Sunday 19 April 2015

பாசக்கார பயலுக

என்னுடைய சில சொந்தகாரனுங்களின் பேச்சுக்கு என்னோட மைன்ட் வாய்ஸ் இப்படி தான் இருக்கிறது.

உடம்புக்கே முடியல.
(நான் மட்டும் ஆரோக்கியமாவா இருக்கேன்)

வருமானமே இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு.
(அப்புறம் எப்படிடா புதுசு புதுசா நிலம் வாங்குறீங்க? வீட்ட கட்டுறீங்க? இல்லிட்டி வீடாவே வாங்குறீங்க?)

இருக்கிற கடனை அடைக்கவே கஷ்டமா இருக்கு.
(ஓ அந்த கவலை தீர தான் அப்பப்ப பாரீன் டூர் போயிட்டு வாரீங்களா?)

யார் கூடயும் பேசுறது இல்ல. நாத்தனார் கூட சண்ட. கொழுந்தன் கூட சண்ட. மச்சினன் கூட சண்ட.
(போன வாரம் தானடா குலதெய்வம் கோவில்ல உங்க எல்லாரையும் பார்த்தேன். ஒண்ணா உக்காந்து கூடி கும்மி அடிச்சுக்கிட்டு இருந்தீங்களேடா)

உன் வீடு என்ன பக்கத்துலயா இருக்கு. உன்ன வந்து பாக்க. கிருஷ்ணாபுரம் காலனில அவுட்டர் ஏரியாவுல இருக்க. எம்புட்டு தூரம் தெரியுமா?
(ஏண்டா வெளியூர்ல இருக்குற பணக்கார சொந்தக்காரனுங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வாரீங்க. அது என்ன அடுத்த தெருலயாடா இருக்கு? நீங்க வரவே வேண்டாம்டா)


No comments:

Post a Comment