Thursday 4 December 2014

குஷ்பூ

கல்லூரி காலத்தில் (93-96) குஷ்பூவின் ரசிகனாக இருந்தேன். புத்தகம், நோட்டு, பர்ஸ், கால்குலேட்டர் உள்பட  எல்லாவற்றிலும் குஷ்பூவின் படங்கள் வைத்திருப்பேன். அதுபோக பத்திரிகைகளில் வரும் குஷ்பூவின் படங்களை வெட்டி சேகரித்து வைத்திருப்பேன்.
அதற்கு பிறகு ஸ்னேகாவின் ரசிகனானேன்.
தமிழர்களை கொல்ல திட்டம் போட்டு கொடுத்து அதற்கு உதவியும் செய்த காங்கிரஸில் குஷ்பூ சேர்ந்திருப்பது பிடிக்கவில்லை.
நாட்டில் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது குஷ்பூ காங்கிரஸில் சேர்ந்ததை ஒரு முக்கியமான விசயம் என்று பேட்டி எடுக்க பத்திரிகைகாரனுங்களும்,  டீவிகாரனுங்களும் பின்னாடியே அலையிறானுங்க. 
நேருவும், காமராஜரும் இப்போது உயிரோடு இருந்தால் குஷ்பூவை வைத்து ஓட்டு கேட்கும் நிலைக்கு காங்கிரஸ் வந்து விட்டதை நினைத்து கதறி அழுவார்கள்.

No comments:

Post a Comment