www.pathillai.blogspot.in
Tuesday, 1 September 2015
Saturday, 29 August 2015
மோதிரம்
சில காரணங்களால் மோதிரத்தை பற்றிய என்னுடைய பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டேன். சில ஆய்வுகளுக்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன்.
Sunday, 23 August 2015
கோவில்கள், நவ கிரகங்கள்
எல்லா குலதெய்வ கோவில்களும் பெரும்பாலும் நேர்கோட்டு வடிவம் அல்லது ட வடிவத்திலேயே இருக்கின்றன. எந்த குலதெய்வ கோவில்களிலும் நவகிரக வழிபாடே கிடையாது.
மற்ற கோவில்கள் ஓ என்ற (ஓம் அல்ல) வடிவில் கட்டப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற வடிவில் கட்டப்பட்ட கோவில்கள் எதுவுமே குலதெய்வ கோவில்கள் அல்ல. மேலும் இவற்றில் நவகிரக வழிபாடு இருக்கிறது.
குலதெய்வ கோவில்கள் தான் ஓ வடிவ கோவில்களுக்கும் முந்தைய காலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும்.
நவகிரக வழிபாடு என்பது சரியா? என்பதையும் யோசிக்கிறேன். என் வாழ்க்கையில் 18 வருடங்களுக்கு முன் நவகிரக கோவில்களுக்கு சென்று வழிபட ஆரம்பித்த பின்னர் தான் அதிகமான, சமாளிக்க முடியாத கஷ்டங்கள் உண்டானது.
முதன்முதலில் சூரியன் கோவிலுக்கு தான் சென்றேன். பிறகு எல்லா கிரக கோவில்களுக்கும் சென்று வழிபட்டிருக்கிறேன்.
Sunday, 16 August 2015
ஜோதிட ஆராய்ச்சி
Friday, 7 August 2015
விருந்தோம்பல்
Thursday, 6 August 2015
தங்கம், வெள்ளி
தங்கத்தில் ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் அணியும் போது மிக விரைவாக எதிர்மறை சக்தி தரும்.(ஒட்டியாணம், கொலுசு, மெட்டி)
வெள்ளியில் ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் அணியும் போது எதிர்மறை சக்தி தரும். ஆனால் தங்கத்தோடு ஒப்பிடும் போது இதன் வேகம் குறைவாக இருக்கும்.(அருணா கயிறு, கொலுசு, மெட்டி)
anatomic treatment
Monday, 3 August 2015
பூமி தாய்
Sunday, 2 August 2015
ஓம்
"ஓம்" என்ற சொல்லுக்கும் கலியுகத்தின் அழிவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவே கருதுகிறேன்.
காரணம் மந்திரங்களை "ஓம்' என்று சொல்லியபிறகு சொல்லும் போது நற்பலன்கள் கிடைக்காமல் கெடுபலன்களே கிடைப்பதாக கருதுகிறேன்.
"ஓம்" என்ற சொல்லை சொல்லாமல் மந்திரங்கள் சொல்லும் போது நற்பலன்கள் கிடைப்பதாக கருதுகிறேன்.
உதாரணமாக,
"ஓம் நமசிவய"
என்று சொல்லும்போது கெடுபலன்களே உண்டாவதாக கருதுகிறேன்.
ஆனால் ஓம் என்று சொல்லாமல் வெறுமனே
"நமசிவய"
என்று சொல்லும்போது நற்பலன்கள் கிடைப்பதாக கருதுகிறேன்.
என்னுடைய பழைய பதிவொன்றில் பெண்கள் ஓம் சொல்லக்கூடாது என்று சொல்லி இருந்தேன்.
ஆண்கள், பெண்கள் இருவருமே தவிர்க்க வேண்டிய சொல் "ஓம்" என்பது என் கருத்து.
Tuesday, 28 July 2015
சீவல் சுண்ணாம்பு
இந்த சீவல் சுண்ணாம்பை சேர்க்காவிட்டால் அதை தான் கள் என்று சொல்கிறார்கள்.
சீவல் சுண்ணாம்பை சேர்ப்பதால் தான் கள், பதநீராகிறது என்கிறார்கள்.
Saturday, 25 July 2015
சமையலறை
வீட்டின் கிழக்கு, வடக்கு பகுதியில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது என் கருத்து.
