இந்திய அரசாங்கம் தேர்தல் சமயத்தில் வாக்கு சாவடி அமைக்கவும், அதற்க்கு பாதுகாப்பு கொடுக்கவும், வோட்டுகள் பதிவு செய்யப்பட்ட பெட்டியை பாதுகாக்கவும், வோட்டு எண்ணவும் பல கோடி பணத்தை செலவு செய்கிறது.
தேர்தலுக்கு தனியாக ஒரு website create செய்து அதன் மூலம் ஓட்டு போடும் வசதியை செய்தால் மக்கள் தங்கள் வீட்டில், அலுவலகத்தில், தங்கள் மொபைல் போனில் இருந்தே ஓட்டு போட முடியும். இதனால் பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
voter idயை user name ஆக வைத்துக் கொள்ளலாம். password ஐ அவரவர் create செய்யும்படி செய்து கொள்ளலாம்.
மேலும் இந்திய மக்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருந்தாலும் அவர்கள் அங்கிருந்தபடியே ஓட்டு போட முடியும்.
மேலும் தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே தேர்தலில் யார் யார் எவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே வெற்றிபெற்றவரை தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே தேர்தலில் யார் யார் எவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே வெற்றிபெற்றவரை தெரிந்துகொள்ள முடியும்.
இங்கே இன்னொரு கேள்வி எழும்.
கிராம மக்கள் எல்லோருமே இணையத்தை பயன்படுத்த தெரிந்தவர்களா? அவர்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்?என்பது.
கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் அது சாத்தியமே.
10 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் செல் போன் வைத்திருந்தார்களா? இல்லையே. ஆனால் இப்போது அவர்களும் செல் போன் பயன்படுத்துகிறார்களே. அது போல் தான் இதுவும்.
இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யோசிப்பார்களா?
என்னுடைய இந்த கருத்து உங்களுக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக share செய்யுங்கள். நன்றி.
No comments:
Post a Comment