Saturday 30 November 2013

ராசி பலன்.

ஒரு மனிதனின் வாழ்க்கையை இந்த பிரபஞ்சத்தில் உள்ள பல கோடிக்கணக்கான விசயங்கள் தீர்மானிக்கின்றன.

ஆனால் பலர் பத்திரிகை, tv, இணையதளம் இவற்றில் இருக்கும் ராசி பலனை நம்பி ஏமாறுகிறார்கள்.

உதாரணமாக, ஒரு பத்திரிகையில் ஒரு ராசிக்கு பலன் எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி என்று வைத்துக்கொள்வோம். ராசிகள் மொத்தம் 12. சராசரியாக இந்தியாவில் 10 கோடி பேர் ஒரே ராசிக்காரர்களாக இருப்பார்கள்.

அப்படியானால் அந்த ராசிபலனில் உள்ளபடி 10 கோடி பேருக்கும் பலன் இருக்குமா? என்னை பொறுத்தவரை இல்லை என்பேன்.

உதாரணமாக, ஒரு பத்திரிகையில் நட்சத்திர பலன் எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உலகத்தின் மக்கள் தொகை 270 கோடி என்று வைத்துக்கொள்வோம். நட்சத்திரங்கள் மொத்தம் 27. சராசரியாக உலகத்தில் 10 கோடி பேர் ஒரே நட்சத்திரக்காரர்களாக இருப்பார்கள்.

அப்படியானால், அந்த நட்சத்திர பலன் படி 10 கோடி பேருக்கும் பலன் இருக்குமா? என்னை பொருத்தவரை இல்லை என்பேன்.

வியாதி, மரணம்.

வியாதி, மரணம் இந்த இரண்டுமே, ஜாதி, மதம், நிறம், இனம், மொழி, வயது, ஏழை, பணக்காரன், ஆண், பெண், திருநங்கை என்ற எந்த பேதமும் பார்ப்பது இல்லை. 

சோத்து கத்தாழை.

சோத்து கத்தாழையை வீட்டிற்கு உள்ளே அல்லது கடைக்கு உள்ளே கட்டி தொங்கவிட்டால் ஆணுக்கு விபத்து ஏற்படும்.

ஆரோக்கியம்.

வீட்டில் எந்த அளவுக்கு காற்றோட்டம் அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆரோக்கியம் இருக்கும்.

நேர்மறை சக்தி.

மரங்கள் எதிர்மறை சக்தியினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மனிதர்களை காக்கின்றன. நேர்மறை சக்தியை அளவுக்கு அதிகமாக மனிதர்களுக்கு தருகின்றன.

வீட்டை சுற்றி எந்த அளவுக்கு அதிகமாக மரங்கள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நேர்மறை சக்தியும் அதிகம் இருக்கும்.

அபசகுனமா?

பலர் மின்சாரம் நிறுத்தப்படுவது கூட அபசகுனம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நல்ல விஷயம் பேசிக்கொண்டு இருக்கும் போது மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டால் அதை அபசகுனம் என்று நினைக்கிறார்கள். இது தவறானது. மின்சாரத்துக்கும் சகுனத்துக்கும் சம்பந்தமே இல்லை.

மின்சாரம் நிறுத்தப்படுவது மின்சார துறை சார்ந்தது. அதற்கும் சகுனத்திற்க்கும் என்ன சம்பந்தம்?

இன்றைய உணவுகள்.

இன்றைய packing செய்யப்பட்ட உணவுகள் எல்லாவற்றிலும் அது biscuit முதல் pizza வரை natural identical synthetic flavour, preservative, synthetic food colour என்று நிறம், மணம், சுவை, கெட்டு போகாமல் இருக்க என்று பல ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்துமே மனிதனின் ஆயுளை குறைக்கும்.

கருவளையம்.

கண்ணில் கருவளையம் இருப்பவர்கள் நாம கட்டியை குலைத்து தடவினால் கருவளையம் நீங்கும்.

உருளைக்கிழங்கை சிறு துண்டாக நறுக்கி, கருவளையத்தில் வைத்தால் கருவளையம் நீங்கும்.

கோவணம்.

இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லோருக்கும் கேவலமான தலைப்பாக தோன்றும். காரணம் சினிமா என்ற ஊடகம் இதை ஒரு கேவலமான ஆடையாக மக்களிடம் பரப்பிவிட்டது.

