Saturday 17 August 2013

கண்திருஷ்டி, செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், நீங்க.

எந்த ஒரு பொருளையும் கட்டி தொங்க விட்டாலும் அது ஆயுளை குறைக்கும் என்பது என் கருத்து.

சாமி கும்பிடும் இடத்தில் வைத்தாலும் அதன் ஈர்ப்பு சக்தி ஆயுளை குறைக்கிறது.

தலையை சுற்றி போட்டு தோஷம் கழித்தாலும், அது முழுமையான பலனை தருவதில்லை.

கண்திருஷ்டி என்ற எதிர்மறை சக்தியும், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீய சக்திகளும் உடலுக்குள் நுழைந்து, உடலுக்குள் உள்ளிருந்தபடியே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதற்க்கு 100% சரியான தீர்வு ஆரோக்கியமான உணவு முறை தான். ஆரோக்கியமான உணவு முறையால் மட்டுமே இதை உடலை விட்டு முழுமையாக, நிரந்தரமாக வெளியேற்ற முடியும். 

இஞ்சி, தயிர், நெல்லிக்காய் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

சீரகத்தை தினமும் மூன்று வேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சமைக்காமல் சாப்பிடலாம். சீரக தண்ணீர் குடிக்கலாம்.

பதிமுகம் (pathimugam) கலந்த நீர் குடிக்கலாம்.கேரளா மாநிலத்தில் எல்லோருமே பதிமுகம் கலந்த நீரை குடிக்கிறார்கள். பதிமுகம் கேரளா முழுவதும் கிடைக்கிறது. தமிழ்நாடு, கேரளா எல்லை பகுதியில் இருக்கும் ஊர்களில் கிடைக்கிறது. பதிமுகம் என்பது ஒரு வகை மரம். இந்த மரத்தின் சிறு சிறு துண்டுகளை நீரில் போட்டு வைத்தால் நீர் சற்றே சிவந்த நிறத்தில் மாறி விடும். இது உடலுக்கு மிக ஆரோக்கியமானது. குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் பதிமுகத்தை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். வெப்பமான நிலப்பரப்பில் இருப்பவர்கள் குடி தண்ணீர் இருக்கும் பானையில் போட்டு வைத்து பின்னர் குடிக்கலாம். சில மணி நேரங்களிலேயே தண்ணீர் சற்றே சிவந்த நிறத்திற்கு மாறி விடும். ஒரு பானை தண்ணீருக்கு ஒரு சிட்டிகை பதிமுகம் போதுமானது. 

பதிமுகம் பல ஆயுர்வேத மருந்துகளில் முக்கியமான ஒன்றாக கலக்கப்படுகிறது.

இனி எண்ட state கேரளா 
எண்ட transport kerala state road transport corporation 
எண்ட பிகர் மலபார் பிகர் 
எண்ட நடனம் கதகளீஈஈஈ 


தகிட தக திமி மலையாள பகவதி 

No comments:

Post a Comment