Tuesday 30 December 2014

முஸ்லீம்கள் கெட்டவர்களா?

கொலைகாரர்கள் எல்லா மதத்திலுமே இருக்கிறார்கள். ஏன் இஸ்லாமியர்களை மட்டுமே தீவிரவாதியாக காட்டுகிறீர்கள்?
ராஜபக்சே முஸ்லீமா?
அவனுக்கு திட்டம் போட்டு கொடுத்த சோனியா காந்தி முஸ்லீமா?
நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் முஸ்லீமா?
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஈடுபட்ட ஜெனரல் டயர் முஸ்லீமா?
ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு போட்டவனும், அதற்கு உத்தரவு போட்டவனும் முஸ்லீமா?
ஹிட்லர் முஸ்லீமா?
இப்படி பட்டியல் நீண்டு கொண்டேதானிருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன் கொலைகாரர்கள் எல்லா மதத்திலுமே இருக்கிறார்கள்.
முஸ்லீம்கள் மட்டுமே கெட்டவர்கள் என்று சொல்லாதீர்கள்.

தவறு என்பது தனிமனிதனின் மனதில் தான் இருக்கிறது. மதத்தோடு அதை தொடர்பு படுத்தாதீர்கள்.

கற்கள்

பட்டை தீட்டப்பட்ட கற்களை (ராசிக்கல்லாக இருந்தாலும் சரி அல்லது A.D. கல்லாக இருந்தாலும் சரி) ஆபரணமாக அணிந்திருந்தாலும் அல்லது வெறுமனே பீரோவில் வைத்து பூட்டி வைத்திருந்தாலும் அதன் ஈர்ப்பு சக்தி 24 மணிநேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.  இதனால் ஆரோக்கிய குறைவும்,  ஆயுள் குறைவும் ஏற்படும்.

Monday 29 December 2014

ஜாதக கட்டம்

சூரிய குடும்பத்தில் இல்லாத ராகு, கேதுவை சேர்த்திருக்கீங்களே! சூரிய குடும்பத்தில் இருக்கும் பூமியை ஏண்டா சேர்க்காம விட்டீங்க? அது என்னடா பாவம் பண்ணுச்சு?

சாத்தான்

சாத்தான் வேதம் ஓதுவதை நேற்று தந்தி டிவியில் காட்டினானுங்க.
"ராஜபக்சேவின் தேர்தல் பிரச்சாரம்."

இன்று ராஜபக்சேவின் பேட்டியாம்.
ராஜபக்சேவுக்கு ஜால்ரா அடிக்குறானுங்களா தந்தி டிவிகாரனுங்க???????

Sunday 28 December 2014

மலட்டு தெய்வங்கள்

குழந்தை பேறு அடையாத வள்ளி, தெய்வானை, லெட்சுமி போன்றவர்களை கடவுளாக நினைத்து அவர்களுக்கு வீட்டின் பூஜை அறைக்குள் முக்கிய இடம் கொடுக்கும் இந்த சமூகம்,  குழந்தை பேறு அடையாத பெண்களை மலடி என்று சொல்லி சுபநிகழ்ச்சிகளில் ஒதுக்குகிறது.
என்னாங்கடி உங்க லாஜிக்கு?
இவர்கள் மலடி என்றால் வள்ளி, தெய்வானை, லெட்சுமியும் மலடிகள் தான்.

Saturday 27 December 2014

சொர்க்கம்

தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்குவது சொர்க்கம்.

அருவி & ஷாம்பூ

1996 முதல் 2014 வரை ராமேசுவரம் கடலில் 5 முறை குளித்திருக்கிறேன். திருச்செந்தூர் கடலில் 5 முறை குளித்திருக்கிறேன். 2003ல் ஒரு ஜோசியர் மூலமாக பரிகாரம் செய்வதற்காக நவகிரக கோயில்கள் மற்றும் அதை சுற்றி இருக்கும் பல கோயில்களுக்கு சென்ற போது அங்கிருந்த பல கோயில் குளங்களில் (திருநள்ளாறு சனி தீர்த்தம் உட்பட) குளித்திருக்கிறேன்.  தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் குளித்தது என் வாழ்வில் மரண போராட்டங்களையே தந்திருக்கின்றன.
எனவே இந்த பிரச்சினை நீங்க இப்போது குற்றாலம், குட்லாடம்பட்டி, சுருளி போன்ற அருவிகளில் குளித்தேன்.
என்னை தவிர எல்லோருமே ஷாம்பூ தேய்த்து தான் குளித்தார்கள். நீரை மாசுபடுத்தும் இந்த ரசாயனம் கலந்த ஷாம்பூவை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
ஷாம்பூ தேய்த்து குளிப்பது என்ன பெரிய குற்றமா? என்று நீங்கள் கேட்கலாம்.
இதற்கு அந்நியன் பாணியில் தான் நான் கேள்வி கேட்க முடியும்.
5 பைசா திருடினா தப்பா? இல்லையா?

Friday 26 December 2014

தூக்கமின்மை

தேவைக்கு அதிகமான அல்லது அளவுக்கதிகமான சக்தி வாய்ந்த பொருட்களை தவறான இடத்தில்  வைத்திருந்தாலும் இரவில் நன்றாக தூங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.
இது ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும்.  உச்ச கட்ட பிரச்சினையாக ஆயுள் குறைவை ஏற்படுத்தும்.
அப்படிப்பட்ட பொருட்களை சரியான இடத்தில் தான் வைக்க வேண்டும் அலல்து  வீட்டில் வைத்திருக்காமல் இருப்பதே நல்லது.

Thursday 25 December 2014

திருப்பதி

இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலத்தில் இருக்கும் பெண்களையும் ஒரே இடத்தில் கூடி சைட் அடிக்கும் வாய்ப்பு திருப்பதியில் மட்டுமே கிடைக்கும்.
டேய் வெங்கடாஜலபதி உனக்கு முக்கியமான இடத்தில் மச்சம் நிறைய இருக்காடா?

Sunday 21 December 2014

சிவலோக பதவி

மனிதனின் மரணம் தரும் வலியிலும் கூட சிலர் சிவலோக பதவி அடைந்தார் என்று போஸ்டர் அடிக்கிறார்கள்.
சிவலோக பதவி என்ன கவர்னர் பதவியா? பிரதமர் பதவியா? முதல்வர் பதவியா? எல்லோருக்கும் என்ன பதவியா அந்த சிவன் கொடுக்கிறான்?

வலியை தானே கொடுக்கிறான்.

மரணத்தின் வலியும் கொடியது. மரணத்தின் மூலம் ஏற்படும் உறவின் இழப்பிலும் வலி கொடியது.

இந்த வலியிலும் கூட கடவுளை நட்டமாக தூக்கி நிப்பாட்ட முயற்ச்சிக்கிறார்கள் சிலர்.

Thursday 18 December 2014

microwave oven

microwave oven இல் சமைத்து உண்டால் புற்றுநோய் வரும் என்று சொல்கிறார்கள். காரணம் அதில் கதிரியக்கத்தின் மூலம் உணவு சூடாக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

Wednesday 17 December 2014

தீவிரவாதம்

வெடி மருந்து, ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் தான் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை தூண்டி தங்கள் பணப்பெட்டியை நிரப்பிக்கொள்கிறார்கள். அவர்களை அழித்து விட்டால் தீவிரவாதத்தையும் அழித்து விட முடியும்.

கடல், குளம் Vs ஆறு, அருவி

தேங்கிய நிலையில் இருக்கும் நீர் நிலைகளான கடல்(திருச்செந்தூர்,  ராமேசுவரம் உட்பட),  குளம் (கோவில் குளம் உட்பட) போன்றவற்றில் குளிப்பது தேக்கமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்துகிறது.
கடல் உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக விளங்குகிறது.
ஓரிடத்தில் உருவாகி வேறோர் இடத்தை நோக்கி பயணம் செய்யும் ஆறு, அருவி போன்றவற்றில் குளிப்பது வாழ்வை வளப்படுத்தும்.

