Tuesday 24 February 2015

சித்தர்கள் அவிழ்த்த தவறான மர்ம முடிச்சுகள்

சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள்.
1.
பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
2.
அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
3.
கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
4.
திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.
5.
குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
6.
கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
7.
தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
8.
சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
9.
கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
10.
சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
11.
வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
12.
ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
13.
நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
14.
இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
15.
மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
16.
கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
17.
போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
18.
பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.

இந்த தகவலை நான் மூஞ்சிபுக்கில் இருந்து எடுத்தேன்.

சித்தர்களை பற்றி நாம் பெருமைபடவே நினைத்துக்கொண்டு இருக்கின்றோம். பேசி இருக்கிறோம்.

ஆனால் இவர்கள் சில தவறான பாதைகளை நமக்கு தந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். 

அதில் முக்கியமான ஒன்றே ஒன்று நம்முடைய ஆயுள் குறைவு.

நம்முடைய ஆயுள் குறைவுக்கு இவர்களே காரணகர்த்தாவாக நான் கருதுகிறேன்.

இங்கே இருக்கும் தகவலை வருசைக்கிரமமாக படியுங்கள். ஒவ்வொருவரை விட அடுத்தவரின் ஆயுள் குறைந்துகொண்டே வந்திருக்கிறது.

இதற்க்கு என்ன காரணம்?

இவர்கள் உருவாக்கி நமக்கு தந்துவிட்டுப் போன மந்திரங்களும், வழிபாட்டு முறைகளுமே காரணம் என்பது என்  கருத்து.

மனிதன் அதிக ஆயுளோடு வாழ்வதர்க்கென்றே பிறந்தவன். அதை குறைக்கும் செயலையே இவர்கள் செய்திருக்கிறார்கள். மனிதனின் ஆயுளின் மர்ம முடிச்சுகளை இவர்கள் தவறாக தெரிந்தோ அல்லது தெரியாமலோ இவர்கள் உருவாக்கிய மந்திரங்களாலும், வழிபாட்டு முறைகளாலும், மற்றும் பல செயல்களாலும்  அவிழ்த்திருக்கிறார்கள். இவர்களின் வழியை பின்பற்றிக்கொண்டு இருக்கும் நாமும் ஆயுள் குறைவோடு இருக்கிறோம்.

No comments:

Post a Comment