இந்த செவ்வாய் கிழமை அமாவாசை அன்று நண்பன் அவனுடைய பெற்றோருக்கு திதி கொடுத்தான். நானும் அவனோடு திருப்புவனம் சென்றேன். திதி கொடுப்பது அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயம். திதி கொடுப்பது போன்ற விசயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
இங்கே தகவல் அதுவல்ல.
திதி கொடுக்கும் சமயத்தில் plastic disposable cup இல் எள், வெல்லம், பூ இவற்றை வைத்து அதை அப்படியே வைகை ஆற்று மணலில் புதைக்கிறார்கள்.
Plastic disposable cup ஐ எதற்காக மணலில் புதைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
பிளாஸ்டிக்கை பல விதங்களிலும் பயன்படுத்திக் கொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூச்சலிடுவது பொய்யான புரட்சியே.
No comments:
Post a Comment