Sunday 14 December 2014

விதி மதி

விதியை மதியால் வென்று விட முடியுமென்றால் கடவுள் என்ற வார்த்தை கூட மனிதனுக்கு தேவைப்படாது.

Saturday 13 December 2014

சொர்க வாசல்

பெருமாள் கோயில்களில் சொர்க வாசலில் கடவுள் சொர்க்கத்திற்கு மனிதர்களை அழைத்து செல்ல பிளாக்கில் டிக்கெட் விற்றுக் கொண்டிருக்கிறார்.
500 ரூபாய் டிக்கெட் 1000 ரூபாய்.
1000 ரூபாய் டிக்கெட் 2000 ரூபாய்.
5000 ரூபாய் டிக்கெட் 10000 ரூபாய்.
ஓடியா!  ஓடியா!  ஓடியா! 

எதற்கு?

ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விதியின் படியே மனித வாழ்க்கை பயணப்படுகிறது என்றால்,  அதை மீறி எதுவும் நடக்காது என்றால் பின் எதற்காக கடவுளை வணங்க வேண்டும்?

வேப்ப மரத்து ஆத்தாக்கள்

வேப்ப மரத்தில் ஜிகு ஜிகு பாவாடை துணியை கட்டி அம்மனாக நினைத்து வழிபடுவதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் அந்த வேப்பமரம் இருக்கும் பாதை வழியாக இறந்த என் அம்மாவின் உடலை கொண்டு போகக்கூடாதுன்னு சொல்றீங்களேடா!

அந்த பாதை வழியாக என் அம்மாவின் உடலை கொண்டு சென்றால் அந்த மரத்தில் இருக்கும் காளியாத்தா, மாரியாத்தா, முப்பாத்தா எல்லா ஆத்தாக்களுக்கும் மாரடைப்பு வந்து செத்து போயிருவாய்ங்களாடா??????????????????????

போங்கடா நீங்களும் உங்க ஆத்தாவும்

நவகிரக கோயில்கள்

நவகிரக கோயில்களுக்கு சென்று அங்கிருக்கும் பரதேசிகளை எல்லாம் பார்த்து விட்டு வந்த பிறகு எனக்கு எந்த நன்மையும் நடந்து விடவில்லை.
மரண போராட்டங்களை மட்டுமே அனுபவித்திருக்கிறேன்.

Friday 12 December 2014

திருநள்ளாறு

திருநள்ளாறு சென்று விட்டு வந்தால் சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று சொன்னதை நம்பி இரண்டு முறை அந்த பரதேசியை சென்று பார்த்திருக்கிறேன்.
ஆனால் இரண்டு உயிர்களை இழந்திருக்கிறேன்.
2009 ல் என் அப்பா.
இப்போது என் அம்மா.
இரண்டு முறை - இரண்டு உயிர்.

Sunday 7 December 2014

பணம்

பணத்தை உருவாக்கியது மனிதன் தான். கடவுள் அல்ல.
எனவே பணம் மனிதர்களின் கட்டுப்பாட்டிலேயே செயல்படும். கடவுளின் கட்டுப்பாட்டில் அல்ல.
Tanya desigan அவர்கள் பல மாதங்களுக்கு முன்பு என்னிடம் கேட்ட கேள்விக்கு என்னுடைய முழுமையான பதில் இதுதான்.

சரியான முறை

வீட்டில் சாமி படம், யந்திரங்களை வைக்கும் போது ஏதாவது ஒரு திசை நோக்கி மட்டுமே வைக்க வேண்டும். இரு வேறு திசை நோக்கி வைப்பது சரியல்ல.

அவ்வாறு வைப்பது இரு வேறு மாறுபட்ட சூழ்நிலைகளை ஒரே நேரத்தில் நிகழ்த்தி குழப்பமான மன நிலையை அல்லது பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதே போல் ஒரு வீட்டில் ஒரே ஒரு அறையில் மட்டுமே சாமி படங்களை வைக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளிலோ அல்லது ஒவ்வொரு அறையிலுமோ சாமி படம், யந்திரங்களை வைக்க கூடாது.

Saturday 6 December 2014

ராஜபக்சே

திருப்பதி கோயிலுக்கு வருகை தரும் ராஜபக்சேவிற்கு ஒரு டாக்டர் பட்டத்தையும், சர் பட்டத்தையும் கொடுத்தால், அடிமாடுகளாகவும், இந்தியனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் நாங்கள் எல்லோரும் அந்த மகானை சர் டாக்டர் ராஜபக்சே என்று சொல்லுவோம்.  விழாவிற்கு கருணாநிதி தான் தலைமை தாங்க வேண்டும். (நான் ஏட்டையா கூட தான் கோர்ட்டுக்கு போவேன்)

வரலாறு முக்கியம் அமைச்சரே!

இப்போது இருக்கும் ஐ.நா சபைக்கே ராஜபக்சேவை தண்டிக்க வக்கில்லை. அப்புறம் என்ன மசுருக்கு ஐ.நா சபை இருக்குன்னு எனக்கு தெரியவில்லை.

ராஜபக்சே ஒருவேளை அமெரிக்காவோடு யுத்தம் நடத்தி இருந்தால் உடனே உலக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி கொன்றிருப்பார்கள்.
ஆனால் ராஜபக்சே கொன்றது அடிமாடுகளான தமிழர்களை தானே.

ராஜபக்சே ஒருவேளை மலையாளிகளை கொன்றிருந்தால் எங்கள் மன்மோகன்சிங் மைக்கை புடுச்சு ராஜபக்சேவுக்கு எதிராக ஒரு மணி நேரம் வீரவசனம் பேசி இருப்பார். அடிமாடுகளான தமிழர்களை கொன்றதால் தான் center fresh சாப்பிட்டு வாய்க்கு பூட்டு போட்டுகிட்டு பொத்திக்கொண்டு இருந்துட்டார்.

இந்தியாவிலேயே தமிழனை தமிழனாக வாழாதே இந்தியனாக வாழு என்று மத்திய அரசு சொல்கிறது.
சிலோனில் மட்டும் தமிழன் தமிழனாக வாழ்ந்து விட முடியுமா என்ன?

Thursday 4 December 2014

குஷ்பூ

கல்லூரி காலத்தில் (93-96) குஷ்பூவின் ரசிகனாக இருந்தேன். புத்தகம், நோட்டு, பர்ஸ், கால்குலேட்டர் உள்பட  எல்லாவற்றிலும் குஷ்பூவின் படங்கள் வைத்திருப்பேன். அதுபோக பத்திரிகைகளில் வரும் குஷ்பூவின் படங்களை வெட்டி சேகரித்து வைத்திருப்பேன்.
அதற்கு பிறகு ஸ்னேகாவின் ரசிகனானேன்.
தமிழர்களை கொல்ல திட்டம் போட்டு கொடுத்து அதற்கு உதவியும் செய்த காங்கிரஸில் குஷ்பூ சேர்ந்திருப்பது பிடிக்கவில்லை.
நாட்டில் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது குஷ்பூ காங்கிரஸில் சேர்ந்ததை ஒரு முக்கியமான விசயம் என்று பேட்டி எடுக்க பத்திரிகைகாரனுங்களும்,  டீவிகாரனுங்களும் பின்னாடியே அலையிறானுங்க. 
நேருவும், காமராஜரும் இப்போது உயிரோடு இருந்தால் குஷ்பூவை வைத்து ஓட்டு கேட்கும் நிலைக்கு காங்கிரஸ் வந்து விட்டதை நினைத்து கதறி அழுவார்கள்.

Wednesday 3 December 2014

பருத்தி வீரன் டக்ளஸும் நானும்

ஏன்டா இன்னைக்கு மாடு வாங்குவ, நாளைக்கு வயலை வாங்கி, வீட்டைக் கட்டி பிரசிடெண்ட் ஆகிருவ, அப்புறம் எலெக்சன் வரும்,  எம்எல்ஏ ஆகி, மந்திரி ஆகி, சிஎம் ஆகிருவ, நீ கார்ல டாட்டா காட்டிகிட்டு போவ, நாங்க உனக்கு போஸ்டர் ஒட்டணும்.

