Friday 30 August 2013

பூஜை அறை வாஸ்து.

பூஜை அறையில் சிலர் தாங்கள் எந்த கோவிலுக்கு சென்று வந்தாலும் அந்த கோவிலில் இருக்கும் தெய்வங்களின் படங்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து விடுகிறார்கள். இது மிகவும் தவறு. இதனால் அதிக துன்பங்களே வரும்.

மனிதர்கள் தங்கள் குலதெய்வத்தின் படத்தை வைத்து கொள்ளலாம். தாங்கள் எந்த கோவிலுக்கு சென்று வந்தால் தங்களுக்கு நன்மை நடக்கிறதோ அந்த தெய்வத்தின் படத்தை வைத்து கொள்ளலாம்.

மனிதர்கள் தங்கள் குலதெய்வம் கோவில் தவிர சில கோவில்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். அதாவது எந்த கோவிலுக்கு சென்று வந்தால் தங்களுக்கு நன்மை நடக்கிறதோ அந்த கோவிலுக்கு மட்டுமே செல்லலாம். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தினமும் ஒரு கோவிலுக்கு சென்று வந்தால் துன்பமே வரும்.

ஏனென்றால் உங்களுக்கு துன்பம் வரும் போது நீங்கள் எல்லா தெய்வங்களையும் அழைத்தால், அந்த தெய்வம் செல்லும் என்று இந்த தெய்வம் சும்மா இருக்கும். இந்த தெய்வம் செல்லும் என்று அந்த தெய்வம் சும்மா இருக்கும்.

தெய்வங்கள் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு கோவிலுக்கும் உள்ள சக்தி வேறு, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் எந்திரத்தின் சக்தி வேறு, இப்படி பல விஷயங்கள் வேறாக இருக்கும். 

No comments:

Post a Comment