ஒரு ஆண் ஜட்டி அணிந்துகொண்டு நாள் முழுவதும் பல இடங்களுக்கும் அலைந்து, அல்லது பல ஊர்கள் சுற்றி திரிந்துவிட்டு இரவு வீடு வந்த பின்புதான் அதை கழட்டுகின்றான். அப்போது அவன் இரு தொடைகளும் சேரும் இடத்தில் தொட்டு பார்த்தால் சற்று அதிகமான வெப்பம் இருக்கும். இந்த வெப்பம் விந்தணுக்களின் வீரியத்தை குறைக்கும் என்பது என் கருத்து. 

என்னை பொருத்தவரை, ஜட்டி அணியும் ஆணின் விந்தணுக்களின் வீரியத்தை விட, கோவணம் அணியும் கிராமத்து கிழவனின் விந்தணுக்களின் வீரியம் அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து.

மின்சாரம்.

மின்சாரம் நிறுத்தப்படுவதால், ஆளுங்கட்சிகளின் tv சேனல்களும், அவற்றுக்கு ஆதரவான tv சேனல்களும் பார்க்க முடிவதில்லை.

இதில் அவர்களுக்கு தான் நட்டம் என்று அவர்களுக்கு புரிவதே இல்லை.

(idea இல்லாத பசங்க.)

காமம்.

காமத்தை ஒதுக்கினால் தான் கடவுளை அடைய முடியும் என்று பலரும் புரளியை பரப்பி விடுகிறார்கள்.

நான் இதை நம்பவில்லை.

காரணம், மனித இனம் தோன்றிய காலம் முதல், இறந்து போன என் தாத்தா வரை யாருமே காமத்தை ஒதுக்காத காரணத்தினால் தான் நான் பிறந்து இருக்கிறேன். இங்கே பதிவிட்டுக்கொண்டு இருக்கிறேன்.

அப்படியானால், மனித இனம் தோன்றியது முதல், என் தாத்தா வரை பல கோடி தலைமுறைகளாக யாருமே கடவுளை அடையவில்லை என்றுதான் அர்த்தம். எனவே இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடவுள் படங்கள்.

கடவுள் படங்கள் வீட்டில் வைத்தால் தான் கடவுளின் அருள் நமக்கு கிடைக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

நான் இதை நம்பவில்லை. கடவுள் படங்களை வீட்டில் வைப்பது துன்பத்தையே தருவதாக நான் கருதுகிறேன்.

அச்சு துறை (printing technology) வந்த பிறகு தான் எல்லோரும் கடவுள் படங்களை வீட்டில் வைக்க ஆரம்பித்தார்கள்.

அச்சு துறை வருவதற்கு முன்னால் ஓவியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் எல்லோர் வீட்டிலும் ஓவியங்கள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது என் கருத்து.

பெரியார்.

சாமி இல்லை என்று சொன்ன பெரியாரின் பெயரிலேயே சாமி இருக்கிறது. 

"ஈ.வே.ராமசாமி"

தேயிலை தோட்டம்.

இந்தியாவின் பல பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உள்ளது எல்லோருக்குமே தெரியும். இவை வெள்ளைக்காரன் காலத்தில் அவர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டவை.

ஆனால் இவற்றை உருவாக்க அங்கிருந்த காடுகள் அழிக்கப்பட்டன என்று இன்றைய இந்தியர்கள் யாருக்கும் தெரியாது.

சரி விடுப்பா! தேயிலை மூலமாக வருமானம் வருதுல்ல! என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் பொருளாதார ரீதியாக மட்டும் பார்க்காமல் இயற்கை ரீதியாக சற்று யோசித்து பாருங்கள். 

ஒரு மரம் இருக்க வேண்டிய இடத்தில் சில செடிகள் இருப்பது இயற்கைக்கு லாபமா? நட்டமா?

ஒரு காடு இருக்க வேண்டிய இடத்தில், தோட்டம் இருப்பது இயற்கைக்கு லாபமா? நட்டமா?

tooth paste.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரபலமான நிறுவனங்கள் பலவற்றின் tooth pasteகளில்  நிகோடின் சேர்க்கப்படுவதாக சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்தேன்.

இதை பற்றி கேட்டால், அரசாங்கம் அனுமதிக்கும் அளவு மட்டுமே தாங்கள் சேர்ப்பதாக அவர்கள் சொல்கிறார்களாம்.

Tuesday 26 November 2013

ஆணாதிக்கமா?

ஆண்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் உடை விசயத்தில் கட்டுப்பாடு விதிப்பது ஆணாதிக்கம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அது ஆணாதிக்கம் அல்ல.

தன் வீட்டு பெண்ணுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற உண்மையான அன்பின் வெளிப்பாடு.

