Friday 30 May 2014

திருப்பதி.

திருப்பதி உண்டியலில் நீங்கள் 1000 ரூபாய் போட்டால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று எனக்கு சத்தியமாக தெரியாது.

ஆனால் பசித்த ஒருவனுக்கு ஒரு வேலை உணவு 50 ரூபாய்க்கு நீங்கள் வாங்கி கொடுத்தால் உங்களுக்கு அதிக புண்ணியம் கிடைக்கும். உங்கள் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து நீங்கள் செய்தால் உங்கள் குடும்பமும், வம்சமும் நன்றாக இருக்கும்.

திருப்பதியில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கையை வைத்து தான் பெருமாள் அவர் திருமணத்திற்கு குபேரனிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுகிறாராம்.

அமெரிக்காவுல michale jackson கூப்டாக, ஜப்பான்ல jackie chan கூப்டாக என்னடி கலர் கலரா ரீல் விடுற?

மகாபாரதம்.

தற்போது ஆபாசமான வலை தளங்களில் incest (குடும்ப உறவுகளிடையே காமம்) என்ற ஒரு கேவலமான விஷயம் பரவி வருகிறது. இதற்க்கு வித்திட்டவன் கண்ணன் தான்.

அர்ஜுனனின் மகன் அபிமன்யு போருக்கு புறப்படும் நிலை உருவாகிறது. ஆனால் அவனுக்கு திருமணமாகவில்லை அதனால் கண்ணன் திருநங்கையாகி அபிமன்யுவுடன் உடலுறவு வைத்துக்கொள்கிறான்.

கண்ணனின் தங்கை பாஞ்சாலி என்று சொல்கிறார்கள். பாஞ்சாலியின் கணவன் அர்ஜுனன். அப்படியானால் அர்ஜுனனும், கண்ணனும் மச்சினன் முறை. அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அப்படியென்றால் அபிமன்யுவின் மாமன் கண்ணன். மாமனும், மருமகனும் உடலுறவு வைத்து கொள்கிறார்கள். இது கேவலம் இல்லையா?

ஆத்து மணலை எண்ணி விடலாம், அர்ஜுனனின் மனைவியை எண்ண முடியாது என்று சொல்வார்கள். அவனுக்கு பல மனைவிகள். 

கெளரவர்களுக்கு இருந்தது மண்ணாசை என்றால், பாண்டவர்களுக்கு இருந்தது பெண்ணாசை.


Thursday 29 May 2014

மகாபாரதம்.

மகாபாரதம் என்ற காவியத்தை எல்லோருமே மதிக்கிறார்கள். அனால் அதில் சில கேவலமான நாகரீகங்கள் பின்பற்றப்பட்டிருக்கின்றன.

ஒரு பெண்ணை 5 ஆண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஒரு கேவலமான நாகரீகம் இருக்கிறது. இதை படிக்கும் உங்களுக்கு என் மீது கண்டிப்பாக கோபம் வரும். உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் குடும்பத்தில் யாராவது ஒரு பெண்ணை 5 ஆண்கள் திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பீர்களா? 5 ஆண்களை திருமணம் செய்து கொள்ள பாஞ்சாலி எப்படி சம்மதிக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதை சிலர் வேறு விதமாக பூசி மெழுகுகிறார்கள். பாஞ்சாலியை மனம் என்றும், பஞ்சபாண்டவர்கள் என்பது 5 புலன்கள் என்றும் சொல்கிறார்கள். அப்படி என்றால் 100 கெளரவர்கள்  யார்?

திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றெடுக்கிறாள் குந்தி. கர்ணன் பிறக்கிறான். உங்கள் குடும்பத்தில் யாராவது திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவனோடு சேர்ந்து குழந்தை பெற்றெடுப்பதை காவியம் என்று புகழ்வீர்களா?

தற்போது மகாபாரதம் என்று ஒரு மொக்கையான (மதுரை பேச்சு வழக்கில் பெரிய அளவு என்று அர்த்தம்.) ஒரு புத்தகம் விற்கிறார்கள். இது கிட்ட தட்ட 2000 பக்கங்கள் இருக்கலாம். அதில் 1000 பக்கங்கள் அசைவம் சாப்பிட கூடாது என்பதை மட்டுமே சொல்கிறார்கள்.

கீதை உபதேசம் என்ன கண்ணன் 1000 பக்கங்கள் பிரிண்ட் பண்ணும் அளவுக்கா கண்ணன் சொல்கிறான்? அல்லது 30 tv episode போடும் அளவுக்கு சொல்கிறானா? யுத்த களத்தில் யுத்தம் ஆரம்பிப்பதற்கான சங்கை ஊதி விட்டால், உடனே எதிராளியை கொல்ல வேண்டும். அதுவே போர் என்பது.

