Saturday 27 December 2014

அருவி & ஷாம்பூ

1996 முதல் 2014 வரை ராமேசுவரம் கடலில் 5 முறை குளித்திருக்கிறேன். திருச்செந்தூர் கடலில் 5 முறை குளித்திருக்கிறேன். 2003ல் ஒரு ஜோசியர் மூலமாக பரிகாரம் செய்வதற்காக நவகிரக கோயில்கள் மற்றும் அதை சுற்றி இருக்கும் பல கோயில்களுக்கு சென்ற போது அங்கிருந்த பல கோயில் குளங்களில் (திருநள்ளாறு சனி தீர்த்தம் உட்பட) குளித்திருக்கிறேன்.  தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் குளித்தது என் வாழ்வில் மரண போராட்டங்களையே தந்திருக்கின்றன.
எனவே இந்த பிரச்சினை நீங்க இப்போது குற்றாலம், குட்லாடம்பட்டி, சுருளி போன்ற அருவிகளில் குளித்தேன்.
என்னை தவிர எல்லோருமே ஷாம்பூ தேய்த்து தான் குளித்தார்கள். நீரை மாசுபடுத்தும் இந்த ரசாயனம் கலந்த ஷாம்பூவை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
ஷாம்பூ தேய்த்து குளிப்பது என்ன பெரிய குற்றமா? என்று நீங்கள் கேட்கலாம்.
இதற்கு அந்நியன் பாணியில் தான் நான் கேள்வி கேட்க முடியும்.
5 பைசா திருடினா தப்பா? இல்லையா?

No comments:

Post a Comment