Monday 29 September 2014
Aquafina
Sunday 28 September 2014
சாக்கடை
சாக்கடை என்பது ஏழைகள் இருக்கும் இடத்தில் தான் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாக்கடையின் ஆரம்பம் எல்லார் வீட்டு கழிவறையும், குளியலறையும் தான். சாக்கடையின் உருவாக்கத்தில்
பணக்காரர்களுக்கும் பங்கு இருக்கிறது.
சாக்கடை திறந்த நிலையில் இருக்கும் இடத்தில் ஏழைகள் இருக்கிறார்கள்.
பணக்காரர்கள் அதை மூடிக்கொள்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.
பணம்
பணத்தை படைத்தது கடவுள் அல்ல. மனிதன் தான். பணத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை.
உன்னை தினமும் கும்பிடுறேனே! எனக்கு பணத்தை கொடுக்க மாட்டேங்கிறீயே என்று கடவுளோடு சண்டை போடும் பல கோடி சராசரி மனிதர்களில் நானும் ஒருவன்.
மனிதனால் படைக்கப்பட்ட ஜாதி, மதம், பணம், பிளாஸ்டிக் இவை நான்கும் அழிவையே தரும்.
Friday 26 September 2014
குண்டலினி
பொய்யான புரட்சி
இந்த செவ்வாய் கிழமை அமாவாசை அன்று நண்பன் அவனுடைய பெற்றோருக்கு திதி கொடுத்தான். நானும் அவனோடு திருப்புவனம் சென்றேன். திதி கொடுப்பது அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயம். திதி கொடுப்பது போன்ற விசயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
இங்கே தகவல் அதுவல்ல.
திதி கொடுக்கும் சமயத்தில் plastic disposable cup இல் எள், வெல்லம், பூ இவற்றை வைத்து அதை அப்படியே வைகை ஆற்று மணலில் புதைக்கிறார்கள்.
Plastic disposable cup ஐ எதற்காக மணலில் புதைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
பிளாஸ்டிக்கை பல விதங்களிலும் பயன்படுத்திக் கொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூச்சலிடுவது பொய்யான புரட்சியே.
பாரதிராஜா
பாரதிராஜா அவர்களின் படங்களில் வருவது போல், வெட்கத்தினால் முகத்தை மூடிக்கொண்டு விரலிடுக்கின் வழியாக ஆணை பார்த்து ரசிக்கும் பெண்கள் எங்கே?
Selfie மூலம் அரைகுறை நிர்வாணத்துடனும், முழு நிர்வாணத்துடனும் தெறம காட்டுபவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதை கேட்டால் ஆணாதிக்க சண்முகம் அப்படீன்னு சொல்றாளுக!
நல்லா காட்டுங்கடி! நல்லா காட்டுங்க!
நாங்க எங்கடீ ஆதிக்கம் பண்றோம். நீங்க தானடி ஆடுறீங்க.
பாரதிராஜா காலம் போயிடுச்சு டும் டும் டும் டும்.
Selfie காலம் வந்திருச்சு டும் டும் டும் டும்.
புரளி
1) சில மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை பேசியதாகவும், பெண் பிள்ளைகளுக்கு தேங்காயை தலையை சுற்றி போட வேண்டும் என்றதாகவும் தேங்காய் உற்பத்தியாளர்களால் புரளி பரப்பி விடப்பட்டது. பிறந்த குழந்தை எப்படிடா பேசும் என்று சுய சிந்தனை இல்லாத தமிழர்களால் அன்று ஒரு நாள் மட்டும் தேங்காய் விற்பனை வரலாறு காணாத அளவு எகிறியது. மதுரையில் எல்லா தெருக்களிலும் தேங்காய்கள் குவிந்து கிடந்தன.
இது சில நாட்களுக்கு நீடித்த விற்பனை.
Tuesday 23 September 2014
தீயசக்தி
தீயசக்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செய்யும் எல்லா செயல்களுக்கும் முட்டுக்கட்டை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு முன்னேற்றமான செயலிலும் அவர்களால் வெற்றி பெறவே முடியாமல் போகும் நிலை அவர்களுக்கு வரலாம். செய்யாத தவறுகளுக்கும் தண்டனை அனுபவிக்கும் நிலை சில சமயத்தில் ஏற்படலாம்.
Monday 22 September 2014
மகாபாரதம்
இதே நிலை உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
எப்படி சைவமாகும்?
அப்படியானால் தோலினால் உருவாக்கப்பட்ட செருப்பு, பர்ஸ், பெல்ட் மற்றும் பட்டு புழுக்களை கொன்று எடுக்கப்படும் பட்டு நூலால் தயாரிக்கப்பட்ட ஆடை அணியும் எல்லோரும் சைவம் தான்.
அதற்கு m.r.ராதா கேட்பார் "அப்படின்னா மூட்டை பூச்சி கடிச்சா என்ன செய்வீங்க?" அப்படின்னு.
மகாபாரதம்
Sunday 21 September 2014
உங்களிடம் கேள்வி கேட்கிறேன்
உங்கள் குடும்பத்தில் இருக்கும் சகோதரர்கள் எல்லோரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா?
உங்கள் குடும்பத்தில் பிறந்த பெண்ணை 5 சகோதரர்களுக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா?
விவாகரத்து
தொப்புள் தரிசன தேவதைகள்.
Saturday 20 September 2014
தாழி
நம் முன்னோர்கள் இறந்தவர்களை தாழியில் வைத்து புதைத்ததாகத்தான் நம்முடைய சரித்திரங்கள் கூறுகின்றன.
Friday 19 September 2014
ஆறு சுவை உணவு
Thursday 18 September 2014
தூக்கத்திற்கு தடங்கல்
இதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம் உடலில் இருக்கும் எதிர்மறை சக்தி மூளையை நோக்கி மேலெழுந்து மூளையில் லேசான அல்லது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது போல் தூக்கம் தடைபடும் பட்சத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று திருநீறை ஆள்காட்டி விரலில் சிறிதளவு எடுத்து உச்சந்தலையின் நடுமையத்தில் திருநீறை வைத்து ஆள்காட்டி விரலால் லேசாக அழுத்தினால் போதும். அல்லது நெற்றிப் பொட்டு பகுதியில் திருநீறு பூசிக் கொள்ளலாம்.
திருநீரானது எதிர்மறை சக்தியை கீழே இறக்கி அதை வெளியற்றும் செயலை செய்யும். சில நிமிடத்தில் மீண்டும் தூக்கம் வரும்.
தூக்கத்தில் தடங்கல் ஏற்படும் போதெல்லாம் இதை செய்ய வேண்டும்.
Low sugar
இரத்தத்தில் குறைந்த அளவுக்கு சர்க்கரை இருப்பவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும். புழுங்கல் அரிசி சாதம் சாப்பிட கூடாது.
Wednesday 17 September 2014
மகன்
ஒரு மகனின் வாழ்க்கையில் மிகக் கொடிய தருணங்களில் ஒன்று, தன் தந்தையை இழப்பதும், தன் தாயை விதவை கோலத்தில் பார்ப்பதும்.
Marketing & sales
Saturday 13 September 2014
மக்களை ஏமாற்ற பயன்படும் ஆன்மீகம்
மதுரை தமுக்கம் மைதானத்தில் 108 திவ்ய தேச பெருமாள்களும் ஒன்றாக கூடி மதுரை மக்களுக்கு அருள் பாலிக்கிறார்களாம். 12-9-2014 முதல் 21-9-14 வரை. மதுரையில் இருக்கும் முட்டாள்கள் எல்லாம் இங்கு செல்வார்கள் என்பது உறுதி.
தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடத்தி தான் பணம் வசூலிப்பார்கள்.
இப்போது சாமியை காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள்.
