Saturday 6 December 2014

ராஜபக்சே

திருப்பதி கோயிலுக்கு வருகை தரும் ராஜபக்சேவிற்கு ஒரு டாக்டர் பட்டத்தையும், சர் பட்டத்தையும் கொடுத்தால், அடிமாடுகளாகவும், இந்தியனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் நாங்கள் எல்லோரும் அந்த மகானை சர் டாக்டர் ராஜபக்சே என்று சொல்லுவோம்.  விழாவிற்கு கருணாநிதி தான் தலைமை தாங்க வேண்டும். (நான் ஏட்டையா கூட தான் கோர்ட்டுக்கு போவேன்)

வரலாறு முக்கியம் அமைச்சரே!

இப்போது இருக்கும் ஐ.நா சபைக்கே ராஜபக்சேவை தண்டிக்க வக்கில்லை. அப்புறம் என்ன மசுருக்கு ஐ.நா சபை இருக்குன்னு எனக்கு தெரியவில்லை.

ராஜபக்சே ஒருவேளை அமெரிக்காவோடு யுத்தம் நடத்தி இருந்தால் உடனே உலக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி கொன்றிருப்பார்கள்.
ஆனால் ராஜபக்சே கொன்றது அடிமாடுகளான தமிழர்களை தானே.

ராஜபக்சே ஒருவேளை மலையாளிகளை கொன்றிருந்தால் எங்கள் மன்மோகன்சிங் மைக்கை புடுச்சு ராஜபக்சேவுக்கு எதிராக ஒரு மணி நேரம் வீரவசனம் பேசி இருப்பார். அடிமாடுகளான தமிழர்களை கொன்றதால் தான் center fresh சாப்பிட்டு வாய்க்கு பூட்டு போட்டுகிட்டு பொத்திக்கொண்டு இருந்துட்டார்.

இந்தியாவிலேயே தமிழனை தமிழனாக வாழாதே இந்தியனாக வாழு என்று மத்திய அரசு சொல்கிறது.
சிலோனில் மட்டும் தமிழன் தமிழனாக வாழ்ந்து விட முடியுமா என்ன?

No comments:

Post a Comment