நான் உங்கிட்ட மாடு தானய்யா வாங்கப் போறேன்னு சொன்னேன். அதுக்கு என்னைய போஸ்ட்டர் லெவலுக்கு கொண்டு வந்துட்ட. இப்ப உனக்கு என்ன வேணும்?

தினம் தினம் பல செவ்வாழைகளை நிஜ வாழ்க்கையில் சந்திக்க வேண்டியதாயிருக்கு.

Sunday 30 November 2014

பட்டுபுடவை

நாங்கள் பட்டுபுடவை கட்டும் போது பட்டு பூச்சிகள் யாவும் மோட்சம் பெறும் என்று பெண்கள் பாடுகிறார்கள் மதுரையில் பிரபலமான ரா என்று ஆரம்பிக்கும் பட்டு ஜவுளி கடை விளம்பரத்தில்.

அப்படி என்றால் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் எல்லா வீட்டிலும் கோழிக்கறி, ஆட்டுக் கறி, மீன் என்று வாங்கி சமைத்து சாப்பிடுகிறார்களே! அந்த கோழிகள், ஆடுகள்,  மீன்கள் எல்லாம் மோட்சம் பெறுமா?
பட்டு புழுக்களை கொன்று பட்டுபுடவை தயாரித்து விட்டு, பட்டு பூச்சி மோட்சம் பெறுதாம்ல.

சோதித்தல்

வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது,  கடவுள் நம் நல்ல எண்ணங்களையும்,  நல்ல செயல்களையும் பின்பற்றுகிறோமா? என்று சோதிப்பதாக சொல்றாய்ங்க.
ங்கொய்யால சோதிச்சி பார்க்க நாங்க என்ன சோதனைச்சாலையில் இருக்கும் எலியா? குரங்கா? என்ன மசுருக்குடா சோதிக்கிற?

ரணகளத்திலும் கிளுகிளுப்பு

யாரைத் தொட்டாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் என்ற வரத்தை சிவன் அளிக்க, வரம் பெற்றவன் சிவனையே தொட நினைக்க, சிவனோ அலறி ஓட, பெருமாள் பெண்ணுருவில் வந்து சிவனை காப்பாற்றுகிறான்.
(பெண்ணுருவில் வந்திருப்பது பெருமாள் என்று கடவுளான சிவனுக்கு தெரியவேயில்லை. அப்புறம் எப்படி நம் கஷ்டங்கள் சிவனுக்கு தெரியும்? நம் கஷ்டங்களை அவன் தீர்த்து வைப்பான்)
அந்த பெண்ணின் முன்னழகு, பின்னழகு, மார்பழகு, இடுப்பழகு மற்றும் எல்லா அழகையும் பார்த்த சிவனுக்கு பயங்கரமாக மூடாகி விட்டது. அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்போடு செயல்பட்டு ஐயப்பன் பிறக்கிறார்.
ரணகளத்திலும் கிளுகிளுப்போடு செயல்பட்ட சிவன் வியப்பின் சரித்திர குறியீடு.

Saturday 29 November 2014

Low Bp, high Bp

Low Bp, high Bp இந்த இரண்டையும் சின் முத்திரையின் மூலம் சரி செய்ய முடியும்.

காகம்

உடலில் எதிர்மறை சக்தி ஓட்டம் குறிப்பிட்ட அளவை தாண்டும் போது கனவில் காகம் வரும்.
கனவில் காகம் வந்தால் மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் நிகழும்.
உடலில் எதிர்மறை சக்தி ஓட்டத்தை தடுத்து நேர்மறை சக்தி ஓட்டமாக மாற்றினால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியும். நேர்மறை சக்தி ஓட்டம் ஏற்பட்ட பிறகு கனவில் காகம் வராது.
சின்முத்திரையின் மூலம் இது சாத்தியமாகும்.

கோபுரம்

எதிர்மறை சக்தி இருக்கும் இடத்தில் புறாக்கள் இருக்கும்.
எதிர்மறை சக்தி குறிப்பிட்ட அளவைத் தாண்டி அதிகரிக்கும் போது வௌவால்கள் அங்கு வரும்.
கோபுரம் இருக்கும் இடங்களில் எல்லாம் புறாக்கள் இருக்கும்.
கோபுரம் எதிர்மறை சக்தி தரும் தன்மை கொண்டது.

Friday 28 November 2014

சொர்க வாசல்

பெருமாள் கோவில்களில் சொர்க வாசல் திறப்பதை பார்த்தால் directஆ சொர்க்கத்துக்கு போயிடலாம்னு சொல்லிக்கிட்டு திரியிறாய்ங்கே.
ராஜபக்சேவை கூட்டிட்டு வந்து சொர்க வாசல் திறப்பதை பார்க்க வைத்தால் அவனையும் சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போயிடுவாரா உங்க கடவுள்?
கோயிலுக்கு கூட்டம் வரவேண்டும் என்பதற்காகவும், உண்டியலில் பணம் அதிகரிக்கவும் புரளிய பரப்பாதீங்கடா!

கிருஷ்ணன்

பல பெண்களோடு கில்மா மேட்டரில் ஈடுபட்டிருந்தாலும் அப்பா என்றழைக்க ஒரு பிள்ளை கூட கிருஷ்ணனுக்கு இல்லை.
கிருஷ்ணன் condom use  பண்ணி இருந்திருப்பான் போலிருக்கு.

Tuesday 25 November 2014

கோபுர தரிசனம்


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஒரு தவறான கருத்து என்பது என் கருத்து.

1000, 2000, 3000, 4000, 5000 என்று காலங்கள் பின்னோக்கி செல்ல செல்ல கோவில்களில் கோபுரங்களே இல்லை என்பது என் கருத்து. எல்லா தெய்வ சிலைகளும் மரத்தின் அடியிலேயே இருந்தன என்பது என் கருத்து.


Wednesday 19 November 2014

from facebook

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

This is true so Can we avoid
நண்பர்களே இன்றய ஊடகங்களால்
மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம்
பணத்திற்காக நம் பாமர
மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!

நண்பர்களே (முக்கியம்)
படித்துவிட்டு பகிருங்கள் (via Balaji Palani)

Tuesday 18 November 2014

வைகை ஆறு

மீனாட்சியின் திருமண விருந்தை உண்ட குண்டோதரன் தாகம் தீர கை வை என்று சிவன் கூற வைகை உண்டானதாக கதை கூறுகிறது.
ஆனால் வைகை ஆறு மதுரையில் ஊற்றெடுக்கவில்லை. மதுரையை கடந்து தான் செல்கிறது.
மதுரைக்கு வெகுதொலைவில் தான் ஊற்றெடுக்கிறது.
அப்படியென்றால் மீனாட்சியின் திருமண விருந்து மதுரையில் நடக்கவில்லை என்று தானே அர்த்தம்.
தற்போது வைகை எங்கே ஊற்றெடுக்கிறதோ அங்கே தானே விருந்து நடைபெற்றதாக அர்த்தம்.

Saturday 15 November 2014

1 யூனிட்க்கு 5 ரூபாய்

சென்ற மாதம் வாடகை வீடு தேடி அலைந்தேன்.
செல்லூர் முல்லை நகரில் ஒரு வீட்டில் 1 யூனிட்டுக்கு 5 ரூபாய் தரவேண்டும் என்றார்கள்.
அரசாங்கம் வசூலிக்கும் கட்டணத்தை விட அதிகமாக பல வீட்டுக்காரர்கள் தனியாக வசூலிக்கிறார்கள்.
இதை தடுக்க யாருமே இல்லையா?

Tiles, marble, granite

டைல்ஸ், மார்பிள், கிரானைட் எதிர்மறை சக்தி தரும்.