எந்த ஒரு ஆணும், (தந்தை, சகோதரன், நண்பன், காதலன், கணவன்) தன் வீட்டு பெண்ணிடம், உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணிந்து செல் என்று சொல்ல மாட்டான். உடலை மறைத்து ஆடை அணிந்து செல் என்று தான் சொல்வான். அப்படி சொல்லவில்லை என்றால் அவனுக்கு உங்கள் மீது உண்மையான அன்பு இல்லை என்று அர்த்தம்.

ஒரு ஆண் (தந்தை, சகோதரன், நண்பன், காதலன், கணவன்) தன்  வீட்டு பெண்ணிடம், உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணிந்து செல் என்று சொன்னால், அவனுக்கு உறவுமுறை பெயரே இல்லை. அவனுக்கு ஒரே பெயர் தான். 

"பொம்பளை புரோக்கர்".

ஆபாசத்தின் உச்ச கட்டம்.

ஒரு பெண் உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணிந்து வந்தால் 19 வயது ஆண் முதல் 91 வயது கிழவன் வரை பார்க்கத்தான் செய்வான்.

அவ்வாறு பார்ப்பவனை, ரிக்சா மாமா படத்தில் வரும் கவுண்டமணி கத்துவது போல், "பார்த்துட்டான்!!!!!, பார்த்துட்டான்!!!!, இவன் என்னை பார்த்துட்டான்!!!, இங்கே பாருங்க இவன் என்னை பார்த்துட்டான்!!!!, அய்யய்யோ இவன் என்னை பார்த்துட்டான்!!!" என்று கத்துவது ஆபாசத்தின் உச்ச கட்டம்.  

மரண பயம் நீங்க.

மரண பயம் நீங்க, கறந்த பசும்பாலை சிறிதளவு எடுத்து,(அது காய்ச்சாத பாலாக இருக்க வேண்டும்.) உச்சந்தலையில் வைத்து சிறிது நேரம் ஊற வைத்து 20 நிமிடங்களுக்கு பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்கலாம்.

Thursday 21 November 2013

பீர்.

பீர் குடித்தால் உடல் எடை கூடும் என்று பலரும் நம்பி குடிக்க ஆரம்பிக்கிறார்கள். மது குடிக்கும் பழக்கத்திற்கு முதல் படி இதுவாக பலர்க்கு அமைகிறது. இது மதுபானம் விற்பவர்கள் பரப்பிவிட்ட ஒரு புரளி என்பது என் கருத்து. என் நண்பர்கள் பலர் இப்படித்தான் குடிக்க ஆரம்பித்தார்கள். அனால் எவன் உடலும் எடை கூடவில்லை.

ஆரோக்கியமாக சாப்பிட்டாலே உடல் எடை கூடும்.

எனக்கு தெரிந்த சில எடை கூட்டும் யோசனைகள்:-
1)உணவு சாப்பிட்ட பின் பேரிச்சம்பழம் சாப்பிடலாம். உணவு சாப்பிடும் முன் பேரீச்சம்பழம் சாப்பிட கூடாது.

2)மண்பானை குளிர்ந்த நீரில் தேன் கலந்து சாப்பிடலாம்.

3)நிலக்கடலை பருப்பு சாப்பிடலாம்.

4)கொழுப்பு சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.

ஐம்பொன்.

தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம்,   இந்த உலோகங்களால் ஆன ஆபரணங்களை அணிவதும், வீட்டிலும், கோவில்களிலும் பூஜை பொருட்களாக பயன்படுத்துவதும் எதிர்மறை சக்தியையே தரும் என்பது என் கருத்து.


 மண், மரம், கண்ணாடி, பீங்கான், செம்பு, stainless steel   இவற்றால் ஆன  பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்துவதே நேர்மறை சக்தி தரும் என்பது என் கருத்து.

இதற்கு மிக சிறந்த உதாரணம் கண்ணகி.

கண்ணகி வாழ்ந்த காலத்திலேயே தங்கத்தை அணியலாமா? அணியகூடாதா? என்று தெரியாமலேயே தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். தங்கத்தை அணிந்திருக்கிறார்கள்.

கண்ணகி அணிந்த சிலம்பு தங்கத்தால் ஆனது. தங்கத்தை காலில் அணிந்தால் அவர்கள் அழிவு நிலைக்கு செல்வார்கள். இதில் இன்னொரு துன்பம் தரும் விஷயம் அதில் மாணிக்க கற்கள் இருந்தது. தங்கத்தோடு மாணிக்க கற்களும் இருந்தது மாபெரும் அழிவு நிலைக்கே கொண்டு செல்லும். 

