நம் முன்னோர்கள் பல கோடி ஆண்டுகளாக எந்த ஒரு விசயத்திலும் மாற்று வழி என்ற ஒன்றைப்பற்றி சிந்திக்கவே இல்லை. காரணம் அவர்கள் சரியான வழியிலேயே சென்றார்கள்.
ஆனால் நாம் சுதந்திரம் வாங்கி 100 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் பல விசயங்களிலும் மாற்று வழி என்ன என்று யோசித்துக்கொண்டு இருக்கிறாம். இதற்க்கு காரணம் நாம் தவறான வழியில் சென்று கொண்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை.
குறிப்பாக, எரிபொருள், உணவு உற்பத்தி, நீர் மாசுபாடு, நிலம் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் பல.
நம் முன்னோர்கள் விறகை எரித்து உணவு சமைத்தார்கள். ஆனாலும் அவர்கள் மாற்று வழி பற்றி யோசிக்கவே இல்லை. காரணம் இயற்கையை அவர்கள் பாதுகாத்தார்கள்.
ஆனால் நாம் விறகை பயன்படுத்தாவிட்டாலும் இயற்கையை அழித்துவிட்ட காரணத்தினால் மாற்று வழி பற்றி யோசித்துக்கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment