Sunday 26 January 2014

இவர் ஏன் இந்தியாவின் நிரந்தர பிரதமர் ஆகக்கூடாது?


Dr.A.P.J.அப்துல் கலாம்.

1)இவர் எந்த ஒரு குடியரசு தலைவரும் செய்யாத ஒரு செயலை செய்தார். அது இந்திய மக்களை குறிப்பாக இளைஞர்களை சென்று சந்தித்தது.

2)பல அரசியல்வாதிகள் வருடம் ஒருமுறை மரம் நடு விழாவில் ஒரு மரத்தை நடுவார்கள். இவர் எல்லா இந்தியர்களின் மனதிலும் தன்னம்பிக்கை என்ற விதையை விதைத்தார்.

3)இவர் இந்தியாவின் பிரதமர் ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியின் அல்லது அரசியல்வாதியின் கைப்பாவையாகவும் செயல்பட மாட்டார்.

4)இந்தியாவில் இருக்கும் சில அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என்னென்ன அரசியல் பதவி வகிக்கிறார்கள், அவர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது, அவர்கள் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவரின் குடும்ப உறுப்பினர்கள் யார் என்றே இந்தியாவில் இருக்கும் 99.99% பேருக்கு தெரியாது.

5)தன்னுடைய குடும்பத்திற்காக மக்களை ஏமாற்றும் எண்ணம் இவருக்கு கிடையாது. நாட்டின் முன்னேற்றத்தை பற்றி மட்டுமே இவருக்கு எண்ணம் இருக்கும்.

6)எங்கள் ஆட்சியின் சாதனை பாரீர் என்று பிற அரசியல்வாதிகள் போல் இவர் தற்பெருமை பேசியதில்லை. இவர் செய்த செயல்களை தான் செய்யவேண்டிய கடமையாக மட்டுமே நினைத்தவர்.

7)நிரந்தர முதல்வர் என்று பலர் தங்களை விளம்பரபடுத்திக் கொள்கிறார்கள். இவர் ஏன் இந்தியாவின் நிரந்தர பிரதமராக கூடாது?

அரசியல் கட்சி சார்ந்த நபர் மட்டுமே இந்தியாவின் பிரதமராக முடியுமா? இந்தியாவின் முன்னேற்றத்தை பற்றி மட்டுமே நினைக்கும் ஒரு நபர் இந்தியாவின் பிரதமராக முடியாதா?

எனக்கு இந்தியாவின் அரசியல் சட்டங்கள் தெரியாது. இவர் பிரதமராக வேண்டுமானால் ஏதாவது கட்சியில் இருக்க வேண்டியது கட்டாயமா? அப்படி கட்டாயம் என்றால் இவரே கட்சி ஆரம்பித்தால் நல்லது.

SHARE THIS MESSAGE IF YOU ARE A TRUE INDIAN.


குடியரசு தலைவர்.

இந்தியாவின் தற்போதைய குடியரசு தலைவரின் பெயர் இந்தியாவில் பலருக்கு தெரியாது.

Wednesday 22 January 2014

யோகாசனம் vs six pack.





தற்போது எல்லா பெண்களும் six pack  மீது மோகம் கொண்டுள்ளனர். six pack என்பது வெறும் தசை நார்களை மட்டுமே வலுப்படுத்தும்.

ஆனால் யோகாசனம் உடலின் உள் உறுப்புகளான மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல், கிட்னி, குடல், தண்டுவடம், எல்லா சுரப்பிகள், மற்றும் அனைத்தையும் வலுப்படுத்தி சீராக இயங்க செய்யும்.

மேலும் மேலே இருக்கும் நடிகர் சிவகுமாரின் பழைய மற்றும் புதிய படத்தை பாருங்கள். அதிக வித்தியாசம் அவர் முகத்தில் இல்லை.

ஆனால் நடிகர் சூர்யாவின் பழைய மற்றும் புதிய படத்தை பாருங்கள். அவர் முகத்தில் எவ்வளவு முதிர்ச்சி இருக்கிறது.

குறிப்பு:- நான் இங்கே நடிகர் சூர்யாவின் நடிப்பு திறமையையோ, அவரது தூய மனித உள்ளத்தையோ விமர்சிக்கவில்லை. அவர் நடிகன் என்ற விசயத்தையும் தாண்டி அகரம் என்ற பெயரில் இந்த சமுதாயத்தில் பல பெரிய மாற்றங்களை உருவாக்கிக்கொண்டு இருப்பவர். நான் இங்கே six pack என்ற ஒரு விஷயத்தை மட்டுமே விமர்சிக்கிறேன். எனவே சூர்யாவின் ரசிகர்களும், குறிப்பாக ரசிகைகளும் என் மீது கோபம் கொள்ள வேண்டாம்.