இதில் இன்னொரு தகவல் என்ன என்றால், மன்னனின் மனைவியின் காலில் முத்துக்களால் ஆன சிலம்பு. இதுவும் அழிவு நிலைக்கே செல்லும். 

முத்தை விட மாணிக்கம் விலை உயர்ந்தது. மன்னர்களை விட வணிகர்கள் மாபெரும் செல்வந்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

வெள்ளிக்கிழமையும், விளக்கு வைக்கும் நேரமும்.

வெள்ளிக்கிழமையும், விளக்கு வைக்கும் நேரமும் யாருக்காவது பணம் கொடுத்தால் லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்று பலரும் நம்புகிறார்கள்.

என்னைப்பொருத்தவரை அது மிகவும் தவறு.

நம்பிக்கை துரோகம் செய்பவர்களையும், கூட இருந்தே குழி பறிப்பவர்களையும் உடன் வைத்து இருந்தாலும், நம்பக்கூடாதவர்களை நம்புவதாலும் தான் பணத்தை இழக்க நேருமே தவிர, வெள்ளிக்கிழமை பணம் கொடுப்பதால் லட்சுமி யாரையும் விட்டு செல்ல மாட்டாள்.

பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழந்தவன் நான். இதற்க்கு காரணம் நம்பக்கூடாத உறவுகளை நம்பியதே காரணமே ஒழிய, வெள்ளிக்கிழமை காரணம் அல்ல.

சற்று யோசித்து பாருங்கள், ஒருவன் வெள்ளிக்கிழமை 7 மணிக்கு மேல் மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை, இப்போது விளக்கு வைக்கும் நேரம், அதனால் பணம் தரமாட்டேன் என்று சொன்னால், அவனுக்கு தர்ம அடி தான் விழும்.

மஞ்சள்.

மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களுக்கு 99.99% தோல் சம்பந்தமான வியாதிகள் வராது.

குங்குமம்.

விதவை பெண்கள் குங்குமம் வைக்ககூடாது, மஞ்சள் தேய்த்து குளிக்க கூடாது, பூ வைத்துக்கொள்ள கூடாது என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. அது மனிதர்களால் பெண்களை அடிமைப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு செயல்.

என்னைப்பொருத்தவரை விதவை பெண்கள், குங்குமம் வைத்துக்கொள்ளலாம். பூ வைத்துக்கொள்ளலாம். மஞ்சள் தேய்த்து குளிக்கலாம்.

tiles, marbles, granite Vs தட்டோடு.

tiles, marbles, granite, பதிப்பது உடலின் சக்தியை உறிஞ்சும். ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும்.

தட்டோடு பதிப்பது நல்லது. வீட்டின் மொட்டை மாடியில் தட்டோடு பதிப்பது அறையில் வெப்பத்தை குறைக்கும். வீட்டின் அறைகளிலும், சுவர்களிலும் பதிக்கலாம்.

தட்டோடு எல்லா ஓடு விற்கும் கடைகளிலும் கிடைக்கும்.

Tuesday 19 November 2013

பெண் சுதந்திரம்.

பெண்களுக்கான இயற்கை விவசாய முறையில் அதிக விளைச்சல் செய்வோருக்கான போட்டி என்று வைத்தால் அது பெண் சுதந்திரம் என்று சொல்லலாம்.

பெண்களுக்கான laptop செய்யும் போட்டி என்று வைத்தால், அதை பெண் சுதந்திரம் என்று சொல்லலாம்.

பெண்களுக்கான cell phone செய்யும் போட்டி என்று வைத்தால், அதை பெண் சுதந்திரம் என்று சொல்லலாம்.

எவன்டா இதையெல்லாம் செய்றீங்க?
எவடி இதையெல்லாம் செய்றீங்க?

அதை விட்டு விட்டு bra மற்றும் ஜட்டி அணிந்துகொண்டு அழகி போட்டி என்று நடத்தினால் அதை பெண் சுதந்திரம் என்று சொல்ல முடியுமா?
அழகி போட்டியில் கலந்துகொள்ளும் எல்லா இந்திய பொட்டச்சிகளும் அன்னை தெரேசா மாதிரி சேவை செய்வேன்னுதான் சொல்றாளுக. என்ன சேவை செய்யிராளுகன்னு எனக்கு தெரியவில்லை.

