Friday 7 August 2015

விருந்தோம்பல்

தமிழனின் தற்போதைய விருந்தோம்பலில் முக்கிய இடம் பிடிப்பவை டீ, காபி, வடை, பஜ்ஜி, சமோசா, மதுபானங்கள் (பல நண்பர்களுக்கும், பல அலுவலக ஊழியர்களுக்கும், பல நிறுவனங்களுக்கும் மதுபானம் விருந்தோம்பலாக இருக்கிறது)
டீ, காபி சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் என்று எல்லா இயற்கை மருத்துவர்களும் சொல்கிறார்கள்.
ஆனால் வெள்ளைக்காரன் காலத்திற்கு முன்பு வரை தமிழனின் விருந்தோம்பலில் முதல் இடத்தில் இருந்த மோர் தற்போது உயிருக்கு ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.
மோர் விற்கும் வண்டிகளில் மோருக்கு பதிலாக பழைய சோறை கரைத்து மோர் என்ற பெயரில் விற்கிறார்கள்.
மேலும் மாட்டிற்கு தீவனமாக ரசாயனம் சேர்க்கப்படுவதாலும், ரசாயன ஊசி போட்டு பால் கறக்கப்படுவதாலும், பாலில் ரசாயன குணமே இருக்கிறது. மேலும் பல நிறுவனங்கள் பால் கெட்டுபோகாமல் இருக்கவும் (பாக்கெட்டுகளில் நீங்கள் வாங்கும் பால் என்று கறந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. சில வாரங்களுக்கு முன்பு கறந்ததாக கூட இருக்கலாம்.), கெட்டி தன்மைக்காகவும் ரசாயனம் சேர்க்கிறார்கள்.  இதனால் இதில் இருந்து தயாரிக்கப்படும் எல்லா பால் பொருட்களும் ரசாயன தன்மை கொண்டதாகவே இருக்கிறது. மோர் உட்பட.



No comments:

Post a Comment