தமிழ் சினிமா காதல் திரைப்படங்கள்.

தமிழ் சினிமாவில் காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களே அதிக வெற்றி பெறுகின்றன. இதற்கு மனோதத்துவமான காரணம் என்னவென்றால், சமுதாயத்தில் காதல் என்பது இன்னும் அங்கீகரிக்கப்படாததாகவே இருக்கிறது. அதனால் தான் எல்லோரும் காதல் திரைப்படங்களை ரசிக்கிறார்கள்.

சமுதாயத்தில் காதல் முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் காதல் திரைப்படங்கள் வெற்றி பெறாது.

பிறவா வரம் வேண்டுமா?

புராணங்களில் வாழ்ந்த மனிதர்கள் 1000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாக சொல்கின்றன. அதனால் அவர்களுக்கு வாழ்க்கை போரடித்து போயிருக்கும். அதனால் அவர்கள் பிறவா வரம் வேண்டும் என்று கேட்டார்கள்.

ஆனால் தற்போது மனிதன் எத்தனை நாட்கள் வாழப்போகிறான் என்றே தெரியாத ஒரு நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இந்த சூழ்நிலையில் பிறவா வரம் வேண்டும் என்று கேட்பவர்களை பார்த்தால் முட்டாள்தனமாக தோன்றுகிறது.

மேலும் பிறவா வரம் என்பது நாம் கேட்ட உடன் கடவுள் கொடுத்துவிடப்போவது இல்லை. 

உடல் வலு.

காட்டு வாசியாக வாழ்ந்த மனிதனின் உடல் வலிமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்றைய மனிதனுக்கு இல்லை என்று என்னுடைய முந்தைய பதிவில் சொல்லி இருந்தேன். 

அந்த வகையில் பார்க்கும் போது 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் கிட்டத்தட்ட 500 கிலோவிற்கும் அதிகமான எடையை தூக்கும் வலிமை பெற்றவர்களாக இருந்திருப்பார்கள் என்பது என் கருத்து.

தற்போது இருக்கும் உடல் வலிமையும், இயற்கை அழிவும் தொடருமானால் 500 ஆண்டுகளுக்கு பின் வாழப்போகும் மனிதர்களால் 10 கிலோ எடையை தூக்குவது என்பதே மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

Tuesday 21 January 2014

தீபாவளி.(diwali)

சென்ற ஆண்டு 2013 முதல் தீபாவளியின் முக்கிய நிகழ்வான பட்டாசுகள் வாங்குவதை நான் நிறுத்திவிட்டேன்.

காரணம், vijay டிவியில் நீயா நானாவில் அவ்வப்போது கலந்துகொள்ளும் ஒருவர் (அவர் பெயர் தெரியவில்லை) கூறும் தகவல். இரண்டாம் உலக போருக்கு பின்னால் வெடி மருந்து தயாரிப்பவர்கள் தங்கள் பணபெட்டியை  நிரப்புவதற்காக வெடிமருந்தை உரம் என்ற பெயரில் இந்தியாவில் விற்கிறார்கள் என்று அவர் கூறுவார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன் தந்தி டிவியில் பட்டாசுகள் தயாரிக்கும் ஒருவரின் பேட்டி. அப்போது andrews செய்தி வாசித்தார். பேட்டி அளித்தவர் சொன்ன தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. "உரம் என்ற பெயரில் மானிய விலையில் விற்கப்படும் பொருளை வாங்கி தான் நாங்கள் பட்டாசுகள் தயாரிக்கிறோம். அதன் விலை உயர்ந்துவிட்டதால் பட்டாசுகளும் விலை கூடும்" என்று சொன்னார்.


இந்த பட்டாசுகள் வெடிப்பது அதிக சப்தம் எழுப்புவதால் பலருக்கும் தொந்தரவாக இருக்கிறது. குறிப்பாக வயதானவர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும். மேலும் பட்டாசுகள் வெடிப்பதனால் வரும் புகை காற்றை மாசுபடுத்துகிறது.

நரகாசூரன் கொல்லப்பட்ட காலத்தில் பட்டாசுகள் கிடையாது. இந்த பட்டாசுகள் வெடிக்கும் சம்பிரதாயம் தேவையா?

போலி சாமியார்.

போலி சாமியார்கள்  நம் நாட்டில் அதிகம்.

