Tuesday 7 July 2015

ராசி பலன்

ராசி பலன்களை நம்புபவர்கள் கவனத்திற்கு!
நான் சிம்ம ராசியில் பிறந்தவன். கடந்த 15 ஆண்டுகளாக என்னுடைய பொருளாதார நிலை இறங்குமுகமாகவே இருந்து வந்திருக்கிறது. கடன் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நான் கடந்த 15 ஆண்டுகளில் பல ஜோசியகாரர்களிடம் என்னுடைய ஜாதகத்தை காட்டி பலன் கேட்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன எந்த நல்ல பலனுமே 1% கூட நடந்ததே கிடையாது. ஆனால் அவர்களில் சிலர் சொன்ன சில கெடுபலன்கள் 100% எந்த தடங்கலும் இன்றி நடந்திருக்கிறது. மரணத்தின் எல்லையையும் தொட்டு இன்று தப்பி பிழைத்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
30 வயதில் எனக்கு திருமணம் நடக்கும் என்று ஒருவர் மதுரையில் தெற்குவாசலில் குறி சொன்னார். ஆனால் எனக்கு இப்போது 38 வயதாகியும் திருமணம் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். காரணம் கடன் பிரச்சனை மற்றும் பொருளாதார நெருக்கடி.
கடந்த 15 ஆண்டுகளில் பல குருபெயர்ச்சிகளும், சில சனி பெயர்ச்சிகளும், பல ராகு, கேது பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன.
ஆனால் என் முயற்சிகள் எல்லாமே தோல்வியிலேயே முடிகின்றன.
கடந்த 15 ஆண்டுகளில் நான் ஒருவேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே உணவு உண்ட நாட்களும் இருக்கிறது. நேற்று 6-7-15 உட்பட.
இந்த உலகத்தில் 12 பேர்களில் ஒருவர் ஒரே ராசியை சேர்ந்தவராக இருப்பார். இப்போது சொல்லுங்கள் உலகத்தில் உள்ள எல்லா சிம்ம ராசிகாரர்களும் கடந்த 15 ஆண்டுகளாக என்னை போல் கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறார்களா??????
இல்லையே.
அவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்றால் ராசி பலனை நம்ப நான் தயாராக இருக்கிறேன்.
தமிழக முதல்வர் அம்மா கூட சிம்ம ராசி தானே.
என்னுடைய ஜாதகத்தை கடந்த டிசம்பர் 2014, என் அம்மா இறந்த ஒரு வாரத்தில் குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டேன்.
நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும்.

ஜோசியக்காரர்களை நம்பி உங்கள் வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்.
ஜோசியக்காரர்கள் கடவுள் அல்ல.

No comments:

Post a Comment