வருடத்திற்கு ஒருமுறை அழகு சாதன நிறுவனங்கள் கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, அந்தந்த ஊரில் இருக்கும் பெண்களை வரவைத்து (அவர்களுக்கு தாலி கட்டிய கணவனையும் , அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளையும் விட்டு விட்டு வரவேண்டும் என்று விளம்பரம் செய்து) அங்கே அவர்களை குத்தாட்டம் ஆட வைத்து அதை படமெடுத்து ஒளிபரப்புவது பெண் சுதந்திரமா?


Wednesday 13 November 2013

கிணறு.

கன்னி மூலை கிணறு அல்லது போர்வெல் ஆண்களின் ஆயுளை குறைக்கும்.

வாயு மூலை கிணறு அல்லது போர்வெல் பெண்களின் ஆயுளை குறைக்கும்.

Monday 11 November 2013

பூஜை பொருட்கள்.

கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி பூஜை பொருட்களில் ஐம்பொன் என்று அழைக்கப்படும் தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம் இவற்றால் தயாரிக்கப்பட்ட எல்லா பொருட்களையும் தவிர்ப்பதே நல்லது என்பது எனது கருத்து.

மண், மரம், கண்ணாடி, பீங்கான், இரும்பு, எஃகு, செம்பு  இவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதே சரி என்பது எனது கருத்து.

Sunday 10 November 2013

ஏழைகள்.

Tanya Desigan என்பவர் g+ இல் கேட்ட கேள்விக்கு இங்கே பதில் அளிக்கிறேன்.

ஏழைகள் அதிகம் கஷ்டப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றை இங்கே தருகிறேன்.

1)ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரித்தான தெய்வங்கள் உள்ளன. அவை தவிர வேறு தெய்வங்களை வணங்கினால் துன்பங்களே வரும். ஏழை மக்கள் இது தெரியாமல், பக்கத்து வீட்டு அக்கா சொன்னார், எதிர் வீட்டு அக்கா சொன்னார் என்று பல கோவில்களுக்கு சென்று பல தெய்வங்களை வணங்குகிறார்கள்.

2)கோவில்களில் எதையுமே தொட்டு வணங்க கூடாது. மீறி தொட்டு வணங்கினால் கஷ்டம் தான் வரும். இது தெரியாத ஏழை மக்கள் கோவில்களில் கருவறையில் இருக்கும் தெய்வம் தவிர, எல்லா சிலைகள், கொடி மரம், பலி பீடம், தேர், நந்தி, கடவுளுக்கே உரித்தான வாகனங்கள்(எலி, சிங்கம், மயில்), இவற்றை தொட்டு வணங்குகிறார்கள்.


தெற்கு நோக்கி விளக்கேற்ற கூடாது. தெற்கு நோக்கி விளக்கேற்றுகிறார்கள்.

விளக்கேற்றும் போது எண்ணெய் கையில் பட்டுவிட்டால், கை கழுவிவிட்டு பிறகு தான் விளக்கு ஏற்றவேண்டும். ஆனால் அந்த எண்ணையை தலையில் தடவிக்கொள்கிறார்கள். இவ்வாறு செய்தால் கஷ்டம் வரும்.

3)கட்டை விரலால் தலை சொரிவது தரித்திரம் என்று சொல்லப்படுகிறது. ஏராளமான பெண்கள் கட்டை விரலால் தான் தலையை சொரிகிறார்கள்.

4)சாப்பிடும் சமயத்தில் புறங்கையை நக்குவது தரித்திரம் என்று சொல்லப்படுகிறது. பலர் புறங்கையை நக்கி சாப்பிடுகிறார்கள்.

5)தீய சக்திகளை ஏவுவது ஏழைகளில் அதிகம் பேர் இருக்கிறார்கள். இதற்க்கு ஒரு சிறு உதாரணம், மதுரை அருகே இருக்கும் மடப்புரம் கோவிலில் காசு வெட்டி போடுவது. மற்றும் மந்திர வேலைகள் பார்ப்பது.

6)பகை என்று வந்துவிட்டால், சாபம் கொடுப்பதும், மண்ணை அள்ளி தூற்றுவதும் ஏழைகளில் அதிகம்.

7)பெண்கள் வெறும் தரையில் படுக்கை விரிப்புகள் இன்றி படுப்பது தவறாகும். பெண்களின் ஸ்தனங்கள் தரையில் படும்படி படுத்தால் அவர்களுக்கு அதிக துன்பங்களை தான் தருவேன் என்று பூமா தேவி சொல்வதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.( இந்த தகவல் சேங்காலிபுரம் ப்ரம்ஹஸ்ரீ அனந்த ராம தீட்சிதர் எழுதிய "ஸ்ரீ ஜெய மங்கள ஸ்தோத்திரம்" என்ற புத்தகத்தில் இருக்கிறது. இந்த புத்தகம் ஆன்மீக புத்தகங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். இந்த புத்தகம் சென்னையில் மயிலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் அருகே இருக்கும் ஆன்மீக பொருட்கள் விற்கும் கடையில் இருக்கிறது.)
பல பெண்கள் வீட்டின் வெளியே தரையில் படுக்கை விரிப்புகள் இன்றி படுக்கிறார்கள்.

