என் வாழ்க்கையில் என் அம்மா, என் பாட்டி, மற்றும் என் கடந்த கால வாழ்க்கையின் சில பெண் நண்பர்கள் தவிர நான் நல்ல மனம் கொண்ட பெண்களோடு பேசியதில்லை, பழகியதில்லை.
கொடூர மனம் கொண்ட பெண்களை தான் என் வாழ்க்கையில் அதிகம் சந்தித்து இருக்கிறேன். அவர்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.
உலக அழகி போட்டி அந்தந்த நாடுகளில் அழகு சாதன பொருட்களை சந்தைபடுத்துவதற்க்கு நடத்தப்படுகிறது.
உலக மகளிர் தினம் மேல் நாட்டு கலாச்சாரத்தை புகுத்துவதற்கு நடத்தப்படுகிறது. உலக மகளிர் தினத்தில் சில விசயங்கள் பெண்களின் மனதில் விதைக்கப்படுகின்றன.
1)ஆண்கள் காமுகர்கள்.
2)கணவனின் விருப்பத்திற்கு மனைவி இணங்க கூடாது.
3)ஆண்களின் எல்லா கருத்துக்களையும் பெண்கள் எதிர்க்க வேண்டும்.
4)ஆண்களுக்கு பெண்கள் அடிபணியவே கூடாது. ஆண்களை பெண்கள் அடிமைப்படுத்தவேண்டும்.
5)ஆணின் துணை இன்றி தனியாக வாழ வேண்டும்.
இந்த விசயங்கள் விதைக்கப்படுவதன் மூலம் இந்தியாவின் குடும்ப உறவுகள் சிதைக்கப்பட வேண்டும்.இதுவே இந்த உலக மகளிர் தினத்தின் மறைமுகமான நோக்கம்.
நான் பொதுவாக விளையாட்டு tv சேனல்கள் பார்ப்பதே இல்லை. மகளிர் தினமான 8-3-14 அன்று எதேச்சையாக ten sports சேனல் இரவு 8-40க்கு மாற்றியபோது பெண்கள் விளையாடும் விளையாட்டு ஒன்று நடந்து கொண்டிருந்தது. பெண்கள் தினம் கொண்டாடிய அனைத்து பெண்ஈயவாதிகள் மீதும் தலையில் அடித்து சத்தியமாக சொல்கிறேன். இந்த பெண்கள் அனைவரும் bra மற்றும் ஜட்டி மட்டுமே அணிந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள். நிகழ்ச்சி எவ்வளவு நேரமாக ஒளிபரப்பானது என்று எனக்கு தெரியாது. நான் சில நிமிடங்கள் ரசித்து பார்த்தேன்.
ஆங்கில டிவி சேனல்களில் முத்த காட்சி வந்தாலே இந்தியாவின் கலாச்சாரம் கெட்டு விட்டது என்று அதை வெட்ட துடிக்கும் அரசியல்வாதிகள் இதை பார்த்து ரசித்தார்களா என்று எனக்கு தெரியாது.
No comments:
Post a Comment