நம்மாழ்வார் அவர்கள் இறந்துவிட்டாலும் அவர் ஈரோடு புத்தக கண்காட்சியில் சொற்பொழிவாற்றியதை சென்ற வாரம் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அவர் சொன்ன தகவல்களை இங்கே தருகிறேன்.
தேங்கி இருக்கும் நீரில் தட்டான் பூச்சி முட்டை இடும். அந்த முட்டையில் இருந்து வெளிவந்த புழுக்கள் கொசுவின் முட்டைகளை உணவாக உண்ணும். அதனால் முன்பு கொசுத்தொல்லை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ரசாயன பூச்சி மருந்து தெளிப்பதால் அந்த தட்டானின் புழுக்கள் இறந்து விடுகின்றன. அந்த ரசாயன மருந்து கொசுவையோ அல்லது கொசுவின் புழுக்களையோ கொல்வதில்லை. அதனால் தான் கொசுக்கள் அதிகமாக இருக்கின்றன.
No comments:
Post a Comment