Friday 30 August 2013

தெய்வ சிலைகள்.

தெய்வ சிலைகளை சுற்றி வருவது பைத்தியக்காரதனமானது என்று நாத்திகர்கள் சொல்கிறார்கள்.

நீங்கள் சிறு வயதில் சாலை போட, சாலை ஓரங்களில் கொட்டியிருக்கும் அல்லது வீடு கட்ட கொட்டியிருக்கும் கருங்கல்லைக்கொண்டு விளையாடி இருக்கிறீர்களா?

இரண்டு கரடு முரடான கருங்கற்களை ஒருவர் தன் இரண்டு கைகளாலும் ஒட்டியவாறு பிடித்துக்கொள்ள வேண்டும். ஒருவர் மூன்றாவது கருங்கல்லை, அந்த இரண்டு ஒட்டிய கருங்கல்லை, சூரியனை பூமி சுற்றி வருவதைப்போல் சுற்ற வேண்டும். சிறிது நேரத்தில் அந்த இரண்டு கருங்கற்களுக்கும் இடையில் ஒரு காந்த சக்தி ஏற்படுவதை உணரலாம். அந்த இரண்டு கருங்கற்களையும் சில வினாடிகளுக்கு பிரிக்க முடியாது.

இதே போன்ற ஒரு நிலை தான் தெய்வ சிலைகளிலும் ஏற்படுகிறது. பல மனிதர்கள் தெய்வ சிலைகளை சுற்றி வரும்போது அந்த சிலையில் ஒரு காந்த சக்தி ஏற்பட்டு மனிதர்களின் உடலில் பரவுகிறது.

No comments:

Post a Comment