8)ஏழைகளின் வருமானத்தின் பெரும் பகுதி அவர்கள் கட்டும் வட்டிக்கே சென்று விடுகிறது.

9)ஏழைகளின் வருமானத்தின் பெரும்பகுதி மதுபானங்கள் குடிப்பதற்கு செலவிடப்படுகிறது. நடுத்தர வர்க்கமும், பணக்கார வர்க்கமும் தங்கள் வருமானத்தின் சிறு பகுதியை தான் மதுபானம் குடிக்க செலவழிக்கிறார்கள்.

10)ஏழைகளை மேலும் ஏழைகளாக்க, அவர்களை குறி வைத்து செய்யப்படும் சதி செயல்கள் ஏராளம். இது உலக அளவில் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

தவறு என்பது ஒரு குடும்பத்தில் ஆண் செய்தாலும் சரி, பெண் செய்தாலும் சரி அது அந்த குடும்பம் மொத்தத்தையும் பாதிக்கும்.

ஏழைகள் வசிக்கும் பகுதியில் நீங்கள் வசித்தால் மேற்சொன்ன எல்லா விசயங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

மேற்சொன்ன எல்லா விசயங்களையும் சரி செய்துவிட்டால் இந்தியாவில் 99.99% ஏழைகள் இருக்க மாட்டார்கள். இது உலக அளவிலும் சாத்தியமே.


கனவு பலன்.

கனவு பலன் பற்றி அறிய விரும்புவோர் dreammoods.com இணையத்தை பார்க்கலாம்.

கண்ணாடி பாட்டில்கள்.

கண்ணாடி பாட்டில்களில் சமையலுக்கான பொருட்களை வைத்து இருப்பது அந்த பொருட்களின் தரம், சுவை, குணம், மணம் இவற்றை பாதுகாக்கும். இதனால் இவற்றின் ஆயுட்காலம்(shelf life) தக்கவைக்கப்படும்.

பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் வைப்பது உணவு பொருட்களின் தரம், சுவை, மணம் குன்றச்செய்யும்.

சமையலறை.

சமையலறையின் கிழக்கு, வடக்கு பகுதியில் சமையலுக்கான பொருட்களை வைப்பதும், அதை பயன்படுத்துவதும் நேர்மறை சக்தி தரும். அதாவது கிழக்கு, வடக்கு பகுதியில் சமையலுக்கான பொருட்கள் வைக்கும் அலமாரி இருப்பது என்று அர்த்தம்.

புத்திசாலிகள், முட்டாள்கள்.

முட்டாள்களை புத்திசாலிகளாக்குவது எப்படி என்று புத்திசாலிகளுக்கே தெரியாத விஷயம்.

முட்டாள்கள் புத்திசாலிகளின் வழியில் செல்வதே இல்லை. ஆனால் புத்திசாலிகளை முட்டாள்களாக்குவது எப்படி என்று முட்டாள்களுக்கு தெரியும். அதுவே முட்டாள்களின் புத்திசாலித்தனம்.

தமிழன் வேப்பங்குச்சியில் பல் துலக்கி தன் பற்களை ஆரோக்கியமாக வைத்து இருந்தான். ஆனால் தற்போது தமிழனால் tooth paste, brush இல்லாமல் பல் துலக்க தெரியாது.

தமிழன் குளிப்பதற்கு பாசி பயறு மாவும், கடலை மாவும், மற்ற பல பொருட்களையும் பயன்படுத்தினான். இன்றைய தமிழனால் soap, shampoo இல்லாமல் குளிக்க தெரியாது. இங்கே சுத்தம் என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வரலாம். soap, shampoo உபயோகித்தால் தான் சுத்தம் வரும் என்றால் soap, shampoo கண்டுபிடிப்பதற்கு முன்பு வாழ்ந்த தமிழன் வரையில் யாருமே சுத்தமாக இல்லை என்று அர்த்தமாகிவிடும். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழன் துணிகளை சுத்தப்படுத்த என்ன பயன்படுத்தினான் என்று எனக்கு தெரியவில்லை. இன்றைய தமிழனால் detergent powder, detergent cake இல்லாமல் துணிகளை சுத்தம் செய்ய தெரியாது.