காரணம் நேர்மறை சக்தியை கிழக்கு, வடக்கு திசையில் இருந்து தான் நாம் பெறுகிறோம். உணவையும் நாம் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்து சமைத்து எடுத்து பயன்படுத்தும் போது நேர்மறை சக்தி கிடைக்கும்.
வரலாறு முக்கியம் அமைச்சரே
Sunday, 19 July 2015
பாகுபலி
பாகுபலி திரை விமர்சனம்
வடிவேலு:- மாமி அந்த பொண்ணு நிறை மாத கர்ப்பிணிணு சொல்றீங்க. அவ புருஷன் அவளை மாடியில் இருந்து தள்ளி விட்டுட்டான்னு சொல்றீங்க. அப்புறம் என்ன ஆச்சு?
மாமி:- யாருக்கு தெரியும்???அவன் தான் கட் பண்ணிட்டு தொடரும்னு போட்டானே!!!!!!
Thursday, 16 July 2015
shock absorber
அவ்வாறு பொருத்தப்பட்டிருந்தால் முதுகு சம்பந்தமான பிரச்சனைகள் வராது.
இது பற்றிய தகவலை எல்லா இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஈமெயில் மூலமாகவும், facebook மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன்.
என்னுடைய இந்த கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.
ஏற்கெனவே பிரமிட் பூமியை பாலைவனமாக மாற்றும் சக்தி படைத்தது என்பது பற்றிய தகவலை உள்ளூர் பத்திரிகைகள் முதல் உலக நாடுகளில் இருக்கும் பத்திரிகைகள் வரை, உள்ளூர் டிவி சேனல்கள் முதல் உலக அளவில் பிரசித்தி பெற்ற டிவி சேனல்கள் வரை அனுப்பினேன்.
ஆனால் ஒரு பரதேசியும் அதை பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
Tuesday, 7 July 2015
ராசி பலன்
Sunday, 5 July 2015
கோவில் நகரம்
Thursday, 2 July 2015
(+) x (-) = (-)
ஒரே நேரத்தில் நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி தூண்டப்படும் போது அல்லது செயல்படுத்தப்படும் போது அதன் முடிவு எதிர்மறையாகவே இருக்கும்.
கண்ணாடி, திருநீறு, குங்குமம், மஞ்சள், சாமி படம், யந்திரம், சாமி சிலை, தீபம் மற்றும் எல்லா ஈர்ப்பு சக்தி கொண்ட பொருட்களையும் எதிரெதிர் திசையில் வைத்தால் எதிர்மறை முடிவே ஏற்படும்.
உதாரணம் கண்ணாடியை நேர்மறை திசை நோக்கியும், இன்னொரு கண்ணாடியை எதிர்மறை திசை நோக்கியும் வைத்தால் முடிவு எதிர்மறையாக இருக்கும்.
ஐந்து முக விளக்கில் தீபம் ஏற்றும் போது தீபம் நேர்மறை திசை நோக்கியும், எதிர்மறை திசை நோக்கியும் இருப்பதால் எதிர்மறை பலனே உண்டாகும்.
கோவில்களிலும் இதே நிலை தான். சில சிலைகள் நேர்மறை திசை நோக்கியும், சில சிலைகள் எதிர்மறை திசை நோக்கியும் உள்ளன.
கோபுரங்களில் ஏராளமான சிலைகள் நேர்மறை திசை நோக்கியும், ஏராளமான சிலைகள் எதிர்மறை திசை நோக்கியும் உள்ளன.
எனவே இவை கலியுகத்தின் அழிவை நமக்கு எளிதில் தருகின்றன.
Friday, 26 June 2015
அரிப்பு, நமைச்சல், ஊறல்
உடலில் எந்த பகுதியில் அரிப்பு, நமைச்சல், ஊறல் ஏற்பட்டாலும் (மர்ம உறுப்பு உட்பட) கசப்பு சுவையை தினமும் உணவில் சேர்த்து கொள்ள பிரச்சனை தீரும்.
வேப்பிலை, வேப்பிலை சாறு, வேப்பிலை பொடி சாப்பிடலாம்.