Wednesday 5 November 2014

என் பதிவுகள்

என் பதிவுகளில் 95% என் அனுபவத்தின் அடிப்படையில் தான் எழுதுகிறேன்(மரண போராட்டம் உட்பட).
5% கருத்துகள் பிறர் கூறும் கருத்துக்களை ஆய்வு செய்து நம்பகதன்மையின் அடிப்படையில் எழுதுகிறன்.
எனவே என் பதிவுகளில் அவசியம் ஏற்பட்டால் மட்டும் சில கருத்துக்களை திருத்தி மாற்றி எழுதுவேன். நண்பர்கள் இதை புரிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நம் முன்னோர்கள் சொன்ன பல கருத்துக்களும், காட்டிய பல வழிகளும் தவறானதாக இருப்பதால் தான் இந்த சிக்கல் எனக்கு ஏற்படுகிறது.
என் வலைப்பதிவின் நோக்கம் தீயசக்திகளும்,  அதை ஏவுபவர்களும் அழிய வேண்டும் என்பது தான்.
நான் பட்ட கஷ்டங்களை நல்வர்கள் யாருமே கஷ்டப்படக்கூடாது என்பது தான்.
என் தனிப்படட வாழ்க்கையில் சாரசரி மனிதர்களுக்கே உரிய அனைத்து சராசரி உணர்ச்சிகளும் கொண்ட சராசரி மனிதன் நான்.

சரியான வழிகாட்டுதலை நம் முன்னோர்களுக்கு கடவுள் தராததால் தான் கடவுள் மீது அதிகமாக கோபத்தை என் பதிவுகளில் காட்டுகிறேன்.

Monday 3 November 2014

கை தவறி

கோவிலில் வாங்கிய திருநீறோ அல்லது குங்குமமோ அல்லது வேறு ஏதாவது பொருளோ கை தவறி கீழே சிந்திவிட்டால் அதை மீண்டும் எடுத்து பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் ஆயுள் குறையும் அல்லது விபத்து ஏற்படலாம்.
கை தவறி கீழே விழுந்ததை அபசகுனம் என்று கருதாமல் வேறு திருநீறு, குங்குமம் வாங்கி பயன்படுத்தலாம். எந்த பிரச்சனையும் ஏற்படாது.

Sunday 2 November 2014

மனோதத்துவம்

சமூக வலைதளங்களில் பலர் நடிகர்களை ஓட்டுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வேறு ஓரு நடிகரின் ரசிகர்களாக இருப்பது தான்.
ஆனால் மனோதத்துவ காரணம் இன்னொன்றும் இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு அவள் காதலனோ அல்லது கணவனோ வேறு ஒரு பெண்ணை ரசிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல் எந்த ஒரு ஆணாலும் அவன் காதலியோ அல்லது மனைவியோ வேறு ஒரு ஆணை ரசிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

Saturday 1 November 2014

Tv பொட்டியில் கடவுள்

தொலைக்காட்சியில் கோயில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் அல்லது வேறு நிகழ்ச்சியில் சாமி படத்தை காட்டி விட்டால் பலர் தங்கள் கன்னத்தில் போட்டு, கையை தூக்கி வணங்கி, தலையில் குட்டி, உக்கி போட்டு, டிவி பொட்டியை சுற்றி அங்கபிரதட்சனம் செய்து வணங்குகிறார்கள்.
உங்க பக்தி உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
புள்ளையாரப்பா! புள்ளையாரப்பா! எனக்கு ஒரு பிகரை செட் பண்ணிவுடு புள்ளையாரப்பா!
என்னது! புள்ளையாரை கும்பிட்டுக்கிட்டு இருக்கும் போது பொண்ணுங்க டூபீஸ்ல வாராங்க?
சேனலை பேஷன் டிவிக்கு மாத்திட்டீங்களாடா?

Friday 31 October 2014

பொறாமை

ஒவ்வொரு மனிதனும் சக மனிதனுக்கும் கிடைக்கும் ஒவ்வொரு விசயத்தை பார்த்தும் பொறாமைப்படுகிறான்.
ஆனால் எல்லா மனிதர்களும் சக மனிதனுக்கு கிடைப்பதை பார்த்து பொறாமைப்படாத விசயங்கள்
1) நரை
2) வியாதி
3) மரணம்

பெண்ணடிமைத்தனம்

பெண்ணடிமைத்தனத்தை முதலில் உருவாக்கியவன் பெருமாள் தான்.
இதற்கு சாட்சி பல கோவில்களில் இன்னும் இருக்கிறது. பெருமாள் படுத்திருக்கும் நிலையில் லெட்சுமி,  பெருமாளுக்கு கால் பிடித்து விடுவது போல் இருக்கும் ஓவியங்கள் தான்.

பரட்டை பத்தவச்சிட்டியே பரட்டை.

Thursday 30 October 2014

காமம்

கடவுள்கள் காமத்தை ஒதுக்கியவர்கள், காம உறவில் ஈடுபடமாட்டார்கள் என்றால், அப்புறம் என்ன மசுருக்கு சிவன், பெருமாள், முருகன்,  ஐயனார் போன்ற பரதேசிகளுக்கு 2 பொண்டாட்டிகள்?
சிவராஜ் சித்த வைத்தியசாலை வைத்தியர் போல தான் கேள்வி கேட்க வேண்டும்.
ஏன்டா 2 பொண்ணுங்க வாழ்க்கையோடு விளையாடுறீங்க?

Sunday 26 October 2014

தீபாவளி

நான் சென்ற வருடத்தை போல இந்த வருடமும் தீபாவளியை கொண்டாடவில்லை.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கவில்லை.
புத்தாடை அணியவில்லை.
பட்டாசு வாங்கவில்லை.
நரகாசுரன் கொல்லப்பட்டதை நான் ஏன் கொண்டாட வேண்டும்?
எனக்கும் நரகாசுரனுக்கும் தீராத பகையா?

Saturday 25 October 2014

நான்

நான் நாத்திகன் அல்ல. கடவுள் மீதான என் கோபத்தை தான் என் பதிவுகளில் வெளிப்படுத்துகிறேன்.

Monday 20 October 2014

புண்ணியம்

பட்டாசுகள் வாங்குவதற்காக செலவழிக்கும் பணத்தை, சாப்பாட்டுக்கு வழியின்றி கஷ்டப்படுபவர்களுக்கு உணவளிக்க செலவழித்தால் புண்ணியம் கிடைக்கும்.

Sunday 19 October 2014

இப்படியும் நடந்திருக்கலாம்.

ராமன் ஏக பத்தினி விரதன் தான். ஆனால் லக்ஷ்மணன் ஏக பத்தினி விரதன் அல்ல. மனைவியை விட்டு பிரிந்து வந்தவன். சூர்ப்பனகையிடம் தவறாக நடக்க முயற்ச்சித்து இருக்கலாம். இதனால் ராவணன் சீதையை கடத்தி இருக்கலாம்.

கிருஷ்ணன் பொம்பளை பொறுக்கி என்பது உலகறிந்த விஷயம். கிருஷ்ணன், நரகாசூரனின் காதலியை படுக்க அழைத்து இருக்கலாம். இதனால் நடந்த யுத்தத்தில் கிருஷ்ணன் நரகாசூரனை கொன்றிருக்கலாம்.

mission to mars

ask.fm என்ற ஒரு appஇல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் என்ன கொண்டு செல்வீர்கள் என்று கேட்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்திற்கு நான் ஏன் செல்ல வேண்டும்? செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் சென்று அங்கே என்ன புடுங்க போகிறார்கள்? சாப்பிட போகிறார்கள். தூங்க போகிறார்கள். உடலுறவு வைத்துக்கொள்ள போகிறார்கள். பிளாஸ்டிக் குப்பைகளை போட போகிறார்கள். ரசாயன கழிவுகளை போட போகிறார்கள். பிறகு வேறு ஒரு கிரகம் தேடி அலைய போகிறார்கள். இதை தவிர மனிதர்களுக்கு வேறு ஒன்றும் புடுங்க தெரியாது.