தமிழன் பாத்திரங்களை சுத்தப்படுத்த சாம்பல், புளி போன்ற பொருட்களை பயன்படுத்தினான். இன்றைய தமிழனால் dish wash bar இல்லாமல் பாத்திரங்களை சுத்தம் செய்ய தெரியாது.

soap, shampoo, detergent powder, dish wash bar இந்த எல்லா பொருட்களும் ரசாயன பொருட்களால் தான் தயாரிக்கப்படுகின்றன.

எந்த ஒரு சோப்பிலும், விளம்பரங்களில் வருவது போல் பழசாறுகள் சேர்க்கப்படுவது இல்லை. பாத்திரம் தேய்க்கும் சோப்பில் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுவது இல்லை. எல்லாமே ரசாயனம். அதாவது natural identical synthetic flavours. இயற்கையான பொருட்கள் போன்று நறுமணம் தரக்கூடிய செயற்கையான ரசாயன பொருட்கள்.

இவை அனைத்துமே நீரை மாசுபடுத்துகின்றன.

ஒரு நாளைக்கு ஒரு மனிதன் குளிக்க சோப்பு பயன்படுத்துவதால் ஒரு லிட்டர் தண்ணீரை மாசுபடுத்துகின்றான் என்று வைத்துக்கொள்வோம். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு சோப்பு பயன்படுத்துவதால் எவ்வளவு லிட்டர் நீர் மாசுபடுகிறது என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் துணி துவைக்கவும், பாத்திரம் கழுவவும், சோப்பு பயன்படுத்துவதால் 2 லிட்டர் நீர் மாசுபடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் நீர் மாசுபடுகிறது என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

அசைவம்.

அசைவம் சாப்பிடமாட்டேன் என்று சொல்லும் பெண்கள் கூட பட்டு புழுக்களை கொன்று தயாரிக்கப்படும் பட்டு புடவைகளை வாங்கி சந்தோசமாக அணிகிறார்கள்.

அசைவம் சாப்பிடமாட்டேன் என்று சொல்லும் ஆண்கள் கூட மிருகங்களை கொன்று, மிருகங்களின் தோலினால் தயாரிக்கப்பட்ட செருப்பு, ஷூ, பெல்ட், பர்ஸ் உபயோகிக்கிறார்கள்.

மரணம்.

கண்திருஷ்டிக்காக கட்டப்பட்ட பொருட்கள் தானாக கயிறு அறுந்து விழுந்துவிட்டாலோ, அல்லது அதை கழற்றும்போது கயிறு அறுந்து விழுந்துவிட்டாலோ, அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் நேரலாம்.

விக்கல்.

ஒருவர் நம்மை நினைப்பதால் தான் விக்கல் வருகிறது என்று பலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். என்னை பொருத்தவரை இது தவறு.

தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்காதவர்கள் திருநீரை நெற்றியில் நெற்றிக்கண் (third eye chakra) பகுதியில் பூசினால் விக்கல் நிற்கும். (third eye chakra பற்றிய மேலும் விவரங்கள் அறிய you tube இல் பார்க்கலாம்.)

மரணத்தின் தருவாயில் இருப்பவர்களுக்கும் விக்கல் தொடர்ந்து இருக்கும். இது மரணத்திற்கு முந்தைய அறிகுறியாகவும் எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கும் திருநீறு பூசினால் விக்கல் நிற்கலாம்.

ஐம்பொன்.

ஐம்பொன் என்று அழைக்கப்படும்  தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம் போன்ற பொருட்கள் ஆபரணமாகவும், விளக்கு தயாரிக்கவும் செய்யும் போது  அது மனிதர்களின் செயல்திறனை குறைக்கிறது.

இதற்கு மிக சிறந்த உதாரணம், முந்தைய தலைமுறை பெண்களை விட, இன்றைய தலைமுறை பெண்கள் மேற்சொன்ன உலோகங்களால் ஆபரணம் அணியாமல் இருப்பதும், குறைவாக அணிவதும் ஒரு காரணம்.

நம் முன்னோர்கள் கயிறில் தான் தாலி கட்டினார்களே தவிர தங்கத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை.

பித்தளையினால் தயாரிக்கப்பட்ட விளக்கு ஏற்றுவது, என்னை பொறுத்தவரை தவறான முடிவெடுக்கும் திறனை தருகிறது. வெள்ளியினால் விளக்கு ஏற்றுவது அதைவிட அதிகமான துன்பம் தருகிறது.