Thursday, 18 June 2015
எல்லா கோவில்களுக்கும் மதுரையில் கிளை (one stop temple)
Friday, 12 June 2015
Monday, 8 June 2015
Saturday, 6 June 2015
Saturday, 30 May 2015
மதுரை
தீவிரவாதம்
தீவிரவாத்தை தூண்டினால் மட்டுமே தீவிரவாதிகளுக்கு கொலை செய்யும் எண்ணம் வரும். கொலை செய்ய ஆயுதங்கள் தேவை. ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் 5 ரூபாய் 10 ரூபாய்க்கு விற்பவர்கள் அல்ல. ஒவ்வொரு விதமான ஆயுதங்களும் பல ஆயிரங்களும் பல லட்சங்களும் கொடுத்து தான் வாங்க வேண்டும். அதன் மூலம் ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் பல கோடிகளை சம்பாதிக்க முடியும்.
சற்றே யோசித்து பாருங்கள் தீவிரவாதம் இல்லாமல் போய்விட்டால் இவர்களால் 1 பைசா கூட சம்பாதிக்க முடியாது. எனவே இவர்கள் தீவிரவாதத்தை தூண்டிக்கொண்டே தான் இருப்பார்கள்.
திருநீறு, குங்குமம், மஞ்சள் தூள்
சாம்பிராணி, தசாங்கம்
Tuesday, 26 May 2015
படைத்தல்
மனிதன் என்ற விலங்கை படைத்த பிறகு கடவுள் தன் படைக்கும் தொழிலை நிறுத்திக் கொண்டான்.
இவனுங்களே நம்மை அழிச்சிடுவானுங்க! என்ற பயம் அவனுக்கு வந்து விட்டது. அடுத்து வேறோர் உயிரினத்தையும் படைத்தால் அதற்கு வேலைக்காரனாக மாற்றி விடுவார்களோ என்று பயம் வந்து விட்டது.
Monday, 25 May 2015
அரசமரம், ஆலமரம்
அரசமரம், ஆலமரம் வீட்டில் வளரக்கூடாது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு துன்பமே நேரும்.
Tuesday, 19 May 2015
அசரீரீ என்பது உண்மையா?
Sunday, 3 May 2015
சைவம் vs வைணவம்
சிவனே பெருமாள் குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கும் போது, பெருமாளே சிவனுக்கு பெண்ணை கொடுக்கும் போது மனிதன் பெண்ணை கொடுக்கவோ, எடுக்கவோ மாட்டேன் என்று சொல்வது கடவுளையே அசிங்கப்படுத்துவதாக தானே அர்த்தம்?
Monday, 27 April 2015
சீக்கியர்கள் vs தமிழர்கள்
சித்தர்கள், கிரகங்கள்
மாற்றான் மனைவியை புணர்ந்த சித்தர்களும், கிரகங்களும் இருந்திருக்கிறார்கள்.
மேலும் நான் ஏற்கெனவே சொன்னது போல் நம் ஆயுள் குறைவிற்கு சித்தர்களே காரணகர்த்தா.
சித்தர்கள் தாங்கள் கண்டுபிடித்த வசியம், மோகனம், மாராணம், ஸ்தம்பனம் மற்றும் பல மந்திர வித்தைகளை சோதித்து, பிறர் மீது பிரயோகித்து பார்த்த பிறகே வெளியில் சொல்லி இருந்திருக்கிறார்கள்.
சித்தர்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?
பின் எதற்காக எதிரிகளை அழிக்கும் மந்திரங்களை கண்டுபிடித்தார்கள்?
பெண்களை வசியம் செய்யும் மந்திரங்களை இவர்கள் யார் மீதெல்லாம் பிரயோகித்து இருக்கிறார்கள்?
இது போன்ற கேள்விகள் எழுகின்றன.
Saturday, 25 April 2015
ஜாதகம்
மகம் நட்சத்திரத்தில் பிறந்த எல்லோருமே ஜகத்தை ஆண்டது கிடையாது.
பரணி நட்சத்திரத்தில் பிறந்த எல்லோருமே தரணியை ஆண்டது கிடையாது.
Friday, 24 April 2015
ஆசிரியர் பத்மநாபன்
Thursday, 23 April 2015
திதி கொடுப்பது
இறந்த ஒருவருடைய ஆன்மா கடவுளை அடைந்து விட்டதாகவும், நம் உடனேயே சில காலம் இருப்பதாகவும், மறுபிறவி எடுத்து வாழ்வதாகவும் நம்புகிறோம்.
