல்யாணத்தில் மரணமடையும் நிலை வரலாம்.


கடம்ப மரம்.

கடம்ப மரம் நிறைந்த காடாக மதுரை இருந்தது என்று படித்து இருக்கிறேன். ஆனால் கடம்ப மரத்தை நான் பார்த்ததே இல்லை.

விதைகள்.

விதைகள் இல்லாத கனிகள் தரும் மரத்தை உருவாக்குவது, குழந்தை பேறு  அடைய முடியாத பெண்ணை உருவாக்குவதற்கு சமம். இதை தான் இன்றைய வேளாண் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றன.

அடுத்தடுத்த சந்ததிகளை உருவாக்க வேண்டும் என்று தான் இறைவன் விதைகளை படைத்து இருக்கிறான். அதை அழிக்கும் நோக்கில் இன்றைய ஆராய்ச்சிகள் உள்ளன.

64.

ஆய கலைகள் 64ம் கற்ற தமிழன் தற்போது ஒருவர் கூட இல்லை.

வாழ்த்து.

"இன்று போல் என்றும் வாழ்க" என்று வாழ்த்துவதை விட, "மென் மேலும் சந்தோசமாக வாழ்க" என்று வாழ்த்துவது சரியானது என்பது என் கருத்து.

தன்னம்பிக்கை.

make up போட்டால் தான் தங்களுக்கு தன்னம்பிக்கை வருகிறது என்று சில பெண்கள் சொல்கிறார்கள். சில ஆடைகள் அணிந்தால் தான் தன்னம்பிக்கை வருகிறது என்று சில ஆண்கள் சொல்கிறார்கள்.

அப்படியானால் make up போடாத பெண்களுக்கு தன்னம்பிக்கை இருந்ததே இல்லையா? அழுக்கான, கிழிந்த ஆடை அணிந்த ஆண்களுக்கு தன்னம்பிக்கை இருந்ததே இல்லையா?

ராணுவத்தில் வீரர்கள் தங்கள் கடமையை செய்யும் போது அவர்கள் ஆடை கிழியலாம், அழுக்காகலாம். அதனால் தங்களுக்கு தன்னம்பிக்கை போய் விட்டது என்று அவர்கள் நினைத்தால் என்ன ஆகும்?

விவசாயிகள் தங்கள் ஆடை அழுக்காகவோ, அல்லது கிழிந்தோ இருக்கிறது, அதனால் தங்களுக்கு தன்னம்பிக்கை போய் விட்டது என்று விவசாயம் செய்யாமல் இருந்தால் என்ன ஆகும்?

make up போடாத சமயத்தில் இந்த  சில பெண்களும், ஆடை இல்லாமல் இந்த ஆண்களும் உடலுறவில் ஈடுபடும்போது இவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காதா?

கூரை வீடு.

கூரை வீடு என்பது ஏழ்மையின் சின்னமாகவே பார்க்கப்படுகிறது.

முன்பு சென்னையில் வசித்தபோது சில மாதங்கள் கூரை வீட்டில் வசித்திருக்கிறேன்.

வீட்டின் வெளியே அக்னி நட்சத்திர வெயில் அடித்தாலும் உள்ளே வெப்பம் தெரியாது. வெளியே குளிர் அடித்தாலும் உள்ளே குளிர் தெரியாது. சமமான சீதோஷ்ண நிலை எப்போதுமே கூரை வீட்டில் இருக்கும். மின்விசிறிக்கு அவசியமே இருந்தது இல்லை.(கொசு பிரச்சனை தவிர).

அதற்காக உங்களை கூரை வீட்டில் வசியுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் வீட்டில் மொட்டை மாடி இருந்தாலோ, அல்லது வீட்டை சுற்றி இடம் இருந்தாலோ, கூரை போட்டு இருந்து பாருங்கள். உடல் எப்போதுமே புத்துணர்ச்சியோடு இருக்கும். கூரை வீடு என்பது இயற்கையை அனுபவிக்கும் முறை.

beach resorts என்ற பெயரில் பலர் கூரை வீடுகளை வைத்து தான் லட்ச லட்சமாக சம்பாதிப்பதாக சொல்கிறார்கள்.

Saturday 15 March 2014

சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி.

சிவராத்திரி அன்று எதற்காக கடவுளை வணங்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.

ஒருவன் பயத்தில் இரவு பொழுதை கழிக்க வில்வ மரத்தில் இருந்து வில்வ இலைகளை பறித்து போட்டுக்கொண்டே இருக்கிறான். காலையில் தான் அவனுக்கு தெரியும் கீழே சிவலிங்கம் இருக்கிறது என்று. இதில் என்ன விசேசம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. பயத்தின் காரணமாக இலையை பறித்து போட்ட நாளை கண்டிப்பாக கொண்டாட வேண்டுமா?

வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலில் சொர்க்க வாசல் திறப்பதை பார்த்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கடவுள் என்ன சொர்க்கத்திற்கு நுழைவாயிலை கோவிலில் வைத்து இருக்கிறாரா? கோவிலில் கட்டப்பட்ட ஒரு கதவை திறப்பதை பார்த்தால் எப்படி சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இவை எல்லாம் கோவிலை கட்டியவர்கள் பரப்பிய புரளி என்பது என் கருத்து.

இதற்க்கு மிக சிறந்த உதாரணம் திருமலை நாயக்க மன்னர்.

மீனாட்சி அம்மன் கோவில் கட்டியதில் திருமலை நாயக்கருக்கு பெரும் பங்கு உண்டு. தற்போது போல் மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதத்தில் நடக்கவில்லை. வேறொரு மாதத்தில் நடந்து வந்திருக்கிறது. ஆனால் மக்கள் விவசாயத்தை கவனிக்க வேண்டி கோவிலுக்கு வராமல், மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வராமல் இருந்திருக்கிறார்கள். இதனால் மக்களை வர வைக்க எண்ணிய திருமலை நாயக்கர் சித்திரை மாதத்திற்கு மீனாட்சி திருக்கல்யாணத்தை மாற்றி இருக்கிறார். இங்கே நான் மன்னனை மற்றும் குற்றம் சாட்டவில்லை அவனை சுற்றி இருக்கும் அனைவருமே சேர்ந்து சொல்லி இதை செய்ய வைத்து இருக்கலாம். கடவுளின் திருமணத்தை மாற்ற மன்னனுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதே போல் எத்தனை சாஸ்திரங்கள, சம்பிரதாயங்கள் காலம் காலமாக மாற்றப்பட்டுக்கொண்டே வந்திருக்கும்? அல்லது சேர்க்கப்பட்டு வந்திருக்கும்?

இது தவறுதானே???????

விளக்கு.

பிரபலமான கோவில்களில் விளக்கு விற்பதை contract எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் தினமும் சொல்லுவதை கேட்டால் அதாவது நீங்கள் தினமும் கோவிலுக்கு சென்றால் இவர்கள் சொல்வதை கேட்கலாம்.

"இன்னைக்கு திங்கள் கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு செவ்வாய் கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு புதன் கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு வியாழக்கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு வெள்ளி கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு சனி கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு ஞாயிற்று கிழமை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு அஷ்டமி, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு நவமி, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு ஏகாதசி, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு அமாவாசை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு பௌர்ணமி, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு கார்த்திகை, சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

"இன்னைக்கு பிரதோஷம், சாமிக்கு விளக்கேற்றுவது விசேஷம்."

இப்படி ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் சொல்வதை கேட்டு கேட்டு எனக்கு சாமிக்கு விளக்கு ஏற்றவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய் விட்டது. விளக்கேற்றி, விளக்கேற்றி இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. எனக்கு எந்த வருமானமும் இல்லையே என்ற கோபம் தான் வருகிறது கடவுளின் மீது.

இரட்டை வாழைப்பழம்.

இரட்டை வாழைப்பழம் சாப்பிடவோ அல்லது முக்கிய நிகழ்ச்சிகளில் வைக்கவோ கூடாது என்று தான் பலரும் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஆனால் சில மாதங்களுக்கு முன் நான் வழக்கமாக செல்லும் கோவிலுக்கு வாழைப்பழம் வாங்கி சென்றபோது அதில் இரட்டை பழம் இருந்தது. நான் அதை கவனிக்காமலேயே கோவிலில் கொடுத்து விட்டேன். அங்கே கோவிலில் இருக்கும் அம்மா சொன்னார்,"இரட்டை பழம் நல்லது" என்று.

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் வாங்குங்கள்.

ஜிகர்தண்டா செய்யும் முறை.

மதுரையின் சிறப்பான குளிர்பானம் ஜிகர்தண்டா செய்யும் முறை.

முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் தேவையான அளவு கடல் பாசியை போட்டு வைத்து விட்டால் மறுநாள் காலையில் பொங்கி வந்திருக்கும். அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

கடைகளில் விற்கப்படும் ஜிகர்தண்டாவில் ஐஸ்கிரீம் சம்பந்தப்பட்ட பொருட்களை கலந்திருப்பார்கள். அது மேற்சொன்ன முறையைவிட சுவையாக இருக்கும். ஆனால் அது எல்லாமே ரசாயன பொருட்கள் என்பதால் மேற்சொன்ன முறையே சிறந்தது.

கடல் பாசி எல்லா பலசரக்கு கடைகளிலும், நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

ஜலதோஷம், இருமல்.