அர்ஜுனன் வில்லை கீழே போட்ட பிறகு கண்ணன் அவனுக்கு உபதேசிக்கிறான். கண்ணன் 30 tv episode அளவுக்கு உபதேசிக்கிறான் என்ற காரணத்திற்காகவோ, அவன் சொல்வதை எல்லாம் 1000 பக்கங்கள் print பண்ண வேண்டும் என்ற காரணத்திற்காகவோ கெளரவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பார்களா?

கண்ணன் 30 tv episode  அளவுக்கு உபதேசம் செய்தபிறகு போரை நடத்தலாம் என்று கெளரவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பார்களா?

அசைவம்.

அசைவம் சாப்பிடும் உயிரினங்களை சில கடவுள்கள் வாகனமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் மனிதர்கள் அசைவம் சாப்பிட கூடாது என்று சொல்கிறார்கள். இந்த முரண்பாடு ஏன் என்று தெரியவில்லை.

முருகன் -மயில்.

அம்மன் - சிங்கம்.

பெருமாள் - கருடன்.

ஐயப்பன் - புலி.

நவகிரகம்.

குலதெய்வம் கோவில் தவிர எல்லா கோவில்களிலும் நவகிரகங்கள் வழிபடப்படுகின்றன.

அனால் இவற்றின் சிலை வடிவமைப்பு தவறாக இருக்கிறது என்பது என் கருத்து.

ஒவ்வொரு கிரகமும் வேறு வேறு திசை நோக்கி ஆனால் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. இது குழப்பமான மனோ நிலையை ஏற்படுத்தும்.

நவகிரகங்கள் வரிசையாக ஒரே திசை நோக்கி நிர்மானிக்கப்பட வேண்டும். அதுவே சரி என்பது என் கருத்து.

தமிழ்நாட்டில் ஒரே ஒரு இடத்தில் நவகிரகங்கள் வரிசையாக நிர்மாணிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது என்று முன்பு படித்து இருக்கிறேன். ஆனால் அது எந்த ஊர் என்று தெரியவில்லை.

வெந்நீர்.

இன்றும் பல இடங்களில் சாயங்கால வேளைகளில் வீட்டிற்கு வாசல் தெளிக்கும் பழக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

வெயில் காலங்களில் water tank இல் இருக்கும் தண்ணீர் சுடுகிறது. அந்த நீரை கொண்டு தான் பலர் வாசல் தெளிக்கிறார்கள். இது தவறு என்பது என் கருத்து. குளிர்ந்த நீர் கொண்டு தான் வாசல் தெளிக்க வேண்டும்.

முன்னமே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்திருந்து அதை வாசல் தெளிக்க பயன்படுத்தலாம்.

Monday 12 May 2014

விஞ்ஞானி.

 
விஞ்ஞானி என்றால் நியூட்டன், ஐன்ஸ்டீன், நாசா வில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் தானா? நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கானோர் விஞ்ஞானிகள் தான். இன்றைய கல்வி முறை வெளி நாட்டில் இருப்பவர்களை மட்டுமே விஞ்ஞானி என்று கற்று கொடுக்கிறது. நேற்று # நீயா நானா.

Saturday 10 May 2014

திருமணம்.

வருடா வருடம் திருமணம் செய்துகொள்ளும் சொக்கனுக்கும், மீனாட்சிக்கும் எப்படி தெரியும் 30 வயதுக்கு மேலாகியும் திருமணம் ஆகாதவர்களின் மன வேதனை என்ன என்று??????

Tuesday 6 May 2014

சோத்து கத்தாழை.

சோத்து கத்தாழையை வீட்டுக்கு உள்ளே அல்லது கடைக்கு உள்ளே கட்டி தொங்கவிடப்பட்டால் விபத்து ஏற்படும் என்று சொல்லி இருந்தேன்.

பெரும்பாலும் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

கண் திருஷ்டி.

கண் திருஷ்டி நீங்குவதற்காக வைக்கப்பட்ட பொருட்கள் கீழே விழுந்து விட்டால், மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் ஏற்படும்.

கீழே விழுந்த பொருள், உடைந்து அல்லது தெறித்து விட்டால், மரணத்திற்கான வாய்ப்பு அதிகம்.


கீழே விழுந்த பொருளை மீண்டும் வைத்தால் மரணத்திற்கான வாய்ப்பு அதிகம். 

பெயர்.

பெயரின் முடிவில் ஸ்ரீ என்று இருப்பது அதிர்ஷ்டத்தை குறைக்கும்.

உதாரணம்:- தேவி ஸ்ரீ, ரூப ஸ்ரீ, வாணி ஸ்ரீ.