கடவுளை அடைந்து விட்ட ஆன்மாவிற்கு திதி கொடுப்பது கடவுளுக்கே திதி கொடுப்பதாகத்தானே அர்த்தமாகும்.
நம் உடன் இருக்கும் ஆன்மாவிற்கு திதி கொடுப்பது சரியா?
மறுபிறவி எடுத்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு திதி கொடுக்கலாமா?
உயிரோடு இருப்பவர்களுக்கு திதி கொடுக்கலாமா?
நம்முடைய இந்த பிறவி நமது பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சி என்று நம்புகிறோம். உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு நம்முடைய பூர்வ ஜென்ம வாரிசுகள் ஏதோ ஓர் இடத்தில் நமக்கு தற்போது திதி கொடுத்துக் கொண்டு இருப்பார்கள் என்றால், அது சரியா? உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு திதி கொடுக்கலாமா?
நான்
இந்த உலகத்தில் நிகழும் எல்லா நல்ல விசயங்களையும் நேர்மறை சக்தியின் விளைவாக நான் பார்க்கிறேன்.
எல்லா கெட்ட விசயங்களையும் எதிர்மறை சக்தியின் விளைவாக பார்க்கிறேன்.
Monday, 20 April 2015
ஜம்பலக்கடிபம்பா
ஒரு காலத்தில் நான் சைட் அடிச்ச புள்ளைங்க எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல அதுக பெத்த புள்ளைகளை காலேஜ்ல சேர்க்க போகுதுங்க.
டேய் ஜம்பலக்கடி பம்பா சொக்கா மவனே நீ மட்டும் வருசா வருசம் உன் பொண்டாட்டியையே திரும்ப திரும்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு திரியிற.
மவனே நீ சும்மா இருந்தாலும் எவனோ ஒருத்தன் உன் பொண்டாட்டிக்கு தாலிய கட்டிடுறான்.
கோவில் கருவறை
கோவில் கருவறையின் உள்ளே ஏதாவது உயிரினம் 24 மணிநேரமும் இருந்தால் அந்த உயிரினம் விரைவில் மரணமடையும். காரணம் கருவறையின் மேலே இருக்கும் கோபுரமானது கீழே இருக்கும் சக்தியை 24 மணிநேரமும் உறிஞ்சிக் கொண்டே இருக்கிறது.
உதாரணமாக ஒரு மீன் தொட்டியை கருவறையின் உள்ளே வைத்தால் அது விரைவில் மரணமடையும்.
Sunday, 19 April 2015
பாசக்கார பயலுக
என்னுடைய சில சொந்தகாரனுங்களின் பேச்சுக்கு என்னோட மைன்ட் வாய்ஸ் இப்படி தான் இருக்கிறது.
உடம்புக்கே முடியல.
(நான் மட்டும் ஆரோக்கியமாவா இருக்கேன்)
வருமானமே இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு.
(அப்புறம் எப்படிடா புதுசு புதுசா நிலம் வாங்குறீங்க? வீட்ட கட்டுறீங்க? இல்லிட்டி வீடாவே வாங்குறீங்க?)
இருக்கிற கடனை அடைக்கவே கஷ்டமா இருக்கு.
(ஓ அந்த கவலை தீர தான் அப்பப்ப பாரீன் டூர் போயிட்டு வாரீங்களா?)
யார் கூடயும் பேசுறது இல்ல. நாத்தனார் கூட சண்ட. கொழுந்தன் கூட சண்ட. மச்சினன் கூட சண்ட.
(போன வாரம் தானடா குலதெய்வம் கோவில்ல உங்க எல்லாரையும் பார்த்தேன். ஒண்ணா உக்காந்து கூடி கும்மி அடிச்சுக்கிட்டு இருந்தீங்களேடா)
உன் வீடு என்ன பக்கத்துலயா இருக்கு. உன்ன வந்து பாக்க. கிருஷ்ணாபுரம் காலனில அவுட்டர் ஏரியாவுல இருக்க. எம்புட்டு தூரம் தெரியுமா?