ஜலதோஷம், இருமல் நீங்க துளசி சாப்பிடலாம். துளசி இலைகளை நீரில் கொதிக்கவைத்து அதை குடிக்கலாம். பருத்தி பால் சாப்பிடலாம்.

கோயில்.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்காதே என்பதெல்லாம் வெறும் புரளி. கோவில் இல்லா ஊர்களிலும் இறைவன் இருப்பான். இந்த உலகமே இறைவனின் ஆதிக்கத்தில் இருக்கும் போது அவன் அருள் எங்கிருந்தாலும் கிடைக்கும்.

வெண்மை நிறம்.

வெண்மை நிறத்திற்கு தான் மன அமைதியை தரும் சக்தி அதிகம். மற்ற வர்ணங்களுக்கு அது குறைவு. வீட்டில் வெண்மை நிறம் அடிப்பதே மன அமைதியை தரும். மற்ற வர்ணங்கள் 100% மன அமைதி தராது.

தேங்காய் எண்ணெய்.

கேரளாவில் தேங்காய் எண்ணையை சமையலுக்கு பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஆனால் தமிழ் நாட்டில் விற்கப்படும் தேங்காய் எண்ணையை சமையலுக்கு பயன்படுத்தினால் புற்றுநோய் (cancer) வரும். காரணம் இதில் கலப்படம் உண்டு.

தோஷம் கழித்தல்.

தோஷம் கழித்த பொருட்களை பலர் வீட்டு வாசலிலேயே வைத்து எரிக்கிறார்கள். இது நன்மையை தராது. மீண்டும் மீண்டும் துன்பம் வந்துகொண்டே இருக்கும்.


Monday 10 March 2014

கோடி கோடியாய் லாபம் குவிக்கும் தங்கநகை வியாபாரம்.

அன்பான பெண்ணினமே! தினமும் காய்கறி கடையில் ஏழை வியாபாரிகளிடம் 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் பேரம் பேசும் நீங்கள் நகை வாங்கும் போது ஆயிரக்கணக்கில் ஏமாறுவது உங்களுக்கு தெரியுமா? சில சமயம் லட்சகணக்கில் கூட ஏமாறுகிறீர்கள்.

hallmark, bis, rate card, என் தங்கம் என் உரிமை, 916, kdm, செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, குறைந்த சேதாரம், fixed price, lowest price இப்படி பல வார்த்தைகள் உங்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன.

தங்கம் 1கிராம் 2900 என்று வைத்து கொள்வோம்.

தங்கத்தோடு செம்பு சேர்த்தால் தான் ஆபரணம் செய்ய முடியும். 

செம்பு 1கிராம் 5 ரூபாய்க்கும் குறைவு.

ஆனால் நீங்கள் தங்கத்திற்கு பணம் கொடுக்கிறீர்கள். ஆனால் அதில் கலந்திருக்கும் செம்பின் நிலை என்ன?

அவர்கள் செம்பையும் சேர்த்து தங்கத்தின் விலைக்கு விற்கிறார்கள். அதாவது நீங்கள் வாங்கும் நகையில் இருக்கும் செம்பு 1கிராம் 2900 என்று. நீங்களும் 5ரூபாய் செம்பை 2900 கொடுத்து வாங்குகிறீர்கள். செம்பு எந்த அளவு அதிகமாக சேர்க்கப்படுகிறதோ அந்த அளவிற்கு அவர்களுக்கு லாபம். அந்த அளவிற்கு நீங்கள் ஏமாறுகிறீர்கள்.

இதனால் அவர்கள் லட்சலட்சமாய், பலர் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.

நீங்கள் ஏமாந்துகொண்டே இருக்கிறீர்கள்.

உலக மகளிர் தினம்.

என் வாழ்க்கையில் என் அம்மா, என் பாட்டி, மற்றும் என் கடந்த கால வாழ்க்கையின் சில பெண் நண்பர்கள் தவிர நான் நல்ல மனம் கொண்ட பெண்களோடு பேசியதில்லை, பழகியதில்லை. 

கொடூர மனம் கொண்ட பெண்களை தான் என் வாழ்க்கையில் அதிகம் சந்தித்து இருக்கிறேன். அவர்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

உலக மகளிர் தினத்திற்கும், உலக அழகி போட்டி நடத்துவதற்கும் அதிக வித்தியாசம் இல்லை.

உலக அழகி போட்டி அந்தந்த நாடுகளில் அழகு சாதன பொருட்களை சந்தைபடுத்துவதற்க்கு நடத்தப்படுகிறது.