இதற்க்கு அவர்கள் மட்டும் காரணம் அல்ல.

இந்த போலி சாமியார்களை தேடி செல்லும் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது. இது போன்ற போலி சாமியார்களை தேடி செல்லும் பெண்கள் தங்கள் கணவனிடம் அன்பாக நடந்துகொள்கிறார்களோ இல்லையோ, போலி சாமியார்களுக்கு பாத பூஜை செய்யாமல் இருப்பதே இல்லை.

சாமியை கும்பிடுங்கடின்னா சாமியாரை கும்பிடுராளுக.

Saturday 18 January 2014

பூஜை.

இந்தியாவில் எல்லா கட்டிடங்களும், பாலங்களும் பூஜை போட்டு தான் கட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இவற்றில் பல, கட்டிய சில ஆண்டுகளிலேயே இடிந்து விழுந்து விடுகின்றன.

ஆனால் வெளிநாடுகளில் எந்த வித பூஜையும் செய்யாமல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அவை பல ஆண்டுகள் நீடித்து நிற்கின்றன.

தவறு யார் மீது?

சிலைகளுக்கு காவல்.

தனி மனிதர்களுக்கு காவல் இருக்கிறதோ, இல்லையோ, சிலைகளுக்கு இரண்டு காவலர்களை 24 மணி நேரமும் வைத்து இருக்கும் கேவலமான சூழ்நிலையில் தமிழன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

சாமுத்ரிகா, பரம்பரா, வஸ்த்ரகலா.

சாமுத்ரிகா, பரம்பரா, வஸ்த்ரகலா என்று பல பெயர்கள் பட்டு புடவைகளுக்கு வைத்தாலும், பட்டு நூலின் உருவாக்கம் என்னவோ, பட்டு புழுக்களை கொன்று எடுப்பதுதான்.

தங்கம்.(gold)

தங்கத்தில் சிலை வடித்து வீட்டில் வைத்து வழிபட்டால் அந்த குடும்பம் அழிந்துவிடும்.

தங்கத்தில் சிலை வடித்து பொதுவில் வைத்து வழிபட்டால் அந்த ஊர் அழியும்.

Friday 10 January 2014

தந்தை எனும் தெய்வம்.

திதி கொடுப்பது, பிண்டம் வைப்பது போன்ற விசயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இது ஒரு வகையான ஏமாற்று வேலையாகத்தான் நான் பார்க்கிறேன்.

இறந்த ஒருவருக்கு திதி கொடுப்பது அவரை சென்றடையும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

மனிதன் தோன்றிய காலம் முதல் தற்போது வாழும் மனிதர்கள் வரை பல கோடி தலைமுறைகள் கடந்து வந்துவிட்டோம். பல கோடி தலைமுறையாக வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் திதி கொடுப்பது என்பது யாருக்குமே சாத்தியம் இல்லாத ஒன்று.

என் தந்தைக்கு வருடம் ஒரு முறை சாமி கும்பிடுவதை கூட நிறுத்திவிட்டேன். அது துன்பத்தையே தருவதாக நான் கருதுகிறேன்.வருடா வருடம் அவருக்கு சாமி கும்பிடுவது, அவர் மீண்டும் மீண்டும் இறப்பது போன்ற ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்துகிறது.

அதற்காக என் தந்தை மீது பாசம் இல்லாமல் இல்லை.
என் தந்தை என் மீது எவ்வளவு பாசம் வைத்து இருந்தார் என்பதை அவர் இறப்பதற்கு முந்தைய நாளில் தான் அவர் சொல்லி நான் தெரிந்துகொண்டேன்.

எல்லா ஆண்களும் தாயின் மீது தான் பாசமாக இருப்பார்கள். தந்தை சற்று தூரம் தான். பல ஆண்கள் தங்கள் தந்தை மீதான பாசத்தை அவர் மரணத்தின் தருவாயில் தான் புரிந்து கொள்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.

"தந்தை நம் உடன் வாழும் தெய்வம்."

ஆண்.

தற்போது பல பெண்கள், தங்கள் கண்ணை மட்டும் பார்த்து பேசும் ஆணை தான் தங்களுக்கு பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

அப்படி பெண்ணின் கண்ணை மட்டுமே பார்த்து பேசும் ஒரு ஆண் இந்த உலகத்தில் பிறந்ததாக புராணங்களிலோ, கல்வெட்டுகளிலோ சொல்லப்பட்டதாக எனக்கு தெரியவில்லை.