(ஏண்டா வெளியூர்ல இருக்குற பணக்கார சொந்தக்காரனுங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வாரீங்க. அது என்ன அடுத்த தெருலயாடா இருக்கு? நீங்க வரவே வேண்டாம்டா)
Saturday, 18 April 2015
I love you
பொண்ணுங்க என்னை கூப்பிடணும்னு என் பேரை ஐ லவ் யூ என்று மாற்றி வைத்துக் கொண்டேன்.
இப்ப "ஐ லவ் யூ அண்ணா" "ஐ லவ் யூ அண்ணா"னு கூப்பிடுதுங்க.
என்ன கொடுமை சார் இது?
Friday, 17 April 2015
சூன்யத்தை வணங்குகிறோம்
சூன்யமான சிலைகளை தான் எல்லோரும் வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
இதை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா?
பிரமிடின் கீழே ஒரு மீன் தொட்டியை வைத்தால் அந்த மீன் சில நாட்களில் கொடூரமான முறையில் இறக்கும்.
Thursday, 16 April 2015
ஆறு
ஆறானது எந்த திசையில் இருந்து எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதைப் பொறுத்து ஒவ்வொரு ஆற்றிலும் குளிப்பதற்கான பலன்கள் மாறும்.
Tuesday, 14 April 2015
மார்கழி
குளுமையான மார்கழி மாதத்தை தமிழ் புத்தாண்டாக வைக்காமல் அக்னி வெயில் கொளுத்தும் சித்திரை மாதத்தை ஏன் தேர்ந்தெடுத்தான் பண்டைய தமிழன்?
Sunday, 12 April 2015
mts wifi
ஆனா பல சமயம் 1kbps ஸ்பீடுல தான் வருது.
போஸ்டரை காட்டி எமாத்திட்டானுங்க.
தேர்தல்
மேலும் தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே தேர்தலில் யார் யார் எவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே வெற்றிபெற்றவரை தெரிந்துகொள்ள முடியும்.
பண்டைய தமிழன்
வீரம், போர்பயிற்சி, தற்காப்பு இவற்றை பண்டைய தமிழன் பிறருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டான்.
வந்தாரை வாழ வைத்த தமிழன் தன் இனத்தை வாழவைக்க தவறிவிட்டான்.
Friday, 10 April 2015
வெங்கடாஜலபதி
நேற்று வரை கடன் பிரச்சனையில் சிக்கி தவித்த நான் இன்று என் கடனையும் அடைத்துவிட்டு 1000கோடி ரூபாய் சொத்துக்கும் அதிபதி ஆகிவிட்டேன்.
எல்லாம் அந்த வெங்கடாசலபதியின் அருள்.
ஐயோ இப்ப நான் எதையாவது வாங்கணுமே!
இந்த தெரு என்ன விலைன்னு கேளு!
அட இந்த ஊரு என்ன விலைன்னு கேளு!
Tuesday, 7 April 2015
இமயமலையும் வட துருவமும்
Friday, 3 April 2015
சோமாலியா
இவர்களை வாழ வைக்க வக்கில்லை. செவ்வாய்கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்று பல கோடி பணத்தை செலவு பண்ணி ஆராய்ச்சி பண்றாணுங்க. தூ.....
Wednesday, 1 April 2015
Sunday, 29 March 2015
Idea network
Idea network சரியில்லை என்ற காரணத்தால் வேறு நெட்வொர்க்குக்கு மாறிட்டேன். காரைக்குடி, தேனி போன்ற ஊர்களில் ரோமிங்ல வருது.
2 வருடங்களுக்கு முன்பு ஐடியா சிம் புதிதாக வாங்கிய போது மதுரையை தாண்டி எந்த ஊருக்கு சென்றாலும் ரோமிங் தான்.
வெளியூர் செல்லும் போது பயணகாலத்திலும் நெட்வொர்க் சரியில்லை.
கஸ்டமர் கேருக்கு எப்ப போன் பண்ணாலும் புதுசா 600 டவர் வச்சிக்கிட்டே இருக்கோம்ன்றானுங்க. 2 வருசமா இதே தான் சொல்றானுங்க.
Saturday, 28 March 2015
தண்ணீர் பிரச்சனை
குளம், ஏரி, கண்மாய் மற்றும் எல்லா நீர் சேமிப்பு வசதிகளையும் மூடி பிளாட் போட்டு வித்துட்டு பக்கத்து மாநிலத்தான் தண்ணீர் விட மாட்டேன்கிறான் என்று கத்துவது வீண் செயல்.
