Sunday 22 September 2013

கறி.

கறியை வறுத்து சாப்பிட நினைப்பவர்கள், அதை புளித்த தயிரில், குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு வறுத்தால் அதன் சுவை நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். சில அசைவ உணவகங்களில் இவ்வாறு செய்வதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

முன்பு என்னோடு வேலை பார்த்த ஒரு கேரளத்து பெண் சொன்ன தகவலையும் உங்களுக்கு சொல்கிறேன். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது.

கேரளாவில் பல இடங்களில் கறியை, சுத்தமான கள்ளில் ஊற வைத்து வறுப்பார்களாம். அதன் சுவை நன்றாக இருக்குமாம்.

குழந்தையும் தெய்வமும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நம்பும் நம் நாட்டில், நம் குழந்தைகளின் வாயால் "rain rain go away, come again another day" என்ற பாடலை பாட சொல்கிறோம். நாம் என்ன அண்டார்டிகா கண்டத்திலா வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்?

இந்த பாடலை குழந்தைகளின் பாட திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

இந்த பாடலை எவன் குழந்தைகளின் பாடத்தில் சேர்த்தான் என்று தெரியவில்லை.

பிரமிட்.(pyramid)

பிரமிட் நேர்மறை சக்தியை தரும் என்று நம்பி பலரும் வீட்டில் வைக்கிறார்கள். ஆனால் பிரமிட் உண்மையிலேயே நேர்மறை சக்தியை தருவதில்லை. எதிர்மறை சக்தியை தான் 100% தரும். காரணம் பிரமிடின் தட்டையான பகுதியை பூமியை நோக்கியும், கூர்மையான பகுதியை வானத்தை நோக்கியும் வைக்கிறார்கள்.

தட்டையான பகுதி பூமியில் இருக்கும் நேர்மறை சக்தியை உள்ளிழுத்து கூர்மையான பகுதி வழியாக வானத்திற்கு கடத்துகிறது. இதனால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக துன்பங்கள் ஏற்படும். விரைவான மரணம் நிகழும்.

மேலும் இவ்வாறு வைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கும். உச்சகட்ட பிரச்சனையாக பாலைவனம் உருவாகும்.

எகிப்தில் இருக்கும் பிரமிட் நிறுவப்பட்ட பின்புதான் அங்கு பாலைவனம் உருவானது என்பது எனது கருத்து. எகிப்தின் பிரமிடு அங்கே நிறுவப்படுவதற்கு முன் அங்கே கண்டிப்பாக செழிப்பான நிலம் இருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

பிரமிடின் கீழ் அமர்ந்து தியானம் செய்கிறேன், பிரமிடின் மேல் அமர்ந்து தியானம் செய்கிறேன், பிரமிடிற்கு உள்ளே அமர்ந்து தியானம் செய்கிறேன் என்று ஏதாவது செய்தால், அது உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் மரணத்தை நீங்கள் வெகு விரைவில் சந்திக்க நேரிடும்.

இந்த பதிவின் தொடர்ச்சி கீழ்க்கண்ட பதிவில் தொடர்கிறது.
http://thilai.blogspot.in/2013/10/the-sculpture-of-evil.html

Saturday 21 September 2013

தெய்வ சக்தி.

என்னை பொறுத்த வரை, மரங்களின் கீழ், மேற்கூரை இன்றி, கோபுரங்கள் இன்றி இருக்கும் தெய்வ சிலைகள் மட்டுமே 100% நேர்மறை சக்தியை கொண்டிருக்கும்.

. நேர் மறை சக்தி கிழக்கில் இருந்தும், வடக்கில் இருந்தும் மட்டுமே வருகிறது. மேற்கிலும், தெற்கிலும் எதிர்மறை சக்தி தான் இருக்கிறது. 
மேற்கூரை இன்றி, கோபுரங்கள் இன்றி, சுற்று சுவர் இன்றி இருக்கும் தெய்வ சிலைகள் பிரபஞ்ச சக்திகளுடன் 24 மணி நேரமும் நேரடி தொடர்பில் இருக்கும்.

1)நிலம். (தெய்வ சிலைகள் தரையில் வைக்க கூடாது. எனவே பீடத்தின் மீது வைக்கப்பட்டு இருக்கும்.இருந்தாலும் அவை நிலத்தோடு தொடர்பில் இருக்கும்.)
2)நீர். (மழை)
3)காற்று.
4)நெருப்பு. (சூரியன்). வெளிச்சம் (சந்திரன்).
5)ஆகாயம்.