உலக மகளிர் தினம் மேல் நாட்டு கலாச்சாரத்தை புகுத்துவதற்கு நடத்தப்படுகிறது. உலக மகளிர் தினத்தில் சில விசயங்கள் பெண்களின் மனதில் விதைக்கப்படுகின்றன.
1)ஆண்கள் காமுகர்கள்.
2)கணவனின் விருப்பத்திற்கு மனைவி இணங்க கூடாது.
3)ஆண்களின் எல்லா கருத்துக்களையும் பெண்கள் எதிர்க்க வேண்டும்.
4)ஆண்களுக்கு பெண்கள் அடிபணியவே கூடாது. ஆண்களை பெண்கள் அடிமைப்படுத்தவேண்டும்.
5)ஆணின் துணை இன்றி தனியாக வாழ வேண்டும்.
இந்த விசயங்கள் விதைக்கப்படுவதன் மூலம் இந்தியாவின் குடும்ப உறவுகள் சிதைக்கப்பட வேண்டும்.இதுவே இந்த உலக மகளிர் தினத்தின் மறைமுகமான நோக்கம்.

நான் பொதுவாக விளையாட்டு tv சேனல்கள் பார்ப்பதே இல்லை. மகளிர் தினமான 8-3-14 அன்று எதேச்சையாக ten sports சேனல் இரவு 8-40க்கு மாற்றியபோது பெண்கள் விளையாடும் விளையாட்டு ஒன்று நடந்து கொண்டிருந்தது. பெண்கள் தினம் கொண்டாடிய அனைத்து பெண்ஈயவாதிகள் மீதும் தலையில் அடித்து சத்தியமாக சொல்கிறேன். இந்த பெண்கள் அனைவரும் bra மற்றும் ஜட்டி மட்டுமே அணிந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள். நிகழ்ச்சி எவ்வளவு நேரமாக ஒளிபரப்பானது என்று எனக்கு தெரியாது. நான் சில நிமிடங்கள் ரசித்து பார்த்தேன்.

ஆங்கில டிவி சேனல்களில் முத்த காட்சி வந்தாலே இந்தியாவின் கலாச்சாரம் கெட்டு விட்டது என்று அதை வெட்ட துடிக்கும் அரசியல்வாதிகள் இதை பார்த்து ரசித்தார்களா என்று எனக்கு தெரியாது. 

Thursday 6 March 2014

வாசல் படி.

வீட்டின் வாசல் படி ஒற்றைப்படை இலக்கத்தில் இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். 1,3,5,7,9.

நான் வசிக்கும் பகுதியில் ஒரு வீட்டில் 4 படிகள் உள்ளன. நான் வசிக்கும் பகுதியில் இருக்கும் உணவகங்கள் அனைத்திற்கும் இந்த வீட்டில் இருந்து தான் மாவு அரைத்து கொடுக்கிறார்கள். மேலும் வீடுகளுக்கும் மாவு விற்கிறார்கள்.

இந்த வீட்டில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மேலோட்டமாக நான் கவனித்த விசயங்களை பார்த்து சொல்கிறேன்.

pyramid and stones.

பிரமிட் மற்றும் பட்டை தீட்டப்பட்ட கற்களின் தட்டையான பகுதி பூமியை நோக்கியும், கூர்மையான பகுதி வானத்தை நோக்கியும் வைத்தால், பூமியின் நிலத்தடி நீர் மட்டம் குறையும். பூமி பாலைவனமாகும். இந்த பாதிப்பு வைக்கப்பட்ட இடத்திலும் அதை சுற்றி உள்ள நில பரப்பளவிலும் நிகழும்.

பிரமிட் மற்றும் பட்டை தீட்டப்பட்ட கற்களின் தட்டையான பகுதி வானத்தை நோக்கி அல்லது வேறு ஏதாவது திசை நோக்கியும், கூர்மையான பகுதி பூமியை நோக்கியும் வைக்கும் போது நிலநடுக்கம், பூமியில் பிளவு உச்சகட்ட பிரச்சனையாக பூமி வெடித்து சிதறும் நிலை உருவாகும். இந்த பாதிப்பு வைக்கப்பட்ட இடத்தில் தான் நிகழும் என்று இல்லை. ஓரிடத்தில் வைப்பது உலகின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

காற்று மாசுபாடு.(air pollution)

bike மற்றும் car இவற்றிற்கு பதிலாக குதிரைகள் பயன்படுத்தப்பட்டால், காற்று மாசுபாடு 50% வரை குறையும். இது உலக அளவில் சாத்தியம். அனால் அதற்கு உங்களை போன்றவர்கள் மனம் வைக்க வேண்டும்.

கற்கள்.

பட்டை தீட்டப்பட்ட ராசி கற்கள் அல்லது A.D. கற்கள் ஆபரணம் அணிபவருக்கோ, அல்லது அவர் குடும்ப உறுப்பினருக்கோ ஆயுள் குறைவு வேகமாக ஏற்படும். ஒருவர் அணிவது குடும்ப உறுப்பினரை கூட பாதிக்கும்.

மேலும் இந்த பட்டை தீட்டப்பட்ட கற்கள் மாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும். அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகளும் வரலாம்.