Thursday 31 July 2014

தாலி

தாலியில் பவளம் கோர்க்க வேண்டும் என்று சிலர் டிவி நிகழ்ச்சிகளில் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். டிவி சேனல்களில் பேச சான்ஸ் கிடைச்சா என்னவேண்டுமானாலும் பேசலாம்னு நினைப்பானுங்க போல. விட்டா தாலில காபி கொட்டை, புளியங்கொட்டையையெல்லாம் கோர்க்க சொல்லுவானுங்க போல.
இவனுங்க பேச்சை நம்பி பல பெண்கள் தங்கள் தாலியில் பவளத்தை கோர்த்திருக்கிறார்கள்.
நம் முன்னோர்கள் மஞ்சள் கயிறை
மட்டுமே பல கோடி ஆண்டுகளாக தாலியாக கட்டினார்கள்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளில் வணிக நோக்கத்திற்காக பலர் அதை தங்கமாக மாற்றினார்கள். அதுவே தவறான ஒரு செயல்.
தற்போது அதில் மீண்டும் வணிக நோக்கத்திற்காக பவளத்தை கோர்க்க சொல்கிறார்கள்.
இது எந்தவிதமான துன்பத்தை தரும் என்று எனக்கு தெரியவில்லை.

No comments:

Post a Comment