பெற்றோர்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தற்போது வரை பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் doctor ஆக வேண்டும் அல்லது engineer ஆக வேண்டும் என்று தான் முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் தான் போலி டாக்டர்கள் உருவானார்கள்.
குறைந்த காலத்திலேயே இடிந்து விழும் கட்டிடங்கள், பாலங்கள் கட்டும் திறமையற்ற engineerகள்  உருவானார்கள்.

தற்போது இன்னொரு விசயமும் சேர்ந்து விட்டது.

தங்கள் பிள்ளைகள் super singar  ஆக வேண்டும் அல்லது சூப்பர் dancer  ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் தமிழ் tv சேனல்கள் செய்த விளையாட்டு.

தேர்.

என்னைப்பொருத்தவரை தெய்வங்களை தேரில் வைத்தோ அல்லது தோளில் சுமந்தோ ஊர்வலமாக கொண்டு செல்ல கூடாது என்பது என் கருத்து.

அவ்வாறு செய்வது துன்பத்தையே தரும். நன்மையை தராது.

தெய்வ சிலைகள் எங்கும் கொண்டு செல்லப்படாமல் ஓரிடத்திலேயே இருப்பது சரியானது என்பது என் கருத்து.

காகம்.(crow)

காகங்கள் எல்லாம் நம்முடைய முன்னோர்கள், பித்ருக்கள் என்று புரளியை பரப்பி விட்டுவிட்டார்கள்.

அப்படியென்றால் பித்ருக்களான காகங்களை வீட்டில் வைத்து வளர்க்கலாமே?

தூக்கம்.(sleep)

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் முன் குளித்தால் நன்கு தூக்கம் வரும்.

அல்லது சின் முத்திரை பிடிக்கலாம். சின் முத்திரை எப்படி பிடிக்கவேண்டும் என்று என்னுடைய முந்தைய பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். அப்படி தான் முத்திரை பிடிக்க வேண்டும். அப்போது தான் நேர்மறை சக்தி கிடைக்கும். இல்லையென்றால் எதிர்மறை சக்தி தான் கிடைக்கும்.

நகம்.

கை அல்லது காலில் நகம் பிளவுபட்டோ அல்லது சீராகவோ இல்லாமல் இருந்தால் துன்பமான வாழ்வு அமையும்.

இதை தடுக்க தினமும் நகத்தில் தேங்காய் எண்ணெய் தடவினால் அழகான நகம் உருவாகும்.

வசிய மருந்து.

வசிய மருந்து பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் தினமும் வெங்காயத்தை சமைக்காமல் சாப்பிடுவது நல்லது.

புளிப்பு சுவையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்றும் சொல்கிறார்கள்.

Monday 6 January 2014

மேல் நாட்டு நாகரீகம்.(western culture)

மேல் நாட்டு நாகரீகம் மிக சிறந்த நாகரீகம் என்று பலர் நினைக்கிறார்கள். குறிப்பாக இந்திய பெண்கள்.

மேலை நாடுகளில், என்றாவது ஒருநாள் ஆண், பெண் எல்லோருமே கை கோர்த்துக்கொண்டு உடலில் ஒரு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக பொது இடங்களில் நிற்பார்கள். இது நாகரீகமா?

மேலை நாடுகளில், புதிதாக ஒரு துணி கடை திறக்கும் சமயம், அந்த முதல் நாளில் நிர்வாணமாக உள்ளே வந்தால் சிறப்பு discount கொடுப்பதாக சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல், discount வாங்குவதற்காக ஆண், பெண் எல்லோருமே நிர்வாணமாக கடைக்கு வந்து ஆடை வாங்குவார்கள்.

இது நாகரீகமா? 

மேற்சொன்ன இரண்டு விசயங்களையும் செய்திகளில் பார்த்து இருக்கிறேன்.

அக்டோபர் 23, 2013 புதன் கிழமை, times of india பத்திரிகையில் ஒரு செய்தி. los angeles  நகரில், கழிவறை கோப்பையால்(western toilet) வைக்கப்பட்ட இருக்கையை கொண்ட,  தேநீர் விடுதியை ஆரம்பித்து இருக்கிறார்களாம்.

இது நாகரீகமா?

இன்னாங்கடா உங்க நாகரீகம்?

இன்றைய ஆராய்ச்சிகள்.

ஒரு முட்டாள் விஞ்ஞானி ஆராய்ச்சி செய்ய நினைத்தான். தன்னுடைய ஆராய்ச்சியை தவளையை வைத்து செய்ய ஆரம்பித்தான்.