Friday, 27 March 2015
சின்ன விசயம்
சாதாரண சிறிய விசயத்தை செய்வதற்கு கூட அதிகமாக கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.
எனக்கு மட்டும் ஏண்டா ஆண்டவா இப்படி?
Tuesday, 24 March 2015
கீழ மாசி வீதி
மதுரை கீழமாசி வீதியில் 2 தேர்கள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த தேருக்கு அருகில் தான் மறைவான இருண்ட பகுதியில் பாலியல் தொழில் வெகு விமரிசையாக நடந்ததாக பலர் சொல்கிறார்கள்.
அந்த தேரை தான் எல்லோரும் இப்போது கும்பிடுறாய்ங்கே!
Wednesday, 18 March 2015
கண்ணாடி
கண்ணாடிக்கு ஈர்ப்பு சக்தியும், பிரதிபலிக்கும் சக்தியும் உண்டு.
எந்த இடத்தில் எந்த திசையை நோக்கி வைக்கிறோமோ அதற்கேற்ப பலன்கள் மாறும்.
Monday, 16 March 2015
கோவில் யானை
காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்த யானையை பிடித்து கோவில்களில் கட்டிப் போட்டு அதன் ஆயுள் முழுவதும் இல்லற வாழ்க்கையில் ஈடுபட விடாமல் செய்து இறந்த பிறகு அதன் புகைப்படத்தை பத்திரிகையில் போடுவதுடன் அதன் வாழ்க்கை முடிந்து விடுகிறது. கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதன் குடும்பத்தை பிரிந்து அது அழுது கொண்டே தான் இருக்கும்.
Friday, 6 March 2015
எதிர்மறை எண்ணங்கள் (negative thoughts)
அல்லது இந்த பொருட்களை எந்த இடத்தில் வைப்பது என்று சரியாக தெரிந்துகொண்டு வைக்கவேண்டும்.
Monday, 2 March 2015
டைரடக்கர்கள் கவனத்திற்கு
ஆத்தா நான் பாஸாகிட்டேன்
வெற்றி வெற்றி வெற்றி
உங்க பையன் ஜாதகம் அமோகமா இருக்கு. இனிமே எல்லா காரியத்திலும் அவனுக்கு வெற்றி தான்
இது போன்ற வசனங்களை படத்தின் முதல் வசனமாக வைத்தால் படம் வெற்றி பெற்று விடுமா?
கோவில் கோபுரம், சாமி படம், சாமி சிலை இவற்றை படத்தின் முதல் காட்சியாக வைத்தால் படம் வெற்றி பெற்று விடுமா?
கோவில் மணி ஒலிக்கும் சப்தத்தை முதல் சப்தமாக படத்தில் வைத்தால் படம் வசூலை வாரி குவிக்குமா?
இதை எதையுமே செய்யாத ஹாலிவுட் படங்கள் உலக அளவில் வெற்றி பெறுகின்றன.
இதை எல்லாம் செய்யும் பல தமிழ் படங்கள் 30 நாட்களுக்குள் பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன.
டைரடக்கர்கள் யோசிப்பார்களா?
Friday, 27 February 2015
ஜாதகம்
ஒரு கட்டத்தில் 9 கிரகங்களும் உச்சம் பெற்றவனான என்னுடைய ஜாதகத்தை குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டேன்.
Wednesday, 25 February 2015
Broiler chicken & egg
Broiler கோழி மற்றும் அதன் முட்டை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்தானது என்று whatsapp இல் தகவல் பரவி வருவது எல்லோருக்கும் தெரியும்.
கூடுதல் தகவல் என்னவென்றால், எல்லா உணவகங்களிலும் புரோட்டாவிற்கு மாவு பிசையும் போது சுவைக்காக முட்டையையும் சேர்த்து பிசைகிறார்கள்.
Tuesday, 24 February 2015
இரத்த தானமும் செவ்வாய் தோஷமும்
சித்தர்கள் அவிழ்த்த தவறான மர்ம முடிச்சுகள்
1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
2. அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
3. கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
4. திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.
5. குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
6. கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
7. தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
8. சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
9. கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
10. சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
11. வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
12. ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
13. நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
14. இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
15. மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
16. கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
17. போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
18. பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.