என்னை பொருத்தவரை தெய்வ சிலைகளின் மீது கட்டப்படும் கோபுரங்கள் நேர்மறை சக்தியை பூமியில் இருந்து உறிஞ்சி வானத்திற்கு கடத்துகிறது.

அனால் மரங்கள் வானத்தில் இருக்கும் நேர்மறை சக்தியை பூமிக்கு இழுக்கிறது.

இரவில் கருவறை கதவை பூட்டி கடவுள் தூங்க போகிறார் என்கிறார்கள்.
அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி என்று பாட்டு பாடி, தூங்கும் கடவுள் எழும் சமயத்தில் பாட்டு பாடுகிறோம் என்கிறார்கள்.

கடவுள் தூங்குவாரா?

கடவுளுக்கு இமைகள் இல்லையே அவர் எப்படி தூங்குவார்?

தமயந்தி சுயம்வரம் படித்து இருக்கிறீர்களா? தமயந்திக்கு சுயம் வரம் நடக்கும்போது தேவர்கள் அனைவரும் நளனின் உருவத்தில் கலந்து கொள்கிறார்கள். குழப்பமடைந்த தமயந்தி அவர்கள் அனைவரின் கண்களையும் பார்க்கிறாள். அவர்கள் அனைவரும் விழித்த நிலையிலேயே இருக்கிறார்கள். காரணம் தேவர்களுக்கு இமை கிடையாது.

சிவராத்திரி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

ஒருவன் இரவில் வில்வமரத்தின் மீது இரவு பொழுதை கழிக்கும் நிலை ஏற்படுகிறது.. இரவில் தூக்கம் வராமல், இரவு பொழுதை கழிக்க வில்வ மரத்தின் ஒவ்வொரு இலையாக பிய்த்து கீழே போடுகிறான். அதிகாலையில் தான் அவனுக்கு தெரிகிறது மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது அவன் இலைகளை எல்லாம் போட்டு இருக்கிறான் என்பது.

இன்றும் நாம் எல்லா சிவன் கோவில்களிலும் சிவராத்திரி கொண்டாடுகிறோம். ஆனால் வில்வ மரங்கள் தான் இல்லை. வெறுமனே வில்வ இலைகளை தூவி வணங்குகிறோம்.

என்னை பொறுத்த வரை கோவில்களில் நிலத்தில் மட்டுமே நேர்மறை சக்தி இருக்கிறது. எல்லா கோவில்களிலும் கோபுரங்கள் பூமியில் இருக்கும் நேர்மறை சக்தியை உறிஞ்சி வானுக்கு கடத்திக்கொண்டே இருக்கின்றன. 


Tuesday 17 September 2013

shoalin temple.

shoalin temple என்று bruce lee படங்களிலும் சீன படங்களிலும் சொல்லுவார்கள்.

7ஆம் அறிவு படம் பார்த்த பிறகுதான் தெரிகிறது. அவர்கள் போதி தர்மன் சோழ அரசனை குறிக்கும்  "சோழன்" என்ற வார்த்தையை "shoalin" என்று சொல்கிறார்கள் என்று.

பஞ்ச பூதங்கள்.

தெய்வ சக்திகள் மனிதனை வந்து அடைய பஞ்ச பூதங்களே கடத்தல் பொருளாக பயன்படுகின்றன.

எனவே தினமும் கடவுளை வணங்குவதோடு மட்டும் இல்லாமல் பஞ்ச பூதங்களையும் சேர்த்து வணங்க வேண்டும்.

என்னை பொறுத்த வரை, பஞ்ச பூதங்களை பார்த்தும், நினைத்தும் வணங்க வேண்டும். தொட்டு வணங்க கூடாது.

அக்னியை எல்லோருமே தீபத்தில் தொட்டு வணங்குகிறோம். என்னை பொருத்தவரை அதை தவறாகவே நினைக்கிறேன்.

நிலத்தையும் சில சமயங்களில் தொட்டு வணங்குகிறோம். அதையும் தவறாகவே நான் கருதுகிறேன்.