தவளையின் ஒரு காலை வெட்டினான்.

"Jump" என்றான்.

தவளை இவனிடமிருந்து தப்பிக்க தாவி சென்றது.

தான் சொன்னதை கேட்டு அது தாவி செல்கிறது என்று நினைத்துக்கொண்டு, இரண்டாவது காலை வெட்டினான்.

"Jump" என்றான்.

தவளை இவனிடமிருந்து தப்பிக்க மீண்டும் தாவி சென்றது.முன்பைவிட குறைவான தூரத்தை அடைந்தது.

தான் சொன்னதை கேட்டு அது தாவி செல்கிறது என்று நினைத்துக்கொண்டு, மூன்றாவது  காலை வெட்டினான்.

"Jump" என்றான்.

தவளை இவனிடமிருந்து தப்பிக்க மீண்டும் தாவியது.முன்பைவிட குறைவான தூரத்தை அடைந்தது.

தான் சொன்னதை கேட்டு அது தாவுகிறது என்று நினைத்துக்கொண்டு, நான்காவது  காலை வெட்டினான்.

"Jump" என்றான்.

தவளையால் தாவ முடியவில்லை.

தன்  ஆராய்ச்சியின் report எழுதினான்.

"நான்கு காலையும் வெட்டி விட்டால் தவளைக்கு காது கேட்காது."

இதே போல் தான் இன்று உலகம் எங்கும் பலர் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் ஆராய்ச்சியின் report ஐ மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.




மலச்சிக்கல்.

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், biscuit, dry fruits போன்றவற்றை குறைவாக உண்ணலாம், அல்லது உண்ணாமல் இருக்கலாம்.

இவை இரண்டுமே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுத்தும்.

வாஸ்துவும், காற்றின் ஓட்டமும்.

வாஸ்துவில் பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றின் ஓட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

கான்க்ரீட் வீடுகளில் ஜன்னல், வாசல் மற்றும் காற்று வருவதற்காக சுவரின் மேல் பகுதியில் உருவாக்கப்பட்டு இருக்கும் துளை இந்த மூன்று வழிகளில் மட்டுமே காற்று ஒரு வீட்டிற்குள் நுழையவும், வெளியேறவும் செய்கிறது. 

அனால் கூரை வீடுகளில், தென்னை ஓலை பின்னப்பட்டு இருக்கும் துளையின் வழியாக காற்று நுழையவும், வெளியேறவும் செய்கிறது. இது வீட்டின் நான்கு திசைகளிலும் நடக்கிறது. மேலும் கூரை பகுதி வழியாகவும் இந்த ஓட்டம் நிகழ்கிறது. 

இதனால் வாஸ்துவின் விதிகள் எல்லோருக்குமே ஒன்றாக சொல்லப்பட்டு இருந்தாலும், இந்த காற்றோட்டத்தினால் பலன்களின் அளவு மாறும் வாய்ப்பு இருக்கிறது.

புருவ திருத்தம்.

தற்போது எல்லா பெண்களும் தங்கள் புருவங்களை திருத்திக் கொள்கிறார்கள். இதை அழகு என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் என்னைப் பொருத்தவரை இது அழகாகவே இல்லை. அவர்களின் முகம் சற்று விகாரமாகவே காட்டுகிறது. சற்று அதிகமான வயதான தோற்றத்தை தான் தருகிறது.

பெண்களுக்கு அவர்களின் இயற்கையான புருவ அமைப்பே அழகானது என்பது என் கருத்து.

குறி.

தெரு தெருவாக அலைந்து குறி சொல்பவர்களிடம் குறி கேட்க கூடாது. இவர்கள் சொல்லும் நல்ல விசயங்கள் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். ஆனால் இவர்கள் சொல்லும் கெட்ட விசயங்கள் கண்டிப்பாக நடக்கும்.

 மேலும் இவர்கள் உங்களுக்கு திருநீறு பூச வந்தாலும், பூசிக்கொள்ள கூடாது. மேலும் கண்திருஷ்டி நீக்க வேர், அல்லது ஏதாவது பொருள் தருகிறேன், அதை ஆற்றில் போடவேண்டும், அல்லது முச்சந்தியில் வைக்க வேண்டும்  என்று சொன்னாலும் அதை வாங்க கூடாது. அவ்வாறு வாங்கினால் பொருளாதார இழப்பு அல்லது குடும்பத்தில் ஒரு  உயிரிழப்பு ஏற்படலாம்.
(உயிரிழப்பு 5 ஆண்டுகளுக்குள் நிகழலாம்.)