Tuesday 7 April 2015

இமயமலையும் வட துருவமும்


இமயமலை ஒவ்வொரு ஆண்டும் ஒரு சென்டிமீட்டர் உயர்கிறது என்று சொல்கிறார்கள். இதற்க்கு காரணம் வடதுருவத்தின் ஈர்ப்புவிசை என்று சொல்கிறார்கள்.
ஆனால் இது தவறு என்பது என் கருத்து.
வடதுருவத்தின் ஈர்ப்பு விசையினால் தான் இமயமலை உயர்கிறது என்றால், இமயமலை இந்தியாவின் வடபகுதியில் தோன்றி இருக்காது.  ரஷ்யாவிற்கும் வடக்கில் வடதுருவ பகுதியில் தான் இமயமலை  தோன்றி இருக்கும்.
இமயமலை வேறு ஏதாவது காரணத்தினால் தான் உயர்கிறது. 
நிலப்பரப்பின் அடித்தட்டுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்க்கு காரணமாக இருக்கும்.

வடதுருவம்,தென்துருவம் இரண்டிலுமே சமமான ஈர்ப்புவிசை காந்தசக்தி செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த ஈர்ப்புவிசை காந்தசக்தியின் கட்டுப்பாட்டில் தான் பூமியின் சுழற்ச்சி செயல்படுகிறது.இந்த ஈர்ப்புவிசை காந்தசக்தியின் போராட்டங்களை எளிதில் அறியமுடியும்.

சூரியனின் வெயில் சில மாதங்கள் வடக்கு நோக்கிய வாசலில் விழும். சில மாதங்கள் தெற்கு நோக்கிய வாசலில் விழும். இதற்க்கு காரணம் இந்த இரண்டு துருவங்களின் காந்த ஈர்ப்பு சக்தியில் ஏற்படும் பூமியின் சுழற்ச்சி மாற்றமே. 

வடதுருவம், தென்துருவம் இரண்டிலுமே சமமான ஈர்ப்புவிசை தான் செயல்படுகிறது. 

வடதுருவத்தில் மட்டுமே அதிகமான ஈர்ப்புவிசை இருக்குமானால் பூமியின் சுழற்ச்சியே மாறிவிடும். 
வடதுருவத்தில் மட்டுமே ஈர்ப்புவிசை காந்தசக்தி இருக்கிறது என்பது பொய்யே.



No comments:

Post a Comment