முதலுதவி.(first aid)

குறைந்த ரத்த அழுத்தம் (low blood pressure), உயர் ரத்த அழுத்தம் (high blood pressure), மாரடைப்பு (heart attack), படபடப்பு, இவற்றிக்கு மிகச்சிறந்த முதலுதவி சின் முத்திரை தான்.

இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை வரும்போது அவர்களுக்குள் ஒரு உணர்வு வரும். அப்போது அவர்களை சின் முத்திரை பிடிக்க சொல்ல வேண்டும். இரண்டு கைகளிலுமே சின் முத்திரை பிடிக்க வேண்டும். ஒரு கையில் மட்டும் சின் முத்திரை பிடிப்பது ஆபத்தானது. அது தவறும் கூட.

சின் முத்திரை பிடிக்கும் போது மேற்சொன்ன எல்லா பிரச்சனைகளும் 90% கட்டுக்குள் வந்து விடும்.

அவருக்கு குடிக்க தண்ணீர் அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக இருந்தால் இனிப்பு கொடுக்க வேண்டும்.


தொடர்ந்து அவர் சின் முத்திரை பிடித்தவாறே இருக்க வேண்டும்.

அடுத்த கட்ட மருத்துவ நடவடிக்கை எடுக்கும் வரை, அல்லது மருத்துவமனை கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை ஆரம்பிக்கும் வரை அவர் தொடர்ந்து சின் முத்திரை பிடித்தவாறே இருக்க வேண்டும்.

septic tank.

septic tank அதாவது கழிவு நீரை தேக்கி வைக்கும் பகுதி வீட்டில் இல்லாமல் இருப்பதே மிகவும் நல்லது. கழிவு நீர் வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டுமே தவிர அதை தேக்கி வைக்க கூடாது.

கழிவு நீரை வீட்டில் தேக்கி வைத்தால் துன்பம் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.

Friday 13 September 2013

நாடுகள்.

புத்தரை வணங்கும் நாடுகள் போர் செய்ய விரும்புகின்றன - சீனா, இலங்கை.

அல்லாவை வணங்கும் நாடு தீவிரவாதத்திற்கு துணை போகிறது - பாகிஸ்தான்.

இயேசுவை வணங்கும் நாடு உலக நாடுகள் அனைத்தையும் தானே ஆள வேண்டும், உலக நாடுகள் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது - அமெரிக்கா.

Monday 9 September 2013

வணங்குதல்கள்.

கோவில்களுக்கு சென்று வணங்குவதை  விட, மரத்தின் அடியில், மலை பகுதியில், கழிவுநீர் கலக்காத சுத்தமான நீரோட்டம் உள்ள ஆற்றின் அருகே இருந்து இறைவனை வணங்குவது சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.

வேப்பமரத்தின்  கீழ் நின்று கடவுளை வணங்குவது மிகவும் சக்தி வாய்ந்தது.

வாஸ்து.

கழிவறையும், குளியலறையும் வீட்டின் வெளி பகுதியில் தான் இருக்க வேண்டும். வீட்டின் உள்ளே கழிவறை, குளியலறை இருந்தால் குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இருக்காது. சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து இருக்கும்.

தலையணை.

சிலருக்கு கழிவறையில் அமர்ந்து எழும் போதும், குனிந்து நிமிரும் போதும் தலை சுற்றல், கிறுகிறுப்பு ஏற்படலாம். இந்த பிரச்சனை இருப்பவர்கள் தலையணை இல்லாமல் சமமான தளத்தில் தரையில் அல்லது கட்டிலில் படுப்பதே சிறந்தது.

குடும்ப ஒற்றுமை பெருக.

குடும்ப ஒற்றுமை பெருக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்து, ஒரே திசை நோக்கி சாப்பிட வேண்டும். மேல் நாட்டு பாணியில் வட்டமாக, வேறு வேறு திசை நோக்கி சாப்பிட கூடாது. வேறு வேறு திசை நோக்கி சாப்பிட்டால், குடும்ப உறுப்பினர்களிடம், ஒற்றுமை இருக்காது. ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சண்டை சச்சரவுகள் இருக்கும்.

Saturday 7 September 2013

தொப்புள் தரிசன தேவதைகள்.

