Wednesday 30 April 2014

தீட்டு.

குழந்தை பிறந்த வீட்டில் இருப்பவர்களும், பெண் வயதுக்கு வந்த வீட்டில் இருப்பவர்களும், இறந்த ஒருவரின் வீட்டில் இருப்பவர்களும் கோவிலுக்கு சில நாட்கள் செல்ல கூடாது. அது தீட்டு என்று சொல்கிறார்கள்.

இது எதனால் வந்தது என்று எனக்கு தெரியாது.

ஆனால் இந்த குடும்பத்தில் இருப்பவர்கள் அந்த குறிப்பிட்ட காலம் வரை கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது.

ஆனால் இவர்களுக்கு ஏதாவது மன சஞ்சலம் அல்லது கஷ்டம் ஏற்படுமாயின், கோவிலுக்கு செல்ல முடியவில்லையே என்று தோன்றலாம்.

இவர்கள் அந்த கால கட்டத்தில் வீட்டின் அருகே இருக்கும் வேப்ப மரத்தின் கீழ் நின்று கடவுளை வணங்கலாம் என்பது என் கருத்து.

No comments:

Post a Comment