பல கோடி வசூலாகும் என்று நம்புகிறேன். மதுரையில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்களோ அவ்வளவு பணம் வசூலாகும்.
Tuesday 9 September 2014
Sunday 7 September 2014
காமம்
நாய்களின் காமத்தின் போது கல்லால் அடிக்கிறான்.
நாயை பார்த்து கூட பொறாமைப்படுகிறான் மனிதன்.
சட்டம் (law)
பாதத்திற்கு ஏற்றார் போல் தான் செருப்பு இருக்க வேண்டும். செருப்புக்கு ஏற்றார் போல் தான் பாதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது முட்டாள்தனமானது.
அதே போல் தான் சட்டமும்.
Non stick
இந்த பாத்திரங்களில் பெயிண்ட் போன்ற ஒரு ரசாயன பொருள் முலாம் பூசப்படுகிறது. இது ஆரோக்கிய குறைவையும், ஆயுள் குறைவையும் ஏற்படுத்தும்.
Non stick சமையல் பாத்திரங்களை பயன்படுத்தினால் உங்கள் உடலில் ஆரோக்கியம் ஒட்டவே ஒட்டாது.
Saturday 6 September 2014
மரண எச்சரிக்கை
காகங்களும் மரணத்திற்கு முந்தைய அறிகுறியை காட்டுகின்றன.
ஏதாவது ஒரு இடத்தில் காகங்கள் கூட்டமாக அதிக சப்தம் எழுப்பிக் கொண்டு வட்டமடித்துக் கொண்டே இருந்தால் அந்த பகுதியில் வாழும் ஒருவருக்கு மரணம் நிகழப்போகிறது என்று அர்த்தம்.
குறிப்பாக வாஸ்து குற்றங்கள் இருப்பின் அதை சரி செய்யலாம். அல்லது வேறு ஏதாவது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
Friday 5 September 2014
வைக்கோல்
நகர் பகுதியில் எல்லா இல்லத்தரசிகளும் பாத்திரம் தேய்க்க நைலான் இழைகளினால் தயாரிக்கப்பட்ட scrubber பயன்படுத்துகிறார்கள்.
கிராம பகுதியில் இல்லத்தரசிகள் வைக்கோலை பயன்படுத்துகிறார்கள்.
Monday 1 September 2014
வாஸ்து
America Vs china
சீன தேசத்து பொருட்கள் தான் தற்போது எல்லா நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அவை தரமானவையா, தரமற்றவையா என்பது வேறு விஷயம். உலகின் பிரபலமான பன்னாட்டு நிறுவனங்கள் கூட சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் மீது தங்கள் பெயரை பொறித்து விற்பனை செய்கின்றன.இதனால் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்து கொண்டே போகிறது. சீனா நல்ல நாடா, கெட்ட நாடா என்பது வேறு விசயம்.
அமெரிக்கா உலகின் பல கோடி மக்களை வேவு பார்ப்பதிலேயே நேரத்தையும், பணத்தையும் அளவுக்கு அதிகமாக செலவழிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், மைனர் கெட்டால் மாமா வேலை என்ற நிலைக்கு அமெரிக்கா செல்லும். அமெரிக்காவின் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியை சந்திக்கும். அமெரிக்க டாலர் மதிப்பு என்ற மாய வலை பல நாடுகளாலும் அறுக்கப்படும். குறிப்பாக சீனாவால்.
புத்தன், ராகவேந்திரர்
புத்தன், ராகவேந்திரர் இவர்கள் இருவரின் மகன்களும் இவர்களைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்?
இந்த உலகம் வேண்டுமானால் உங்களை மகானாக ஏற்றுக் கொண்டு இருக்கலாம். ஆனால் என்னையும் என் தாயையும் தனியே விட்டு சென்ற உங்களுக்கு தந்தை என்ற மரியாதையை நான் தரமாட்டேன் என்று தான் நினைத்திருப்பார்கள்.