சினிமா நடிகைகள் பணத்திற்காகவும், புகழுக்காகவும் குறைவான ஆடையில் உலா வருகிறார்கள்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் தொப்புள் தெரியும்படி உடை அணியும் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவர்கள் எதற்க்காக தங்கள் தொப்புள் தெரியும்படி உடை அணிகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆண்களை ஈர்ப்பதற்கா?

அப்படி என்றால் ஆண்கள்  பெண்களை ஒரு போக பொருளாக பார்க்கிறார்கள் என்று இவர்கள் ஏன் சொல்கிறார்கள்?

நான் ஒன்றும் ராமன் அல்ல. கண்களை மூடிக்கொண்டு செல்ல. ஒரு பெண் தன் உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணித்து சென்றால் நான் பார்க்கத்தான் செய்வேன். ரசிக்க தான் செய்வேன்.

உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணியும் அவள் யோக்கியமானவள். அவளை பார்த்து ரசிக்கும் என்னை போன்றவர்கள் மட்டும் குற்றவாளியா?

குறிப்பு:- நான் இங்கே எல்லா பெண்களை பற்றியும் குறிப்பிடவில்லை. தொப்புள் தரிசனம் இலவசமாக தரும் தேவதைகளைப் பற்றி மட்டுமே இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். நான் சொல்லிய இந்த விசயத்தில் குற்றம் இருப்பதாக நீங்கள் நினைத்தாலும் கண்டிப்பாக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

Friday 6 September 2013

பெண் சுதந்திரம்.

பெண் சுதந்திரம் என்று பாரதி சொன்னது, ஆண்களுக்கு சமமாக படிக்க வேண்டும். ஆண்களுக்கு சமமாக வாழ வேண்டும் என்று தானே தவிர, ஆண்களுக்கு சமமாக புகை பிடிக்க வேண்டும், ஆண்களுக்கு சமமாக மது குடிக்க வேண்டும், அரை குறை ஆடை அணிய வேண்டும், உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்து விட்டு, ஆபாசம் என்பது அணியும் உடைகளில் இல்லை, பார்ப்பவர் கண்களில்தான் உள்ளது என்று சொல்வதற்கு அல்ல.

பாரதி இப்போது உயிரோடு இருந்தால், "நான் சொன்ன பெண் சுதந்திரத்தை தவறாக புரிந்து இருக்கிறார்களே" என்று வருத்தப்படுவான்.




face bookல் சுட்டது.

ஆபாசம் என்பது அணியும் உடைகளில் இல்லை, பார்ப்பவர் கண்களில்தான் உள்ளது என்பவர்
கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு
எரிச்சல் என்பது மிளகாய்ப் பொடியில் இல்லை, உங்கள் கண்களில்தான் உள்ளது
என்று கூறலாமா???

நல்லவர்கள், கெட்டவர்கள்.

மகான்களும், மாமேதைகளும் மக்களை புத்திசாலிகளாக மாற்றும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பல முட்டாள்கள் இதை விரும்புவதில்லை. மகான்களையும், மாமேதைகளையும் அழிக்கும் வேலையை அவர்கள் செய்கிறார்கள். ஏனோ தெரியவில்லை, முட்டாள்கள் கையில் பல சமயங்களில் அதிகாரம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. முட்டாள்கள் தான் பெரும்பாலும் ஜெயிக்கிறார்கள்.

இதற்க்கு மிக சிறந்த உதாரணம், இயேசு, சாக்ரடீஸ்.

Monday 2 September 2013

பூக்கள்.

ஆயிரம் மலர்கள்
மலர்ந்தாலும், உதிர்ந்தாலும்
நீ இன்று
சூடிய பூக்கள் தான்
எனக்கு அழகாக தோன்றுகிறது.
ஏனெனில் அதை
சூட்டியவன்
நானல்லவோ!

பேரழிவுகள்.

இயற்கை சீற்றங்களுக்கு அடுத்தபடியாக இந்த உலகத்தில் ஏற்பட்ட பேரழிவுகளுக்கெல்லாம்  மனிதன் என்ற மிருக இனம் மட்டுமே காரணம்.

Sunday 1 September 2013

மலச்சிக்கல் நீங்க.

மலச்சிக்கல் நீங்க, சீரகத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
சீரக தண்ணீர் குடிக்கலாம்.
வெந்நீர் குடிக்கலாம்.
பிரிட்ஜ் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க கூடாது.