உலகம் முழுவதிலும் இருக்கும் முட்டாள் விஞ்ஞானிகள் மக்களின் பணத்தை கோடி கோடியாக செலவழித்து சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக செய்யும் செலவை வைத்து உலகம் முழுவதிலும் ஏழைகளே இல்லாமல் செய்து விடலாம்.

mission to mars.

my answer is
BLOODY FUCK.

Friday 17 October 2014

சாணி பவுடர்

கரூர் பகுதியில் வீடு, கடை, அலுவலகம் இவற்றில் வாசல் தெளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் வர்ணம், பச்சை வர்ணம் கலந்து பார்ப்பதற்கு மாட்டு சாணம் தெளித்தது போன்ற மாய தோற்றத்தை தருகிறது. உண்மையில் மாட்டு சாணத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது விஷத்தன்மை கொண்ட ரசாயன பொருள். கரூர் பகுதியில் தற்கொலைக்கு முயல்பவர்கள் இதை சாப்பிடுவதாகவும் சொல்கிறார்கள்.
தற்போது மதுரையிலும் இதை சில வீடுகளில் வாசல் தெளிக்க பயன்படுத்துகிறார்கள்.

Tuesday 14 October 2014

எங்கே ஆணாதிக்கம்?

ஆணாதிக்க சண்முகம் என்று பல பெண்களும், சில ஆண்களும் கூவிகிட்டு திரியிறாய்ங்கே.
முதியோர் இல்லத்தில் இருக்கும் எல்லா தாத்தா, பாட்டியையும் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பதில் ஒன்று தான். "என் மகன் நல்லவன் தான். வந்த மருமக சரியில்லை" என்று.  இதை பெண்ணாதிக்கம் என்று சொல்லலாமா? பெண்ஈயவாதிகளே!

Sunday 12 October 2014

Say no

Say no to crackers. Save the peaceful world.

பட்டாசுகள் வாங்க போகிறீர்களா?

யுத்தங்களில் மக்களை கொல்வதற்காக தயாரிக்கப்படும் வெடி மருந்து பொருட்களில் இருந்து தான் பட்டாசுகளும் தயாரிக்கப்படுகின்றன. வெளிப்புற வடிவங்கள் வேறுதானே தவிர உள்ளே இருக்கும் சரக்கு ஒன்று தான்.
நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள். நீங்கள் வெடிகுண்டு வாங்கத் தான் போகிறீர்களா?

ஹோமம், யாகம்

ஹோமம், யாகம் இந்த இரண்டு காரணங்களுக்காகவும் இந்தியா முழுவதும் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு, அழிக்கப்படுகின்றன.

பெண்களை ரசிக்கும் உரிமை

பெண்கள் குளிப்பதை பார்த்து ரசிக்கும் உரிமை பிள்ளையாருக்கும் இவன் தாய்மாமன் கிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதைப் பற்றி கேட்டால் பிள்ளையாருக்கு அவன் ஆத்தா பார்வதி போலவே பெண் வேண்டும் என்பதற்காக குளத்தங்கரையில்  குந்தியிருப்பதாக சொல்கிறார்கள்.
பெண்ணை பார்ப்பதற்கு வேறு இடமே இல்லையா? காய்கறி வாங்க செல்லும் போது காய்கறி கடை அல்லது சந்தைக்கு அருகில் குந்திகினு லுக் விடலாம். விவசாய வேலைக்கு செல்லும் போது பாதை ஓரத்தில் குந்திக்கலாம். இதையெல்லாம் வுட்டுபோட்டு குளிக்கும் போது தான் பாக்கணுமோ?
படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மனிடம் சொல்லியிருந்தா அவன் பிள்ளையாரின் விருப்பத்திற்கு ஏற்ப பெண்ணை படைத்திருப்பானே?

Wednesday 8 October 2014

ஆடை

வெப்பமான நிலப்பரப்பில் வசிப்பவர்களிடம் கோட், ஷூ அணிந்து தான் வேலைக்கு வரவேண்டும் என்று உத்தரவிடுவதும், குளிர்பிரதேசம் அல்லது பனிபிரதேசத்தில் வசிப்பவர்களிடம் கதர் சட்டை, கதர் வேட்டி அணிந்து தான் வேலை பார்க்க வேண்டும் என்று சொல்வதும் ஒன்று தான்.
இரண்டாவது தகவல் நடப்பதாக தெரியவில்லை. ஆனால் முதல் தகவல் இந்தியாவில் நடக்கிறது.

ஜாதீ

நேற்று நான் விற்கும் தேன் விற்பனைக்காக வீடு வீடாக சென்று பிட் நோட்டீஸ் போட சென்றேன்.
ஒரு வயதான மனிதர் தேனை பற்றி விசாரித்தார். அப்படியே என் ஜாதீ என்னவென்றார்?
பிச்சை எடுக்கும் நான் என்ன ஜாதீயா இருந்தா உனக்கென்ன? பிச்சை போடும் நீ என்ன ஜாதீயா இருந்தா எனக்கென்ன?
சென்னையில் வசித்த போது அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியின்றி கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உணவளித்த பலர் என்ன ஜாதீ என்று எனக்கு தெரியாது.
என் ஜாதீக்காரனால் விவசாயம் செய்யப்பட்டு, என் ஜாதீக்காரனால்
வாகனத்தில் என் ஊருக்கு கொண்டு வரப்பட்டு, என் ஜாதீக்காரனால் packing  செய்யப்பட்டு, என் ஜாதீக்காரனால் விற்கப்பட்டு, என் வீட்டில் சமைத்தால் தான் அல்லது என் ஜாதீக்காரனின் ஹோட்டலில் தான் நான் சாப்பிடுவேன் என்று நினைத்தால் நான் எந்த உணவையும் சாப்பிட முடியாது.
என் ஜாதீக்காரனால் விளைவிக்கப்பட்ட பருத்தியை கொண்டு, என் ஜாதீக்காரனால் துணியாக உருவாக்கப்பட்டு, என் ஜாதீக்காரனால் தைக்கப்பட்டு, என் ஜாதீக்காரன் கடையில் வாங்கி
அணிய வேண்டும் என்று நான் நினைத்தால் என் ஆயுள் முழுவதும் நிர்வாணமாகத் தான் நான் இருக்க வேண்டும்.
என் ஜாதீக்காரனால் உருவாக்கப்பட்ட பொருட்களை கொண்டு, என் ஜாதீக்காரனால் கட்டப்பட்ட வீட்டில் தான் நான் குடியிருப்பேன் என்று நினைத்தால் தெருவில் தான் குடும்பம் நடத்த முடியும்.

Sunday 5 October 2014

கருவறை

இந்தியாவில் கோவில் கருவறை கட்டப்பட்டதன் ஆரம்ப கால நோக்கம் என்னவெனில் கோவில் பூசாரி வெயில் படாமல் இருக்கவும், மழையில் நனையாமல் இருக்கவும் தான்.

ஓம்

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தங்களின் பெயரில் கொண்ட மனிதர்களுக்கு அளவுக்கு அதிகமான துன்பங்கள் நேரும்.
எந்த ஒரு மனிதரின் பெயரிலும் ஓம் என்ற வார்த்தை இடம் பெறக்கூடாது.

Saturday 4 October 2014

இளநீர் குருத்து

இளநீர் சாப்பிடும் யாருமே அதில் இருக்கும் குருத்தை சாப்பிடுவதே இல்லை.
இளநீர் சாப்பிட்ட பிறகு அதில் இருக்கும் மெல்லிய ஓடு பகுதி தான் குருத்து ஆகும். தேங்காய் உருவான பின் இந்த மெல்லிய குருத்தானது கடினமான ஓடாக மாறுகிறது.
இளநீர் சாப்பிட்ட பின் இளநீர் வெட்டுபவரிடம் குருத்தை நறுக்கி கொடுங்கள் என்றால் அவரே குருத்தை நறுக்கி கொடுப்பார்.
இந்த குருத்தானது வயிற்று புண்,  சர்க்கரை வியாதி இவற்றுக்கு அருமருந்து.

