Thursday 7 August 2014

ஏழ்மை தெரியாத பணக்கார வர்கம்

2008 ஆண்டுவாக்கில் ஒரு பணக்கார பெண்ணின் blog இல் இருந்த தகவலை இங்கு பகிர்கிறேன்.
அவள் பணக்கார வர்கத்தை சேர்ந்தவள். சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிபவள்.
மதுரைக்கார பெண். வெளிநாடுகளில் பணிபுரிந்ததால் அவ்வப்போது இந்தியாவிற்கு வருவாள். சென்னையில் நட்சத்திர உணவகத்தில் கல் தோசை சாப்பிட்டு அவள் எழுதிய விமர்சனத்தை இங்கே அப்படியே தருகிறேன். (2008ல் எழுதியது.)
*சென்னையில் கல்தோசை 500 ரூபாயாம். அம்மாடியோவ்! சென்னைல விலைவாசி ரொம்ப அதிகமாயிடுச்சு*
மதுரையில் நடைபாதை கடைகளில் 10 ரூபாய்க்கு தோசை சாப்பிட்டு விட்டு அதையே கொடுக்காமல் கடன் சொல்லிவிட்டு செல்லும் ஏழைகள் ஏராளம்.

உலகம் முழுக்க இருக்கும் ஏழைகளின் நிலை என்னவென்றே தெரியாத பணக்காரர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவர்களை போன்ற பலர் தான் அரசியலிலும் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி ஏழ்மையை ஒழிப்பார்கள்?

இவர்கள் ஏழ்மையை ஒழிப்பார்கள் என்று நம்புவது முட்டாள்தனமானது.

No comments:

Post a Comment