Thursday 7 November 2013

பாவத்தை அதிகரிக்கும் லஞ்சம்.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் குடும்பத்தில், நல்லநிலையில் வாழமுடியாத பிள்ளை அல்லது தீராத வியாதி உடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் கண்டிப்பாக இருப்பார்.

தங்கம், வெள்ளி.(gold, silver)

தங்கம், வெள்ளி இவற்றால் உருவாக்கப்பட்ட தட்டுகளில் உணவு வைத்து சாப்பிடுவது அதிக துண்பத்தை தரும் என்பது எனது கருத்து.

முன்னால் நடிகர், தியாகராஜ பாகவதர் தங்க தட்டில் தான் உணவு வைத்து சாபிடுவாராம். அவர் கொலை குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்தார்.

நான் என்னுடைய 20 வயது வரை வெள்ளி தட்டில் உணவு வைத்து சாப்பிட்டவன், வெள்ளி டம்ப்ளரில் தான் தண்ணீர் குடிப்பேன். ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் எவ்வளவோ துன்பங்களை அனுபவித்து வருகிறேன்.

நட்சத்திர உணவகங்களில் வெள்ளி பொருட்களில் தான் உணவை பரிமாறுகிறார்கள்.

பலர் தங்கள் குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணத்தில் உணவு வைத்து, அந்த குழந்தைகளுக்கு ஊட்டுகிறார்கள். அது அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கலாம்.

கண்ணாடி, பீங்கான், இலைகள், மண் பாத்திரங்களே சிறந்தவையாக நான் கருதுகிறேன்.

திருநீறு, குங்குமம்.

திருநீறு, குங்குமம் இவை இரண்டையும் திறந்த நிலையில் இருக்கும் கண்ணாடி அல்லது பீங்கான் அல்லது மண் கிண்ணத்தில் (bowl) வைப்பதே சரியானதாக நான் கருதுகிறேன்.

குங்குமத்தை எல்லோரும் பித்தளை அல்லது வெள்ளியில் உருவாக்கப்பட்ட குங்கும சிமிழில் தான்  வைக்கின்றோம். அது என்னை பொறுத்தவரை ராசி இல்லை என்றே கருதுகிறேன்.

சிலந்தி, எட்டு கால் பூச்சி.

சிலந்தி, எட்டு கால் பூச்சி இவை இரண்டும் வீட்டில் வராமல் பார்த்து அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். இவை இரண்டும் எதிர்மறை சக்திகளை அதிகம் ஈர்க்கும் தன்மை பெற்றவை.

Friday 1 November 2013

ஸ்படிகம், ராசி கற்கள்,(வைரம் உள்பட)precious and semi precious stones (including diamond)

ஸ்படிகம், ராசி கற்கள்,(வைரம் உள்பட) இந்த கற்கள் உபயோகிக்கும் போது  ஏற்படும் ஆபத்து நிலையை இங்கே தருகிறேன்.

1) முதல் கட்ட ஆபத்து நிலை, இந்த கற்களை பட்டை தீட்டி அணியும் போது, இவை பிரபஞ்ச சக்தியை மனித உடலில் ஏற்றுகின்றன. இதனால் மனிதனின் ஆயுள் குறைகிறது. closed type உபயோகபடுத்தினாலும் இதே நிலை தான். பட்டை தீட்டப்பட்ட கற்கள் ராசி கற்களாக இருந்தாலும் சரி, A.D.கற்களாக இருந்தாலும் சரி, அவை ஆயுளை குறைக்கும். ஆபரணமாக அணியாவிட்டாலும் வீட்டில் வைத்திருந்தாலும் அவை சக்தியை ஈர்த்துக்கொண்டே இருக்கும். அதனால் ஆயுள் குறையும்.

2) பந்து வடிவத்தில் ராசிக்கல் வாங்கினாலும் அதை அணிகலனாக அணிவது ஆயுளை குறைக்கும் என்பது என் கருத்து.



ஐந்து முக விளக்கு.

என்னை பொருத்தவரை ஐந்து முக விளக்கு என்பது ஒரு தவறான வடிவமைப்பாக நான் பார்க்கிறேன்.

காரணம், என்னுடைய கணக்குப்படி, கிழக்கு, வடக்கு இணைந்த "ட" வடிவம் நேர்மறை சக்தி கொண்டது.

மேற்கு, தெற்கு இணைந்த "ட" வடிவம் எதிர்மறை சக்தி கொண்டது.

ஐந்து முக விளக்கில் விளக்கேற்றும் போது, கண்டிப்பாக குறைந்தது இரண்டு முகங்கள் எதிர்மறை திசை நோக்கி இருக்கும்.