Pyramid

பிரமிட் பூமியில் இருக்கும் சக்தியை உறிஞ்சுவதோடு மட்டுமல்லாது பூமியில் அளவுக்கு அதிகமான வெப்பத்தை இறக்குகிறது. பூமி பாலைவனமாக மாற இந்நிகழ்வும் ஒரு காரணமாக அமைகிறது.

Thursday 2 October 2014

புத்தகம்

நேற்று நண்பனின் புத்தக கடையில் அமர்ந்து இருந்தேன். அப்போது ஒரு கணவனும், மனைவியும் அவர்களின் சிறு பெண்ணோடு வந்தார்கள். அந்த கணவர் தன் மகளோடு சேர்ந்து 6 புத்தகங்களை தேர்வு செய்தார். பில் எழுதும் சமயத்தில் அந்த மனைவி திட்டியதால் அவர் தேர்வு செய்த 4 புத்தகங்களை வேறு வழியின்றி வேண்டாம் என்று கூறி விட்டு 2 புத்தகங்கள் மட்டுமே வாங்கினார்.
அவர்களுக்குள் நடந்த உரையாடல் சற்று சுருக்கமாக,
மனைவி "புத்தகம் வாங்குறதெல்லாம் எதுக்கு?"
கணவன்  "தேவைப்படுது வாங்குறேன்"
  மனைவி "தண்ட செலவு"
கணவன் "நீ இப்ப தீபாவளிக்கு 20000 ரூபாய்க்கு சேலை வாங்கிருக்க. நான் ஏதாவது சொன்னேனா?" 
மனைவி "கதை படிக்கிறது முக்கியமாக்கும்" 
கணவன் "சினிமாலயும் கதை தானே சொல்றாங்க. அதை மட்டும் ஏன் பாக்குற?" 

The argument continued like "coffee"   "toffee"
கடைசியில் அந்த கணவர் வாங்கிய 2 புத்தகங்களின் மொத்த மதிப்பு 200 ரூபாய் மட்டுமே.
20000 : 200
ஆணாதிக்க சண்முகம் என்று கூவும் பெண்களெல்லாம் வாங்க. நல்ல தீர்ப்பு சொல்லுங்க.

Bike horn

கொழுந்தியாளை பின்னாடி உக்கார வச்சுக்கிட்டு பைக் ஓட்டும் போது பைக் ஹாரன் அடிச்சுக்கிட்டேதான் வண்டி ஓட்டுவாய்ங்க போல.
நானும் ஒரு நாள் ஹாரன் அடிச்சுக்கிட்டே பைக் ஓட்டுவேன்டா!

Monday 29 September 2014

Aquafina

Giving back more water than we take என்று Pepsi நிறுவனத்தின் ஒரு பொருளான  aquafina தண்ணீர் கேனில் பிரிண்ட் செய்திருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே இதை இவர்கள் பின்பற்றுகிறார்களா என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

Sunday 28 September 2014

சாக்கடை

சாக்கடை என்பது ஏழைகள் இருக்கும் இடத்தில் தான் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாக்கடையின் ஆரம்பம் எல்லார் வீட்டு கழிவறையும், குளியலறையும் தான். சாக்கடையின் உருவாக்கத்தில்
பணக்காரர்களுக்கும் பங்கு இருக்கிறது.
சாக்கடை திறந்த நிலையில் இருக்கும் இடத்தில் ஏழைகள் இருக்கிறார்கள்.
பணக்காரர்கள் அதை மூடிக்கொள்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

பணம்

பணத்தை படைத்தது கடவுள் அல்ல. மனிதன் தான். பணத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை.
உன்னை தினமும் கும்பிடுறேனே! எனக்கு பணத்தை கொடுக்க மாட்டேங்கிறீயே என்று கடவுளோடு சண்டை போடும் பல கோடி சராசரி மனிதர்களில் நானும் ஒருவன்.
மனிதனால் படைக்கப்பட்ட ஜாதி, மதம், பணம்,  பிளாஸ்டிக் இவை நான்கும் அழிவையே தரும்.

Friday 26 September 2014

குண்டலினி

குண்டலினி சக்தியை மேலேற்றுவது விரைவான மரணத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீகவாதி (அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை.) குண்டலினி சக்தியை மேலேற்றும் போது மூளை வெடித்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது.
என்னை பொருத்தவரை எந்த ஒரு சக்தியையும் மூளையை நோக்கி மேலெழுப்புவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். விரைவான மரணத்திற்கு வழிவகுக்கும்.  அது நேர்மறை, எதிர்மறை எதுவாக இருந்தாலும் சரி.

பொய்யான புரட்சி

இந்த செவ்வாய் கிழமை அமாவாசை அன்று நண்பன் அவனுடைய பெற்றோருக்கு திதி கொடுத்தான். நானும் அவனோடு திருப்புவனம் சென்றேன். திதி கொடுப்பது அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயம். திதி கொடுப்பது போன்ற விசயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

இங்கே தகவல் அதுவல்ல.

திதி கொடுக்கும் சமயத்தில் plastic disposable cup இல் எள், வெல்லம், பூ இவற்றை வைத்து அதை அப்படியே வைகை ஆற்று மணலில் புதைக்கிறார்கள்.
Plastic disposable cup ஐ எதற்காக மணலில் புதைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

பிளாஸ்டிக்கை பல விதங்களிலும் பயன்படுத்திக் கொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூச்சலிடுவது பொய்யான புரட்சியே.

பாரதிராஜா

பாரதிராஜா அவர்களின் படங்களில் வருவது போல், வெட்கத்தினால் முகத்தை மூடிக்கொண்டு விரலிடுக்கின் வழியாக ஆணை பார்த்து ரசிக்கும் பெண்கள் எங்கே?

Selfie மூலம் அரைகுறை நிர்வாணத்துடனும், முழு நிர்வாணத்துடனும் தெறம காட்டுபவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதை கேட்டால் ஆணாதிக்க சண்முகம் அப்படீன்னு சொல்றாளுக!

நல்லா காட்டுங்கடி! நல்லா காட்டுங்க! 

நாங்க எங்கடீ ஆதிக்கம் பண்றோம். நீங்க தானடி ஆடுறீங்க.

பாரதிராஜா காலம் போயிடுச்சு டும் டும் டும் டும்.
Selfie  காலம் வந்திருச்சு டும் டும் டும் டும்.

