Friday 20 December 2013

தாடிக்கும், விற்பனைக்கும் என்ன சம்பந்தம்?

சந்தைபடுத்துதல் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்கள் முகசவரம் செய்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

சீக்கியர்கள் தாடியுடன் தான் சந்தைக்கு வருகிறார்கள். தங்கள் பொருட்களை விற்கிறார்கள். அவர்கள் தாடியுடன் வருகிறார்கள் என்பதற்காக யாரும் அவர்களிடம் பொருட்களை வாங்காமல் இருப்பது இல்லை.

ஜேசுதாஸ் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக அவர் பாடல்களை கேட்காமல் இருக்கிறோமா?

பெரியார் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக அவர் கருத்துக்களை கேட்காமல் இருக்கிறோமா?

திருவள்ளுவர் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக திருக்குறள் படிக்காமல், அதை பற்றி பேசாமல் இருக்கிறோமா?

ஏசுநாதர் தாடியுடன் இருக்கிறார் என்பதற்காக அவரை வணங்காமல் இருக்கிறோமா?

தாடிக்கும், விற்பனைக்கும் என்னங்கடா சம்பந்தம்?

No comments:

Post a Comment