புரளி

புரளியின் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று சிலர் நிரூபித்திருக்கிறார்கள்.
1) சில மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை பேசியதாகவும், பெண் பிள்ளைகளுக்கு தேங்காயை தலையை சுற்றி போட வேண்டும் என்றதாகவும் தேங்காய் உற்பத்தியாளர்களால் புரளி பரப்பி விடப்பட்டது. பிறந்த குழந்தை எப்படிடா பேசும் என்று சுய சிந்தனை இல்லாத தமிழர்களால் அன்று ஒரு நாள் மட்டும் தேங்காய் விற்பனை வரலாறு காணாத அளவு எகிறியது. மதுரையில் எல்லா தெருக்களிலும் தேங்காய்கள் குவிந்து கிடந்தன.
2) 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 முறை சேலை உற்பத்தியாளர்களால் புரளி பரப்பி விடப்பட்டது. ஆண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரிக்கு மஞ்சள் வர்ண சேலை கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் ஆண்களுக்கு துன்பம் வரும் என்பது தான் அது. இரண்டாவது முறையாக பச்சை வர்ண சேலை என்று நிறத்தை மாற்றி விற்றார்கள்.
இது சில நாட்களுக்கு நீடித்த விற்பனை.
மூன்றாவதாக நான் சொல்ல இருப்பது உலக அளவில், வரும் எல்லா ஆண்டுகளிலும் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பரப்பி விடப்பட்டது.
3) shaving blade, shaving products தயாரிப்பவர்களால் பரப்பி விடப்பட்ட புரளி தான் அது. தாடி வைத்திருப்பவர்கள் அசிங்கமானவர்கள். தாடி இல்லாதவர்களே அழகானவர்கள். Marketing & sales  துறையில் பணிபுரிபவர்கள் தாடி வைத்திருக்க கூடாது. மீறி தாடி வைத்திருந்தால் அவரிடம் யாருமே பொருட்களை வாங்க மாட்டார்கள். விற்பனை குறையும். ஷேவிங் செய்து தாடி இல்லாதவர்களிடம் தான் எல்லோரும் பொருட்களை வாங்குவார்கள். விற்பனை அதிகரிக்கும். இது தான் அந்த புரளி.
சுய சிந்தனை இல்லாத எல்லா நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை தினமும் ஷேவிங் செய்ய பணிக்கின்றன. இதன் சங்கிலி தொடராக இந்த நிறுவனங்களில் பணி செய்து விட்டு சுய தொழிலில் ஈடுபடுவோரும் இவர்களிடம் வேலை பார்ப்பவர்களை பணிக்கிறார்கள்.
சீக்கியர்கள் இந்த புரளியை 100% ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த புரளியை நம்பாமல் இருந்தால் உலக அளவில் shaving products விற்பனை மாபெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது தான் உண்மை.
தாடி வைத்திருப்பது அழகில்லை என்றால் அப்புறம் என்ன மசுருக்குடா ஏசுநாதரை கும்பிடுறீங்க வெண்ணைகளா?
தாடி வைத்திருப்பது அழகில்லை என்றால் அப்புறம் எதுக்குடா ஜேசுதாஸின் பாடல்களை கேட்டு ரசிக்கிறீங்க?
தாடி அழகில்லை என்றால் பெரியாரின் கருத்துக்களை எதுக்குடா கேக்குறீங்க?
இந்தியாவின் தேசிய கீதத்தை தந்த தாகூர் தாடியுடன் தான்டா இருக்காரு வெண்டர்களா!
முப்பாலும் தந்த திருவள்ளுவர் தாடியுடன்தான்டா இருக்காரு பக்கிகளா!
என் தாடி என் உரிமையடா!

Tuesday 23 September 2014

தீயசக்தி

தீயசக்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செய்யும் எல்லா செயல்களுக்கும் முட்டுக்கட்டை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு முன்னேற்றமான செயலிலும் அவர்களால் வெற்றி பெறவே முடியாமல் போகும் நிலை அவர்களுக்கு வரலாம். செய்யாத தவறுகளுக்கும் தண்டனை அனுபவிக்கும் நிலை சில சமயத்தில் ஏற்படலாம்.

Monday 22 September 2014

மகாபாரதம்

என் அக்காவும், தங்கையும் குளத்தில் குளிக்க அவர்களின் தோழிகளோடு செல்கிறார்கள். அங்கே ஒருவன் அவர்களின் ஆடைகளை எடுத்து ஒழித்து வைத்துக்கொண்டு நிர்வாணமாக வெளியே வாருங்கள் அப்போது தான் நீங்கள் என்னை அடைய முடியும் என்று சொல்கிறான். இதை கேள்விப்பட்ட நான் அவனிடம் சென்று "கிருஷ்ணா முகுந்தா முராரே" என்று பஜனை பாடுவேனா? அல்லது "டேய் ​​​​​​​​​​​​​​​​​​​​ __________________ " என்று கெட்ட வார்த்தையில் திட்டி அவனோடு சண்டைக்கு செல்வேனா?

இதே நிலை உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

எப்படி சைவமாகும்?

புலியின் தோலை ஆடையாகவும், புலியின் தோல் மீது அமர்ந்து கொண்டும் இருக்கும் சிவன் எப்படி சைவமாவார்? 
அப்படியானால் தோலினால் உருவாக்கப்பட்ட செருப்பு,  பர்ஸ்,  பெல்ட் மற்றும் பட்டு புழுக்களை கொன்று எடுக்கப்படும் பட்டு நூலால் தயாரிக்கப்பட்ட ஆடை அணியும் எல்லோரும் சைவம் தான்.
ஒரு திரைப்படத்தில் s.s.r,  m.r.ராதாவிடம் சொல்வார் "நாங்கள் ஜீவகாருண்ய இயக்கத்தை சேர்ந்தவர்கள். உயிரினங்களை கொல்ல மாட்டோம்" என்று.
அதற்கு  m.r.ராதா கேட்பார் "அப்படின்னா மூட்டை பூச்சி கடிச்சா என்ன செய்வீங்க?"  அப்படின்னு.
உண்மையில் சைவம் என்று யாருமே கிடையாது. உணவு, உடை, இருப்பிடம், கௌரவம், அந்தஸ்து, அதிகாரம் மற்றும் பல காரணங்களுக்காக பல உயிரினங்கள் எல்லா மனிதர்களாலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொல்லப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.
இந்த உலகத்தில் யாருமே சைவம் கிடையாது.

மகாபாரதம்

5 ஆம்பளைங்க 1 பொட்டச்சி கூட படுப்பதை பிராத்தல் என்று சொல்லலாம் அல்லது group sex என்று சொல்லலாம்.

Sunday 21 September 2014

உங்களிடம் கேள்வி கேட்கிறேன்

பஞ்ச பாண்டவர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் உலக மக்கள் அனைவரிடமும் கேள்வி கேட்கிறேன்.
உங்கள் குடும்பத்தில் இருக்கும் சகோதரர்கள் எல்லோரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா?
உங்கள் குடும்பத்தில் பிறந்த பெண்ணை 5 சகோதரர்களுக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா?

மகாபாரதம்

5 ஆம்பளைங்க 1 பொட்டச்சி கூட படுத்தா அதுக்கு பேரு குடும்பம் கிடையாதுடா butterகளா.

விவாகரத்து

வீட்டின் உள்ளே கழிவறை, குளியலறை இருந்தால் கணவன், மனைவி மனதாலும்,  உடலாலும் பிரிந்து வாழும் நிலை, விவாகரத்து போன்றவற்றுக்கு வாய்ப்பு அதிகம்.

தொப்புள் தரிசன தேவதைகள்.

ஒழுக்கமாக, கண்ணியமாக உடை அணியும் எந்த ஒரு பெண்ணையும் இங்கே குறிப்பிடவில்லை என்பதை பணிவென்புடன் jorry என்கு டமில் கொஞ்சம் weeku, பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

திருமணமாகி பிள்ளை பெற்ற பெண்கள் தான் தொப்புள் தெரியும்படி உடை அணிகிறார்கள். திருமணமாகாத பெண்கள் தொப்புள் தெரியும்படி உடை அணிவதாக எனக்கு தெரியவில்லை.

திருமணமான பெண்களும், திருமணமாகாத பெண்களும் எதையாவது காட்டத்தான் செய்கிறார்கள். ஆனால் இருவருமே காட்டும் விதத்திலும், காட்டும் அளவிலும் வித்தியாசப்படுகிறார்கள்.

யுரேகா! யுரேகா!

Saturday 20 September 2014

தாழி

தமிழர்களிடையே இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் எப்போது வந்தது என்று தெரியவில்லை.
நம் முன்னோர்கள் இறந்தவர்களை தாழியில் வைத்து புதைத்ததாகத்தான் நம்முடைய சரித்திரங்கள் கூறுகின்றன.

Friday 19 September 2014

ஆறு சுவை உணவு

தினமும் உணவில் ஆறு சுவைகளையும் அவரவரின் தற்போதைய உடல்நிலைக்கேற்ப சரியான விகிதத்தில் சேர்த்து உண்டால் 100% ஆரோக்கியமாக வாழலாம் என்ற கருத்தை நண்பன் பழனி சொன்னான். இதுவரை என் வாழ்வில் ஆறு சுவை உணவை சாப்பிட்டதே இல்லை. இனிமேல் தினமும் சாப்பிட திட்டமிட்டிருக்கிறேன். ஆனால் எப்போதிலிருந்து நடைமுறைப்படுத்த போகிறேன் என்று தெரியவில்லை. நாம் எல்லோருமே பெரும்பாலும் உப்பு,  உரைப்பு, புளிப்பு சுவையை தான் தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.

Thursday 18 September 2014

தூக்கத்திற்கு தடங்கல்

சிலருக்கு நள்ளிரவில் திடீரென விழிப்பு ஏற்பட்டு சில மணி நேரத்திற்கு தூக்கம் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம் உடலில் இருக்கும் எதிர்மறை சக்தி மூளையை நோக்கி மேலெழுந்து மூளையில் லேசான அல்லது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது போல் தூக்கம் தடைபடும் பட்சத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று திருநீறை ஆள்காட்டி விரலில் சிறிதளவு எடுத்து உச்சந்தலையின் நடுமையத்தில் திருநீறை வைத்து ஆள்காட்டி விரலால் லேசாக அழுத்தினால் போதும்.  அல்லது நெற்றிப் பொட்டு பகுதியில் திருநீறு பூசிக் கொள்ளலாம்.
திருநீரானது எதிர்மறை சக்தியை கீழே இறக்கி அதை வெளியற்றும் செயலை செய்யும். சில நிமிடத்தில் மீண்டும் தூக்கம் வரும்.
தூக்கத்தில் தடங்கல் ஏற்படும் போதெல்லாம் இதை செய்ய வேண்டும்.

Low sugar

இரத்தத்தில் குறைந்த அளவுக்கு சர்க்கரை இருப்பவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும். புழுங்கல் அரிசி சாதம் சாப்பிட கூடாது.

Wednesday 17 September 2014

மகன்

ஒரு மகனின் வாழ்க்கையில் மிகக் கொடிய தருணங்களில் ஒன்று, தன் தந்தையை இழப்பதும், தன் தாயை விதவை கோலத்தில் பார்ப்பதும்.

Marketing & sales

Marketing & sales துறையில் பணிபுரிபவர்கள் தாடி வைத்திருக்க கூடாது, சட்டையை பேண்டிற்குள் திணித்திருக்க வேண்டும், செருப்பு அணிய கூடாது, ஷூ மட்டுமே அணிய வேண்டும் என்று சட்டம் போட்ட பரதேசி எவன் என்று எனக்கு தெரியவில்லை.

Saturday 13 September 2014

மக்களை ஏமாற்ற பயன்படும் ஆன்மீகம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் 108 திவ்ய தேச பெருமாள்களும் ஒன்றாக கூடி மதுரை மக்களுக்கு அருள் பாலிக்கிறார்களாம். 12-9-2014 முதல் 21-9-14 வரை.  மதுரையில் இருக்கும் முட்டாள்கள் எல்லாம் இங்கு செல்வார்கள் என்பது உறுதி.
தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடத்தி தான் பணம் வசூலிப்பார்கள்.
இப்போது சாமியை காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள்.
பல கோடி வசூலாகும் என்று நம்புகிறேன். மதுரையில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்களோ அவ்வளவு பணம் வசூலாகும்.

Tuesday 9 September 2014

பீர்க்கங்கூடு

கிராம புறங்களில் பாத்திரம் தேய்ப்பதற்கு பீர்க்கங்கூடு பயன்படுத்தப்படுகிறது. 

Sunday 7 September 2014

காமம்

காமம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது என்று நினைக்கிறான்.
நாய்களின் காமத்தின் போது கல்லால் அடிக்கிறான்.
நாயை பார்த்து கூட பொறாமைப்படுகிறான் மனிதன்.

சட்டம் (law)

பாதத்திற்கு ஏற்றார் போல் தான் செருப்பு இருக்க வேண்டும். செருப்புக்கு ஏற்றார் போல் தான் பாதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது முட்டாள்தனமானது.
அதே போல் தான் சட்டமும்.

Non stick

எண்ணெய் பயன்படுத்த தேவை இல்லை என்ற காரணத்தால் பலர் தங்கள் வீடுகளில் non stick tawa போன்ற non stick சமையல் பாத்திரங்களை பயன்படுத்துகிறார்கள்.
இந்த பாத்திரங்களில் பெயிண்ட் போன்ற ஒரு ரசாயன பொருள் முலாம் பூசப்படுகிறது. இது ஆரோக்கிய குறைவையும், ஆயுள் குறைவையும் ஏற்படுத்தும்.
Non stick சமையல் பாத்திரங்களை பயன்படுத்தினால் உங்கள் உடலில் ஆரோக்கியம் ஒட்டவே ஒட்டாது.

Saturday 6 September 2014

பணம் பந்தியிலே

பணம் இல்லாத மனிதர்களை அடிமுட்டாளாகவே பார்க்கிறார்கள்.

மரண எச்சரிக்கை

மரணத்தை பற்றிய எச்சரிக்கையை பசுக்கள் விடுப்பதை முந்தைய பதிவொன்றில் சொல்லி இருந்தேன்.
காகங்களும் மரணத்திற்கு முந்தைய அறிகுறியை காட்டுகின்றன.
ஏதாவது ஒரு இடத்தில் காகங்கள் கூட்டமாக அதிக சப்தம் எழுப்பிக் கொண்டு வட்டமடித்துக் கொண்டே இருந்தால் அந்த பகுதியில் வாழும் ஒருவருக்கு மரணம் நிகழப்போகிறது என்று அர்த்தம்.
மரணம் ஒரு வாரத்திற்குள் நிகழலாம்.
நேர்மறை சக்தியான பசுக்களும், எதிர்மறை சக்தியான காகங்களும் மரணத்திற்கு முந்தைய எச்சரிக்கையை விடுக்கின்றன.
இந்த இரண்டு வித எச்சரிக்கைகளையும் உணர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் மரணத்தை தள்ளிப் போடலாம்.
குறிப்பாக வாஸ்து குற்றங்கள் இருப்பின் அதை சரி செய்யலாம். அல்லது வேறு ஏதாவது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

Friday 5 September 2014

வைக்கோல்

நகர் பகுதியில் எல்லா இல்லத்தரசிகளும் பாத்திரம் தேய்க்க நைலான் இழைகளினால் தயாரிக்கப்பட்ட scrubber பயன்படுத்துகிறார்கள்.
கிராம பகுதியில் இல்லத்தரசிகள் வைக்கோலை பயன்படுத்துகிறார்கள்.

Monday 1 September 2014

வாஸ்து

வீட்டிற்குள்ளே கழிவறை, குளியலறை இருந்தால் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தே தீரும். அதை தடுக்க எந்த கடவுளாளும் முடியாது.

America Vs china

சீன தேசத்து பொருட்கள் தான் தற்போது எல்லா நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அவை தரமானவையா, தரமற்றவையா என்பது வேறு விஷயம். உலகின் பிரபலமான பன்னாட்டு நிறுவனங்கள் கூட சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் மீது தங்கள் பெயரை பொறித்து விற்பனை செய்கின்றன.இதனால் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்து கொண்டே போகிறது. சீனா நல்ல நாடா, கெட்ட நாடா என்பது வேறு விசயம்.

அமெரிக்கா உலகின் பல கோடி மக்களை வேவு பார்ப்பதிலேயே நேரத்தையும், பணத்தையும் அளவுக்கு அதிகமாக  செலவழிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், மைனர் கெட்டால் மாமா வேலை என்ற நிலைக்கு அமெரிக்கா செல்லும். அமெரிக்காவின் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியை சந்திக்கும். அமெரிக்க டாலர் மதிப்பு என்ற மாய வலை பல நாடுகளாலும் அறுக்கப்படும். குறிப்பாக சீனாவால்.